வியாழன், 29 ஆகஸ்ட், 2019

அம்பேத்கர் எனும் தலித்தை பொது சமூகத்தின் தந்தையாக ,தலைவராக பார்க்க முடியவில்லை


காந்தி என்கிற பனியாவை தேச தந்தையாக ஏற்று கொண்ட உனக்கு

நேரு என்கிற பார்ப்பனரை உறவு முறை சொல்லி கொண்டாடிய உனக்கு

சுபாஷ் சந்திர போஸ் என்கிற பார்பனரை தேச வீரனாக ஏற்றுக்கொண்ட உனக்கு

காமராஜர் என்கிற நாடாரை கல்வி தந்தை ,கர்மவீரர் என்று ஏற்றுக்கொண்ட உனக்கு

வவுசி பிள்ளையை கப்பலோட்டிய தமிழனாக கொண்டாடிய உனக்கு

அண்ணா என்ற முதலியாரை பேரறிஞர் ,திராவிட தந்தை என்று கொண்டாடிய உனக்கு

எம்ஜியார் எனும் மேனனை இதயகனி,இதயதெய்வம், புரட்சிதலைவர் என்று தலைமேல் தூக்கி வைத்த உனக்கு

ஜெயலலிதா எனும் ஐயங்காரை புரட்சித்தலைவி , அம்மா என்று குடும்பமாக கொஞ்சிய உனக்கு

அம்பேத்கர் எனும் தலித்தை பொது சமூகத்தின் தந்தையாக ,தலைவராக பார்க்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம் அம்பேத்கர் தலித் என்பதுதானே?

ஆக பிரச்சனை உன் சாதிய சிந்தையில் தானே ஒழிய அம்பேத்கரின் அரசியலில் அல்ல.