25 ஆண்டுகளுக்கு முன்
சோமாலியாவில் நடந்தது
இன்று தமிழகத்தில் தொடங்குகிறது.
பொருளாதார அடியாளின் வாக்கு மூலம் படிக்க முடியாதவர்கள் இந்த பதிவையாவது அவசியம் படிக்க வேண்டும்.....
உண்மையில் தமிழ்நாட்டில் நடப்பது என்ன?
8 வழிச்சாலைக்கு பின்னுள்ள உலக அரசியல்தான் என்ன?
இது உண்மையில் அரசின் திட்டம்தானா? வளர்ச்சிக்கான திட்டம்தானா?
இல்லை என் அன்பு மக்களே...
நடப்பது உலக வங்கியின் ஜப்தி நடவடிக்கை...
கொடுத்த கடனுக்கு ஜப்தி செய்ய தொடங்கியது உலக வங்கி...
இந்த பதிவை கவனமாக வாசித்து பரப்புங்கள். நாம் மெல்ல மெல்ல நாம் வேட்டையாடப்படப் போகின்றோம்...
பழைய காலனிய ஆதிக்கம் என்பது விக்டோரியா மகாராணியின் ஆசியோடு உலகின் பல நாடுகளுக்குச் சென்ற தனிப்பெரும் முதலாளிகள் அந்த நாடுகளின் பொருளாதாரங்களை 'வியாபாரம்' என்ற பெயரில் சிதைத்து அவ்வரசுகளையும் அடிமைபடுத்தி அந்த நிலத்திலேயே நின்று அழித்தார்கள்.
இன்று இம்முறையைக் அப்பணியைச் செய்ய அவர்கள் வைத்துள்ள அமைப்பே உலக வங்கி.
உலக வங்கியின் வழியாக சாலை அமையுங்கள்... பள்ளிகூடம் கட்டுங்கள்.. பாலம் போடுங்கள்.. அணைக் கட்டுங்கள்... உள்கட்டமைப்பை வலிமைப்படுத்துங்கள்... கடன் தருகின்றோம் என்பார்கள்...
கடனும் தருவார்கள்... ஆனால் இதில் எதன் வழியாகவும் பொருளாதாரம் வளர்ந்து வாங்கிய கடனை எந்த நாடுகளும் திருப்பிக் கட்டியதும் இல்லை; கடனை கட்டிய ஈராக் லிபியா போன்ற தேசங்களை இவர்கள் வாழவும் விட்டதில்லை...
இந்த வழிமுறையைப் பின்பற்றியே இதுவரை தமிழ்நாட்டிற்கு உலக வங்கி 5 லட்சம் கோடி பணத்தைக் கடனாக வழங்கியது. இன்று தமிழ்நாடு அரசு திவால் என்ற நிலையை அடைந்தப்பின் தனது உண்மையான ஆகோர முகங்களைக் காட்டத் தொடங்கிவிட்டது...
தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாநிலம் என்றால்... ஏன் இந்தியா வழியாக கடனை தராமல் நேரடியாக தமிழ்நாட்டின் அரசிடமே கடன் வழங்கினார்கள்?
நான் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட மாநில அரசு எனில் மத்திய அரசின் துணையின்றி எப்படி உலக வங்கியின் முகவர்கள் நேரடியாக முதல்வர்களாக இருந்த கருணாநிதி ஜெயலலிதாவை சந்தித்தே... கடன் வழங்குவதற்கான திட்டங்களை வகுத்து அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டார்கள்?
இன்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத போது எடப்பாடியை ஒரு காபந்து முதல்வராக உட்கார வைத்து 4.5 லட்சம் கோடிக்கான இரும்புத் தாதுக்களை எடுக்க 8 வழிச்சாலையை அமைக்க எத்தனிப்பது யார்? இப்படிதானே காபந்து அதிபர்களை ஈராக் லாபியா கிரீஸ் அர்ஜண்டைனா நாடுகளில் அமைத்து அந்த நாடுகளை சூரையாடினார்கள்...
கோவையில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் எப்படி தண்ணீரை உறிஞ்சி எடுக்க அனுமதி பெற்றது?
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை எடப்பாடிக்கு தெரியாமலே சுடச்சொன்ன அந்த உச்சபட்ச அதிகாரம் படைத்தவன் யார்?
உலக வங்கி.... அவன் பின்னே நிற்கும் உலக வல்லாதிக்க நாடுகள்...
விக்டோரியா மகாராணி வியாபாரிகளை அனுப்பியதற்கும் உலக வங்கி தன் ஒப்பந்தங்களின் வழியாக கார்பரேட் வியாபாரிகளை அனுப்புவதும் ஒரே காலனிய ஆதிக்க முறைதான்....
அன்று ஒரு நாடு.. இன்று பல நாடுகளின் கூட்டு...
அன்று எதிர்த்தவனை ஆங்கிலேயே ராணுவம் சுட்டது. இன்று உலக வங்கி நிர்வகிக்கும் நேட்டோ ராணுவம் சுடும்...
உலக வங்கி கடன் கொடுக்கும் போது 115 நிபந்தனைகளை விதிக்கும்... அந்த நிபந்தனைகளின்படி செயல்பட்டால் பொதுவாகவே கடனைக் கட்டமுடியாது.
கடன் கட்டமுடியாத நிலைவரும் போது கந்துவட்டிக்காரன் எப்படி நமது வீட்டு சாமான்களை தூக்கிச் செல்வானோ அப்படி உலக வங்கி கார்பரேட்டுகள் என்ற அடியாட்களின் வழியாக கடன்வாங்கிய நாடுகளின் இயற்கை வளங்களை எடுத்துச் செல்வார்கள்...
இயற்கை வளங்களை கடனுக்காக எடுப்போம் என்பதும் 115 நிபந்தனைகளில் ஒன்று...
இப்ப யோசியுங்கள்...
8 வழிச்சாலை எதற்கு?
கோவையில் தண்ணீர் எடுக்க அனுமதி எதற்கு?
தமிழ்நாடு முழுவதும் 235 இடங்களில் பெட்ரோல் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி முயல்வதற்கு காரணம் என்ன?
மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எடுக்க துடிப்பது ஏன்?
உலக வங்கியின் ஜப்தி நடக்கிறது...
இது எடப்பாடிக்கு தெரியுமோ தெரியாதோ ஆனால் ஸ்டாலினுக்கு உறுதியாகத் தெரியும். அதனால்தான் ஆட்சியை கலைக்க எந்த முயற்சியும் எடுக்காமல் வாய்மூடி மௌனிக்கிறார். ஏனெனில் கருணா ஜெயா என்று அனைவருமே வாங்கியுள்ள கமிசன் பட்டியல் உலக வங்கியிடம் உள்ளது. எவனும் எதிர்க்க முடியாது...
அரசு 8 வழிச்சாலையை எதிர்பவனை ஒடுக்கியே தீரும். இது மக்களின் அரசல்ல... உலக வங்கியின் காபந்து அடிமை அரசு...
இதை தடுப்பது எப்படி?
என்னதான் தீர்வு?
#தற்ச்சார்பு_பொருளாதாரம்...
நாமே மாற்று!





































