சனி, 26 மே, 2018

உலகிலேயே அதிகசம்பளம் வாங்கும் அதிபர் இவர்கள் தானாம், அப்போ மோடி?

உலகிலேயே அதிகசம்பளம் வாங்கும் அதிபர் இவர்கள் தானாம், அப்போ மோடி?

பல நெருக்கடியில் சிக்கிக்கொண்டு இருக்கும்பிரதமர் மோடி மற்றும் மோடி அரசின் மீது தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் இதர மாநில கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை தெரியும்.
  • இந்நிலையில் முன்னணி நாடுகளின் தலைவர்களின் சம்பள அளவுகள் பற்றித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் மோடி பெற்று இருக்கும் இடம் தான்.
1. லீ ஹெய்சன் லாங்
சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ ஹெய்சன் லாங் அவர்கள் தான் இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் வருடத்திற்குச் சுமார் 1.6 மில்லியன் டாலர் பெற்று வருகிறார்.
2. டொனால்டு டிரம்ப்
சிங்கப்பூர் பிரதமரை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சுமார் 4,00,000 டாலர்சம்பளத்துடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
3. ஜஸ்டின் ட்ரூடோ
தமிழர்களுக்குப் பிடித்தமான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2,60,000 டாலர் சம்பளத்துடன் 3வது இடத்தைப் பெற்றுள்ளார்.
4. ஏஞ்சலா மெர்கல்
ஜெர்மனி நாட்டின் அதிபராக மட்டும் அல்லாமல் உலகின் சக்திவாய்ந்த பெண்ணாக இருக்கும் ஏஞ்சலா மெர்கல் 2,42,000 டாலர் சம்பளம் பெறுகிறார்.
5. இம்மானுவல் மேக்ரோன்
இப்பட்டியலில் 5வது இடத்தில் பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவல் மேக்ரோன் 2,20,656 டாலர்சம்பளத்துடன் இடம்பெற்றுள்ளார்.
6. ரெசெப் தயிப் எர்டோகன்
துருக்கி நாட்டின் அதிபரான ரெசெப் தயிப் எர்டோகன் இப்பட்டியலில் 2,04,360 டாலர்சம்பளத்துடன் 6வது இடத்தைப் பெற்றுள்ளார்.
7. தெரசா மே
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்து வந்த பின்பு தன் நாட்டின் பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் முக்கியமான பணியில் இருக்கும் பிரிட்டன் நாட்டின் பிரதமர் தெரசா மே 1,49,440 டாலர் அளவிலான சம்பளம் மட்டுமே பெற்றுள்ளார்.
8. விளாடிமிர் புடின்
பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவுக்குக் கடுமையான போட்டி கொடுக்கும் ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின் பன்முகத் திறமை கொண்டவரான இவர் 1,12,000 டாலர்சம்பளத்துடன் 8வது இடத்தில் உள்ளார்.
9. நரேந்திர மோடி
முன்னணி நாடுகளின் தலைவர்களின் சம்பள அளவுகளைப் பார்த்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிற தலைவர்களைக் காட்டிலும் மிகவும் குறைவான அளவிலான சம்பளத்தையே பெறுகிறார்.மோடி வருடத்திற்குச் சுமார் 30,000 டாலர் அளவிலான சம்பளத்தைப் பெற்று வருகிறார்.
10. ஜி ஜிங்பிங்
மோடிக்கு அடுத்ததாக டாப் 10 பட்டியலில் கடைசி இடத்தைச் சீன அதிபர் ஜி ஜிங்பிங் வருடத்திற்கு22,000 டாலர் அளவிலான சம்பளத்தை மட்டுமே பெறுகிறார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து ...


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து ...

சலூன் கடை ஒன்றில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தமிழ் வர்ணனையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதுவும் குறளுக்கு உரை தந்த கலைஞர் டி.வியில். “யப்பா அந்த சத்தத்தை குறைப்பா. முடியல!”, சலிப்புடன் ஒருவர் சொல்ல ஒலியை மியூட் செய்தார் கடைக்காரார். சிறிது நேரத்திற்கு அந்த இடமே மயான அமைதியுடன் ஒடுங்கியது. உடனே “எழவு வீடு மாதிரி இருக்கு. சத்தத்த கூட்டு” என்றபடியே மீண்டும் தமிழ் வர்ணனை கேட்க ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட தமிழ் வர்ணனையில் கிரிக்கெட் பார்ப்பவர்கள் பெரும்பாலானவர்களின் மனநிலை இதுதான். அந்த மொழியோடு ஒட்ட முடியவில்லை. வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டு பார்க்கிறார்கள்.

மொழியே தெரியாமல் இருந்தாலும் ஆங்கில கிரிக்கெட் வர்ணனையில் இருந்த சிறு ஒட்டுதல் கூட தமிழில் ஏன் இல்லை என பலரும் கேட்கிறார்கள். காரணம் தமிழ் கிரிக்கெட் வருணணையில் இருப்பது ஆங்கிலம் கலந்த பார்ப்பன மொழி.

“அரவுண்ட த விக்கெட்ல(around the wicket) போட்டுண்டுருக்காரு, அல்ட்ரா எட்ஜ்(ultra edge) நன்னா காமிக்கர்து, சிக்சர் போயிடுத்து, 4 வந்துடுத்து, பிரண்ட் ஃபூட்(front foot) வந்து ஆடுறச்சே நன்னா…., அவா ஜெயிச்சிருவானு கிளியரா தெரிஞ்சுண்டுருக்கு..”

