சனி, 6 ஏப்ரல், 2019

இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் - 2019.

இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் - 2019.

* தமிழகத்திலிருந்து மொத்தம் 845 வேட்பாளர்கள் களமிறங்கும் இத்தேர்தலில், தென் சென்னையில் போட்டியிடும் இராதா மட்டும் திருநங்கை. சுயேச்சை வேட்பாளர்! (மதுரைத் தொகுதியில் போட்டியிட மனுத் தாக்கல் செய்திருந்த பாரதி கண்ணம்மா, எனும் மற்றொரு திருநங்கையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.)

* ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்காக, மெரினாவில் அமர்ந்திருந்த போதே ஆரம்பிக்கப் பட்ட ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ எனும் கட்சி, வட,தென், மத்திய சென்னை, நாகப்பட்டினம், கோவை, ஈரோடு, வேலூர் , நெல்லை, மதுரை உள்ளிட்ட 10+ தொகுதிகளில் தன் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இவர்களுள் இருவர் பெண்கள்.

* Pyramid Party Of India (PPOI) என்பதை, தமிழில் 'இந்தியக் கோபுரக் கட்சி' என மொழி பெயர்க்கலாமா எனத் தெரியவில்லை. ஆந்திராவைத் தலைமையிடமாகக்  கொண்டு, கடந்த இருபதாண்டுகளாகச் செயல்பட்டு வரும் இக்கட்சி சார்பில், தென் சென்னையிலும் மத்திய சென்னையிலும் முறையே ஆண் ஒருவரும், பெண் ஒருவருமாக இருவர் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள், சைவம் சாப்பிடுபவர்களை மட்டுமே வெற்றி பெற வைக்க வேண்டுமெனும் வேண்டுகோள் /கொள்கை உள்ள கட்சி இது. நாம் தமிழரைத் தொடர்ந்து, வேட்பாளர் ஒதுக்கீட்டில் பெண்களுக்கு 50% இடம் அளித்துள்ள இன்னொரு கட்சி இது.

* அனைத்து ஓய்வுதியதாரர்கள் கட்சி (All Pensioner’s Party) சார்பில், மயிலாடுதுறைத் தொகுதியில் ஒருவர் போட்டியிடுகிறார். ஹபீப் முக்மது எனும் அவரின் வயது 65. ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருப்பவர்களுக்கான கட்சி இது.

* அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 42 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக நீலகிரித் தொகுதியில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அதிக மனுத் தாக்கல் நிகழ்ந்த தொகுதி, தென் சென்னை. குறைந்த மனுத் தாக்கல் நிகழ்ந்தது நீலகிரித் தொகுதி. முறையே, 60 மற்றும் 14.

* மதிமுக வேட்பாளர் A.கணேசமூர்த்தி, சுயேச்சை A.C. கணேசமூர்த்தி, சுயேச்சை M. கணேசமூர்த்தி என மொத்தம் 3 கணேசமூர்த்திகள் ஈரோடு தொகுதியில் போட்டியிடுகின்றனர். ஒரே பெயர் கொண்ட அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி இதுதான்.

* முக்கிய கட்சிகள் தவிர, தமிழகத்தில் போட்டியிடும் போட்டியிடும் மற்ற சில கட்சிகளின் பெயர்கள்: இந்திய புதிய காங்கிரஸ், இந்திய கிறித்துவ முன்னணி, கிறித்துவ ஜனநாயக முன்னணி, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி, ஜம்மு & காஷ்மீர் தேசியச் சிறுத்தைகள் கட்சி, ஐக்கிய இந்தியக் கட்சி, நாம் இந்தியர் கட்சி, பிரகதிசில் சமாஜ்வாடி கட்சி, தமிழ் தெலுகு தேசியக் கட்சி, உலக சகோதரத்துவ இயக்கம், மதச்சார்பற்ற பூர்வாஞ்சல் ஜனதா, ஊழல் எதிர்ப்பு மாற்றுக் கட்சி, இளந்தமிழர் முன்னணிக் கழகம், அனைத்து மக்கள் புரட்சிக் கட்சி, அகில இந்திய மக்கள் கழகம், எழுச்சித் தமிழர்கள் முன்னேற்றக் கழகம், தேசிய மக்கள் சக்திக் கட்சி, தேசிய உழவர் உழைப்பாளர் கழகம், இராஷ்டிரிய சமாஜ் பக்ஷா, உழைப்பாளி மக்கள் கட்சி, இந்திய கனசங்க கட்சி, இந்திய சோசியலிச ஒற்றுமை மையம், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி. மதச்சார்பற்ற இந்திய மக்கள் கட்சி, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், சமாஜ்வாடி பார்வர்டு பிளாக், அம்பேத்கர் தேசிய காங்கிரஸ், பூர்வாஞ்சல் மகா பஞ்சாயத், ஆதர்ஷ் சமாஜ் கட்சி, விடியலைத் தேடும் இந்தியர்கள் கட்சி. குடியரசு சேனா.

