திங்கள், 22 ஏப்ரல், 2019

இனி மாதச் சம்பளதாரர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

இனி மாதச் சம்பளதாரர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

மாதச் சம்பளம் வாங்குபவர்களிடம் பிடித்தம் செய்வதற்கு ஆதாரமான ஃபார்ம் 16 படிவத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.

இதில் ஊழியர்கள் தங்களின் வருமானம் முதல் வாடகை மற்றம் அனைத்து வரவு செலவுகளையும் கண்டிப்பாக அதில் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.TDS பிடித்தத்திற்கான புதிய படிவம் ஃபார்ம்(Form 16) வரும் மே மாதம் 12ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மாற்றி அமைக்கப்பட்ட புதிய படிவத்தை அடிப்படையாகக் கொண்டே மாதச் சம்பளம் வாங்குவோர் தங்களின் 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்யவேண்டும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

*மாத சம்பளதாரர்கள்*

தனி நபர், மாதச் சம்பளம் வாங்குவோர் மற்றும் நிறுவனங்கள் தாக்கல் செய்யும் வருமான வரி ரிட்டன் படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆண்டு தோறும் மேம்படுத்தி மாற்றிக் கொண்டே வருவது வாடிக்கை. அதே போல் கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிடடன்களையும் இந்த மாத தொடக்கத்தில் மாற்றியமைத்து இணையத்தில் வெளியிட்டது.

*ஃபார்ம் 16*

வருமான வரி தாக்கல் செய்வதற்கான அனைத்து படிவங்களையும் வருமான வரித்துறை அடிக்கடி மாற்றிக் கொண்டே வந்தாலும், வருமான வரிக்கழிவுக்கான (Tax Deduction at Source) ஃபார்ம் 16 படிவத்தில் இது வரையிலும் எந்த மாற்றமும் செய்யாமலேயே இருந்து வந்தது.

*வருமான வரி பிடித்தம்*

ஃபார்ம் 16 (Form 16) என்பது ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து, அதாவது வருமான வரி உச்சவரம்புக்கு மேற்பட்டு சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் ( (TDS) செய்ததற்காக ஒவ்வொரு காலாண்டு முடிந்தவுடன் வழங்கும் அத்தாட்சி சான்றிதழாகும்.

*TDS பிடித்தம் எப்படி*

பிரதி மாதமும் பிடித்தம் செய்த வருமான வரியானது (TDS) உரிய முறையில் தங்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை இதை வைத்துத்தான் வருமான வரி செலுத்தும் அனைவரும அறிந்துகொள்ளமுடியும். சில நிறுவனங்கள் பிரதி மாதமும் ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வரியை காலம் தாழ்த்தியும் வருமான வரித்துறைக்கு செலுத்துவதும் வாடிக்கை.

*வருமான வரி ரிட்டனை தாக்கல்*

தற்போது வருமான வரித்துறை ஃபார்ம் 16 படிவத்தையும் முழுவதுமாக மாற்றியமைத்து விட்டது. இந்த படிவமானது வரும் மே மாதம் 12ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்தும் அனைரும் புதிய ஃபார்ம் 16 படிவத்தை அடிப்படையாக வைத்துத்தான் தங்களின் 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்ய முடியும் என்று வருமானத் துறை அறிவித்துள்ளது.

*புதிய படிவத்தில் என்ன இருக்கு*

மாற்றியமைக்கப்பட்ட புதிய ஃபார்ம் 16 படிவத்தில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம். வருமான வரி செலுத்துபவர்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் (Savings Accounts) டெபாசிட் செய்துள்ள பணத்திற்கான வட்டி, தள்ளுபடி மற்றும் கட்டணம் ஏதும் இருந்தாலும் அந்த விவரத்தையும் புதிய ஃபார்ம் 16 படிவத்தில் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.

*நிரந்தர கணக்கு எண்*

ஃபார்ம் 16 படிவத்தோடு தொடர்புடைய மற்றொரு படிவமான ஃபார்ம் 24க்யூ (Form 24Q) படிவம். இதில் தான் யாருக்கெல்லாம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது, அவர்களின் நிரந்தர கணக்கு எண் (PAN) போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும். இந்த படிவத்தை ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனங்கள் வருமான வரித்துறைக்க தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாகும்.

*கடன் மற்றும் வீட்டுக்கடன்*

தற்போது ஃபார்ம் 24க்யூ (24Q) விலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரிப் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்களின் பான் எண்ணுடன், அவர்கள் யார் யாரிடம் இருந்து மற்றும் எந்த நிறுவனம் அல்லது நிறுவனம் அல்லாத நபர்களிடம் (Non Institutional Entities) இருந்து கடன் மற்றும் வீட்டுக்கடன் வாங்கியிருந்தாலும் அவர்களின் பான் எண் விவரத்தையும் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

*நிரந்தர கழிவு*

ஃபார்ம் 16 மற்றும் 24க்யூ படிவங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெளிவாக விளக்கிய நாங்கியா அட்வைசர் (ஆண்டர்சன் குளோபல்) நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சோலி மகேஸ்வரி, தற்போது வருமான வரிக்கழிவுக்கான ஃபார்ம் 16 மற்றும் ஃபார்ம் 24க்யூ வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் வருமான வரி செலுத்துவோர் தங்களின் வருமான வரி ரிட்டனில் அனைத்து விவரங்களையும் விரிவாக தெரிவிக்க முடியும். குறிப்பாக வருமான வரி பிரிவு 10ன் கீழ் வரும் நிரந்தர கழிவு (standard deduction) மற்றும் வருமான வரி விலக்குக்கான அனைத்து விவரங்களையும் தெளிவாக தெரிவிக்க முடியும்.

*ஓடி ஒளிய முடியாது*

வருமான வரி செலுத்துவோர் முன்னர் இருந்த படிவங்களில் வரி விலக்கு மற்றும் வரிச் சலுகைக்கான விவரங்களை பிரிவு 80C, 80CCD, 80E மற்றும் 80G பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் போலியாக தெரிவித்து வரிச்சலுகையும் வரி விலக்கும் பெற்று வந்தனர். தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள `பார்ம் 16 மற்றும் 24க்யூ படிவங்களில் போலியான தகவல்களை எல்லாம் தெரிவிக்க முடியாது. அப்படியே போலியாக தெரிவித்து இருந்தாலும் வருமான வரித்துறை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். மேலும் இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வதை தடுத்து கண்காணிக்கவும் முடியும். இது வருமான வரி செலுத்துவோருக்கு மிகப் பெரிய சிக்கலாகும்.

வாழும் போதே 'நரகமாகும்' வெனிசுலா


வாழும் போதே 'நரகமாகும்' வெனிசுலா

வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்தால், வாழும் போதே நரகம் உறுதி.

இது ஒரு தனிநபருக்கோ, குடும்பத்துக்கோ,
ஒரு ஊருக்கோ அல்ல,

ஒரு நாட்டுக்கே நடந்திருக்கிறது.

அதுவும் இன்றைய உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் எண்ணெய் வளம் அதிகமாக உள்ள நாட்டுக்கே நடந்திருக்கிறது.

ஒருகாலத்தில் லத்தீன்- அமெரிக்க நாடுகளிலேயே பணம் கொழிக்கும் மிக செழிப்பான நாடாக *வெனிசுலா* இருந்தது.

இன்று,..
வெனிசுலா வாழத் தகுதியில்லாத நாடாக மாறிவிட்டது.

நாட்டிலிருந்து கிட்டதட்ட 50 லட்சத்துக்கும் மேலானோர் வெளியேறிவிட்டனர்.

இவையனைத்தும் வெனிசுலா அரசின் மிகத் தவறான நிர்வாகத்தினாலும்,
போட்டி நாடுகளின் சூழ்ச்சியினாலும் நடந்தது.

வெனிசுலாவின் இன்றைய நிலை, உலக நாடுகளின் எதிர்கால பற்றிய 'நிகழ்கால உதாரணம்.'

அதிக எண்ணெய் வளம் மிக்க நாடு.

ஆனால்,
இன்று நாட்டில் 90 சதவீத மக்கள் உணவு கூட கிடைக்காத நிலையில் வறுமையில் இருக்கிறார்கள்.

எப்படி இந்த நிலைக்கு வெனிசுலா ஆளானது?

2010-ல் ஆரம்பித்தது வெனிசுலாவின் இருண்ட காலம்.

அப்போது அதிபராக இருந்த ஹியாகோ சாவேஸ் வெனிசுலா மக்களுக்காக சில முடிவுகளை எடுத்தார்.

அதாவது,
அனைத்தையும்
'அரசு மயமாக்குவது.'

எண்ணெய் வளத்தைப் பெரிதும் நம்பியிருந்தது வெனிசுலா பொருளாதாரம்.

எண்ணெய் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து மக்களுக்கான கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை அரசே வழங்கும்படியான கொள்கை அது.

ஆரம்பத்தில் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட 'இந்த கொள்கை அவர்களுக்குப் பாதகமாகும்' என்று அவர்கள் சற்றும் நினைக்கவே இல்லை.

உற்பத்தி நிறுவனங்களை எல்லாம் கையகப்படுத்தி...

ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் வசம் ஒப்படைத்தார் அதிபர்.

உணவு உற்பத்தியை இராணுவத்திடம் கொடுத்தார்.

அவர் போட்ட கணக்கு ஒன்று, நடந்தது ஒன்று.

ஆட்சி அதிகாரத்தின் எல்லா நிலைகளிலும் ஊழல் தான் அதிகரித்தது.

அரசு அதிகாரிகள்,
அனைத்து துறைகளையும் சுரண்டி சொந்த வீட்டில் அடுக்கினர்.

எந்தத் துறையையும் அதிகாரிகள் வளர்க்க முற்படவில்லை.

இதனால் நாட்டின் அனைத்து உற்பத்தி துறைகளும் முற்றிலுமாக பாதித்தது.

பெரும் பற்றாக்குறை உருவானது.

*உணவுப் பொருள்களுக்கான தட்டுப்பாடு ருத்ர தாண்டவமாடியது.*

அத்துடன் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தொழில் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் அந்நியச் செலாவணி பெருமளவில் பாதிக்கப்பட்டது.

2010-ல் ஆரம்பித்த இந்தப் போக்கு 2014-ல் மிகக் கடுமையான திருப்பத்தைச் சந்தித்தது.

எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருந்த வெனிசுலா இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 100 டாலரிலிருந்து 50 டாலராக பாதியாகக் குறைந்தது.

வெனிசுலாவின் 96 சதவீத வருமானம் எண்ணெய் ஏற்றுமதியில்தான் கிடைத்து வந்தது.

எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தவுடன், மாற்று பொருளாதாரமாக எந்தத் துறையும் இல்லாததால் நாட்டின் பணவீக்கத்தையும், விலைவாசியையும் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

வெனிசுலாவின் பொருளாதாரமே சுக்குநூறானது.

விவசாய உற்பத்தி முற்றிலும் முடங்கிப் போனது.

இதனால்,
இப்போது எங்கும் பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடுகிறது.

விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன.

*அனைத்தும் முடங்கின.*

*உணவு பொருள் உற்பத்தியியில்லாமல்...*

*ஒரு முட்டைக்கு...*
*ஒரு மூட்டை பணம்.*

'அதை கொடுத்தாலும் கிடைக்குமா?'
என்பது சந்தேகமே...

ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதால், விலை நிர்ணய முறையை வர்த்தகர்கள் நீக்கிவிட்டார்கள்.

அவர்கள் சொல்வதுதான் விலை.

உணவு, தண்ணீர் உட்பட அனைத்து பொருள்களும் மிகப்பெரும் பற்றாக்குறையில் இருக்கிறது.

காரணம் பணவீக்கம்.

2014-ல் 69 சதவீதமாக இருந்த பணவீக்கம் 2016-ல் பொருளாதார நெருக்கடி மிகவும் அதிகரித்ததால், 800 சதவீதமாக உயர்ந்தது.

இதற்கே அதிர்ச்சியா?

இரண்டே வருடங்கள்...

2018-ல் வெனிசுலாவின் பணவீக்கம் 16,98,488 சதவீதமாக உயர்ந்தது.

வெனிசுலாவின் நாணயமான *பொலிவரியன் இன்று டாலருக்கு நிகரான மதிப்பு மில்லியனில் இருக்கிறது.*

வெனிசுலாவின் கடன் 105 பில்லியன் டாலர். அதன் கையில் இருப்பது வெறும் 10 பில்லியன் டாலர்.

இன்று,
மாட மாளிகைகளில் வாழ்ந்தவர்கள் நிலையோ ரொம்ப மோசம்...

பணம் மூட்டை மூட்டையாக குப்பை கிடங்கில் தீ வைத்து எரிக்கப்படுகிறது.

வெனிசுலாவின் அரசியல்வாதிகள், உயர் பதவியில் இருந்த அதிகாரிகள் என எல்லா நிலை மக்களையும் இந்தப் பொருளாதார நெருக்கடி பாதித்து வருகிறது.

இதனால், இங்கு உணவுக்காக கொலை நடப்பதில் முதலிடம்.

2017-ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், உணவுப் பற்றாக்குறையால் சராசரியாக 75 சதவீதம் பேர் 8 கிலோ எடை குறைந்துள்ளனர்.

இன்று, 90 சதவீதம் பேர் *வாழ்வாதார* வறுமையில் வாழ்கிறார்கள்.

தினசரி உணவுக்காகப் பிச்சையெடுக்கும் நிலையில் நாட்டின் பாதி சதவீதத்தினர் இருக்கிறார்கள்.

நாட்டிலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறியிருக்கிறார்கள்.

வெளியேற நினைப்பவர்கள் பாஸ்போர்ட் கூட எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

வெனிசுலாவில் நடிகைகள் மட்டுமல்ல ஆசிரியர், வழக்கறிஞர் என மிக மரியாதையாக வாழ்ந்து வந்த பெண்கள் கூட பாலியல் தொழிலாளிகளாகப் பல்வேறு நாட்டில் தஞ்சமடையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், வீட்டுப் பெண்களின் நிலையைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

திருடர்களும், தீவிரவாதிகளும் அதிகரித்து வருகின்றனர்.

பணம் பத்தும் தான் செய்யும்...

ஆனால்,
*பஞ்சமும், பசியும் "எதையும்" செய்யும்.*

பணத்திமிரையும், பசியையும் ஒரே தராசில் வைத்துப் பார்த்தால்...

*'பசியின் முன் பணத்திமிர் மண்டியிட்டு விடும்'* என்பது வெனிசுலாவில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் சாட்சி.

இன்றைய நிலையில், வெனிசுலாவை மீட்பது என்பது, கிட்டதட்ட மணலைக் கயிறாகத் திரிக்கும் சவால்தான்.

தினந்தினம் மக்கள் பலியாவது மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இப்போது வெனிசுலாவுக்கு உதவ எந்த நாடோ அமைப்போ தயாராக இல்லை.

உலக நாடுகளுக்கு வெனிசுலாவின் இன்றைய நிலை 'ஒரு பாடம்.'

ஏனெனில்...

*விவசாயத்தை மதிக்காத* எந்த நாட்டுக்கும் ஏற்படக்கூடியது தான் வெனிசுலாவின் இந்த நிலை.

இன்றைய பணமய பொருளாதாரத்தில்...
போட்டி நாடுகள் எந்த சூழ்ச்சியையும் செய்யலாம்.

நம்முடைய 'திறமையான ஆட்சியாளர்கள்...'

தாங்கள் செய்யும் செயலும், தாங்கள் எடுக்கும் முடிவும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிந்து செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற ஒரு நிலை உருவாகாமல் தடுக்கலாம்.

*'இன்றைய ஆதாயத்தை மட்டுமே கணக்கில் வைத்து'* எதைத் திட்டமிட்டாலும் அந்த நாடு நாசமாகும் நிலைதான் ஏற்படும்.

*'நீண்டகால அடிப்படையிலான வளர்ச்சித் திட்டங்கள்'* தான் மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும்.

அதேசமயம் ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களின் 'பொருளாதாரம் என்பதை விட...

*வாழ்வாதாரம்*' குறித்து தெளிவு வேண்டும்.

இந்தியாவில் தற்போது 'நுகர்வு' என்பது அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருக்கிறது.

நாலைந்து செல்போன் வைத்திருக்கிறோம்.

வீடு முழுக்க ஆடைகளால் நிறைந்திருக்கின்றன.

நிறுத்த இடமில்லை என்றாலும் நாலைந்து கார்களை வாங்குகிறோம்.

இதனால் வேகமான வளரும் பொருளாதாரமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், நீடித்து வாழ வேண்டுமென்ற ஆசையிருப்பவர்கள்,
*'வாழ்வாதாரத்தை'* தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெனிசுலா,
'அரசு மயமாக்கலை' முன்னெடுத்தது...
வீழ்ச்சியடைந்தது.

இதே போன்று,
தனியார் மய கொள்கையிலும் சில பாதிப்புகள் உண்டு.

ஆகவே,
ஆளும் அரசு...
மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு...

நன்றாக அலசி ஆராய்ந்து...

துணிந்து...
நல்ல முடிவுகள் எடுக்க வேண்டும்.

அப்போது தான் நாடும்,
நாமும் நலமுடன் வாழ முடியும்.

நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தாலும்...

விவசாயி, *விவசாயம் செய்தால் தான் சோறு.*
என்பதை மறந்து விடக்கூடாது.

வெனிசுலா நிலை நாளை நமக்கும் வரலாம்..!

காரணம்...

கிராமங்களில்

நூறு நாள் வேலைத் திட்டம்.

இது நல்ல திட்டம் போல தான் தோன்றும்.

ஆனால்,
நிஜத்தில் நடப்பது...

அங்கு, ஒப்புக்கு தான் வேலை.

'ஓய்வு எடுக்கும்' வேலை தான் அங்கு பிரதானமாக  நடக்கிறது...

சிலர், ஏழைகளின் உடல் நலனை காக்க...!
'பீடி சுற்றுவார்கள்.'

இதனால், பாதிப்பு...

நமது நாட்டில் விவசாயம் செய்பவர்களுக்கு தான்.

விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல்...

விவசாய பணிகள் தான் முடக்கி போகிறது.

இதனால், விவசாயம் செய்ய முடியாத நிலை.

மீறி...
'அதிக சம்பளம் கொடுத்து, குறைவாக வேலை செய்பவர்களை' வைத்து விவசாயம் செய்தாலும்...

விவசாயத்தில் நஷ்டம்.

இதனால் பல விவசாயிகள் விவசாயத்தை படிப்படியாக விட்டு வருகிறார்கள்.

இந்த நிலை...

இது நமது மக்கள் அனைவருக்கும் அடிக்கபடும் *எச்சரிக்கை மணி!*

வளங்கள் உள்ளவரை மட்டுமே நம்மால் பணத்தைப் புரட்ட முடியும்.

பணத்தையெல்லாம் சேர்த்த பிறகு இறுதியில் வளங்கள் இல்லாத நிலை வரும்போது...

அந்தப் *பணத்துக்கு எந்த மதிப்பும் இருக்காது.*

'ஒரு பொருளுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்' என்பதை வைத்தே அந்தப் பணத்தின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.

வாங்குவதற்கு பொருளே இல்லை,

'பணம் மட்டும் கட்டுக் கட்டாய் இருக்கிறது' என்றால் அந்தப் பணத்துக்கு எந்த மதிப்பும் இல்லை.

அப்போது,
நாமும் மூட்டைகளில் பணத்தைக் கொண்டு போய் கொடுத்து...
முட்டை தான் வாங்கி வரலாம்.

விவசாயத்தை கைவிட்ட எந்த நாடும் வாழாது.

வளராது....!

ஆகவே,
விவசாயம் காப்போம்...

அதற்கான வழிவகை செய்வோம்...

ஒரே தொகுதியில் மாயமான 40 ஆயிரம் வாக்குகள்!

ஒரே தொகுதியில் மாயமான 40 ஆயிரம் வாக்குகள்!

குடியரசுத் தலைவரிடம் முறையிடும் குமரி
மக்களவைத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களான முட்டம், தூத்தூர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தேர்தல் அதிகாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் சமாதானம் செய்து தேர்தல் அதிகாரியை மீட்டனர்.