ஹேமங் பதானி, கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த், பத்ரிநாத், லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் என முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர்கள் என்ற பெயரில் ஒரு அக்கிரஹாரத்தையே களமிறக்கியிருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நிறுவனம். வர்ணனை என்ற பெயரில் பார்பனத் தமிழைக் கொண்டு கிரிக்கெட் ரசிகர்களின் காதுகளை கர்ண கொடூரமாக பதம் பார்க்கிறது மேற்படி கூட்டணி. ஆர்.ஜே.பாலாஜியே பரவாயில்லை எனும் நினைக்கும் அளவுக்கு நம்மை தாக்குகிறார்கள்.

“என்ன மாமா ஆத்துல அத்திம்பேர் சௌக்கியமா இருக்காளா?” என்று ஐ.பி.எல் வர்ணனையில் இன்னும் பேசப்படவில்லை. அதையும் கூடிய சீக்கிரமே எதிர்பார்க்கலாம். இதை தவிர பந்து உஸ்ஸ்ஸ்-னு போகுது, மூக்கு மேல ராஜா என இவர்கள் அடிக்கும் மொக்கை வர்ணனைகள் கேட்பவர்களை எரிச்சலூட்டுகின்றன.

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

பொதுவில் நாம் எந்த வட்டார வழக்கு பேசினாலும் ஒரு மேடையில் பலர் முன்னிலையில் பேசும்போது நாம் அனைவருக்குமான பொதுத் தமிழ் மொழியில் தான் பேச ஆரம்பிப்போம். அது இயல்பு. ஆனால் பல லட்சம் பார்வையாளர்கள் பார்க்கும் ஒரு கிரிக்கெட் போட்டியில் அக்கிரஹாரத்து மொழியை எந்த கூச்சமும் இன்றி பயன்படுத்துகிறார்கள். கிரிக்கெட் விளையாடுபவர்கள் முதல் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வரை அனைவரும் ‘அவா’- க்களாக இருப்பதால் கிரிக்கெட் சங்க தாழ்வாரங்கள் இயல்பாக அக்கிரஹாரங்களாகவே அவர்களுக்கு காட்சியளிக்கின்றன. அதனால் அக்கிரஹாரத்து மொழியும் அவர்களுக்கு இயல்பாகவே வருகிறது.

சிவராமகிருஷ்ண ‘ஐயர்’

இப்பார்ப்பன மாமக்களின் வர்ணனைகளைவிட சிறுநகரங்களில் ஊள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனை சிறப்பானதாக இருக்கிறது. “முன் சென்று தடுத்து ஆடினார் (front foot defence)” “மட்டையாளரை ஏமாற்றி காப்பாளரிடம் தஞ்சம் புகுந்தது”. “பந்து எல்லைகோட்டை தாண்டியது. நான்கு ஓட்டங்கள்” என இவ் வர்ணனைகள் சிறப்பானதாக இருக்கும். இவை சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் போன்றவர்களின் வானொலி கிரிக்கெட் வர்ணனைகளை பிரதியெடுத்து பேசப்படுபவை. நீங்கள் தஞ்சை, திருநெல்வேலி என வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றாலும் ஒரே மாதிரியான வர்ணனைகளை பார்க்க முடியும்.

பார்ப்பன மொழி என்பதையும் தாண்டி கடந்த 10-ஆம்(10-5-2018) தேதி நடைபெற்ற டெல்லி vs  ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் ஒருபடி மேலே சென்றுவிட்டார்கள் இப்பார்ப்பன முன்னாள் வீரர்கள். காரணம் டெல்லி அணியில் விளையாடும் ஸ்ரேயஸ் ஐயர் என்ற வீரர். அவர் பெயரின் பின்னொட்டை பார்த்ததும் வர்ணனையில் இருந்த லஷ்மன் சிவராமகிருஷ்ணனுக்கு இருப்பு கொள்ளவில்லை.

“……ஸ்ரேயஸ் ஐயர்…..நானும் ஐயர் தான். என் பெயர் சிவராமகிருஷ்ண ஐயர்” என்ற பல லட்சம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேரடி வர்ணனையில் தன் சாதியை தெரிவிக்கிறார்.

அபினவ் முகுந்த்.

நேற்று(17-05-2018) நடைபெற்ற ஹைதராபாத் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் தான் ஒரு மாத்வா பிராமின் என வர்ணனையில் தெரிவித்தார் அபினவ் முகுந்த என்ற கிரிக்கெட் வீரர்.

சக வர்ணனையாளரான முத்து என்பவர் ” எந்த அணி ஜெயிக்கப் போகிறது. ஹைதராபாத்தா இல்லை பெங்களூரா? பிரியாணியா இல்லை பிசிபெல்லா பாத்தா?  என்ற கேட்டபோது  “பிசிபெல்லாபாத்துதான், அக்சுவலி நான் மாத்வா பிராமின்” என்று சம்பந்தமில்லாமல் தனது சாதியை குறிப்பிட்டார் அந்த கிரிக்கெட் வீரர்/வர்ணனையாளர்.

