வியாழன், 1 நவம்பர், 2018

OBC/SC/ST & RELIGIOUS MINORITIES மக்களுடைய இட ஒதுக்கீட்டு முறையின் எதிரி, அகன்ற பாரதத்தின் பிரிவினைவாதி சர்தார் வல்லபாய் படேல்... .


OBC/SC/ST & RELIGIOUS MINORITIES  மக்களுடைய இட ஒதுக்கீட்டு முறையின் எதிரி, அகன்ற பாரதத்தின் பிரிவினைவாதி  சர்தார் வல்லபாய் படேல்...       .

ஒன்றுபட்ட பாரதம் என்பது இன்றைய  1. இந்தியா, 2.இலங்கை, 3.பாகிஸ்தான்,4.பங்ளாதேஷ் மற்றும் 5.ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அடங்கியவை.

வெவ்வேறு சூழலில், இவை தனிதனித்நாடுகளாக பிரிந்தன. அதற்கான காரணமும் இருக்கின்றன. இதில் மிக முக்கியமாக பாகிஸ்தானும், கிழக்குபாகிஸ்தானும்(இன்றைய பங்களாதேஷ்) இந்தியாவிலிருந்து பிரிந்ததற்கான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரணம் உள்ளது.

இங்கு மதங்களை வைத்து அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வேளையில், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சீரிய முயற்சியினால், இந்தியாவில் முதன் முதலாக 1911- ல் சாதிவாரி கணக்கெடுப்பை அன்றைய பிரிட்டிஷ் அரசு எடுத்தது. அதில் 428 சாதிகள் இந்துக்கள் அல்ல என்று சென்சஸ் கமிஷனால் அறியப்பட்டது.         அதன்  பிறகு பாபாசாகேப் அவர்களின் கோரிக்கையை ஏற்று 1918ல் செளத்பரோ கமிட்டி மற்றும் 1927-1928 களில் சைமன் கமிஷன் மூலமாக, வயதின் அடிப்படையில் அனைவருக்கும்  ஓட்டு என்ற அரசியல் உரிமையும், கல்வியின் அடிப்படையில், வேலைவாய்ப்பும்,  சம உரிமை அளித்தல் போன்ற காரணங்களுக்காக சைமன் கமிஷன்   அமைக்கப்பட்டது. இதில் நம் முன்னோர்கள் யாவருக்கும் ஓட்டுரிமையோ, வேட்பாளராகும் தகுதியோ கிடையாது. ஆனால், பாபாசாகேப் அவர்கள் அன்றைக்கு 21 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓட்டுரிமை(Adult Enfranchisement) வாங்கிக் கொடுத்தார்.

மேலும், இதன் தொடர்ச்சியாக 1930-1932 களில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் பிரிட்டிஷ் அரசு, கமிஷனில் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தது. இதில்  பட்டியலின மக்களுக்கு இரட்டை வாக்குரிமையுடன் (dual voting rights) கூடிய தனித்தொகுதி (Separate electorates) வழங்கப்பட்டது. பிறகு அது பார்ப்பனிய சூழ்ச்சியின் தூண்டுதலின்பேரில்  காந்தி அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.  பட்டியலின மக்களுக்கு எவ்வித உரிமைகளும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அதன் விளைவாக தனித்தொகுதி முறையும்,  இரட்டை வாக்குரிமையும் பறிக்கப்பட்டு இன்றைய ரிசர்வ்தொகுதிகள் முறை கொண்டுவரப்பட்டது. இதை பாபாசாகேப் மனமாற ஏற்கவில்லை. இதுவே பூனா ஒப்பந்தம் ஆகும்.

இறுதியாக ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முடிவு எடுத்தது. சுதந்திரம் கொடுப்பதற்கு முன்பு, இந்தியாவிற்கு அரசியல் அமைப்பு சட்டத்தை (constitution) உருவாக்க கமிட்டி அமைக்க பணித்தது. இதன் காரணமாக பாபாசாகேப் அவர்கள் எந்த நிலையிலும் அரசியல் சாசன சபைக்குள்(constitution assembly) வந்துவிடக் கூடாது என்று பார்ப்பணர்களும்(Brahmins) பார்ப்பனிய ஏவலாளிகளான ஜாதிஇந்துக்களும் (brahminists) மிகவும் உறுதியாக இருந்தனர். அப்பொழுது,  பங்ளாதேச பகுதியில் அமைந்துள்ள ஜெய்சூர் (jaisur) மற்றும் குல்நார் (Kulnar) தொகுதியிலிருந்து பாபாசாகேப் அவர்களும், ஜோகிந்தர் நாத் மண்டல் அவர்களும் அரசியல் சாசன சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள்- அனைவருக்கும் சம உரிமை கல்வி,வேலைவாய்ப்பு, அரசியல் பங்கீடு போன்ற உரிமைகளுக்கு ஒப்புதல் வழங்க  பாபாசகேப் அவர்கள் அரசியல் சாசன சபையில் உரிமைகோரிய கோரிக்கைகளை முழுவதுமாக ரத்து செய்தவர்தான் இந்த சர்தார் வல்லபாய் அவர்கள். அதாவது அனைவரும் இடம் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட பிரதிநிதித்துவ முறையான 'இட ஒதுக்கீட்டு' முறையை இரத்து செய்தவர் தான்  இந்த பார்ப்பனிய கரும்பு மனிதர்.

மேலும் வல்லபாய் அவர்கள் ஒருபடி மேலே சென்று எப்படியாவது பாபாசகேப் அவர்களை    அரசியல்சாசன சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று  திட்டமிட்டார். பாபாசகேப் அவர்கள் தேர்தெடுக்கப்பட்ட தொகுதி கிழக்கு பாகிஸ்தானில் இருப்பதை அறிந்த வல்லபாய் அவர்கள் அந்த இடங்களை  இந்தியாவிலிருந்து   தனியாக பிரித்து பாகிஸ்தானுக்கு உட்பட்ட பங்ளாதேசத்துடன் சேர்த்து விட்டார்.