இந்த விவகாரம் இப்போது குமரியில் இருந்து குடியரசுத்தலைவர் வரைக்கும் செல்லும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து வருகிறது. காரணம் குமரி மாவட்ட கடற்கரை ஓர 48 மீனவ கிராமங்களில் இருந்து சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டிருப்பது நேற்று மாலைதான் முழுமையாகத் தெரிந்தது. இந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர் வாக்காளர்களில் பெரும்பாலானோர் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள்.

தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சர்ச்சுகள் மூலம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட நிலையில் வரிசை வரிசையாக சென்ற மீனவ மக்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மீனவ வாக்குகள் மிஸ் ஆகியிருக்கின்றன என்று பலரும் நினைக்க,வாக்குப் பதிவு முடிவதற்கு சற்று நேரம் முன்புதான் குமரி கடற்கரை கிராமங்களான 48 மீனவ கிராமங்களிலும் இந்த திருட்டு விளையாடல் நடந்திருப்பது தெரிந்தது. இதுகுறித்து மீனவ மக்கள் போராட்டம் நடத்தியும் வாக்குரிமை அளிக்கப்படவில்லை.

இந்த விவகாரம் குறித்து குமரியைச் சேர்ந்தவரும் தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் பொதுச் செயலாளருமான சர்ச்சில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகைக்காக நம்மிடம் பேசினார்.

“குமரியின் வரலாற்றிலோ, தமிழக வரலாற்றிலோ இதுவரை இப்படி நடந்ததில்லை. எங்கள் 48 மீனவ கிராமங்களிலும் சரியாக 500 முதல் ஆயிரம் மீனவ வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.

தூத்தூர் கிராமத்தில் 1,200 ஓட்டுகள் வாக்காளர் பட்டியலில் இல்லை. கலியப்பட்டினத்தில் 920 வாக்குகளைக் காணோம், இணையத்தில் 500 மீனவ வாக்குகள் பறிபோயின. இப்படி 48 மீனவ கிராமங்களிலும் மொத்தம் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்துவ மீனவர்களின் வாக்குகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

நாங்கள் ஃபார்ம் 7 நிரப்பி எங்கள் வாக்குகளை ரத்து செய்ய சொல்லி விண்ணப்பம் கொடுக்கவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வாக்குப் பதிவு செய்தோம். அரசு வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை எல்லாரிடமும் இருக்கிறது.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மட்டும் இத்தனை ஆயிரம் ஓட்டுகள் ரத்து செய்யப்பட்டது ஏன்? எங்கள் உரிமையை எங்களிடம் இருந்து திருடியது யார்? இந்தியக் குடியரசுத் தலைவர் , தேர்தல் ஆணையம், குமரி கலெக்டர் இம்மூவரில் யார் இதற்குப் பொறுப்பு? அரசியல்வாதிகள்தான் மக்களிடம் திருடுவார்கள். இப்போது அரசு அதிகாரிகளே திருடர்களாக மாறியிருக்கிறார்கள். எலக்‌ஷன் ப்ரொசீடிங் ஆபீசர், ஆர் ஓ போன்ற அதிகாரிகளிடம் நேற்று கெஞ்சினோம். ஆனால் அவர்கள், ‘லிஸ்ட்ல இல்லேன்னா நாங்க ஒண்ணும் பண்ண முடியாது’ என்று சொல்லிவிட்டனர்” என்ற சர்ச்சிலிடம்,

“இப்பகுதி மீனவர்கள் தேர்தல் ஆணையம் நடத்திய வாக்காளர் சரிபார்ப்பு முகாம்களில் வந்து செக் செய்திருக்க வேண்டும்” என்று மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிராத சாஹு சொல்லியிருப்பது குறித்து கேட்டோம்.

“நாங்கள் 2016 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தோம். அப்புறம் ஏன் நாங்கள் போய் செக் செய்ய வேண்டும்? புதிதாக விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிந்துகொள்வதற்காக செக் செய்வார்கள். ஆனால், காலம் காலமாக ஓட்டுப் போட்டு வரும் எங்களை சரிபார்ப்பு முகாம்களில் சரிபார்க்கவில்லை என்பதற்காக நீக்கிவிடுவது என்ன நியாயம்?” என்று கேட்டார்.

நீக்கப்பட்ட வாக்காளர்கள் சார்பாக அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டோம்.

“இன்று புனித வெள்ளி, வரும் ஞாயிறு ஈஸ்டர் என்பதால் தேவாலய வழிபாட்டில் அனைவரும் ஈடுபாட்டோடு இருப்பார்கள். எனவே ஈஸ்டருக்குப் பிறகு கூடி விவாதிப்போம். குமரி மாவட்ட தேர்தல் அலுவலர், தமிழக தேர்தல் ஆணையர் மீது குடியரசுத் தலைவர் வரை முறையிடுவோம். தமிழகத்தில் அடுத்து நடக்க இருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தலின் போது எங்கள் பகுதியில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எங்கள் வாக்குகளை யார் ரத்து செய்தார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார் சர்ச்சில்.

மாயமான மீனவ வாக்குகள் அனைத்துமே பாஜகவுக்கு எதிரான வாக்குகள் என்பதும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டுவரும் துறைமுகத் திட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் இக்கடற்கரை மீனவர்களே என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. இப்பிரச்னை பற்றி குமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு, “குமரி மீனவர்கள் வாக்கு நீக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சிதறிய தேவாலயம் யார் காரணம்?


சிதறிய தேவாலயம் யார் காரணம்?

இலங்கை தேவாலயங்களிலும் இன்டர் நேசனல்
ஹோட்டல்களிலும் நடைபெற்ற குண்டு வெடிப்பு
எதற்காக நடைபெற்று இருக்க முடியும் யார் காரணமாக இருக்க முடியும் என்று விசாரித்த வந்த இலங்கையின் புலனாய்வு அமைப்பான
இன்டெலிஜென்ட் சர்வீஸ் ஆப் ஸ்ரீலங்கா இதற்கு
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு தான் காரணமாக இருக்கக்கூடும் என்கிறது.இதற்கு உதாரணமாக 2016ம் ஆண்டில்
 இலங்கை யில் இருந்து 32 இஸ்லாமிய மாணவ ர்கள் வெளியேறி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்ததையும் காரணம் காட்டுகிறது
.
ஒரு காலத்தில் இலங்கையில் தலை தூக்கி
இருந்த விடுதலைப்புலிகள் இப்பொழுது இல்லை
என்பதால் இது விடுதலைப்புலிகளின் தாக்குத லாக நிச்சயமாக இருக்க முடியாது. அதே நேர த்தில் இலங்கை மக்கள் தொகையில் பௌத்த
மதம் தான் மெஜாரிட்டி அதாவது சுமார் 70 சதவீ தம் பௌத்தம்.தான்.அடுத்து இந்துக்கள் 13 சதவீ தம் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் 10 சதவீதம் வரை இருக்கிறார்கள். கிறிஸ்தவ ர்கள் 7 சதவீதம்
வரை இருக்கிறார்கள்.

