செவ்வாய், 26 ஜூன், 2018

சேகுவேரா அன்று இந்தியா வந்தபோது இடதுசாரிகள் கண்டுகொள்ளாதது ஏன்?



சேகுவேரா அன்று இந்தியா வந்தபோது இடதுசாரிகள் கண்டுகொள்ளாதது ஏன்?

சேகுவேரா பற்றிய எத்தனையோ புத்தகங்கள் வந்திருக்கின்றன.. எத்தனையோ திரைப்படங்கள் வந்திருக்கின்றன.. அதுவும் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் மட்டுமே தேசிய இனம் மற்றும் புரட்சி என பேசுகிற முற்போக்கு முகாம்களின் முதுகுகள் சேகுவேராவின் டி சர்ட்டுகளை அணியாமல் இருந்தது இல்லை..
எங்கோ அர்ஜெண்டினாவில் பிறந்து மருத்துவராக வளர்ந்து பின்னர் காடுகளில் அலைந்து திரிந்து லத்தீன் அமெரிக்க தேசத்து நாடுகளின் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடி மரணித்துப் போன மாபெரும் போராளியாக இன்றும் உலகமே கொண்டாடக் கூடிய அதி அற்புதன்!
கியூபாவில் போராளியாகி அரசுப் பொறுப்பிலே அங்கம் வகித்து அதே கியூபாவைவிட்டு ரகசியமாக வெளியேறி காங்கோ நாட்டுப் புரட்சிக்காக, பொலிவியா புரட்சிக்காக களமாடிய மாவீரன்!
வரலாறு நெடுகிலும் இப்படித்தான் சே குவேராவைப் பற்றிய பதிவு இருக்கிறது,.
அந்த மாமனிதன் காலடிகள் 1959ஆம் ஆண்டில் இந்த இந்திய துணைக் கண்டத்திலும் பதிந்திருக்கிறது என்பதையே இந்த தலைமுறைக்கு 9 ஆண்டுகளுக்கு முன்புதான் ஓம் தன்வி என்ற எழுத்தாளர் அறிவித்தார்..
அதற்காக அவர் மேற்கொண்ட பயணம் அவ்வளவு நெடியது.. அதன் பின்னர் விக்கிலீக்ஸ் தகவல்களில் சேவின் இந்திய பயணக் குறிப்பு 2011-ம் ஆண்டு வெளியானது சரி
அதற்கும் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன தொடர்பு? என்கிறீர்களா?
டெல்லி வந்த சேகுவேரா அப்போதைய பிரதமர் ஜாஹர்லால் நேருவை சந்தித்துப் பேசினார். அவர் நேருவுக்கு பரிசாகக் கொடுத்தது கியூபா சிகரெட்டுகள்.. நேரு அப்போது அளித்த விருந்தில் இந்திரா குடும்பமும் கலந்து கொண்டது.
நேருவிடம் கம்யூனிஸ கியூபா பற்றியும் மா சேதுங் பற்றியும் சே குவேரா கேள்விகள் கேட்க...நேருவோ நேரடியாக பதிலளிக்காமல் ஆப்பிள் பழங்களைப் பற்றி பேசி இருந்திருக்கிறார்.
சேகுவேரா பற்றிய ஓம் தன்வியின் ஆதாரங்களுக்கு பேருதவியாக இருந்தவர் டெல்லி ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த கே பி பானுமதி என்பவர்தான்!
அவர் சேகுவராவை பேட்டி எடுத்து ஒலி பரப்பியவர்!
அவரும் சேகுவேரா பற்றி நினைவுகளைப் பதிவு செய்கிறார்..அவர் போன முக்கியமான இடம் கொல்கத்தா!
ஆம் கம்யூனிஸ்டுகளின் கோட்டைக்குப் போனார்.. ஆனால் என்ன நடந்தது?
இந்தியா வருகை தந்த சேகுவேரா கம்யூனிஸ்டுகளின் கோட்டையான கொல்கத்தாவுக்கும் கூட போயிருக்கிறார். அப்போதைய முதல்வராக இருந்த பி.சி. ராயை சந்தித்துப் பேசியிருக்கிறார் என்றெல்லாம் சொல்லும் அந்தப் பதிவு ஒரு அதிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.!
அப்போது கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியாக பிளவுபடாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாகவே இருந்த காலம்!
எந்த ஒரு கம்யூனிஸ்ட் தலைவரையும் சே குவேரா சந்தித்ததாகவோ எந்த ஒரு குறிப்புமே இல்லை..
(Shockingly, the Calcutta communists - at a time when the Communist Party of India had not yet split - completely ignored the presence of this great leader of the Cuban revolution.)
ஓம் தன்வி சேகரித்து வெளியிட்ட புகைப்படங்களிலுமே கூட அப்படியான ஒரு காட்சி கூட இல்லை..
அதுமட்டுமல்ல..
சே குவேரா இந்தியா வந்து போன வரலாற்றை பதிவு செய்யக் கூடிய எந்த ஒரு நூலையும் அவரைக் கொண்டாடுகிற கம்யூனிஸ்ட் கட்சிகள் இதுவரை வெளியிட்டதாக தெரியவில்லை
அப்படியானால் சேகுவேராவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அன்று கொல்கத்தாவில் அவமதித்தனவா? அதை வரலாற்றுப் பக்க்கங்களில் மறைக்கின்றனவா?
பிடல் காஸ்ட்ரோவின் வரிகளில் சொல்வதானால் அந்த உண்மையை "வரலாறு விடுதலை செய்யும்"!
இன்று 'சே' எனும் சே குவேரா சுட்டுக் கொல்லப்பட்ட நாள் (09.10.1967)
நன்றி : ஒன் இந்தியா தமிழ்.