சாதி வெறியனாக இருந்தாலும் அடுத்தவர்களிடம் சாதி பெயர் கேட்பது நாகரிகமற்றதாக கருதப்படுகிறது. ஆனால் எந்த நாகரிகமும் இல்லாமல் ஐயர் என்பதை ஏதோ முனைவர் பட்டம் போல பெருமைமிகு அடையாளமாக கூறி அற்ப சந்தோசமடைவதை பார்ப்பனத் திமிர் என்று தான் அழைக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன்னர் நடந்த போட்டி ஒன்றில் ஒரு வீரர்  பந்து பிடிப்பதை தவற விட்டுவிட்டார். அப்போது ஶ்ரீகாந்தின் வர்ணனை.“ விட்டுடான்… ஐயோ…நாராயணா,வாசுதேவா…” என்று பார்த்தசாரதி கோவில் தெரு மாமாக்களை நினைவுபடுத்தினார்.” ஓ மை காட்” என்று ஆங்கிலத்தில் கூறுவதை நாராயணா வாசுதேவா என்று தமிழ்படுத்தியிருக்கிறார் திருவாளர் ஶ்ரீகாந்த். விட்டால் ஆங்கில வழக்கை சுதேசிப்படுத்தியிருப்பதாக நம்மிடம் படுத்தினாலும் படுத்துவார்கள். சிவராமகிருஷ்ண ‘ஐயரி’-ன் மேற்படி கூற்றுக்கு ஒரு ‘ஐயங்காரரி’-ன் எதிர்வினையாகவும் இதை பார்க்கலாம். சைவ-வைணவ, ஐயர்-ஐயங்கார் சண்டை அங்கேயும் தொடர்கிறது போலும்.

ஐ.பி.எல் போன்ற போட்டிகளில் சாதி வெறியுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கு தமிழக மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். சாதி வெறிக்கு இடமளித்ததற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்பதோடு இப்பார்ப்பன வெறியர்களை தங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.

பொதுவில் தமிழகத்தில் பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்த்துகொள்வது இழிவானது நாகரிகமற்றது என்று கருதப்படுகிறது. அதனால் தான் சாதிவெறி கட்சி நடத்தினாலும் கொங்கு ஈஸ்வரனுக்கும், ராமதாஸ்களும் தமது பெயரில் சாதி பின்னொட்டை சேர்க்காமல் இருக்கிறார்கள். இந்த சூழலில் சாதி வெறியர்களோ – சாதி அபிமானம் கொண்டவர்களோ, பொது இடங்களில் தமது சாதியை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்கப்பதற்கு சிரமப்படுகிறார்கள்.

ஆடுறதுக்கு அமெரிக்கா, பாடுறதுக்கு பார்த்தசாரதி தெருவா?

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினர் சாதி பெயரை இன்னும் பயன்படுத்துகிறார்கள். (ஸ்ரேயஸ் ஐயரும் தமிழக கிரிக்கெட் வீரர் அல்ல). தமிழகத்தில் மதிக்கப்பட வேண்டுமானால் சாதி பெயரை துறக்க வேண்டியிருக்கிறது. இவர்களைப் பொறுத்த வரை இது எவ்வளவு பெரிய அநீதி! இச்சூழலில் அமித் மிஸ்ராக்கள், இசாந்த் சர்மாக்களை மட்டுமே பார்த்த இடத்தில் ஐயர் என்ற பெயரை பார்த்தால்? தன்னை அறியாமல் குதூகலம் அடைகிறார்       லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன ஐயர். இந்த குதூகலத்தை அபபடியே திருப்பிப் போட்டால் அது தான் பார்ப்பனர்கள் தமிழகத்தின் மீதும் திராவிட இயக்கத்தின் மீது காட்டும் வெறுப்பு. அவாளது சாதி பெருமிதத்தை அவர்களே மறைக்கும்படி பெரியாரின் மண் செய்து விட்டதைத்தான் கலிகாலம் முத்திடுத்து என்று புலம்புகிறார்களோ என்னமோ!

இதுவே தம்மை நட்டநடு சென்டராகவும், தாராளமயத்தை ஆதரிக்கும் லிபரலாகவும் இருக்க நேர்ந்தால் என்ன நடக்கும்? உள்ளூர இருக்கும் திராவிட இயக்கத்தின் மீதான் காழ்ப்பு இன்னும் பலமடங்காக துள்ளி எழுகிறது. அதற்கு சரியான சான்று சமீபத்திய ந.ந.சென்டரும், ஆல்பர்ப்பஸ் அங்கிளுமான எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் என்பவர். இந்துத்துவாவையும் எதிர்க்கிறேன், திராவிடம் – பெரியாரையும் எதிர்க்கிறேன் என்று இந்த பெரியவாள் அடித்து விடும் வார்த்தைகளால் தமிழ் ஃபேஸ்புக்கே வெட்கித் தலை குனிகிறது. காலஞ்சென்ற சுந்தர ராமசாமியின் தயவால் காலச்சுவடில் கருத்துபதேசம் பண்ணின பெரியவாள் இன்றைக்கு டி.வி.விவாதம் மற்றும் ஃபேஸ்புக்கில் பலரையும் படுத்தி எடுக்கிறார். அவாள் யாராக இருந்தாலும் விவாதத்திற்கு கூப்பிட்டே ஆக வேண்டும் என்று தமிழ் சேனல்களுக்கு ஆர்.எஸ்.எஸ் உத்திரவு போட்டிருப்பதால் இந்த அடிமுட்டாள் பிரைம் டைம்மில் மனுதர்மத்தையே  மாத்திப் போட்டு பேசுகிறார்.