இவங்கையை பொறுத்தவரை இதுவரை தமிழ்
தேசிய சித்தனையுடன் செயல் பட்ட தமிழர்களு க்கும் பௌத்தமத அடிப்படையிலான சிங்கள
இனவாதிகளுக்கும் இடையில் தான் சண்டைகள்
நடைபெற்று வந்ததே தவிர ஒரு காலமும் கிறிஸ்த வர்களை முன் வைத்து எந்த தாக்குதலும் நடை
பெற வில்லை.

அதனால் இப்பொழுது நடைபெற்ற தேவாலயம்
ஹோட்டல்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு க்கு காரணமாக இருப்பது இலங்கை ஹோட்டல்க ளில் தங்கியிருந்த ஐரோப்பிய மக்களை குறி
வைத்தும் அவர்கள் பிரார்த்தனை க்கு சென்ற
தேவாலாயங்களில் தான் குண்டு வெடிப்பு நிகழ்ந்
துள்ளதாக தெரிகிறது.

 எனவே இது உள்ளூர் பிரச்சினை அல்ல  உலக மெங்கும் நடைபெற்று வரும் சிலுவை ப்போரின்
தொடர்ச்சியே இப்போதைய இலங்கை குண்டு
வெடிப்புகள் என்று உறுதியாக கூறுகிறார் கள்.
ஆக மத மோதல்கள் என்பது இந்தியாவில் பிஜேபி தொடங்கி வைத்தது என்று முட்டாள்கள்
கூறுவது வெறும் உளறலே..அது சர்வதேச சண்டை யாகும்.

 உலகம் முழுவதும் யார் ஆட்சி என்பதன் அடை
யாளமாக தோன்றிய சிலுவை ப்போர்கள்
இன்று நேரடியாக இல்லாமல் கண்ணுக்கு தெரி யாத அளவில் கிறிஸ்தவ இஸ்லாமிய நாடுகளு க்கு இடையேநடைபெற்றுவரும் போரில் இந்தியா வும் இந்து க்களும் வெறும் பார்வையாளர்களா கவே இருக்கிறார்கள்.

இன்று இலங்கையில் தேவாலயங்களில் நடை பெற்ற குண்டு வெடிப்பின் பொழுது பலியான
மக்களின் உடல்களில் இருந்து தெறித்து சிதறிய ரத்தம்ஏசுநாதரின் சிலையின் நிறத்தை மாற்றி யதில்இருந்து ஏசு கிறிஸ்து சிந்திய  ரத்தத்தினா ல் தான் மக்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்கும் என்று அப்பாவி மக்களிடம் பிரச்சாரம் செய்து வந்த மதபோதகர்களின் நம்பிக்கை மரித்து ப்போய்  விட்டது.

கடவுள் யார்? எங்கு இருக்கிறார் என்று யாராலும்
எந்த மதத்தினாலும்உறுதியாக கூற முடியாத இந்த உலகில் மதம் கடவுள்என்பது ஒரு நம்பி க்கை யின் வடிவம்.அதுநம்முடைய முன்னோர் கள் நமக்கு விட்டுச் சென்றஒரு அடையாளம் . அவ்வளவு தான்.இந்து மதம் கூறும் அன்பே சிவம் என்பதே உலகின் உயர்ந்த தத்துவமாக இருக்க முடியும்.
.
 *இந்த நிலையில் மற்ற மத கடவுள்களை தூற்றி
கொண்டு ஏசு கிறிஸ்துவே உண்மையான கடவுள்
மற்றவர்கள் வணங்குவது தெய்வங்கள் அல்ல
சாத்தான்கள் என்றும் ஏசு கிறிஸ்துவால் தான் உங்களை காப்பாற்ற முடியும் என்று பிரச்சாரம் செய்து வந்த மதபோதகர்களின் நம்பிக்கை யை
நகைப்புக்குள்ளாக்கி உள்ளதுஇலங்கையில்
தேவாலயத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள்.
*
கொழும்பு வில் உள்ளபுனித அந்தோனியார் கோயில் நெகாம்போவில்உள்ள புனித செபாஸ்டி யன் சர்ச் அடுத்து பட்டிகலோயாவில் உள்ள ஷியான் சர்ச் ஆகியவற்றிலும் வெடித்த குண்டு
கள் மூலம் குறைந்தது 150 பேருக்கு மேல் இறந்து
ள்ள நிலையில் இது மதரீதியிலான தாக்குதலின்
அடையாளம் என்றும் ஆரம்பக் கட்ட விசாரணை யில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐ எஸ் அமைப்பு தான்காரணமாக இருக்கும் என்று இலங்கையில்இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கொலும்புவில் உள்ள சின்னமான் கிராண்ட்
சங்க்ரிலா ஹோட்டல் கிங்க்ஸ் புரி ஹோட்டல்க ளில் நடைபெற்ற தாக்குதல்கள் ஈஸ்தர் பண்டிகை
யை முன் வைத்து அங்கு தங்கியிருந்த வெளி நாட்டு பயனிகளை தாக்கவே நடைபெற்றுள்ளதா ல் இதுநிச்சயமாக இலங்கையில் இருந்த உள்நா ட்டுதீவிரவாதத் தின் தொடர்பாக நிச்சயமாக இருக்கமுடியாது.

.

பொன்பரப்பி கலவரமும் கள நிலவரமும்.


பொன்பரப்பி கலவரமும்
கள நிலவரமும்.

20.04.2019

பொன்பெரப்பி கிராமம்.

வன்னியர் சமூகத்தில் 3000
தலகட்டுகளுக்கு மேலாக வசிக்கின்றனர். பறையர் சமூக மக்கள் 600 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர். வன்னியர் சமூதாய மக்கள் பெருபாண்மையிராக இருக்கின்றனர்.

தொடக்கபள்ளி மட்டும் சேரி பகுதியில் இருக்கிறது. மற்ற அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் வன்னியர் தெருக்களுக்கே செல்ல வேண்டும்.

இரு சமூதாய மக்களும் பெரிய அளவில்
பொருளாதரத்தில் உயரவில்லை அடிப்படை வசதியான சாலை வசதியை கூட முழுமையாக இல்லாத கிராமமாக உள்ளது. ஊர் முழுவதும் இரு சமூக மக்களின் வீடுகளும் "ஓட்டு வீடாக"-தான் இருக்கிறது. வன்னியர் சமூதாய மக்களிடம் நிலம் கொஞ்சம் இருக்கிறது.
சேரி மக்களிடம் பெருபாண்மையோர்
இடத்தில் நிலம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

பொன்பெரப்பி கிராமத்தில் இதுவரை
சாதிய கலவரம் நடந்தது இல்லை.
இதுவே முதல்முறை. இதற்க்கு முன்பு
நடந்த அனைத்து தேர்தல்களிலும் இரு சமூதாயமும் கட்சி ரீதியாக ஒன்றிணைந்தே செயல்பட்டு உள்ளனர்.

கிராமத்தில் பறையர் வன்னியர்
சமூக மக்கள் உறவுமுறை போன்றே
பழகி உள்ளனர். அனைத்து விடயங்களிலும். உறமுறை அடிப்படையிலே இருவரையும்
மாறி மாறி அழைத்துகொண்டு உள்ளனர்.

பறையர் சமூகத்தை சார்ந்த பெரும்பாண்மையோர்  சென்னையில்
உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்துகொண்டு உள்ளனர்.
கல்லூரி படிப்பை முடித்தவர்களாக இளைஞர்கள் இருக்கின்றனர் வேலையில்லாமால் சென்னையில்
ஹோட்டல் மார்கெட் போன்ற பகுதியில் வேலை செய்துகொண்டு இருக்கின்றனர்.

வன்னியர் சமூகத்திலும்
பெருபாண்மையோர் இதே நிலையில்தான் இருக்கின்றனர். விவசாயிகளாக தின கூலிகளாக இருக்கின்றனர்.

#கலவரத்திற்கான_காரணங்கள்:

பாராளுமன்ற தேர்தல் அறிவிககபட்டவுடன் சிதம்பரம் தொகுதியில் முனைவர். திருமாவளவன் அவர்கள் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று உறுதியானவுடன் பொன்பரப்பி கிராமத்தில் உள்ள பறையர் சமூதாய மக்கள் ஒன்று கூடி தங்களது வாக்குகளை பானை சின்னத்திற்கு அளிப்பது என்றும். சேரிகளுக்குள் மற்ற கட்சியின் சின்னங்கள் வரைய  வேண்டாம் என்றும் முடிவு செய்து உள்ளனர்.

நாமூம் வன்னியர் தெருவிற்குள் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு போக வேண்டாம் என்றும் முடிவு செய்துள்ளனர். வன்னியர் சமூக திமுக பொருப்பாளர்களிடம்
கலந்து ஆலோசித்து.

வாக்குபதிவு தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வன்னியர் சமூகத்தில் உள்ள திமுக பொருப்பாளர்களில் ஒருவர்
பறையர் சமூகத்தில் இருக்கும்
விசிக பொருப்பாளர்களிடம்
வாக்கு பதிவு அன்று எங்க ஆளுங்க குறிப்பாக
(இந்து முண்ணனி+ பாமக காரனுங்க) ஏதாவது பிரச்சனை பன்னுலாம்னு திட்டம் போடுகிறார்கள். அதனால் உங்கள் சமூகத்தார் காலையிலே வாக்கு அளிக்க ஏற்பாடு செய்துவிடுங்கள் 10 மணிக்குள் முடித்துவிடுங்கள். அப்புறம் ‌அவர்கள் எதாவது பிரச்சனை செய்தால் எங்களால் ஒன்னும் செய்ய முடியாது நானும் படையாட்சி அவனும் படையாட்சி அவனுங்க ஏற்கனவே நான் என் வீட்டில் பானை சின்னம் வரைந்ததால் கடும் கோபத்தில் உள்ளனர். என்று கூறியுள்ளார்.

குறிப்பாக கடந்த மூன்று நான்கு
ஆண்டுகளாக இந்து முண்ணனி
இந்த பகுதியில் காலூன்றி வளர்ந்து வருகிறது. அங்கு இருக்கும் வன்னியர் இளைஞர்களை சமீபகாலமாக அவர்களே வழிநடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் இந்து முண்ணனியை சார்ந்த மாவட்ட பொறுப்பாளர் #இராஜேந்திரன் இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

அரியலூர் நந்தனி கொலை வழக்கில்
தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

18.04.2019 அன்று தலித் மக்கள் அனைவரும் பெரும்திராளாக
காலை 8 மணி முதலே வாக்களிக்க
வந்து கொண்டு இருந்தனர்.

10 மணிக்குள் 400 முதல் 500 வாக்குகள்
தலித் மக்கள் அளித்துவிட்டனர்.
இந்த சம்பவம் வாக்குச்சாவடியில்
இருந்த பாமக இந்து முன்னணி சார்ந்தவர்களுக்கு மிகவும் எரிச்சல்வூட்டும் நிகழ்வாக இருந்துள்ளது.

வாக்குச்சாவடியில் இருந்த வன்னிய சமூகத்தை சார்ந்த இளைஞர்கள்
வாக்களிக்க வந்த மக்களை கொச்சை வார்த்தைகளில் திட்டி உள்ளனர்.
 இதனை கண்டுக்கொள்ளாமல்
வாக்களித்து விட்டு வந்துள்ளனர்.

தலித் சமூகத்தில் இருந்து 45 வயதுடைய ஒருவர் வாக்களிக்க செல்லும் போது அவரை தாகாத வார்த்தையில் திட்டி இருக்கின்றனர். அதனை கண்டுகொள்ளாமல் அவர் வாக்களிக்க உள்ளே சென்று உள்ளார். வாக்களித்து விட்டு வெளியே வரும்பொழுது அவர் முன்னாடியே #பானையை போட்டு உடைத்து உள்ளனர் வன்னியர்
இளைஞர்கள்.

அவர் "ஏன்டா இப்படி செய்கிறீர்கள்"
என்று கேட்டுவிட்டு வன்னியர் பகுதியை சார்ந்த திமுக பொருப்பாளரிடமும்
காவல்துறையிடமும் தகவல் தெரிவித்துவிட்டு சேரி பகுதிக்கு நடந்து சென்று உள்ளார். காவல்துறை அந்த இளைஞர்களை முதலில் கண்டித்து இருக்கிறார்கள். வன்னிய சமூகத்தில் இருக்கும் சிலரிடம் முறையிட்டும் இருக்கிறார்கள்.

வாக்குசாவடி அருகே இருக்கும் சாலைக்கு அருகில் வன்னிய சமூதாயத்தை சார்ந்த
மாற்றுதிறணாளி ஒருவர் #மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டு இருந்திருக்கிறாரார். சேரி பகுதிக்கு விற்பனை செய்வது தொடர்பாக பேசிக்கொண்டு  இருக்கிறார்.

வாக்களித்துவிட்டு சாலையில் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்த அவர்
இதனை காதில் வாங்கிகொண்டு
"மது விற்பதை உங்கள் பகுதியோடு நிறுத்தி விடுங்கள் சேரி பகுதிக்கு வேண்டாம் பானையை போட்டு உடைக்கிறார்கள் நீ மதுவிற்க்க சேரிக்கு
ஆள் அனுப்புகிறார் பிரச்சனை செய்ய வேண்டும் என்றே இப்படியெல்லாம் நடந்துகொள்கிறீர்களா" என்று கேட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்கிறார்.