"இரட்டை வாக்குரிமை "


"இரட்டை வாக்குரிமை "

  1921-ல் இங்கிலாந்து வல்லரசு சைமன்குழுவை
காங்கிரசுபுறக்கணித்தது
இங்கிலாந்து பேரரசர்அய்
ந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்
திய பிரதிநிதிகள் அனை
வரையும் லண்டனுக்கு வரவழைத்து நேரில் அவ
ர்களது கோரிக்கைகளை
கேட்பதற்கான ஒரு கூட்ட
த்தை ஏர்பாடு செய்தார்.
அதுவே வட்டமேசை மாநாடு  என்று அழைக்க
ப்பட்டது. 
  1930,1932 ஆகிய ஆண்
டுகளில் நடைபெற்ற வட்
ட மேசை மாநாடுகளில்
புரட்சியாளர் அம்பேத்கரு
ம்,  மாவீரர்இரட்டைமலை
சீனுவாசனாரும் கலந்து
கொண்டனர்.அங்கு இரட்
டை வாக்குரிமை கோரிக்
கை அம்பேத்கரால் வலி
மையான வாதங்கலோடு
எடுத்து வைக்கப்பட்டது.

 1921 -லேயே தாம் நடத்தி
வந்த திராவிடன் இதழ் வ ழி இரட்டைவாக்குரிமை
கோரிக்கைக்கு முன்னோ
டியான கருத்தியலை உரு
வாக்கிய பேரறிஞர்
"அயோத்திதாசர் ".

   இரட்டை வாக்குரிமைக்
காய் வட்ட மேசை மாநாட்
டில் அம்பேத்கரோடு நின்
று போராடிய மாவீரன்
"இரட்டைடேமலை சீனு
வாசனார்."

   இரட்டை வாக்குரிமை
இந்த கோரிக்கைக்கு அடி
ப்படையாக விலங்குவது
சமுகத்தில் நிலவும் சாதிய
கட்டமைப்புதானே தவிர
தலித்துக்களின் அதிகார
ஆசையல்ல.
    இரட்டை வாழிடம், இர
ட்டை சுடுகாடு , இரட்டை
வழிப்பாட்டு தலம், இரட்
டை குவாளைமுறை என
திணிக்கப்படும் இரட்டை
வாழ்நிலையின் எதிர் வினையாகவே இரட்டை
வாக்குரிமை எழுகிறது
என்பதை உணர்ந்து வரும்
எழுச்சித்தமிழர் அவர்கள்
மக்களைத் திரட்டி பலகட்
ட போராட்டங்களை பல
வடிவங்களில் சமூக தலை
நிமிர்க்கு தியாக போராளி
போராடிவருகின்றார் ...!