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஐ.பி.எல் வர்ணனையில் சாதி பெயரை தெரிவித்தது ஒரு உதாரணம் தான். சாதி பெயர் கேட்கப்படாத ஐ.டி அலுவலகங்களிலும் இதை பார்க்க முடியும். அங்கு ஒரு தேவர் மற்றொரு தேவரையோ, நாடார் நாடாரையோ கண்டு பிடிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் பார்ப்பனர்களுக்கு அக்கவலையில்லை.காரணம் அவர்களின் பார்ப்பன மொழி, பண்பாடு. அனைத்திலும் மற்றவர்களிடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட அதிகம் மெனக்கெடுகிறார்கள்.

பார்ப்பன மொழியை மீறி வேறு சில உபாயங்களையும் வைத்திருக்கிறார்கள். என்ன இருந்தாலும் அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அணு குண்டு வெடித்தவர்களாயிற்றே!  ஐ.டி நிறுவன டீமில் புதிதாக சேருபவர்களில் ‘அவா’க்களை எப்படி கண்டுபிடிப்பது என்பதற்கு ஒரு கையேடே வைத்திருக்கிறார்கள்.

பொதுவாக பேசிகொண்டிருக்கும் இடத்தில் “கொஞ்ச நாளா நான் சந்தியாவந்தனமே பண்றதில்லை”

“என்ன பாஸ் இன்னிக்கு லேட்.”

“வீட்டுல ஆவணி அவிட்டம்”

“உங்களுக்குமா எங்களுக்கும் ஆவணி அவிட்டம்”…… புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள், புதிய மனுதர்மக் கூட்டணிகள் உருவாகி விடும். இல்லையென்றால் கட்டிப்பிடிக்கும் “ஹக்” கலையின் மூலம் உள்ளே நெளியும் பூணூலை பாசத்தோடு அடையாளம் காண்பார்கள். பிறகு என்ன, அவா, இவா, ஆத்துல, காயத்ரி மந்திரம், தோப்பனார், அத்திம்பேர் என்று அவாளது கலைக்களஞ்சியம் கொஞ்சி விளையாடும். இந்த அவாள் மொழி பேசினால்தான் நாகரிகம் என்று சிலபல சூத்திரர்களும், பஞ்சமர்களும் முயற்சி செய்யும் சோகம் தனிக் கதை. தொலைக்காட்சிகளிலும், சினிமா உலகிலும் கூட இந்த பார்ப்பனியமயமாகும் தமிழின் அவலத்தைக் கேட்கலாம்.

கிரிக்கெட்டில் ஐ.பி.எல். என்ற 20-20 வடிவம் ஒரு நவீன வடிவம் என்று அழைக்கப்படுகிறது. அதுபோல ஐ.டி. வேலையும் அதன் வாழ்க்கையும் நவீனம் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் இரண்டு நவீனத்திலும் தொடர்பு மொழி என்னவோ பழைய பார்ப்பன பஞ்சாங்கங்கள்தான்.

****

சில நாட்களுக்கு முன்னர் வினவு தளத்தில் வெளிவந்த “காஷ்மீர் மன்னர்கள் ஆய் போன கதை” என்ற கட்டுரையில் கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாமல் காஷ்மீர் மன்னர் ஒருவர் கிரிக்கெட் விளையாடிய கதை குறிப்பிடப்பட்டிருந்தது. அது மன்னர் காலம். அதே போன்ற ஒரு கதை நாம் வாழும் காலத்திலும் நடந்திருக்கிறது. அந்த சம்பவத்தை கீழே படியுங்கள்.

நவம்பர்-23,2000-ஆம் ஆண்டில் ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தான் அந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் நடந்தது.

ஆனால் இங்கு மன்னர் ஆடவில்லை. மன்னரின் புதல்வரான இளவரசர் கிரிக்கெட் ஆடினார். ஏழு நிமிடங்கள் களத்தில் நின்று ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட் ஆகினார். இளவரசருக்கு அன்று மூட் சரியில்லாததால் அவுட் ஆனதை ஏற்றுக் கொண்டு பெவிலியனுக்கு நடையை கட்டினார். இல்லையெனில் காஷ்மீர் மன்னரின் நிலை தான். எதிர் அணியின் நிலையை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

அந்த இளவரசர் வேறு யாரும் இல்லை. ஹிமாச்சல் பிரதேச பா.ஜ.க. எம்.பி. மற்றும் முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் தான். மன்னர் அன்றைய ஹிமாச்சல் பிரதேச முதல்வர் பிரேம் குமார் துமால்.

இப்போட்டி நடைபெற்றதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி இளவரசர் அனுராக் தாகூர் ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பின்னர் தேர்வு குழுவின் தலைவராகவும் ஆனார்.

