சனி, 16 நவம்பர், 2019

பண்டைய காலத்தில் கோயில் கட்ட அரண்மனை வீடுகட்ட நிலம் தேர்ந்தெடுக்கும் முறை


#கட்டிக்கலை

பண்டைய காலத்தில் கோயில் கட்ட அரண்மனை வீடுகட்ட நிலம் தேர்ந்தெடுக்கும் முறை

#மனைஆய்வு
#மண்ஆய்வு

வாழ்வதற்கும் வழிபாட்டிற்கும் என தேர்ந்தெடுக்கப்படும் இடங்கள் அதாவது மனைகள் நீண்டகாலம் நிலைத் திருக்கவேண்டியவையாகும்

எனவே நல்ல மனையைத் தேர்ந்
தெடுப்பது மிகவும் முக்கியமானதாகும் மனையிடத்தின் அமைப்பு, நிலத்தின் உறுதி சூழ்நிலை, மனைநோக்கு இவைகளை ஆராய்ந்த பின்னரே நல்லதொரு மனையைத் தேர்ந்தெடுத்தனர் அன்றைய கால சிற்ப வல்லுனர்கள்

மண்ணின் ஓசையால், மணத்தால், உணர்ச்சியால், வளத் தால், சுவையால், அமைப்பால்
மற்றும் நிறத்தால் சிறந்த மனையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்

மண்ணின் மணம், சுவை
மற்றும் நிறம் இவைகள் கட்டடத்திற்கேற்ற நல்ல மண், தீயமண்ணைக்  கண்டு கணிக்
இயலும் என்பதனை இலக்கியங்களும் உணர்த்துகின்றன

நாற்றமும் சுவையு மதுரமுமாய்'

என்று கூறுவதை சிலம்பில் காண்கிறோம்.

நீங்காத மதுரமும் பரிமளமும் பொருந்திய
பூமியில் சகல சாதிகளும் வீடு கட்ட உத்தமம் என்ற அடிகளும்

தயிரொடு நெய் தேன்
எண்ணெய் தாக்கிய உதிரத்தோடு, மயிர் பல சிறுமீன் பட்சி மற்றும் மோர் பொல்ல
நாற்றம் பயிரொடு பலமும் காணார் பாழ்படும் மனை எடுக்கில்
என்ற அடிகளும்

இன்னின்ன இயல்புடைய பூமி ஏற்புடையது, இன்ன நாற்றமுடைய நிலம் ஏற்புடையதல்ல
என த் தெளிவாக்குகின் றன

மேலும் நிலத்தை வன் பால், மென்பால், இடைப்பால் என. மண்ணின் இயல்பால்
மூன்று வகைப்படுத்தலாம்.

 வன்பாலாவது ஒரு சதுர அடியில் ஒரு குழி தோண்டி அதனை த்
தோண்டப்பெற்ற மண்ணினால் நிரப்பும் போது குழியின் மண் மிகுவது, மென்பாலாவது

குறைவது; இடைப்பாலாவது சரிசமமாக இருப்பது என்று கூறலாம்
கட்டட அடிப்படைக்குச் சிறந்த நிலமாகக் கொள்ளப்பட்டது
வன்பால்' நிலமே

அளந் ததோர் குழியின் மண்ணை அகழ்ந்து அதன் மேலேயிட்டால்
வளர்ந்திடிற் செல்வ முண்டாம் ஒத்திடில் மிகுதி யில்லை
குளந்தனில் குறையு மாகிற் குறைந்திடும் சம்பத்து அன்றே
உளந்தனில் கருதி நல்லோர் உரைத்தனர் புவியின் மாதே.