எத்தனை அக்கிரமங்கள், கொடுஞ்செயல்கள் செய்த பின்னரும் ராமதாஸ் சமூகநீதி போர்வையில் தமிழகத்தில் வலம் வந்துக் கொண்டு இருப்பதற்கு காரணமே, சாதியவாதம் பாசிசத்திலும் சேராது,

எத்தனை அக்கிரமங்கள், கொடுஞ்செயல்கள் செய்த பின்னரும் ராமதாஸ் சமூகநீதி போர்வையில் தமிழகத்தில் வலம் வந்துக் கொண்டு இருப்பதற்கு காரணமே, சாதியவாதம் பாசிசத்திலும் சேராது, 

தலித் மக்களுக்கு என்னை போல உழைத்தவர் யாருமில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் சொல்லியிருப்பதாக தெரிகிறது. இதை அவர் சொல்வது முதல் முறையல்ல, ராமதாஸின் தலித் வெறுப்பு குறித்து கேள்வி கேட்கும் போதெல்லாம் அச்சூழலை சமாளிக்க அவர் அடிக்கடி சொல்வது தான்.

இதற்கான ஒரு சிறு விளக்கத்தை கொடுப்பதற்கு இது தான் தக்க தருணமென நினைக்கிறன் நான், ஏனென்றால்; பாரதிய ஜனதாவோடு கூட்டணி வைத்திருக்கின்ற இந்தச்சூழலில் இதைச்சொன்னால், ஒருவேளை இந்த பொதுச் சமூகம் நம்புவதற்கான வாய்ப்பிருக்கிறது என்கிற நப்பாசை தான். ஒருவேளை 2021 சட்டமன்ற தேர்தலில் அவர் கூட்டணி மாறினால், மீண்டும் அவர் சமூகநீதி காப்பளாராகி விடுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதால், இதுவே தருணம்.

ராமதாஸை சமூகநீதி காப்பாளர் என்பதற்கு பல சம்பவங்களை குறிப்பிடுவார்கள், அவரது இட ஒதுக்கீட்டு போராட்டத்தை தவிர்த்து, வேதாரண்யம் குடிதாங்கி சம்பவத்தை குறிப்பிடுவார்கள். தலித் பிணத்தை பொதுவழியில் தூக்கிச்சென்றதை ராமதாஸின் ஆகச்சிறந்த சமூகநீதி வரலாற்று நிகழ்வாக சொல்வார்கள், இச்சம்பவத்தை ராமதாஸே பல இடங்களில் குறிப்பிட்டது உண்டு. இதையும் மனதில் வைத்து "என்னைப் போல தலித் மக்களுக்கு உழைத்தவரில்லை" என்று அடிக்கடி சொல்லி வருகிறார்.

உண்மையில்; கும்பகோணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் TM மணி அவர்கள் நீலப்புலிகள் என்னும் அமைப்பை நடத்தி வந்தார், அவ்வமைப்பு தீண்டாமை, சாதி ஒழிப்பு, சாதிய அடக்குமுறைக்கு எதிராக தீவிரமாக களமாடி வந்த அமைப்பு.  TM மணி அவர்கள் பின்னாளில் இஸ்லாத்தை தழுவி  TM உமர் பரூக் ஆனார், அதே பெயருடன் தான் இறந்தார். நீலப்புலிகள் அமைப்பும் திரு TM மணியின் தொடர் போராட்டத்தின் வெற்றியாக தான் வேதாரண்யம் குடிதாங்கியில் பொதுவழியில் தலித் பிணத்தை கொண்டுபோக முடிந்தது.

