சர்வதேச யோகா நாள்ல இவரப் பத்தி தெரிஞ்சுக்கலன்னா எப்பிடி?
இன்று நான்காவது சர்வதேச யோகாதினம் கடைபிடிக்கப்படுகிறது இந்த தினத்தில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் குரு பாபா ராம்தேவ் தலைமையில் ஒரேயிடத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்சிகள் நடைபெறுகிறது.
இந்த நேரத்தில் யோகா மட்டுமல்லது ஆயுர்வேதம், அரசியல்,பிஸ்னஸ் என பல துறைகளிலும் புகுந்து விளையாடி வரும் பாபா ராம்தேவ் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ராம்தேவ் ஹரியானா மாநிலத்தில் உள்ள மஹேந்திரகார் என்ற மாவட்டத்தில் இருக்கும் அலிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் ராம் நிவாஸ் யாதவ் மற்றும் குலாபா தேவி இவருக்கு ராமகிருஷ்ண யாதவ் என்று பெயர் சூட்டினர். அலிப்பூரிலேயே எட்டாம் வகுப்பு வரை படித்த ராம் தேவ் அதன் பிறகு திடீரென்று ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு பள்ளிப்படிப்பை நிறுத்தினார்.
தொடர்ந்து யோகா, சமிஸ்கிருதம் ஆகியவை கற்றுத் தேர்ந்தார். பின்னர் ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் போது சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். இந்திய வேதங்களின் மீது ஈர்ப்பு கொண்டு அதை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். ஹரித்வாரில் உள்ள குருகுல் காங்கரி விஸ்வ வித்யாலாவில் சேர்ந்து அரபிந்தோ கோஷின் யோகிக் சதன் என்ற புத்தகத்தை படித்தார்.
அதன் பிறகு இமயமலை குகையில் தீவிரமாக யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்.
தான் கற்றுக் கொண்ட யோகாவை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க விரும்பியவர் திவ்யா யோக் மந்திர் டிரஸ்ட் என்ற அமைப்பை உருவாக்கினார். ஆச்சார்யா நிதின் சோனி நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய யோகா பயிற்சியை முதன் முதலாக ஆஸ்தா என்ற தொலைகாட்சியில் செய்தார். இதற்கும் யாரும் எதிர்பாராத வகையில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
நாளுக்கு நாள் அவரது புகழ் அதிகரித்துக் கொண்டே சென்றது. அமிதாப் பச்சன்,ஷில்பா ஷெட்டி உட்பட பல பிரபலங்களுக்கு யோகா சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதோடு பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும் இஸ்லாமிய மத குருமார்கள் பயிலும் கல்லூரியிலும் யோகா பயிற்சி அளித்திருக்கிறார்.
இவருடைய பதஞ்சலி யோகபீடத்திற்கு ஸ்காட்லாந்தில் இருக்கும் ஒரு தீவையே இவரை பின்பற்றும் தம்பதியனர் காணிக்கையாக கொடுத்திருக்கிறார்கள்.
இவரது மூச்சுப் பயிற்சி மற்றும் ஆயுர்வேத முறைகளினால் பல நோய்கள் குணமாவதை அறிந்த ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் புதிதாக யோகா மற்றும் ஆயுர்வேதம் தொடர்பான பாடங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஒரு பக்கம் மக்களின் ஆரோக்கியம் குறித்து பேசி வந்தவர் பின்னர் ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு லட்சம் பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய பேரணியை நடத்திக்காட்டினார். அதோடு ஊழலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் தெரிவித்தார். கருப்பு பணத்தை எப்படி மீட்கலாம் என்று சொல்லி அரசுக்கு பல யோசனைகளை முன்மொழிந்தார். இதனால் போலீசாரால் கைது செய்யப்பட்டு சுமார் பதினைந்து நாட்கள் வரையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஹரித்வாரில் ஆயுர்வேதம் மற்றும் யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி அதனை நடத்தி வருகிறார் இங்கு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையம் தான் உலகிலேயே மிகப்பெரிய ஆயுர்வேதம் மற்றும் யோகா பயிற்சி மையம் என்று சொல்லப்படுகிறது இவருடைய சொத்து மதிப்பு மட்டும் முப்பது பில்லையனைத் தாண்டும் என்கிறார்கள்.
பாபா ராம்தேவின் யோகா பயிற்சியை நேரடியாக நீங்கள் பங்கேற்க வேண்டும் என்றால் அதற்கு லட்சக்கணக்கில் நீங்கள் செலவிட வேண்டியிருக்கும். முதல் வரிசையில் உட்கார ஐம்பதாயிரத்திலிருந்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. இது சாதரண நாட்களில், ஏதேனும் விஷேச தினம் என்றால் முதல் வரிசையில் உட்காருவதற்கான டிக்கெட்டின் விலை லட்சக்கணக்கை தாண்டுகிறது. யோகா பயிற்சி நடக்கிற இடத்தில் கடைசி வரிசையில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அதன் ஆரம்ப விலை ஆயிரத்திலிருந்து ஆரம்பம். இதன் விலையும் விஷேச நாட்களில் கூடுதலாக இருக்கிறது.
தன்னுடைய யோகா பயிற்சியின் மூலம் எயிட்ஸை குணமாக்குவேன் என்று சொன்னார் ராம்தேவ். ஆனால் இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து நான் எயிட்சை குணமாக்குவேன் என்று சொல்லவில்லை. எயிட்சால் பாதிக்கப்பட்டவர்கள் யோகா செய்யும் போது அவர்களுக்கு ஒரு ரிலீஃப் கிடைக்கும் என்றேன் என்றார். தான் கொடுக்கும் மருந்துகளால் பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்லியும் சர்ச்சையில் சிக்கினார்.
தனக்கு சிறுவயதாக இருந்த போது இடதுபக்கம் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டதாவும் ரிஷி தயானந்த் அவர்களின் புத்தகத்தை படித்த பிறகு அதன்படியே நடந்து கொள்ள ஆரம்பித்த பிறகு அந்த முடக்குவாதம் சரியாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் நீங்கள் கூர்ந்து கவனித்தால் அவரது வலது புற நெற்றியில் சுருக்கங்கள் இருக்காது. வலது கண் அவ்வளவாக சிமிட்ட மாட்டார். ஆவருக்கு வலது பக்கம் தான் முடக்குவாதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். இடது பக்கம் முடக்குவாதம் ஏற்பட்டதற்கான அறிகுறிகளே இல்லையாம்!
ஊழலுக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு டெல்லியில் இருக்கிற ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடக்கும் போது போலீசார் கைது செய்ய வருகிறார்கள் என்று தெரிந்ததும் சுடிதார் அணிந்து, துப்பட்டாவினால் தலையில் முக்காடிட்டு தப்பிக்க முயன்றிருக்கிறார்.
ஆனால் இவருடைய தாடி காட்டிக் கொடுத்துவிட்டது இவர் நிறுவிய திவ்யா மருந்தகம் கிட்டத்தட்ட 280க்கும் மேற்பட்ட மருந்துகளையும் பிற பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதன்மூலமாக ஆண்டுக்கு ஆயிரத்துநூறு கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது.