வெள்ளி, 17 ஜனவரி, 2020

யாருக்கான_வளர்ச்சி?


#யாருக்கான_வளர்ச்சி?

"ஒரு சென்டி மீட்டர் நிலம் கூட உங்களுக்கு கிடையாது. துப்பாக்கி முனையில் நிலம் கையகப்படுத்தப்படும்."

ஆகஸ்டு மாதம் தொடங்கி நான்கு வாரங்களாக அமேசான் எரிந்தது. ஒருவேளை அமேசான் காடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டால் என்ன ஆகும்? 20 சதவீத ஆக்ஸிஜன் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்படும். அது மட்டுமல்ல 90 முதல் 140 பில்லியன் கார்பன் அமேசான் காடுகளில் தக்க வைக்கப்பட்டுள்ளது.

காடுகள் அழிக்கப்பட்டால் கார்பன் மொத்தமும் வளிமண்டலத்தில் செலுத்தப்படும். நாம் பயன்படுத்தும் மருந்துகளில் சிலவற்றின் மூலப்பொருட்கள் அமேசானில் மட்டுமே கிடைக்கிறது. கேன்சர் நோயை குணப்படுத்தும் சில அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளின் மூலப்பொருட்கள் அமேசானில் உண்டு.

அமேசானில் இருக்கும் மருந்து செடிகளில் 5 சதவீதத்தை கூட இதுவரை ஆராய்ச்சி செய்து முடிக்கவில்லை.

"ஒரு சென்டிமீட்டர் நிலம் கூட பழங்குடியின மக்களுக்கு தரமாட்டேன். ரோரய்மா மாநில மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் 2019இல் ராபோஸா பழங்குடியினர் நிலத்தை துப்பாக்கி முனையில் பறித்துக் கொள்வோம்" எனக் கூறியிருந்தார் பிரேசிலின் அதிபர் ஹையர் பொல்சனரோ.

பிரேசிலில் இருக்கும் அமேசான் காடுகளை நிமிடத்திற்கு மூன்று ஃபுட்பால் கிரவுண்ட் அளவிற்கு நெருப்பு அழித்தது. சுரங்கங்கள் தொடங்கவும், சோயா பீன்கள் நடவும் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறார். பழங்குடியினர் வெளியேற்றப்படுகிறார்கள். பழங்குடியின தலைவர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். பழங்குடியினர் இயற்கையின் அங்கமாக வாழ்ந்து வருபவர்கள்.

9 லட்சம் பழங்குடியினர் 250 இனக் குழுக்களாக வாழ்ந்து 50 மொழிகள் பேசி வருகிறார்கள். விரைவில் அனைத்தும் துடைத்தெறியப்படும் நிலை உருவாகியுள்ளது.

இவை அனைத்தும் ஹையர் பொல்சனரோ என்ற ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகார அதிபரால் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்று இயற்கையும், மண்ணின் மக்களுக்கும் எதிரான மனப்போக்கு பல நாடுகளிலாக வளர்ந்து வருகிறது.

ஒரு வித கோமாளித்தனமான குணம் உடைய இந்த சர்வாதிகாரிகள் மக்களையும் இயற்கையும் அழித்து வளர்ச்சியை உருவாக்குவதாக சொல்கிறார்கள். வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமானதாக இருக்க வேண்டும். ஆனால், வளர்ச்சி என்பது ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமானதாக அவர்கள் கருதுகிறார்கள்.

1971ம் ஆண்டு ஜனவரி 23 & 24ல் திராவிட கழகம் சார்பில் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு

1971ம் ஆண்டு ஜனவரி 23 & 24ல் திராவிட கழகம் சார்பில் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடந்தது, எப்பொழுதும் போல அப்பொழுதும் மூட நம்பிக்கையினை ஒழிப்பதாக சொன்னார்கள்

மூட நம்பிக்கை ஒழிப்பு என தீ மிதித்தல், கரகம், பால்குடம், அலகு குத்துதல் போன்றவற்றை கிண்டல் செய்தனர்

அவர்களுக்கு தெரிந்த சீர்திருத்தமே கிண்டல் செய்வது ஒன்றுதான், அது ஒன்றுதான் சீர்திருத்தம்

கூட்டத்தில் உச்சமாக ராவண லீலாவில் ராவணன் உருவினை எரிப்பது போல ராமலீலா என சொல்லி ராமன் படத்தை எரித்தார்கள்

இது பெரும் சர்ச்சையானது காவல்துறை வந்து இது மக்களின் மனதை புண்படுத்தும் செயல் என சொல்லி மாநாட்டை கலைந்து போக சொன்னது

எப்பொழுதுமே பின்னால் இருந்து ஆடும் கருணாநிதி இங்கும் ஆடினார், காவல்துறை அவர் கட்டுபாட்டில் இருந்ததால் நடக்கும் காட்சிகளை உலகம் காண அனுமதித்தார், அதில் அவருக்கு ஒரு சந்தோஷம்

இந்து மக்கள் கண்ணீர் வடிக்க ராமனின் திருவுருவம் கொளுத்தபட்டது , திமுகவில் மட்டுமல்ல தமிழகம் முழுக்க இது சலசலப்பினை ஏற்படுத்தியது

இன்றிருக்கும் இந்து பலமான இந்தியாவெனில் அன்றே ராம்சாமியின் தாடியினை இழுத்து போட்டு சாத்தியிருப்பார்கள், ஆனால் அன்று இந்துக்களுக்கு யாருமில்லை, ஒரு அமைப்பும் பலமாயில்லை

உச்சமாக செய்ய கூடா செயலை செய்தனர் திமுகவினர், மாநில அரசும் கருணாநிதியும் தங்களுக்கு சாதகம் என கருதி அந்த படுபாதகத்தை அரங்கேற்றினர்

ராமன் சீதையின் படம் செருப்பால் அடிக்கபட்டு கொளுத்தபட்டது, அனுமனுக்கும் வெற்றிலை மாலை சாற்றபடுவது செருப்பு மாலை சாற்றபட்டு அவமானபடுத்தபட்டது

அதர்மத்தின் உச்ச காட்சிகள் அவை

முதல் நாள் காட்சிகளை அனுமதித்த விளைவு பெரும் அதர்வுகளை ஏற்படுத்திற்று, இன்றிருப்பது போல வாட்சப் , சமூக தளம், நியூஸ் மீடியா என எதுவுமில்லா காலமது என்பதால் மறுநாளே செய்தி பரவிற்று

தேர்தல் வரவிருக்கும் நிலையில் யாரோ செருப்பு வீசியதாகவும் அந்த ஆத்திரத்திலே இவை எல்லாம் நடந்ததாகவும் கதை திருப்பபட்டது

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி ஓய்ந்தது திக கோஷ்டி. நல்லோரின் கண்ணீரும் ராமபக்தரின் கண்ணீரும் ஆறாய் ஓடின‌

இந்துக்களுக்கு யாரும் இல்லை, எந்த பத்திரிகையுமில்லை ஊடகமுமில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் அதை செய்ய யாரும் தயாராக இல்லை

மத்தியிலும் பலமில்லை மாநிலத்திலும் திராவிட ஆட்சி என எல்லோரும் அஞ்சிய நேரமது

சோ ராமசாமி இந்த இடத்தில்தான் துக்ளக்கை தொடங்கினார், அதற்கு விளம்பரமுமில்லை ஒன்றுமில்லை. தன்னை யார் என்ன செய்யமுடியும் என இருமாப்பின் உச்சத்தில் இருந்தார் கருணாநிதி

அடுத்த தேர்தலிலும் 1971 மார்ச் மாதம் திமுக வென்றது, அங்குதான் பிடித்தது சனி. சில வெற்றிகள் ஒரு பெரும் தோல்விக்கு அடித்தளமாகும்

அந்த வெற்றிக்கு பின்பே ராமசந்திரன் கருணாநிதி பிளவு தொடங்கி அடுத்த 4 ஆண்டுகளில் ஆட்சியினை இழந்தார் கருணாநிதி அதன் பின் எழுவது சிரமாய் இருந்தது

ராமர் படத்தை அடித்த ராம்சாமியும் மணியம்மையும் காலமாயினர், வீரமணி ராமர் கோவிலை காண இன்னும் உயிரோடு இருக்கின்றார் என்பது அவருக்கான தண்டனை

ராமனை செருப்பால் அடித்த வலியில் உருவான துக்ளக்கின் காலுக்கு கருணாநிதி வரவும் ஒரு காலம் இருந்தது

அடுத்த 20 ஆண்டுகளில் சோவின் ஆலோசனைக்காக காத்திருந்தார் கருணாநிதி

அதுமட்டுமா? ராமர் படத்தை செருப்பால் அடித்து எரித்ததை ரசித்து அனுமதித்த கருணாநிதி பின்பு ராமனுக்காக கோவில்கட்ட கட்சி நடத்திய பாஜகவிடம் தாராளமாய் போய் சேர்ந்தார்

இருவருக்குமே வெட்கமில்லை என்பது வேறுவிஷயம்

இன்று திமுகவினர் ஆயிரம் சொல்லலாம், என்னவும் தற்காத்து அவர்கள் பேசலாம்

செய்யகூடாத படுபாதகமான காரியத்தை , புனிதமான ராமன் படத்தை கொளுத்தி செருப்பால் அடித்து அழிச்சாட்டியம் செய்தபின் அவர்கள் வீழ்ச்சி தொடங்கிற்று

ராம்சாமியும் மணியம்மையும் கொஞ்ச நாளில் செத்தனர்

தன்னை அசைக்க யாருமில்லை என துரியோதனன் பாணியில் இருந்த கருணாநிதி ராம்சந்திரன் எனும் பெரும் எதிரியினை பெற்றார் கூடவே இந்திராவின் மிசா

மிசாவில் மாறனும் ஸ்டாலினும் பட்டபாடுகள் கருணாநிதியினை கலங்க வைத்தன‌

அதன் பின் கருணாநிதி பட்டபாடுகளை எல்லாம் வரலாறு அறியும், அவ்வளவு சிரமம் அவ்வளவு வீழ்ச்சி
பார்ப்பண ஜெயலலிதா திராவிட கழக வாரிசாக தொடர்ந்து அரியணையில் அமரும்பொழுதே மனதால் செத்தார் கருணாநிதி

அதன்பின் கருணாநிதி ராமனின் பக்கம் அதிகம் செல்லவில்லை மெல்ல ஒதுங்கினார்

பின் கொஞ்சகாலம் டெல்லியில் பங்குபெற்றிருந்தபொழுது ராமர்பாலம் தொடர்பாக பழையதை மறந்து மறுபடி கலாய்த்தார்

அந்தோ பரிதாபம் ஸ்பெக்ட்ரம் வழக்கும், ஈழசிக்கலும் அவருக்கு பெரும் வீழ்ச்சியினை கொடுத்தன, அத்தோடு பதவிக்கே வரமுடியாமல் விடைபெற்றார் கருணாநிதி

காலம் பொல்லாதது, ஆண்டவனின் கண்கள் கடுமையானவை

அயோக்கியன் எவனும் சும்மா அழிந்ததில்லை, அவன் ஆடி தீர்த்துவிட்டுத்தான் அழிந்து ஒழிந்து போவான் என்பது தெய்வத்தின் நியதி.

இன்று ராம்சாமியின் வாரிசான வீரமணி அயோத்தி ராமர்கோவிலை கண்ணார பார்க்க வேண்டிய நிலை

கருணாநிதியின்ன் வாரிசுகள் இந்துமதம் பெரும் எழுச்சி பெறுவதை அச்சத்தோடும் தயக்கத்தோடும் பார்த்து கொண்டிருக்கின்றன‌

மாபெரும் ராஜதந்திரி என சொல்லபட்ட கருணாநிதியின் மகன் எடபபடி பழனிச்சாமி எனும் சாமானியனிடம் முகத்தில் குத்து வாங்கி மல்லாக்க கிடக்கின்றார்

எந்த சேலத்தில் ராமர்படம் எரிக்கபட்டபொழுது முதல்வராய் கருணாநிதி இருந்தாரோ, அதே நாற்காலியில் இன்று அமர்ந்திருப்பவர் சேலத்துக்காரர், அவரிடம் தோற்று ஓடிகொண்டிருப்பவர் கருணாநிதியின் மகன்

ராமன்படத்தை ராம்சாமி அடித்தபொழுது மவுனம் காத்த இந்திராவின் வாரிசுகள் படாதபாடு படுகின்ன்றன‌

அன்று அமைதிகாத்த தமிழக காங்கிரஸ் இங்கு சுருங்கி போயிற்று

ராமரை இம்மண்ணில் இருந்து அகற்ற நினைத்தவரே அழிந்துபோயினரே தவிர இம்மண் மீண்டெழுந்தது, அயோத்தியில் கட்டபடும் ஆலயம் இங்கும் எதிரொலிக்கும் அதில் திராவிடம் கருகும்

அன்று ராமன்படத்துக்கு வைக்கபட்ட தீ, வைத்தவர் தலைக்கே திரும்பும்

தர்மம் தன் காட்சிகளை மிக சரியாக நடத்திகொண்டிருக்கின்றது

இன்னும் சிந்தித்து பாருங்கள், ஆயிரமாயிரம் விஷயம் உங்களுக்கு விளங்கும்

தெய்வம் எல்லாவற்றையும் நாடகமாக நடத்தி நன்மை கொடுக்கும், ராமன் படம் அடிக்கபட்ட ஆத்திரத்தில்தான் சோ துக்ளக்கினை தொடங்கினார், அதன் பின்பே அவர் அறியபட்டார்

ஒரு பலமும் இல்லாத அந்த சாமான்யனுக்கு தெய்வபலம் மட்டும் இருந்தது அது காட்சிகளை நடத்தியது, கடைசிவரை திமுகவுக்கு மிகபெரும் சவாலை தொடுத்தார் சோ. திமுக அதில் திணறியது

இன்றும் அந்த தீபம் திராவிட இருட்டினை விரட்டிகொண்டிருக்கின்றது

1971 சம்பவம் சாதாரணம் அல்ல‌

மனிதனை வைத்து தெய்வம் ஆடும், தெய்வங்களை வைத்து மனிதர் ஆடினால் என்னாகும் எனபதை உலகுக்கு சொன்ன பெரும் சம்பவம் அது, பகவான் ராம்சாமி என்பவர் மூலம் ஆடிய நாடகம் அது

தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாளே (சுறவம்) என்று சொன்னவர்கள் யாரெல்லாம் தெரியுமா தமிழா உமக்கு?

சுறவம் (தை) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாள் (திருவள்ளுவர் ஆண்டு 2048 தொடக்கம்), பொங்கல் நாள், தமிழர் திருநாள்.

தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாளே (சுறவம்) என்று சொன்னவர்கள் யாரெல்லாம் தெரியுமா தமிழா உமக்கு?

01. மறைமலை அடிகளார் (1921)
02. 500 தமிழறிஞர்கள் (1921)
03. தேவநேயப் பாவாணர்
04. பெருஞ்சித்திரனார்
05. இ.மு. சுப்பிரமணியனார்
06. மு.வரதராசனார்
07. இறைக்குருவனார்
08. வ. வேம்பையனார்
09. பேராசிரியர் தமிழண்ணல்
10. வெங்காலூர் குணா
11. கதிர். தமிழ்வாணனார்
12. சின்னப்பத்தமிழர்
13. கி.ஆ.பெ. விசுவநாதர்
14. திரு.வி.க
15. பாரதிதாசனார்
16. கா.சுப்பிரமணியனார்
17. ந.மு.வேங்கடசாமியார்
18. சோமசுந்தர் பாரதியார்
19. புலவர் குழுவினர் (1971)
20.பேராசிரியர் கா.நமசிவாயர்
21. பெரியார்
22. தமிழக அரசாணை (1971,2008)

மலையகத்தில்

01. கோ.சாரங்கபாணியார்
02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்
03. அ.பு.திருமாலனார்
04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்
05. கம்பார் கனிமொழி குப்புசாமி
06. மணி. வெள்ளையனார்
07. திருமாறன்
08. இரெ.சு.முத்தையா
09. இரா. திருமாவளவனார்
10. இர. திருச்செல்வனார்