பிறகு என்ன? இதுவரை ரோட்டு ஓரத்தில் ‘ஒன்பிச் கேட்ச்’ கில்லி கிரிக்கெட் கூட விளையாடியிராத தன்னை ஹிமாச்சல் பிரதேச ரஞ்சி அணிக்கு தானே தேர்வு செய்து கொண்டார். பிறகு தன்னை கேப்டனாகவும் அறிவித்துக் கொண்டார். விளையாடவும் செய்திருக்கிறார். அந்த ஆட்டம் எப்படி நடந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள். நிச்சயமாக காஷ்மீர் மன்னரைவிட மட்டமாக இருந்திருக்கும்.

மாநில முதல்வரின் மகன் கிரிக்கெட் சங்க தலைவராகி, பின்னர் தேர்வுக் குழுவில் தன்னைத்தானே நியமித்துக் கொண்டு,  தன்னைத் தானே தேர்வு செய்து அதுவும் கேப்டனாகி கிரிக்கெட் விளையாடி டக் அவுட் ஆகியிருக்கிறார்.

விசயம் அதோடு முடியவில்லை. அந்த ஒரு மேட்சில் டக் ஆவுட் ஆனதை தகுதியாக கொண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற அந்தஸ்தில் தேசிய அளவில் ஜூனியர் கிரிக்கெட் தேர்வு குழு தலைவரானார். கிரிக்கெட்டின் தேர்வுக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தான் இடம்பெற முடியும் என்பது விதி. இளவரசர் கிரிக்கெட் விளையாடியதன் நோக்கமே இதற்குதான். பின்னர் அதை கொண்டு படிப்படியாக பி.சி.சி.ஐ. தலைவராகவும் உயர்ந்தார்.

தன் மீதான வழக்கை தானே விசாரிக்கும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி; தன் மீதான குற்றத்திற்கு தானே விசாரணை கமிசன் அமைக்கும் தமிழக ஆளுநர்; தன்னை தானே ரஞ்சி கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யும் பா.ஜ.க. எம்.பி.

மேற்கண்ட மூவரும் பா.ஜ.க-வினர் அல்லது பா.ஜ.க. எடுபிடிகள் என்பது ஒரு யதேச்சையான ஒற்றுமை இல்லை. மேற்கண்ட செயலுக்காக இவர்கள் கடுகளவுக்கேணும் கூச்சமோ நாணமோ அடைவதில்லை. பா.ஜ.க.வினரின் டிசைனே அப்படித்தான்.

வேத காலத்தில் இணையம் இருந்தது, சேது பாலத்தில் குரங்கு போட்ட பாலம் இருக்கிறது, ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் அந்தக் காலத்து லைவ் ஒளிபரப்பு, அர்ஜுனன் பயன்படுத்திய பிரம்மாஸ்திரம் நைட்ரஜன் குண்டுக்கு இணையானது, பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்ட ஜோசியம் குறித்த படிப்பு அறிவியல் துறையின் கீழ் வருவது………… இன்னபிற கூத்துக்கள் நடைபெறும் நாட்டில் கிரிக்கெட்டில் மட்டும் விளையாட்டா இருக்கும்!

மற்ற நாடுகளில் ஆடப்படும் ஜென்டில்மேன் கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் முற்றிலும் வேறுபட்டது. ஆம். இதன் பெயர் மனுதர்ம கிரிக்கெட்!

ஸ்டெர்லைடின் உற்பத்திப் பொருட்களும்... அதற்கு அரசியல்வாதிகளின் 30% கமிஷன் கேல்குலேஷனும்



ஸ்டெர்லைடின் உற்பத்திப் பொருட்களும்... அதற்கு அரசியல்வாதிகளின் 30% கமிஷன் கேல்குலேஷனும்..!

கக்கூஸ் கட்ட வாசலில் 20 குழி மணல், 50 செங்கல் கொட்டினாலே.. எங்கேந்தோ மூக்கு வேத்து... கழுகு மாதிரி ஓடி வருவாங்க..நம்ம ஊர் அரசியல்வாதிகள்..!

ஸ்டெர்லைட்டில் கோடிகளில் பணம்.. மெட்ரிக் டன்களில் உற்பத்தி..! விட்டா வைப்பாங்க..? ஆளாளுக்குப் படை எடுத்து .. கொடுத்து கொடுத்தே கர்ணன் மாதிர கை சிவந்தாராம் இந்த ஆலையின் ஓனருங்க...அப்பவும் மாளல்லை..! பிரய்யோஜனமும் இல்லை.
_____________________________

உண்மையானத் தமிழன்னா இதை ஒரு வார்த்தை விடாம படிக்கணும்.

சமீபத்தில் டேனியல் ஞானராஜ்னு ஒரு மகராசன் ரொம்ப அக்கறையோடு தூத்துக்குடி நிலவரங்களை எழுதிட்டு வாரார். அவரும் அவர் குடும்பமும் நல்லாயிருக்கணும்!

இன்று தூத்துக்குடியில் நடந்த துயரமான சம்பவம் நம் சமுதாயத்தில் வாழும் மக்களின் அறியாமையை அரசியல்வாதிகளும், கிறிஸ்துவ மிஷனரிகளும், அரசியல் சார்ந்து ஆதாயம் தேடுபவர்களும் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

விவாதத்திற்குள் செல்லும் முன் ஸ்டெர்லைட் பற்றி அடிப்படையாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில விசயங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வளாகத்தில் ஒரு காப்பர் ஸ்மெல்ட்டர், ஒரு ரிஃபைனரி, ஒரு ஸல்ஃபியூரிக் ஆசிட் பிளான்ட், ஒரு ஃபாஸ்ஃபோரிக் ஆசிட் பிளான்ட், மற்றும் ஒரு காப்பர் ராடு பிளான்ட் ஆகியவை உள்ளன.

