திங்கள், 26 ஆகஸ்ட், 2019

இன்முகம் காட்டு.......அதுவே போதும்


இன்முகம் காட்டு.......அதுவே போதும்

உடலை மறைக்க ஆடை வேண்டும்
மாண்புடன் மானம் காத்திட வேண்டும்
பகட்டாய் ஆடை எதற்காய் வேண்டும் ?
பாதி உடலை மூட வேண்டும் ?

நாகரீகம் அறிந்த நாமும்
வரைமுறை மீறல் தவறேயாகும்
அரைகுறையாக அணிவதெல்லாம்
ஆபாசம் எனத் தெரிய வேண்டும்.

ஆளும் பாதி ஆடை பாதி
நல்ல பொருளில் சொல்லிச்சென்றார்.
இன்றைய மனிதர் அதனைத் தவறாய்
புரிந்து கொண்டு உலவுகின்றார்

அங்கம் எதற்காய் வெளியே வேண்டும்
அடுத்தவர் கண்ணை உறுத்த வேண்டும்
அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும்
அன்புடன் வணங்கத் தோன்ற வேண்டும்.

நாகரீகம் கூடுந்தோறும்
நல்ல பண்புகள் பெருக வேண்டும்
நல்ல நிலையில் இருக்கும் போது
நலிந்த ஆடைகள் எதற்காய் வேண்டும் ?


இடம் பொருள் ஏவல் அறிய வேண்டும்
இங்கு எதற்காய் கந்தல் வேண்டும்
இது சரிதானா சிந்தை வேண்டும்
இல்லையேல் காட்டில் வசிக்க வேண்டும்.

இலைமறை இருப்பு காய்க்கு அழகு
முழுவதும் மூட மனிதனுக்கு அழகு
காண்பவர் மட்டும் கண்டால் அழகு
கடைவிரிப்பதிலே என்ன அழகு ?

சுதந்திரம் என்பதைப் புரிதல் வேண்டும்
சுயசிந்தனையும் பெறுதல் நன்றே.
சுற்றித் திரியும் விலங்கும் அணியச்
சிதறும் வண்ண உடை தந்தானே.

நாடுகள் தோறும் ஆடைகள் மாறும்
தட்பவெட்ப நிலைகளும் மாறும்
புலியைக் கண்ட பூனையென நீ
பொருந்தாவுடைகள் அணிவது வேடம்.

தாய்த் திருநாட்டின் மானத்தை உந்தன்
நடை உடை செய்கைகள் தீர்மானிககும்.
பொறுப்பை உணர்ந்து புனைவாயானால்
நாடும் வீடும் நற்பெயர் எடுக்கும்.

நன்றிகளும்
பிரியங்களும்.

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கார்.


புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கார்.

இந்தியாவில் நேரு,  காந்தி  மற்றும் அனைத்து தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறையில் அடைத்தார்கள்.

ஆனால் டாக்டர் பீ ஆர் அம்பேத்காரை மட்டும் ஏன் சிறைச்சாலையில் ஆங்கிலேயர் அடைக்கச் வில்லை தெரியுமா.?*

*பிரிட்டிஷ் நாட்டில் அவர் படித்தச்    யுனிவர்சிட்டியில்  ஒரு சங்கம் உண்டு. (LAW படித்தவர்களுக்கு மட்டும் அந்த சங்கம், officer club) அந்த சங்கத்தில் உலக அளவில் உள்ள  அறிவாளிகள் மட்டுமே உறுப்பினர் ஆக இருக்க முடியும் ஆனால் அவ்வளவு எளிதாக அந்த சங்கத்தில்  உறுப்பினர் ஆக முடியாது. ஏன் என்றால் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்தவர்கள் மட்டுமே அந்த சங்கத்தில் உறுப்பினர் ஆக இருக்க முடியும்.*

*officer club,அந்தச் சங்கத்தில் இந்தியாவில் இருந்து உறுப்பினர் ஆன நபர் ஒரேத் தலைவர் டாக்டர் பீ ஆர் அம்பேத்கர் மட்டுமே. டாக்டர் அம்பேத்காரை கைது செய்ய வேண்டும் என்றால் அந்த சங்கத்தில் முதலில் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய முடியும். ஆனால்.அந்த சங்கத்தில் உள்ளவர்கள் தான் நாட்டில் மிகச்சிறந்த தெளிவான, ஆற்றல் பொருந்த்திய அறிவாளியாக இருக்க முடியும்.*

*அப்படி இருக்கும்  போது  அவர்கள் ஈடுபடும் போராட்டம் எப்படி தவறாகச் இருக்க முடியும். இது தெரியாத ஒரு ஆங்கிலேய அதிகாரி ஒருவர் டாக்டர் அம்பேத்கர்  அவர்கள் நடத்திய கோவில் நுழைவு   போராட்டத்தை பல ஆயிரம் பேரைத்  திரட்டி  ஈடுபடும்  போது டாக்டர் அம்பேத்காரை கைது செய்வேன் என்று பிரிட்டிஷ் அதிகாரி மிரட்டி உள்ளான்.*

*அந்த அதிகாரி.  உடனே டாக்டர் அம்பேத்கரை கைது செய்ய முற்படும்போது டாக்டர் அம்பேத்கர் என்னை கைது செய்ய பிடிவாரண்டு இருக்கா என்று கேட்டு உள்ளார்.*

*உடனே அவனும் பிடி வாரண்டு தயார் செய்து கொடுத்துள்ளான். அந்த பிடிவாரண்டை  டாக்டர் அம்பேத்கர் டைப் பண்ணி அதை பிரிட்டிஷ்  அரசாங்கத்திற்கு
அனுப்பி வைத்தார் அதை பார்த்த பிரிட்டிஷ் அரசு அந்த அதிகாரியை உடனே  சஸ்பெண்ட்  செய்தது ஏன் என்றால்  டாக்டர் அம்பேத்காரை கைது செய்ய வேண்டும் என்றால் பிரிட்டிஷ் நாட்டில் உள்ள உலக அறிவாளிகலுக்கான" officer club" சங்கத்தில் முதலில் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய முடியும். ஆனால் டாக்டர் அம்பேத்காரை அவ்வளவு எளிமையாக கைது செய்ய முடியாது.   அந்த அதிகாரி இது கூடத் தெரியாமல் இருந்திருக்கிரானே என்பதால் பிரிட்டிஷ் அரசு அவனை உடனே  சஸ்பெண்ட் பன்னியது.*

உடனே டாக்டர் அம்பேத்கர் பிரிட்டிஷ் அரசிடம் ஒருத் கோரிக்கை வைக்கிறார் அந்த போலிஸ் அதிகாரியை சஸ்பெண்ட் பன்னுனா மட்டும் போதுமா என்று? அதற்கு உடனே பிரிட்டிஷ் அரசு  அனைத்து பிரிட்டிஷ் அதிகாரிகளையும் வெளியேற்றப்பட்டு அந்த  அதிகாரியை பிரிட்டிஷ் நாட்டிற்கே வரவழைத்துக் கொண்டது.

*இந்தியாவில் இருந்து இது வரை அந்த சங்கத்தில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்காரை தவிர வேறுயாரும் இது வரை உறுப்பினர் ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.