மேலும் முகம்மது அலி ஜின்னாவை தூண்டிவிட்டு  பாகிஸ்தானை  பிரித்தார்.ஆகவே இப்படி ஒன்றுபட்ட இந்தியாவை -பாரதத்தை சீர்குலைத்த இழிவை செய்தவர்தான் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் வல்லபாய் அவர்கள்.

அதன் பிறகு பாபாசாகேப் , தான் தேர்தெடுக்ப்பட்ட தொகுதியை இழக்க நேர்ந்தது. அரசியல் சாசன சபை உறுப்பினர் பதவியை இழந்தார். மிகவருத்தம் அடைந்த அவர் உடனே கொல்கத்தாவிலிருந்து நேரடியாக லண்டன் சென்று  அங்கு இங்கிலாந்து ராணி அவர்களை சந்தித்தார்.

 இந்தியாவிலிருந்து  நேரு,காந்தி உட்பட எவர் ஒருவரும் முன் (appointment) அனுமதியில்லால் இங்கிலாந்து ராணியை சந்திக்க முடியாது. ஆனால் பாபாசாகேப் ஒருவர் மட்டுமே (appointment இல்லாமல்) நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்.

ஆக நடந்தவற்றையும் தன் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் இங்கிலாந்து அரசிடம் பாபாசகேப் முறையிட, உடனடியாக நேருவை அழைத்த இங்கிலாந்து அரசு, இந்தியாவிற்கு சுதந்திரம் என்பது மறுபரிசீலனை செய்யப்படும்......... டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் சாசன சபையில் உறுப்பினர் மற்றும் அரசியல் வரைவு கமிட்டி உறுப்பினர் (drafting committee member) ஆகும் வரை என்று எச்சரித்து கட்டளையிட்டது பிரிட்டிஷ் அரசு.

 மீ்ண்டும் அடிபணிந்த நேருவின் தலைமையிலான இடைக்கால மந்திரி சபை, பாபாசாகேப் அவர்களை அரசியல் சாசன சபை மற்றும் அரசியல் அமைப்பு வரைவு கமிட்டி உறுப்பினர் ஆக்கியது.

 அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுத எவரும் முன்வராமல் தயங்கிய நிலையில், அந்த பொறுப்பை தானே சுமந்து தனது எழும்புகளை பேனாவாக்கி, தன் இரத்தத்தை மையாக்கி அரசியல் அமைப்பு சட்டத்தை தனி ஒருவராக எழுதி  மக்களுக்கான உரிமைகளை சட்டமாக்கினார்.   அதில் ARTICLE -340 பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு உறுதிபடுத்தப்பட்டது. அதேபோல் SC/ST  மக்களின் உரிமைகளும் உறுதிபடுத்தப்பட்டது.               இதற்கு முன்பு எந்த சர்தார்வல்லபாய் அவர்களால்  மக்களுக்கு உரிய உரிமைகள் ரத்து செய்யப்பட்டதோ அந்த உரிமைகளை யாரும் அசைத்து பார்க்கா வண்ணம் அரசியல் அமைப்பு சட்டம் அமைப்பில் நிலையான பாதுகாப்பை உருவாக்கித்தந்தார் பாபாசாகிப் அவர்கள்.

இந்திய மக்களின் சம உரிமையான  பிரதிநிதித்துவ இடம் ஒதுக்கீட்டு முறையை காக்கும் சட்டத்தை ரத்து செய்த சர்தார் அவர்கள் எப்படி இரும்பு மனிதரானார். அவர் சார்ந்த பட்டேல் சமூகம் இன்று குஜராத்தில் ஹார்த்திக்பட்டேல் தலைமையில் பட்டேல்  மக்களின் உரிமைகளுக்காக ரோட்டில் வந்து ஆண்டுகணக்கில் போராட்டம் நடத்திகொண்டிருக்கிறார்கள். இங்கே தமிழ் நாட்டிலும் ஒரு சிலர் நாங்கள் OBC/MBC க்கு போகிறோம், நாங்கள் குர்மி-பட்டேல் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் விரும்பும் OBC  இடஒதுக்கீட்டைத்தான் வல்லபாய் பட்டேல் வீறுகொண்டு எதிர்த்தார்,அதை இரத்தும் செய்தார்.இவ்வாறு அவர் obc/SC/ST/religious minority மக்களின் உரிமையான இடஒதுக்கீட்டின் எதிரியாக செயல் பட்டதால் தான் அவர் இட ஒதுக்கீடு முறையை எதிர்க்கும் பார்ப்பனியத்திற்கு இரும்பு மனிதராக தென்பட்டார்.

பங்ளாதேஷ்- பாகிஸ்தான்  நாடுகளின் பிரிவினைகளுக்கு காரணமாக இருந்த சர்தார் அவர்கள் ஒன்று பட்ட அகன்ற பாரதத்தை உருவாக்கினாரா?  பிளவு படுத்தினாரா?

 முழுக்க முழுக்க பிராமணர்களின் பிரதிநிதியாக செயல்பட்டு நம் போன்றவர்களின் உரிமைகளை எதிர்த்த சர்தார் வல்லபாய்  அவர்களை பற்றிய பெருமையை நம் வாயால் பேச வைப்பதே பிராமணிசத்தின் வெற்றியாகும்.

 இது போன்ற உண்மையான வரலாறுகளை கண்டறிந்து மக்களுக்கு உரக்கச் சொல்வது நமது வரலாற்றுக்கடமை ஆகும். ஜெய் பீம். Thanks WhatsApp news