காப்பர் ராடு உற்பத்தி செய்ய காப்பர் கேத்தோடு தான் மூலப்பொருள். பித்தளை, வெண்கலம் மற்றும் அலாய் ஸ்டீல் செய்யவும் காப்பர் கேத்தோடு உபயோகப்படுகிறது. இவை பெரும்பாலும் கட்டுமானப் பொருட்களுக்கும், நாட்டின் இராணுவத் தளவாடங்களுக்கும் உபயோகிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப் பயன்படுத்துவது உலகத்தரம் வாய்ந்த “A” கிரேடு கேத்தோடு ஆகும்.

காப்பர் தயாரிப்பின் உப பொருட்களாக
1) ஃபாஸ்ஃபோரிக் ஆசிட்,
2) சல்ஃப்யூரிக் ஆசிட்,
3) ஹைட்ரோ-ஃப்ளூரோ-சிலிசிக் ஆசிட்,
4) ஃபெர்ரோ சாண்ட் மற்றும்
5) ஃபாஸ்போ-ஜிப்பசம்,
இவை அனைத்தும் உற்பத்தி செய்யப் படுகின்றன.

இவற்றில் ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.

1) ஃபாஸ்ஃபோரிக் ஆசிட்.

இதில் ஃபாஸ்ஃபோரிக் ஆசிட், உரங்கள் தயாரிக்கவும், விலங்குகளுக்குத் தீவனம் தயாரிக்கவும் உபயோகப்படுத்தப் படுகின்றன. இது சல்ஃப்யூரிக் ஆசிட் மற்றும் ராக் ஃபாஸ்ஃபேட்டின் வேதியல் மாற்றத்தால் தயாரிக்கப்படுகிறது. இதன் செய்முறை மட்டும் கட்டுமான அமைப்பு இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டு தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டது.
ஒரு வருடத்திற்கு 2,30,000 மெட்ரிக் டன் அளவு இந்த ஃபாஸ்ஃபரிக் ஆசிட் தயாரிக்கப் படுகிறது. இவை டேங்கர் லாரிகள் மூலமாக இந்தியா முழுவதும் மற்றும் அயல்நாடுகளுக்கும் சப்ளை செய்யப் படுகிறது.

2) சல்ஃப்யூரிக் ஆசிட்.

காப்பர் ஸ்மெல்ட்டிங் செய்யும் போது சல்ஃபர் டை-ஆக்ஸைடு வாயு உருவாகிறது. அதுவே வேதியல் மாற்றமடைந்து சல்ஃப்யூரிக் ஆசிடாக உரு மாறுகிறது. இதில் பெரும்பகுதி, ஃபாஸ்ஃபோரிக் ஆசிட் தயாரிக்க உள்ளுக்குள்ளேயே உபயோகப்படுத்தப் படுகிறது. ஒரு சிறு பகுதியே வெளிச் சந்தைக்குச் செல்கிறது.

வெளிச்சந்தையில் விற்கப்படுவது உரங்கள் தயாரிக்கவும், எண்ணை சுத்திகரிப்பிலும், காகித தயாரிப்பிலும், டிட்டர்ஜென்ட் சோப் தயாரிப்பிலும், ஸ்டீல் தயாரிப்பிலும் உபயோகப்படுத்தப் படுகின்றன.

இது ஆண்டுக்கு 12,00,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

3) ஹைட்ரோ-ஃப்ளூரோ-சிலிசிக் ஆசிட்.

ஃபாஸ்ஃபோரிக் ஆசிட்டை ஆவியாக்கி குளிர வைப்பதில் உருவாவது தான் இது. பெரும்பாலும் இது தண்ணீரை சுத்தப் படுத்த உதவுகிறது. தண்ணீரில் க்ளோரின் கலப்பது போலத்தான் இதுவும். இது ஆண்டுக்கு 10,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப் படுகிறது.

4) ஃபெர்ரோ சாண்ட்.

காப்பர் உற்பத்தி செய்ய பைரோ-மெட்டலர்ஜிக்கல் ப்ராஸஸ் பயன்படுத்தும் போது இந்த ஃபெர்ரோ சாண்ட் கிடைக்கிறது. இது ஆற்று மணலுக்கு ஒரு மாற்றுப் பொருள். கட்டுமானத்திற்கும், சாலை அமைக்கவும் இந்த மணல் உபயோகப் படுத்தப்படுகிறது. இது ஆண்டுக்கு 6,00,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

5) ஃபாஸ்ஃபோ ஜிப்சம்.

தூத்துக்குடியில் உற்பத்தி ஆகும் இது, உலகின் மற்ற இடங்களில் கிடைப்பதை விட தரம் உயர்ந்தது. இது சிமென்ட் உற்பத்தியிலும், செங்கல் மற்றும் பிளாஸ்ட்டர் ஆஃப் பாரிஸ் உற்பத்தியிலும் உபயோகப் படுத்தப்படுகிறது. எண்ணை வித்துக்கள் விளைய வைப்பதற்கு முன் மண்ணைப் பதப்படுத்தவும் இது பயன்படுகிறது. இது ஆண்டுக்கு 10,00,000 மெட்ரிக் டன் அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

பின்பு காப்பர் ராடு. இது தான் ஸ்டெர்லைட்டின் முதலும் முக்கியமானதுமான உற்பத்திப் பொருள். இது தொலைத்தொடர்பு வசதிகளுக்கும், மின்சாரக் கடத்தியாகவும், டிரான்ஸ்ஃபார்மர்களிலும், மின்காந்த கடத்திகளிலும் உபயோகிக்கப்படுகின்றன.