அப்பொழுது அங்கு மது அருந்திகொண்டு  இருந்த முதியவர் ஒருவர் தட்டுத்தடுமாறி (விழுந்து) எழுந்து அவரை தாகாத வார்த்தையில் திட்டுகிறார். இவறும் பதிலுக்கு ஒன்றை கூறிவிட்டு வீட்டிற்கு விரைகிறார்.

நடந்த நிகழ்வுகளை சேரி பகுதிக்கு வந்து கூறுகிறார் அங்கு இருக்கும் இளைஞர்கள் இதனால் கோபம் அடைகின்றனர். அங்கு இருக்கும்
விசிக பொறுப்பாளர்கள் இளைஞர்கள் யாரையும் அங்கு செல்ல வேண்டாம் எதுவும் அவர்களிடம் கேட்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இளைஞர்கள் அனைவரும் சேரி பகுதிக்குள் இருக்கும் தெருவின் தொடக்கத்தில் அமர்ந்து உரையாடி கொண்டு இருக்கின்றனர்.

மதுவிற்ற இடத்தில் நடந்த நிகழ்வை அங்கு இருக்கும் வன்னியர் இளைஞர்கள் அறிந்துகொண்டு.
10 பேர் கொண்ட கும்பல் சேரி பகுதிக்கு இரு சக்கர வாகனங்களில் வந்து தெருவின்‌ முகப்பு பகுதியில் நின்றுகொண்டு #பானையை சாலையில் போட்டு உடைத்து விட்டு .
" நாங்க இப்படிதான் பன்னுவோம் டா உங்களலாம் ஓட்டு‌ போடவிட்டதே
பெரிய விஷயம் அப்புறம் என்னடா பானை உடைச்சானுங்க அத  உடைச்சானுங்கனு புலம்பிகிட்டு‌ ரோட்டில் போறிங்க பற‌ தேவிடியா பயலுகளாக வாங்கடா" என்று தாகாத வார்த்தைகளை
கூறி திட்டி உள்ளனர்.

 சேரி பகுதியில் இருந்து இளைஞர்கள்
சிலர் சென்று இதனை தட்டிகேட்டனர்.
10பேர் கொண்ட கும்பலில் இருந்து ஒருவன் "என்ன திமிரு‌ *****யா பேசுற" என்று சேரி பகுதி இளைஞரை முதலில் தாக்குகிறார்  தாகாத வார்த்தையில் திட்டி. உடனடியாக அங்கு இருந்து சேரி இளைஞர்களும் பதிலுக்கு தாக்குகின்றனர். உடனடியாக
விசிக பொறுப்பாளர் அருகில்
பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரை அழைத்து வந்து பிரச்சனையை நிறுத்துகிறார்‌.

சத்தத்தை கேட்டு சேரி பகுதியில் இருந்த மக்கள் சாலைக்கு அருகில் வந்தனர். வன்னியர் பகுதி மக்களும் சேரி அருகில் வந்தனர் காவல்துறை தலையிட்டால் பிரச்சினை தொடராமல் முடிக்கப்பட்டது. அனைவரும் கலைந்து சென்றனர்.

காவல் துறையினர் சேரி பகுதியை விட்டு சென்ற 15 நிமிடங்களில் 100 மேற்பட்ட வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் கைகளில் கம்புகள் உருட்டு கட்டகைகளுடன் சேரி பகுதிக்கு வருகின்றனர். சாலையில் அவர்கள் வருவதை அறிந்த சேரி இளைஞர்கள் கூச்சலிட்டு அனைவரையும் வீட்டின் உள்ளே செல்ல சொல்லுகின்றனர் பெண்கள்,குழந்தைகள்,முதியவர்களை.

சேரியில் இருக்கும் இளைஞர்கள்
மற்றும் நடுத்தர வயதினர் 15,20 நபர்கள் சேரி நுழைவு பகுதியில் வந்து கொண்டு இருந்த வன்னியர்களை தடுக்க செல்கின்றனர். தடுக்க சென்ற இளைஞர்களை சாதிவெறி கும்பல் உருட்டு கட்டையால் கம்பிகளால் தாக்கிவிட்டு சேரியின்‌ உள்ளே வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் வருவாதால்
தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அவரிகளிடம் இருந்து தப்பித்து செல்கின்றனர். சேரியில் உள்ளே புகுந்த சாதிய கும்பல் சேரியில் இருக்கும் வீடுகள் முழுவதையும் சூறையாடுகின்றனர்.
பற தேவிடியா பயலுகளா வெளிய வாங்கடா உங்களுக்கு அவ்வளவு
திமிறா என்று கூறிக்கொண்டே இருசக்கர வாகனங்கள் சேரியில் இருந்த விசிக கொடிகள் பாபாசாகேப் அம்பேத்கர் பதாகைகளை சேதப்படுத்தி உள்ளனர்.
சேரி பகுதிக்கு வரும் தண்ணீர் குழாய்களை அடித்து நொறுக்கி உள்ளனர். ஒரு இரு சக்கர வாகனத்தை எரித்து உள்ளனர்.

அரைமணி நேரமாக இத்தகைய கொடூர நிகழ்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது. அப்பொழுது நான்கு காவல்துறையினர் மட்டுமே அங்கு வந்துள்ளனர் அப்பொழுது அவர்களால் கட்டுபடுத்த இயலவில்லை பின்பு காவல்துறையினர் அதிகளவில் வருகை பார்த்து சாதிய கும்பல் சேரிக்கு பின்புறம் இருக்கும் ஓடை வழியாக தப்பித்து சென்று உள்ளனர்.

சாதிய கும்பல்கள் பயன்படுத்திய 5,6 அடி கொண்ட கம்புகளின் முனைகளில்
ஆணி அடித்து தயார் செய்து எடுத்து வந்துள்ளனர்.

பொன்பரப்பி பகுதியை சார்ந்த வன்னியர்கள் மட்டும் தாக்குதலை நடத்தவில்லை குடிகாடு பகுதியை சார்ந்த வன்னியர்களும் சாதிவெறி கும்பலில் இருந்து உள்ளனர்.

இத்தகைய தாக்குதலுக்கு
முக்கிய காரணம் முனைவர்.திருமாவளவன் அவர்களின் வெற்றியை சீர்குலைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் பல்வேறு கட்சிகளில் சிதறி கிடந்தது மக்கள் அரசியல் ரீதியாக
இந்த தேர்தலில் ஒன்றாக நிற்பதை அவர்களால் சகித்துகொள்ள இயலவில்லை.

இந்து முன்னணி அமைப்பினர்
மற்றும் பாமக வினரால் திட்டமிட்டே
இத்தகைய நிகழ்வு நடத்தபட்டுள்ளது.

செயல்திட்டத்தை
#இந்து_முண்ணனி சார்ந்த #இராஜேந்திரன் #பாமக
பொருப்பாளருமே
தீட்டி உள்ளனர்.

