செவ்வாய், 16 ஏப்ரல், 2019

தமிழக அரசியல் களத்தில் டாப்–30 கோடீஸ்வர வேட்பாளர்கள் பெயரும் சொத்து மதிப்பும்...

தமிழக அரசியல் களத்தில் டாப்–30 கோடீஸ்வர வேட்பாளர்கள் பெயரும் சொத்து மதிப்பும்...

1. வசந்த குமார் (காங்கிரஸ்) கன்னியாகுமரி தொகுதி – ரூ. 417.48 கோடி

 2. இசக்கி சுப்பையா (அமமுக) தென்சென்னை தொகுதி - ரூ.237.56 கோடி

3. சி.மகேந்திரன் (அதிமுக) பொள்ளாச்சி தொகுதி – ரூ.172.32 கோடி

 4. ஆர். மகேந்திரன் (மக்கள் நீதி மய்யம்) – கோவை தொகுதி – ரூ.131.48 கோடி

 5. ஏ.சி.சண்முகம் (அதிமுக கூட்டணி) – வேலூர் தொகுதி - ரூ.125.83 கோடி

 6. ஜெகத்ரட்சகன் (திமுக) அரக்கோணம் தொகுதி - ரூ.114.69 கோடி

 7. பாரிவேந்தர் ( ஐஜேகே) – பெரம்பலூர் தொகுதி - ரூ. 97.26 கோடி

 8. சாருபாலா தொண்டைமான் (அமமுக) – திருச்சி தொகுதி- ரூ. 92.37 கோடி

 9. கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) சிவகங்கை தொகுதி - ரூ.79.34 கோடி

 10. எல்.கே.சுதீஷ் (தேமுதிக) கள்ளக்குறிச்சி தொகுதி - ரூ.68.57 கோடி

 11. சி.பி.ராதா கிருஷ்ணன் – (பாஜக) கோவை தொகுதி – 67.09 கோடி

 12. பி.முருகேசன் (அமமுக) – தஞ்சாவூர் தொகுதி - ரூ.64.96 கோடி

 13. டி.எம். கதிர் ஆனந்த் (திமுக) வேலூர் தொகுதி - ரூ.57.22 கோடி

 14. ஞானசேகர் (அமமுக) திருவண்ணாமலை தொகுதி - ரூ. 51 கோடி

 15. சின்னராஜ் ( கொ.ம.தே.க) – பொள்ளாச்சி தொகுதி - ரூ.48.34 கோடி

 16. கௌதம சிகாமணி (திமுக) கள்ளக்குறிச்சி தொகுதி - ரூ.47.09 கோடி

 17. டி.ஆர்.வி. எஸ்.ரமேஷ் (திமுக) கடலூர் தொகுதி - ரூ.42.32 கோடி

 18. வி.ஆர். கலாநிதி (திமுக) வடசென்னை - ரூ..32 கோடி

 19. வைத்தியலிங்கம் (பாமக) ஸ்ரீபெரும்பலூர் - ரூ.37.31 கோடி

 20. நவாஸ்கனி (முஸ்லீம் லீக்) ராமநாதபுரம் தொகுதி - ரூ.36-46 கோடி

 21, அன்புமணி ராமதாஸ் (பாமக) தர்மபுரி தொகுதி- ரூ. 33.84 கோடி

 22. கனிமொழி (திமுக) தூத்துக்குடி தொகுதி - ரூ.30.33 கோடி

 23. சாம் பால் (பாமக) மத்திய சென்னை தொகுதி - ரூ.30.18 கோடி

 24. என்.ஆர். அப்பாதுரை (அமமுக) கோவை தொகுதி - ரூ. 29.59 கோடி

 25. கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) தென்காசி தொகுதி - ரூ.25. 45 கோடி

 26. ஆர்.கோவிந்தசாமி (பாமக) கடலூர் தொகுதி - ரூ.25.45 கோடி

 27. வி.பாண்டி (அமமுக) சிவகங்கை தொகுதி – 23.92 கோடி

 28. பி.தம்பிதுரை (அதிமுக)  கரூர் தொகுதி – ரூ. 23.41 கோடி

 29. ஞானதிரவியம் (திமுக) நெல்லை தொகுதி - ரூ. 23.26 கோடி

 30. டி.ஆர்.பாலு (திமுக) – ஸ்ரீபெரும்புதூர் தொகுதி – ரூ. 20.42 கோடி

ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்... அமலுக்கு வரும் விதிமுறைகள் என்னென்ன?


ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்... அமலுக்கு வரும் விதிமுறைகள் என்னென்ன?

சிந்தியுங்கள்... செயல்படுங்கள்

👆நம் வாக்கு... நம் உரிமை👆
ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்...!!
👆மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிந்தது.

👆தேர்தல் விதிகளின்படி, வாக்குப்பதிவு முடியும் 48 மணி நேரத்திற்கு முன்பாக பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

👆இதன்பின் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது.

👆மேலும், தேர்தல் தொடர்பான எதையும் திரைப்படம், தொலைக்காட்சி, எப்எம் ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போன்றவை வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது.

👆இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் பிரச்சாரம் செய்யக்கூடாது. இவற்றை மீறினால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

👆தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள், அத்தொகுதியின் வாக்காளர் அல்லாதோர் அனைவரும் இன்றுடன் அதாவது 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

👆வேட்பாளருக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் செல்லாததாகி விடும்.

👆வேட்பாளர்கள், சமுதாய கூடங்கள், விருந்தினர் மாளிகைகள், தர்ம சத்திரங்கள் முதலான இடங்களை வாக்கு சேகரிக்கும் இடமாக பயன்படுத்தக்கூடாது.

👆வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர் அவரது பயன்பாட்டிற்கு ஒரு வாகனம், தேர்தல் முகவர் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கான அவரது பணியாளர்கள் அல்லது கட்சிப்பணியாளர்கள் பயன்பாட்டிற்கு ஒரு வாகனத்திற்கு தேர்தல் நடத்தும் அதிகாரிடம் தனி அனுமதி பெற வேண்டும்.

👆வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், திரும்ப அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுக்கவோ, பயன்படுத்தவோ அனுமதியில்லை. இதை மீறி நடந்தால் தண்டிக்கப்படுவர்.

👆அரசியல் கட்சிகளின் தற்காலிக அலுவலகம் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அங்கு அனுமதிக்கக்கூடாது.

👆மேலும், இன்று மாலை 6 மணி முதல் கருத்துக்கணிப்பு உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும் மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது.