வங்கிகள் மறைக்கும் ரகசியங்கள் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும், கடன் வழங்குவோர் தாங்கள் விளம்பரப்படுத்திய வட்டிவிகிதத்திலேயே தரவேண்டிய அவசியம் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட சதவீதத்தினருக்கும் மட்டும் அறிவித்த வட்டிவிகித்தில் கடன் கொடுத்து விட்டு, மற்றவர்களுக்கு அதிகமான விகிதத்தில் வங்கிகள் தந்துவிடலாம்.
#நீங்கள் செலுத்தும் பணத்திற்கு வங்கிகணக்கு மதிப்பானதா?.2
சில வங்கிகள், தாங்கள் பிடித்தம் செய்யும் மாதாந்திர கட்டணத்திற்கு ஈடாக இலவச பயணக் காப்பீடு போன்ற சலுகைகளை வழங்கும். இந்தச் சலுகைகளை முழுமையாக நீங்கள் பயன்படுத்தும் வரை, நீங்கள் செலுத்தும் பணத்திற்கு உங்கள் வங்கிகணக்கு மதிப்பே இல்லை.
#நீங்கள் அட்டையைத் தேய்த்தால் அவர்களுக்குப் பணம்.3
உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்திப் பணம் செலவழிக்கும் போது, விற்பனையாளர்களிடம் இருந்து அந்தப் பணபரிமாற்றத்தை செய்யக் கட்டணம் வசூலிக்கப்படும். அதில் பெரும் பகுதி வங்கிகளுக்கே செல்லும். என்னதான் நீங்கள் உங்கள் பணத்தைச் செலவழித்தாலும், வங்கிகளும் அதனால் பலனடையும்.
#கடனே வாங்காதது நல்லதல்ல.4
வங்கிகள் உங்களுக்குக் கடன் வழங்க விரும்பினால், உங்களின் அனைத்து பணபரிமாற்ற வரலாற்றையும் பரிசோதிப்பர். நீங்கள் கடன்/ கிரெடிட் அட்டையைப் பயன்படுத்தவில்லை என்றால், உங்களின் திருப்பிச் செலுத்தும் திறன் அவர்களுக்குத் தெரியாது. எனவே கடனே வாங்காதது நல்லதல்ல.
#பணபரிமாற்றத்தின் வரிசையை மாற்றுதல்.5
நீங்கள் ஒரு நாளில் பொருட்கள் வாங்கி, செய்யும் பணபரிமாற்றத்தின் வரிசையை அதிகத் தொகையில் இருந்து சிறிய தொகை வரை வரிசைப்படுத்துவர். இதன் மூலம், முதல் சில பரிமாற்றங்களிலேயே பணம்எடுக்கும் எல்லையை (Over draft) கடந்து விட்டால் பிறவற்றுக்குக் கட்டணம் செலுத்த நேரிடும். இதன் மூலம் வங்கிகளுக்கு அதிகத் தொகை கிடைக்கும்.