பாதிப்புகள்:

10 இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது அதில் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் தஞ்சை மருத்துவமனையில் இருக்கிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.

சிலர் அரியலூர் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் அடித்து நொறுக்கபட்டு உள்ளது.

இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதபடுத்தபடுட்டு உள்ளது.

ஒரு இருசக்கர வாகனம் தீயிட்டு எரிக்கபட்டு உள்ளது.

பெண்கள் குழந்தைகள் சிலருக்கு
சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

வீட்டின் திண்னை பகுதியில்
அமர்ந்து இருந்த ஒரு முதியவரின் விரல்கள் சாதி வெறியர்களால் ஒடைக்பட்டுள்ளது.

வீட்டின் முன் இருந்த வேலிகள் மற்றும்
மாட்டு கொட்டாய்கள் சேதப்படுத்தபட்டு
உள்ளது.

சேரிபகுதிக்கு வரும் குடிநீர் குழாய்கள்
அடித்து நொறுக்கபட்டுள்ளது.

Dr.அம்பேத்கர் மற்றும்
விசிக மன்ற பதாகைகள் சேதபடுத்தபட்டுள்ளது.

வீட்டிற்கு வெளியே இருந்து பாத்திரங்கள் சேதமாகி உள்ளன.

கள நிலவரம்.

பொன்பெரப்பி கிராமம் முழுவதும் மாயான அமைதி நிலையில் இருக்கிறது.

ஊரின் உள்ளே நுழையும் போதே
ஒரு வித அச்சம் ஏற்படுகிறது.
ஊரின் நுழைவு பகுதியில்
#அக்னி_சட்டியை பெரிய அளவில் வைத்துள்ளனர். ஆங்காங்கே வன்னியர் சங்கம் மற்றும் பாமக கொடிகள் பறக்கிறது.

எது சேரி தெரு ஊர் தெரு என்று எளிதாக அடையாளம்காண இயலவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாத கிராமம் போன்றே தோற்றமளிக்கிறது.

சேரி பகுதி முழுமையாக காவல்துறை கட்டுபாட்டில் உள்ளது. சேரி பகுதியின் உள்ளே காவல்துறையினர் மற்றும் மாற்று உடையில் புலனாய்வு துறையினர் வலம் வருகின்றனர்.

வெளி ஆட்கள் மற்றும் கட்சி முற்போக்கு அமைப்பு நிர்வாகிகள் யாரையும் சேரியின் உள்ளே காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. சேரி பகுதிக்கும் செல்லும் அனைத்து பாதைகளிலும் காவல்துறையினர் இருக்கின்றனர்.

சேரிபகுதியில் இருந்தும் யாரும் வெளியே செல்ல முடியவில்லை.

சேரி பகுதியில் இருக்கும் முக்கியமான‌ நபர்களை சமாதானம் செய்யும் வேலை மிக தீவிரமாக காவல்துறை உதவியுடன் நடைபெற்று கொண்டு இருக்கிறது ஒரு புறம்.

சேரி பகுதியில் இருக்கும் பெண்களை அழைத்து பணம் தருவதாக மற்றும் உதவி செய்வதாக வன்னியர் சமூகத்தில் இருந்து ஒரு முக்கிய நபர்
அரசு அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள்
அங்கு இருந்து சென்றுவிட்டனர்.
துண்டு சீட்டில் தொலைபேசி எண்ணை ஒருவரிடம் எழுதி கொடுத்துவிட்டு.

சேரி பகுதியில் இருக்கும் இளைஞர்கள் அழைத்து புலனாய்வு துறையினர் நண்பர்கள் போல உரையாடி செய்திகளை அவர்களிடம் இருந்து அறிந்து கொள்ளுகின்றனர்.

பெண்களும் குழந்தைகளும் மிகுந்து அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக ஒரு பெண் குழந்தை இன்னும் அந்த அச்சத்தில் இருந்து மீளவே இல்லை. நடந்த நிகழ்வை பற்றி பேசிகொண்டு இருக்கும் போதே அழுகிறாள்.

புலம்பல்கள் செல்லும்
இடம்மெல்லாம் கேட்கின்றன.

பெரிய அளவில் அரசியல் மற்றும்
சமூக விழிப்புணர்வு இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.

காவல்துறை நடவடிக்கை.

முதல்கட்டமாக வன்னியர் சமூகத்தில் இருந்து 12 நபர்களை கைது செய்து உள்ளனர்.

சேரி பகுதிக்கு வரும் குடிநீர் குழாய்களை இன்று சீரமைத்து தந்துள்ளனர்.

கள ஆய்வு பணிகளில்.

ஊரின்‌ பின்புறமாக உள்ள ஓடை
பகுதி வழியே சென்றுதான் சேரியை அடைந்தோம்.

சேரிக்குள் சென்றவுடனே இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும் " வாங்க சாமிகளே என்ன ஊருயா சாப்பிடிங்களா ஏ போய் தண்ணி மொண்டுகிட்டு வா" என்று அந்த சேரியில் இருக்கும் தாய்மார்களின் அன்பு ஒரு கணம் நம்மை நெகிழ செய்கிறது.

உடனடியாக காவல்துறை நாங்கள் வந்ததை அறிந்து எங்களை கவனிக்க ஆரபித்துவிட்டனர். எங்களை வெளியேற்ற தீவிரமாக முனைப்பு காட்டினார்கள்.

பாதிக்கப்பட்ட வீடுகளை புகைப்படம் எடுக்க முழுமையாக அனுமதிக்கவில்லை.

காவல்துறையினர் சிலர் இடத்தில் வேண்டுகோள் வைத்து உடனே‌ பேசிவிட்டே சென்றுவிடுவாதாக கேட்டுகொண்டு அங்கு இருப்பவர்களிடம்
உரையாடி கள நிலவரங்களை அறிந்துகொண்டோம்.

60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர்

" சின்னஞ்சிறு வாண்டுகள் எல்லாம் ரோட்டில நின்னுகிட்டு டேய் பற தேவிடியா பயல்களானு திட்டுரான் தம்பி நமக்கு அவுனுங்கள
அந்த வார்த்தையை சொல்லி திட்ட
வாய் வறுமாட்டிகிது பா. பறையன‌ அவளவு கேவலாமா பா நம்ம என்ன‌ பாவம் பன்னுனோம்"

 என்று ஆதங்கபட்டு பேசினார்.
கண்கள் குளமானதே தவிற
சென்ற‌ கோழைகள் எங்களால்
எதுவும் செய்ய இயலவில்லை.

 Manimaran Law
 அ.இ. அழகுமுத்து
ஆ.கார்த்திகேயன் செந்தமிழ் இயற்கை பண்ணை
அம்பேத் கோகுல்
 

 பதிவு
             ~ அம்பேத் கோகுல்