மேலும் அங்கு இவ்வாறு எடுக்கும் குழியில் அந்திப்பொழுதில் நீர் நிறைந்து விடியலில் நீரின் அளவு கண்டு பயன்களும் கூறப்படுகின்றது தண்ணீர் இருந்தாலும் சேராய் இருந்தாலும்  சுபம்
என்பதனை

நிறைய நீர் இட்டு வைத்து நீள்கதிர் எழுந்த போது

மூறைமையாய் வந்து பார்த் தால் முப்பிடி நீரே நன்றாம்

தரையினில் வற்றியக்கால் தாழ்வு ற பிக்கும் ஆகில்

சிறையொடு நோயாம் என்று தரித்தவர் உரைத்த வாறே

என் ற பாடல் விளக்குகின்றது  இதனையும் நல்ல நிலத்தேர்ச்சிக்கு இலக்கணமாகக்கொள்ளலாம் இங்ஙனம் பல்வேறு ஆய்வுகளைச் செய்து தல்லதொரு மனையை த் தேர்த்
தெடுத்தனர் என்பதுத் தெளிவாகின்றது.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

நீங்கா வலி தரும் நெல்லைப் பிரிவினை


நீங்கா வலி தரும் நெல்லைப் பிரிவினை
November 15, 2019

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமான நம் நெல்லை பிரிக்கப்பட்டுவிட்டது.

 இதுநாள் வரை நெல்லையின் பெருமிதங்களாக நாம் கொண்டாடி வந்த பல அம்சங்கள் நம்மைவிட்டு போயிருக்கின்றன.

கேரள எல்லை இனி நெல்லையிடம் இல்லை:

கேரள மாநிலத்தோடு சாலை வழி எல்லையை பகிர்ந்து கொள்ளும் வெகு சில மாவட்டங்களுள் ஒன்றாக நம் நெல்லை இருந்துவந்தது.

தென்காசியின் பிரிவால் இனி எல்லை நம்மிடம் இருக்கப்போவதில்லை.

பார்டர் புரோட்டா கடையும் தென்காசி மாவட்டத்துக்காரரின் கடையாகி விட்டது!

வீரபூமியின் பெயர் மாறிவிட்டது:

கட்டபொம்மனையும் பாரதியையும் தூத்துக்குடி எடுத்துக் கொண்டது போல வாஞ்சிநாதனையும்,பூலித்தேவனையும் தென்காசி எடுத்துக் கொண்டுவிட்டது.

குற்றாலம் இனி அண்டை மாவட்ட சுற்றுலாத் தலம்:

"நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டுகிறது" என்று இனி எந்தப் பத்திரிகையும், செய்திச் சொல்லப்போவதில்லை

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கும் தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கும் இயக்கப்படும் ரெயிலாக மாறிவிட்டது.

திருமங்கலம் - செங்கோட்டை நான்கு வழிச்சாலை பிரச்னை இனிமேல் தென்காசி மாவட்டத்தின் பிரச்னை.

நகரங்களை இழந்த நெல்லை:

பழைய நெல்லை மாவட்டத்தில் நம் நெல்லைக்கு அடுத்து பெரிய நகரங்களாக இருந்த சங்கரன்கோவிலும், கடையநல்லூரும் தென்காசியோடு இணைந்துள்ளது இழப்பு தான் நமக்கு.

பிற நகரங்களான புளியங்குடியும் செங்கோட்டையும் அங்கு தான் போயிருக்கிறது.

தமிழ்நாட்டிலேயே அதிகமாக மேற்கு தொடர்ச்சி மலை படர்ந்திருக்கும் மாவட்டம் என்ற பெயரும் நம்மிடமிருந்து போயிருக்கிறது.

நெல்லைக்கே அல்வா:

சொக்கம்பட்டி அங்கு இணைந்துவிட்டதால் திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த மாவட்டமாக தென்காசி மாறியிருக்கிறது.

வரமாட்டேன் என அழுது அடம்பிடித்த ஆலங்குளத்தையும் சங்கரன்கோவிலையும் தனது அதிகாரத்தால் தென்காசியோடு சேர்த்து வைத்துள்ளது அரசாங்கம்.

நிகழ்கால அரசியல் ஆளுமை வைகோ இனி தென்காசி மாவட்டத்துக்காரர் என்று அழைக்கப்படுவார். அமைச்சர் தொகுதியான சங்கரன்கோவிலை நாம் இழந்துவிட்டதால் அமைச்சர்களில்லாத மாவட்டமாக மாறி நிற்கிறோம்.!

இருந்தாலும் பரவாயில்லை..

பிரிவின் வலி தான் கொடியது.
இது பிரிவல்ல பிரசவம்..!

நம் நெல்லைக்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்கிறது.

ஆம்,
அதன் பெயர் தென்காசி.!

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*