சனி, 18 ஜனவரி, 2020

IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)

1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம். 

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.

வீரம் என்பது சாதியில் இல்லை


16 காளைகளை அடக்கி இந்த ஆண்டின் தலைசிறந்த ஜல்லிக்கட்டு வீரன் என்ற பெயருடன் மாருதி கார் உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் தனது சொந்த கிராமத்திற்குள் நுழைந்தான்
அந்த இளைஞன்!

உற்சாகமாக வரவேற்றனர் மக்கள். ஆனாலும் பழமை சிந்தனை மாறாத ஆதிக்க குணம் கொண்ட சிலர் முகத்தை சுளித்துக்கொண்டு அந்த இளைஞனின் சாதியை (சலவை தொழிலாளி) குறிப்பிட்டு இவனுக்கெல்லாம் முதல் பரிசு கிடைச்சிருக்காக்கும் என்று ஏளனமாக பேசிக்கொண்டது காதில் விழுந்தது!

அந்த முணுமுணுப்பையெல்லாம்  பொருட்படுத்தாமல் பலத்த உற்சாகத்துடன் வெற்றி வீரன் பிரபாகரனை ஊர் நடுவில் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பெருமிதத்துடன் மேடையேற்றி கவுரவித்தது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI

வீரம் என்பது
சாதியில் இல்லை!

விளையாட்டுத் திறன்
பணத்தில் இல்லை!

எத்தனை பொருத்தமான வார்த்தை!

புதுக்கோட்டை மாவட்டம் ( 14 - 01- 1974) உதயமான நாள். "Pudukkottai Day".


 புதுக்கோட்டை மாவட்டம் ( 14 - 01- 1974) உதயமான நாள். "Pudukkottai Day".

மாட்சிமை தாங்கிய பிரகதாம்பாள் தாஸ் H.H தொண்டைமான் மன்னர்கள் புதிய கோட்டை கொத்தளங்களுடன் கூடிய புதிய நகரை நிர்மாணித்து அதற்கு "புதுக்கோட்டை " என பெயரிட்டு 1686- 1948 வரை இன்றைய இந்தியாவை போன்று தனி நாணயம், தனி கொடி என தனி நாடாக கோலோச்சினர்.

அன்றைய இந்தியாவிலேயே முதன்முதலாக பேருந்துகள் , மகிழுந்து போன்றவை அறிமுகப்படுத்தியவர்கள் எங்களது மாட்சிமை தாங்கிய மாமன்னர்கள் தான்.

இன்றைய தமிழகத்திலேயே முதல் நூற்றாண்டு கண்ட நகராட்சியும் எங்களது புதுக்கோட்டை தான்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 3-3-1948 வரை தனி சமஸ்தானமாக கோலோச்சி வந்த எமது சமஸ்தானத்தை அன்றைய சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர் உயர்திரு.சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க அன்றைய கால கட்டத்தில் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மாட்சிமை தாங்கிய மாமன்னர் பிரகதாம்பாள் தாஸ் H.H இராஜகோபால தொண்டைமான் அவர்கள் இந்தியாவுடன் இணைத்திட இசைவு தெரிவித்தார்.

அதன்படி எண்ணிலடங்கா சொத்துக்களையும் அன்றைய சமஸ்தானம் கருவூலத்தில் இருந்த ₹72 இலட்சம் பணத்துடன் புதுக்கோட்டை சமஸ்தானத்தை 3- 3- 1948ம் ஆண்டு இந்தியாவுடன் இணைத்தார்.

இந்தியாவுடன் இணைக்கப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானம் அன்றைய சென்னை மாகாணத்தின் திருச்சி ஜில்லாவின் ஒரு வருவாய் கோட்டமாக இருந்து 14- 01- 1974ம் ஆண்டு தமிழகத்தின் 15-வது மாவட்டமாக "புதுக்கோட்டை "மாவட்டம் உதயமானது.

அன்றைய தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு கலைஞர் அவர்களின்  வேண்டுகோளுக்கினங்க சமஸ்தானத்தின் புதிய அரண்மனையை புதிய மாவட்டத்தின் ஆட்சி தலைவர் அலுவலகம் அமைத்திட தமிழக அரசிடம் ஒப்படைத்தார் எங்களது மாமன்னர்.  இன்றைய இந்தியாவிலேயே அதிக நிலப்பரப்பில் (99.99 ஏக்கர்) அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரகம் எங்களது புதுக்கோட்டை மட்டும்தான்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பெருமாளும், உலகிலேயே வடக்கு திசை பார்த்து தனி சன்னதியில் வீற்றிருக்கும் பைரவர், தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கோத்பவர்  (திருமயம்)

2) தென் இந்தியாவிலேயே மிகப்பெரிய சிவன் சிலையும் (நக்கீரமங்கலம்),

 3)உலகிலேயே முதன்முதலாக சாம்பிராணி போட்ட தலம் ( தீயத்தூர்)

இவ்வளவு பெருமை மிகுந்த எமது புதுக்கோட்டை மாவட்டம் உதயமான நாள் இன்று.

எனது மாவட்டத்தின் பெருமை எனது பெருமை.

I Love Pudukkottai