சனி, 15 ஜூன், 2019

Cambridge, Harward, Oxford, IIM, IIT, BIT, NIT மற்றும் உலகமே சங்கிகளின் விரிவாக்கத்தை வியந்து பார்க்கிறது

Cambridge, Harward, Oxford, IIM, IIT, BIT, NIT மற்றும் உலகமே சங்கிகளின் விரிவாக்கத்தை வியந்து பார்க்கிறது

குடியரசுத் தலைவர்
பிரதமர்
உள்துறை அமைச்சர்
துணைக் குடியரசுத் தலைவர்
பாராளுமன்ற சபாநாயகர்
மற்றும்

18 முதலமைச்சர்கள்
29 கவர்னர்கள்
1 லட்சம் கிளைகள்
15 கோடி தன்னார்வத்தொண்டர்கள்
2 லட்சம் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிகள்
5 லட்சம் ஆசிரியர்கள்
1 கோடி மாணவர்கள்
2 கோடி பாரதீய மஜ்தூர் சங்கத்தின் உறுப்பினர்கள் (தொழிற்சங்கம்)
1 கோடி ABVP செயலாளர்கள் (மாணவர் அமைப்பு)
15 கோடி பிஜேபி உறுப்பினர்கள்
1200 ப்ரகாஷன் சமூகம் (புத்தக வெளியீட்டு அமைப்புகள்)
9000 முழுநேர ஊழியர்கள்
7 லட்சம் மூத்த வீரர்கள் அமைப்புகள்
1 கோடி விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் (உலகம் முழுவதுமாக)
30 லட்சம் பஜ்ரங்தள் இந்துத்துவ தொண்டர்கள்
1.5 லட்சம் அலுவலகங்கள்
18 மாநிலங்களில் ஆட்சி
303 பாராளுமன்ற உறுப்பினர்கள்
64 மாநிலங்களவை உறுப்பினர்கள்
1460க்கும் மேற்பட்ட இயக்குநர்கள்

வன்வாசி கல்யாண் ஆஸ்ரம்
வன்பந்து பரிஷத்
சம்ஸ்கார் பாரதி ( பண்பாட்டு அமைப்பு )
விஞ்ஞான் பாரதி ( அறிவியல் அமைப்பு )
லகு உத்யோக் பாரதி ( சிறுதொழில் அமைப்பு )
சேவா சஹ்யோக் ( நமக்கு நாமே தொண்டு செய்யும் அமைப்பு )
சேவா இண்டர்நேஷனல் ( உலகளவில் தொண்டுசெய்யும் அமைப்பு )
ராஷ்ட்ரிய சேவா சமிதி ( தேசிய அளவில் தொண்டு செய்யும் அமைப்பு )
ஆரோக்ய பாரதி
துர்கா வாஹினி
சாமாஜிக் சம்ரஸ்தா மஞ்ச் ( சமுதாய ஒருங்கிணைவு மேடை )
ஆர்கனேஸர்
பாஞ்ச்யஜன்ய
ஷ்ரீராம்ஜன்ம பூமி மந்திர் நிர்மாண் ன்யாஸ் ( ஷ்ரீ ராம் ஜன்ம பூமி கோயில் கட்டும் அமைப்பு )
தீன் தயாள் சோத் சன்ஸ்தான் ( தீன் தயாள் ஆய்வு மையம்)
பாரதீய விச்சார் சாதனா ( இந்திய கருத்தியல் அமைப்பு)
பாரத் விகாஸ் பரிஷத் ( இந்திய வளர்ச்சி அமைப்பு)
ஜம்மூ காஷ்மீர் ஸ்டடி சர்க்கிள்
த்ருஸ்டி சன்ஸ்தான் ( கண்பார்வை நிறுவனம்)
ஹிந்து ஹெல்ப்லைன்
ஹிந்து ஸ்வயம் சேவக் சங்கம்
ஹிந்து முன்னணி
அகில் பாரதிய சாஹித்ய பரிஷத் ( அகில் இந்திய இலக்கிய அமைப்பு )
பாரதிய கிஸான் சங்கம் ( இந்திய விவசாய சங்கம்)
விவேகானந்த கேந்த்ர
தருண் பாரத் ( இளைஞர் அமைப்பு )
அகில் பாரதிய க்ராஹக் பஞ்சாயத் ( அகில இந்திய வாடிக்கையாளர் சேவை மையம் )
ஹிந்துஸ்தான் சமாச்சார் ( ஹிந்துஸ்தான் செய்தித்தாள்)
விஷ்வ சன்வாத் கேந்த்ர ( உலக கலந்துரையாடல் மையம்)
ஜன கல்யாண் ரக்த பேடீ ( இரத்த தான அமைப்பு
இதிகாஸ் ஸங்கலன் சமிதி ( இதிகாஸ ஒருங்கிணைப்பு மையம்)
ஸ்த்ரீ சக்தி ஜாக்ரண் ( பெண் சக்தி விழிப்புணர்வு மையம் )
ஏகல் வித்யாலய் ( பள்ளிகள்)
தர்ம ஜாகரண் ( மத விழிப்புணர்வு மையம்)
பாரத் பாரதி
சாவர்க்கர் அத்யாஸன் ( சாவர்கள் பயிற்சி மையம்)
ஷிவாஜி அத்யாஸன் ( ஷிவாஜி பயிற்சி மையம்)
பதித் பாவன் சங்கடன்
ஹிந்து ஏக்தா ( ஹிந்து ஒற்றுமை அமைப்பு)
இன்னும் இதுபோன்ற பற்பல அமைப்புகள்

இவையெல்லாம் சேர்ந்த்துதான் ஆர் எஸ் எஸ். காங்கிரஸோ கம்யூனிஸ்ட்டோ அவ்வளவு சீக்கிரமாக இதன் வேரை அசைக்கக்கூட முடியாது. 92 ஆண்டுகளாக வளர்ந்திருக்கும் இந்த ஆர் எஸ் எஸ் அடுத்த 1000 ஆண்டுகள் இங்கு ஆட்சி செய்யும்.

பரமஹ வைபவம் நே தும்ஹே தத்வ ராஷ்ட்ரமஹ
பாரத் மாதா கீ ஜய

எழுத்தாளர். உஷா அதாலே – இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

நாய்கள் குரைப்பதால் பயணங்கள் நின்றுவிடாது..- பி.ஆர்.அம்பேத்கர்

நாய்கள் குரைப்பதால் பயணங்கள் நின்றுவிடாது..- பி.ஆர்.அம்பேத்கர்
**********************************************
நிலம் பற்றிப் பேசியவுடனே எல்லாருக்கும் இவ்வளவு வலிக்கிறது. நிலமில்லாதவர்களின் வலியை எப்போது உணரப்போகிறீர்கள்?
சென்னையின் #பூர்வகுடி மக்களை அப்புறப்படுத்தி அவர்களை 40 கி. மீ தூரத்தில் அடைத்துவைத்து அவர்களின் இடத்தில் மால்களும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ஸும் இப்போது வந்துள்ளது தெரியும் தானே உங்களுக்கு?
#மெட்ரோரயில் திட்டத்தில் பணிபுரிந்த வட இந்தியத் தொழிலாளிகள் காயங்களாலும், விபத்தாலும் உள்ளேயே இறந்துவிட்டால் அவர்களை பூமிக்குள்ளேயே புதைத்துவிட்டு காணாமல் போனதாகக் கணக்கெழுதுவது தெரியும்தானே உங்களுக்கு?
இந்த நகரத்தைக் கட்டியமைத்தவர்களுக்கு இந்த நகரத்தில் இடமில்லை என்பது தானே இங்கு நிலை..
அதே போலத்தான்..
பாறைகளே இல்லாத ஆற்றுப்படுகை பூமியான தஞ்சாவூரிலும் ராஜராஜ சோழன் கோவில் கட்டுவதற்காக ஒன்றரை லட்சம் டன் கற்பாரைகளைக் கொண்டு வந்து பிரம்மாண்டமான அக் கோவிலைக் கட்டிமுடிக்க எத்தனைத் தொழிலாளிகள் நசுங்கிச் செத்திருப்பார்கள்??
நவீன காலத்து இயந்திரகளில்லை,
பாதுகாப்புக் கருவிகளில்லை, குறைந்தபட்ச ஊதியம் கூட இல்லை, ஆதிகாலத்து சாதி எனும் இழிவைத் திணித்து மக்களைப் பிரித்து, அடிமையாப் பிறந்து அடிமையாகவே இறப்பது, சேவகம் செய்வதுதான் உனக்கு விதிக்கப்பட்டது என நம்பவைத்துத்தான் இந்த உழைப்புச் சுரண்டல்கள் நடந்திருக்கும்.