இந்தியாவில் ஆண்டுக்கு 1,50,000 மெட்ரிக் டன் அளவு காப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஸ்டெர்லைட்டின் பங்கு 30% மேல், அதாவது தோராயமாக 50,000 மெட்ரிக் டன்.

நிற்க...!!!

இப்போது விவாதத்திற்கு வருவோம்.

இந்தக் காப்பரையோ, அல்லது காப்பர் உற்பத்தியின் போது கிடைக்கும் உப பொருட்களையோ, அல்லது அந்த உப பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் மற்ற பொருட்களையோ நாம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தாமல் இருக்கிறோமா?

அதாவது உரங்கள், தீவனம், எண்ணை, காகிதம், டிட்டர்ஜென்ட் சோப்பு, ஸ்ட்டீல், க்ளோரின், கட்டுமானப் பொருட்கள், சாலை, ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ், எண்ணை வித்துக்கள், மின்சாரம் மற்றும் மின்கடத்திகள்.

இதில் எங்கு இருந்து வருகிறது கேன்சர்? மேற்சொல்லப்பட்ட ஆசிடுகள் நம் தோலில் நேரடியாகப் பட்டால் கண்டிப்பாகக் காயமோ அரிப்போ ஏற்படும். நாம் பள்ளியில் படிக்கும் போது சயின்ஸ் லாப்-இல் ஏற்படுமே, அது போலத் தான். அதுவும் உள்ளே வேலை பார்ப்பவர்களுக்கு. இவ்வளவு பெரிய நிறுவனம் கண்டிப்பாக அதற்கான பயிற்சிகள் அனைத்தும் தொழிலாளர்களுக்குக் கொடுத்திருப்பார்கள்.

இந்த ஆசிடுகள் எதுவும், யூனியன் கார்பைடு கேஸ் போல் அல்லாமல், காற்றில் கலந்து வேதிவினை புரிபவை அல்ல.

இவற்றில் ஸல்ஃப்யூரிக் ஆசிட்டுக்கு மட்டும் உள்ள குணாதிசயம் என்னவென்றால், அது திறந்து வைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை அதிகமாக உறிஞ்சிக் கொள்ளும் என்பது மட்டுமே. உற்பத்தி செய்த உடனே அதைச் சேமித்து வைக்க முடியாது. அதனால் காற்றின் ஈரப்பதத்தை அது உறிஞ்சிக் கொள்ளலாம். தூத்துக்குடியில் மழை பெய்யாமல் இருக்க இது ஒரு காரணமாக இருக்கலாம்.


மற்றபடி கேன்சர் என்பதெல்லாம் கட்டுக்கதை.

இவ்வளவு பொருட்களை இத்தனை லட்சம் டன் கொள்ளளவு உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தின் வருட வியாபாரம் எவ்வளவு இருக்கும் என்று தோராயமாக உங்கள் மனதில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 22,000 கோடி இவர்களுடைய ஒரு வருட வியாபாரம். தோராயமாக 8,000 கோடி இதனுடைய மொத்த லாபம். ஒரு 5000 கோடி நிகர லாபமாக இருக்கலாம். கடந்த 5 வருடங்களில் 300 கோடி ரூபாயை மாசுக் கட்டுப்பாட்டிற்கு மட்டும் செலவழித்து இருக்கிறார்கள்.

உலக காப்பர் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு வெறும் 3.5%, இதை அதிகப் படுத்தத்தான் ஸ்டெர்லைட் 3300 கோடியில் விரிவாக்கம் செய்யலாம் என்று தீர்மானித்தது. இதன் மூலம் இப்போது இருக்கும் 5000 நேரடி வேலைவாய்ப்பு 9000-த்திற்கும், மறைமுக வேலைவாய்ப்பு 20,000-இல் இருந்து 29,000-த்திற்கும் உயரும் என்பது இந்த நிறுவனத்தின் கணிப்பு.

இங்குதான் நம்முடைய அரசியல்வாதிகள் உள்ளே வருகிறார்கள்.

இவ்வளவு வியாபாரம் நடக்கிறதே, இவ்வளவு லாபம் கிடைக்கிறதே, இன்னும் விரிவாக்கத்திற்கு கோடி கோடியாய் பணம் இருக்கிறதே, இதில் நமக்கு என்ன கிடைக்கும் என்பது தான் இவர்களுடைய குறிக்கோள். நம்முடைய அரசியல்வாதிகளுக்குத்தான் 30% கமிஷன் கொடுக்க வேண்டுமே. இந்தத் தொல்லையினால் சில நிறுவனங்கள் ஆந்திராவில் தொழில் தொடங்கச் சென்றது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

சும்மா போய்க் கேட்டால் இந்த நிறுவனங்கள் பணம் கொடுக்க மாட்டார்கள் என்பதால், பொதுமக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு, கேன்சர் போன்ற வியாதிகளின் பெயரைப் பயன்படுத்தி, அவர்களைத் தூண்டிவிட்டு, ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.

