திங்கள், 18 ஜூன், 2018

Rss vhp பஜ்ரங் தள்.....தடை பற்றிய அறிவிப்பு செய்திகளை கேள்விப் பட்டு இருப்பீர்கள் ... அதைப் பற்றிய விரிவான உண்மையான தகவல்கள்


Rss  vhp பஜ்ரங் தள்.....தடை பற்றிய அறிவிப்பு செய்திகளை கேள்விப் பட்டு இருப்பீர்கள் ... அதைப் பற்றிய விரிவான உண்மையான தகவல்கள்

Rss  vhp சிவசேனா ராம்சேனா அனுமன்சேனா பஜ்ரங்தள் மற்றும் அதன் கிளை அமைப்புகள் அனைத்தும் மத  பயங்கவாத அமைப்புகளாக அறிவித்து தடை செய்தது உலகின் நம்பர் 1 பாதுகாப்பு அமைப்பும்,, அமெரிக்காவின் உளவு பிரிவான CIA (cetral intelligence agency)

இனிமேல் இந்த அமைப்புகளின் செயல்பாடுகளை அமெரிக்காவில் முழுவதுமாக தடை செய்திருக்கிறது VIA.. இந்தியாவிலும் இந்த அமைப்புகளின் செயல் பாடுகள் கண்காணிக்கப்படும் என்று சொல்லி rss டவுசர்களின் வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது அமெரிக்கா

ஏன் என்ன எதனால் ஒரு நாட்டினன் பிரதமர் இருக்கும் ஒரு அமைப்புக்கு இவ்வளவு பெரிய ஆப்பு??

அதற்க்கான பின்னணி காரணங்களை  விசாரித்தால் வரும்  எல்லாம் வெடிகுண்டு ரகம்.... அப்படி என்ன ன்னு வாருங்கள் தெரிந்து கொள்வோம்

அமெரிக்கா உலகம் முழுவதும் உள்ள எல்லா இயக்கங்களையும் கண்காணித்து வருகிறது...அவற்றில் isis... ஆகாய்தா... ஜெய்ஷிஇ முகமத்... இந்தியாவில் சிமி போன்ற இன்னும் பல அமைப்புகள் உலகெங்கும் உள்ளன

ஐ நா சபையில் உள்ள உறுப்புநாடுகள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் பிட்டு இருக்கின்றன... அதில் ஒவ்வொரு நாட்டிலும் போராட்ட இயக்கங்கள் நடத்திக்கொள்ள உரிமை உண்டு ஆனால் அதற்க்கு சில நிபந்தனைகள் உள்ளன அவை

1 இயக்கம் பெயர் தெளிவாக இருக்க வேண்டும்

2 கொள்கைகள் பற்றி தெளிவான வரையறைகள் இருக்க வேண்டும்

3 மிக முக்கியமானது உறுப்பினர் சேர்க்கை ... நீக்கம் குறித்தான தெளிவான ஆவணங்கள் பராமரிக்கப் பட வேண்டும்

4 உறுப்பினர்களுக்கு அடையாள எண் பதிவு என் போன்ற விபரங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்

5 சம்பந்தப் பட்ட நாட்டின் அமைச்சரவை ஒப்புதலோடு கூடிய அனுமதியை பெற்று அந்த இயக்கம் இயங்க வேண்டும்

6 கூட்டங்கள் ...பங்கேற்போர் விபரங்களை எப்போதும் வெளிப்டையாக  பொது மக்கள் மத்தியில் பகிர்ந்துவிடு இருக்குமா வேண்டும் ...என்று.  இன்னும் நிறைய கட்டுப்பாடுகளை ஐ நா சபை உறுப்பு நாடுகள் தங்களுக்குள் ஒப்புக்கொண்டு உள்ளன இவற்றிற்கு கட்டுப் படாத இயக்கங்கள் தடை செய்யப்படும்

Rss மற்றும் அதன் அல்லக்கை  அமைப்புகளிடம் CIA இந்த விபரங்களைக் கேட்டு இருந்தது  அப்போது தான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்துள்ளன

அதாவது மேலே சொன்ன அவர்கள் கேட்ட ஒரு தகவலைக்கூட இவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை

அதாவது rss ல் உறுப்பினர் சேர்க்கை.... உறுப்பினர் நீக்கம் போன்ற எதுவும் இல்லை

உறுப்பினர்களுக்கு பதிவு எண் இல்லை

 ஒவ்வொரு இயக்கத்துக்கும் ஒரு அரசு அனுமதி எண் வேண்டும் அதை வருடா வருடம் ரெனியூவல் அதாவது புதுப்பிக்க வேண்டும் அந்த இயக்கத்துக்கு தலைமையகம்  தலைவர்...செயலாளர்.... மற்றும் ஒவ்வொரு பதவிக்கும் பொறுப்பாளர்கள் என்று எல்லாம் இருக்கணும் அப்போது தான் அந்த இயக்க உறுப்பினர்கள் செய்யும் தவறுகளுக்கு இழப்பீடு அல்லது விசாரணையை தலைமையிடம் கேக்க முடியும்  ஆனால்  rss ல் இது எதுவுமே இல்லை

இப்போது தான் அமெரிக்கா விழித்துக் கொண்டது
முடிவில் தெரிய வந்த உண்மை என்னன்னா

Rss ஒரு ரகசிய இயக்கம் அதுவும் பயங்கவாத செயல்களில் ஈடுபடும் பயங்கரவாத இயக்கம் .. மொஸார்ட்  போல செயல்படும் ஒரு கூலிப்படை இயக்கம் என்று அம்பலப்படுத்தி இருக்கிறது....

சர்தார் பட்டேல் இதே காரணங்களுக்காக தான் rss ஐ அப்போது  நீங்கள் ரகசிய இயக்கம் உங்களை அனுமதிக்க முடியாது என்று சொல்லி தடைசெய்தார்

அது மட்டுமல்ல பெயருக்கு தான் மோகன் பாகவத் தலைவர் ஆனால் உண்மையில் அது குறிப்பட்ட நான்கு கோடீஸ்வர பிராமணன்கள் குடும்பங்கள்  நடத்தும் ஒரு கூலிப்படைபோன்ற  ஒரு குழு என்கிறது

முடிவில் அமெரிக்கா இப்படி அறிவித்து இருக்கிறது

Isisபயங்கரவாத அமைப்பை போல rss vhp  மற்றும் அதன் அனைத்து  அல்லக்கை அமைப்புகளும் ரகசிய பயங்கரவாத அமைப்புகள் எண்டது அறிவித்து இருக்கிறது

இப்போது isis பயங்கவாத இயக்கங்களில் பட்டியலில் தான் rss ... vhp ..மற்றும் அதன் கிளை அமைப்புகள் உள்ளன என்பது தான் நிதர்சனமான அதிர்ச்சியூட்டும் உண்மை

இப்போது இதன் கண்மணிகள் பதில் சொல்ல கடமைப் பட்டவர்கள் ...

பதில் சொல்ல விரும்புவோர் தக்க  ஆதாரங்களுடன்  நாகரிகமாக பதில் சொல்லலாம் ...

நம் பதிவுக்கான ஆதாரம் கீழே ...





படித்ததில் வெட்கி தலை குனிந்தது.....



படித்ததில் வெட்கி  தலை குனிந்தது.....

உலக மக்களே இது
எங்க ஊருல மட்டும் தான் நடக்கும் ....

சட்டப்படி மெஜாரிட்டி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தும் ஆட்சியில் நீடித்துக்கொண்டே இருக்கிறது ஒரு கட்சி. அந்த அசிங்கத்துப் பெயர்

                    "மாநில அரசு"

இந்த அநீதியைத் தெரிந்தே அனுமதித்துக்கொண்டு, வழக்கைத் தள்ளிப்போட்டபடியே, இந்த அரசைக் காக்கும் இடத்திற்குப் பெயர்        

                     "நீதிமன்றம்"

பெரிய மனிதர்களுக்குப் பாலியல் விருந்தளிக்க, அதற்கு மாணவிகளைப் பயன்படுத்த 'ஆள் பிடிக்கிறார்' ஒரு பெண். அந்த பாலியல் புரோக்கருக்கு பெயர்

"பேராசிரியர்"

அப்படி 'ஆள் பிடித்த வழக்கில்' தனது பெயர் சம்பந்தப்பட்டது தெரிந்தவுடனே தானே ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து, அதன் அறிக்கையைத் தானே வாங்கி வைத்துக் கொள்கிறார் ஒருவர்

பேட்டியெடுக்க வந்த பெண் நிருபரின் கன்னத்தைத் தடவுகிறார் அந்தப் பெரிய மனுசனுக்கு பெயர்

                      ஆளுனர்"

மருத்துவக் கல்வி படிக்க விரும்பும் இந்த மாநிலத்தின் குழந்தைகளுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் கொடுக்கப்படுகிறது.