உண்மையைச் சொன்னால், #பா_இரஞ்சித் ஐத் திட்டுவதன் மூலம் நிலம் குறித்த மிகமுக்கிய கேள்வியில் இருந்து நழுவுகிறார்கள், ஏனென்றால் சொல்வதற்குப் பதில் இல்லை!! மாமன்னனின் கொடுமைகள் ஒவ்வொன்றாய் விவாதத்திற்கு வருகின்றன. 40000 ஏக்கர் நிலத்தை பா. இரஞ்சித் என்ற ஜமீன் கொடுத்தாரா என்ற தற்குறிகளின் மீம்ஸ் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியது. இடைநிலை சாதிகளிலுள்ள நிலமற்றவர்களே.. சாதி எனும் மனநோய் உங்களை எதார்த்தத்தைக் காணவிடாமல், கோபத்தோடு மட்டும் அணுகச் சொல்கிறது. இந்தியா முழுக்க சேரிகள் இருக்கின்றன, எல்லாச் சேரிகளும் ஊருக்கு வெளியே இருக்கின்றன, ஊருக்குள் கோவில் இருக்கிறது, கோவிலின் கட்டுப்பாட்டில் ஏராளம் நிலங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களும் இந்துக்கள் என்றால், நிலமற்ற இந்துக்களுக்கு அந்த நிலங்களை பகிர்ந்தளிக்கலாமே? அவர்கள் இடைநிலைச் சாதி நிலமற்றவர்களாக இருந்தாலும் சரி. பகிர்ந்து கொடுங்களேன்.
இந்துக்கள் நலன் காக்கும் நாடு தானே இது??
உங்கள் ஆதிக்க மூளை இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கெட்டவார்த்தையில் தான் பதில் தரும்.
உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள்..
அதுதான் சாதிக் கட்டமைப்பின் குரூரம்.
ஒருவன் பிறக்கும் போதே 1000 ஏக்கர் நிலமுள்ளவனாகப் பிறக்கிறான்,ஒருவன் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு சென்ட் நிலமில்லாமல் உழைத்தே மடிகிறான். இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாயத் தொடர்வது, நாம் 21ம் நூற்றாண்டில் முகநூல் தலைமுறை, திடீரென கண்விழித்து "சாதி ஏற்றத் தாழ்வுதான் பொருளாதார பின்னடைவுக்குக் காரணம் என்பவர்களை, சாதிவெறியன் என்கிறோம்!!,
பா.இரஞ்சித் பேசுவதால் இங்கு சாதி வளரவில்லை, அவர் பேசுவதால் எங்கே சாதி அமைப்பு ஒழிந்துவிடுமோ, கையிலிருக்கிற நிலமும் அதிகாரமும் பறிபோய்விடுமோ என்ற அச்சம்தான் இப்படி கீழ்த்தரமான எதிர்வினைகளை ஆற்றுகிறது.
மக்களாட்சி காலத்திலேயே கருத்து சுதந்திரத்தின் நிலையைப் பாருங்கள்..
மன்னராட்சியில் எப்படி இருந்திருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
வழக்குகள் இவரை ஒன்றும் செய்யாது.
சமத்துவம் எனும் மனித மாண்பு மீட்கப்படும் காலம் வரும், அப்போது பா.இரஞ்சித் எனும் மகத்தான போராளியைச் சமூகம் உணர்ந்து கொண்டாடும்.
#StandWithPaRanjith
#நிலம்எங்கள்உரிமை.