கடைசி நேரத்தில் தேன்கூட்டை கலைத்து அதற்கு சம்மந்தமேயில்லாதவன் தேனை திருடிச்செல்வதை போல, இறுதிப்போராட்டத்தில் கலந்து கொண்டதனாலவே ராமதாஸ் அந்த மொத்த போராட்டத்திற்கான credits ஐ தட்டிச்சென்றார். அந்த வெற்றி நீலிபுலிகளுக்கும் TM மணி அவர்களுக்கும் நன்றி செலுத்தப் பட வேண்டிய வெற்றி. தலித்தல்லாத ஒருவர் இம்மாதிரி போராட்டங்களில் கலந்துக்கொள்வது ஜனநாயம் தான், மறுப்பதிற்கில்லை, ஆனால்; இந்திய சாதிய சமூகத்தில் தலித் ஒருவன் தனக்காக தன் அரசியலை பேசி போராடினால் அதை உவப்பாகவோ அல்லது அது அவன் தலையெழுத்து என்கிற மனநிலையில் சாதாரணமாகக் கடக்கும் சமூகம், தலித்தல்லாதவன் சிறிய பங்களிப்பை செலுத்தினாலும் அதை வரலாற்றில் பதிக்கிறது, போராளி என்கிறது, புரட்சியாளர் பட்டம் சுமத்தப்படுகிறது, அத்தோடு அல்லாமல் அந்த போராட்டத்திற்கான "முழுக் காரணமும் நானே" என அதை உரிமைக் கொண்டாடி காலத்துக்கும் சொல்லிக்காட்டவும் செய்கிறது.

"எனக்கு இதைச்செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆனாலும் செய்கிறேன் பார்த்தாயா?" என்கிற மனநிலையும் சாதிய சிந்தனையால் உற்பத்தியாகும் மனநிலை தான்.

இப்படி சின்னச்சின்ன பங்களிப்பை செய்து எஞ்சிய வாழக்கையில் எந்த தவறிழைத்தாலும் அதை விமர்சிக்கும் போதெல்லாம் அவர்களது சிறு பங்களிப்பு பேசுபொருளாகிறது அல்லது சொல்லிக்காட்டப்படுகிறது. ராமதாசும் அப்படியே கடைசி நேரத்தில் புகுந்து கவனம் பெற்றதால் அதை தனது பயோடேட்டாவில் இணைத்துக்கொண்டார், ஆனால் TM மணி அவர்களது மகத்தான பங்களிப்பை தனிவொரு பதிவு எழுதி சொல்ல வேண்டிய நிலையிலிருக்கிறது, அதுதான் வரலாறாகவும் கடத்தப்படுகிறது.

அதன் அடிப்படையில் தான் மருத்துவர் ராமதாஸ் நேரம் கிடைக்கும் போதெல்லாம் "என்னை விட தலித் மக்களுக்கு உழைத்தவர் யாருமில்லை" என்று சொல்லி வருகிறார், ஆனால் கடந்த இருபதாண்டு காலத்தில் மட்டும் கவுண்டர் - தலித் மக்கள் ஒற்றுமைக்கு எதிராக ராமதாஸ் செய்த வஞ்சகம், அவரின் சமூகநீதி சாயத்தை தாண்டி கோரமானாது.

எத்தனை அக்கிரமங்கள், கொடுஞ்செயல்கள் செய்த பின்னரும் ராமதாஸ் சமூகநீதி போர்வையில் தமிழகத்தில் வலம் வந்துக் கொண்டு இருப்பதற்கு காரணமே, சாதியவாதம் பாசிசத்திலும் சேராது, இந்துத்துவத்திலும் சேராது, சனாதானத்திலும் சேராது என்கிற எழுதாத நவீனச் சட்டமே தமிழகத்தின் சமூகநீதியாக இருப்பதால் தான்.

வாசுகி பாஸ்கர்