அலைச்சலில் சாகிறார் தந்தை ஒருவர். குக்கிராமத்தில் படிக்கும் குழந்தைக்கும், தலைநகரில் படிக்கும் குழந்தைக்கும் ஒரேவிதமான தேர்வு நடத்தப்பட்டு அவர்களது கனவுகள் சிதறடிக்கப்படுகின்றன. அதற்குப் பெயர்

               "தகுதித் தேர்வு"

பெண் பத்திரிக்கையாளர்கள் மற்றும் உயர் பொறுப்புக்களைப் பெறும் பெண்கள் பெரிய  மனிதர்களுடன்  படுக்கையில்  படுத்து தான்  அந்த  வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்கிறான் ஒருத்தன்  அந்த காமுகனுக்கு  பெயர்

             "கட்சிப் பிரமுகர்"

அவனைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் அதிகாரத்திலிருக்கும் முக்கியமான ஒருவரோடு ஒரு நிகழ்வில் கலந்துகொள்கிறார் அந்த நபர். "அவனைப் பிடித்துத் தருவது என் வேலை அல்ல" என்கிறார் அந்த முக்கியமான மனிதன் அவருக்குப் பெயர்

              "மத்திய அமைச்சர்"

கைது செய்யப்பட வேண்டியவரின் வீட்டுக்கே காவல்துறை பாதுகாப்பு கொடுத்துக்கொண்டிருக்கிறது. காரணம் செல்வாக்கு  மிக்க அவரது உறவினர். அவருக்குப் பெயர்

            "தலைமைச் செயலாளர்"

மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் போதைப்பொருளான குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள் இருவர். ஒருவருக்குப் பெயர்

             "சுகாதாரத்துறை அமைச்சர்".

தீவிரவாதிகளுக்கு எதிரான 'துல்லியத் தாக்குதல்' போல குறிவைத்துச் சுட்டபிறகு, காயம்பட்டவர்களை மருத்துவமனைகளிலும் சென்று அடித்து நொறுக்குகிறது சீருடை அணியாத ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம். அதற்குப் பெயர்

                  "காவல்துறை"

விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே, மக்களுக்குப் போக்குக் காட்டியபடியே, பின் வேறு வழியில்லாமல் செய்தியின் தீவிரத்தைக் குறைத்து வெளியே பரப்புகின்றன சில நிறுவனங்கள். விவாதங்களின் மூலம் அரசுத் தரப்பை நியாயப் படுத்தும் வேலையைத் தெளிவாகச் செய்யவும் தெரியும் அந்த  அடிமைகளுக்கு  பெயர்

                     "ஊடகங்கள்"

தனது மாநிலத்தின் மக்கள் சுடப்பட்டுச் சாகும்போது "துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது" என்கிறார் ஒருவர். அவருக்குப் பெயர்

              "மாநில அமைச்சர்"

"இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தனக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டுச் செத்தவர்களுக்குப் பத்து லட்சம் ரூபாய் பிச்சையிடுகிறார் ஒருவர். அவருக்குப் பெயர்

                   "முதலமைச்சர்"

நேற்றுவரை அரிதாரம் பூசிட்டு எழுதிக் கொடுத்ததை கேமரா முன் வீர வசனம் பேசி நடித்த ஒருவன் கிட்னி நுரையீரல் எல்லாம் கெட்டுப் போன பிறகு இனி நடிப்புக்கு இந்த உடல் உதவாது ன்னு உறுதியா தெருஞ்சதுக்கு பிறகு மக்கள் மேல திடீர் பாசம் வந்து அவர்களைப்பார்த்துட்டு இவர்கள் சமூக விரோதிகள் ங்கறான் ஒருத்தன் அவனுக்கு பேரு

               வருங்காலமுதலமைச்சர்

இவையெல்லாவற்றுக்கும்,  விட்டுக்கொடுக்காமல் முட்டுக் கொடுக்கும் அற்பப் பதர்களுக்குப் பெயர் " தேச பக்தர்கள்"

இதையெல்லாம் மனசாட்சியில்லாமல் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பிற்குப் பெயர் "தேசம்"

ஆனால், தங்களது வாழ்வாதாரத்திற்கும், தங்களது ஊரின் சுற்றுப்புறச் சூழலுக்கும், தங்கள் குடும்பத்தினரின் உடல்நிலைக்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கும், போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்களுக்கும், இவ்வளவு ஏன், வாய்வழியே சுடப்பட்டுச் செத்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவிக்குமான பெயர் மட்டும் சமூக விரோதிகள் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள்

வாழ்க பாரதம் ....
பாரத் ஆத்தாக்கி செய் செய்... WhatsApp ல் வந்தது.