இந்த அறியாமையில் போனதுதான், ஒரு பெண் உட்பட இன்று போன 11 உயிர்களும். இதில் காவல்துறையையோ, மாவட்ட ஆட்சியாளரையோ சொல்லிக் குற்றமில்லை.

நம் அப்பாவி மக்கள் தங்கள் அறியாமையினால் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை வைத்து பிண அரசியலும் செய்து, தங்களுக்குத் தேவையானதையும் நிறைவேற்றிக் கொண்டு, நமக்காக நீலிக் கண்ணீரும் வடிப்பார்கள்.

நமது மக்கள் அறியாமையில் இருந்து வெளிவந்து சமூகத்தை அனுக வேண்டும். போராட்டத்தால் எல்லாவற்றிலும் ஜெயிக்க முடியாது. இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர்கள் குடும்பத்தினர் இனிவரும் காலங்களை எதிர்கொள்ள மன வலிமையைத் தருமாறு கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

எல்லா இழப்பையும் பணத்தால் ஈடு செய்ய முடியும் என்ற தமிழக அரசின் எண்ணத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

உங்கள் சுவர்களில் பகிர்ந்து புரியாத மக்களுக்கு கொஞ்சம் விழிப்புணர்வு கொடுத்து உதவுங்கள்.

நன்றி - ஆனந்தன் அமிர்தன் ஜி பதிவு

சீமானின் சொத்து மதிப்பு விபரம் :


சீமானின் சொத்து மதிப்பு விபரம் :

1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர் ,
2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்,
3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்,
4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம் ,
5.ஆவடியில் 6ஏக்கர் நிலம் ,
6.பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள் ,
7.சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி!
8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில் ,
9.விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும்டிரஸ்டி பெயரில் சர்ச்,
10.மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம் ,
11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்
12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு .
13. நெல்லை குமரிமாவட்ட நாடார் முக்கிய சங்கத்தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
15.பழனி அருகே தென்னந்தோப்பு
16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை , மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு அமௌன்ட்.

ஒரு சாதாரண எளிய பிள்ளையின் சொத்து இவ்வளவு தான்

கடைசிய அரணையூரில் ஆறு கோடி 6000 சதுர அடியில் சின்னதா ஒரு வீடு.
Thanks whatsapp.

பரவும் நிபா வைரஸால் தொடரும் உயிரிழப்பு.,அச்சத்தின் உச்சத்தில் மக்கள் .,உயிரை காக்க வந்ததே தீர்வு ..!

பரவும் நிபா வைரஸால் தொடரும் உயிரிழப்பு.,அச்சத்தின் உச்சத்தில் மக்கள் .,உயிரை காக்க வந்ததே தீர்வு ..!



பரவும் நிபா வைரஸால் தொடரும் உயிரிழப்பு.,அச்சத்தின் உச்சத்தில் மக்கள் .,உயிரை காக்க வந்ததே தீர்வு ..!

கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இதனால 10-ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 மேலும் இந்த நிபா வைரஸ் வவ்வால்கள் மூலமே பிற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவுவதாக தெரிய வந்துள்ளது. 
          
அதுமட்டுமின்றி தமிழக-கேரள எல்லையில் கோவை மாவட்டம் இருப்பதால்,தமிழகத்திற்கு  நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக பாதிக்கப்படும் மனிதர்கள் மற்றும் விலங்குகளை காப்பாற்ற இதுவரை எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதனால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கமுடியாமல் தவித்து வருகின்றனர். 
   
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் குதிரைகள் மூலம் பரவிய ஹென்றா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பு மருந்தான எம் 102.4  மருந்தை நிபாவிற்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது  என கண்டுபிடிக்கப்பட்டு  உலக சுகாதார அமைப்பின் அறிவுரையின்படி இந்த மருந்தை பெற ஆஸ்திரேலியா உதவியை இந்திய அரசு நாடியது. 
மேலும் தற்போது நிபா வைரஸ் சிகிச்சைக்கான மருந்து கேரளா வந்து உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது .
மேலும் வைரஸ் பாதிப்புக்கு தேவையான உதவியை செய்யுமாறு ஆஸ்திரேலியாவிடம் இந்திய அரசு உதவியை கோரியது.

பா.ஜ.க நான்கு ஆண்டு ஆட்சி.


பா.ஜ.க  நான்கு ஆண்டு ஆட்சி.

கீழே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலம்.......

1-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்
11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
20- பலுசிஸ்தான் தலையீடு
21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம்
28-மேக் இன் இந்தியா
29-டிஜிட்டல் இந்திய திட்டம்
30-அணு உலை
31-புல்லட் ரயில்
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம்
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி
51-வியாபம்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 2000 கோடி
55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல்
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
_90 ஆதார் அட்டை  குழா்படிகள்-______________________________________
(அதிக நண்பர்களைக்
கொண்டவர்கள் பகிர்ந்தால்
தகவல் பலரை சென்றடைய உதவும்.

சர்வாதிகாரத்தின் விதைகளைச் சுமந்த மனம்!



சிறப்புக் கட்டுரை: சர்வாதிகாரத்தின் விதைகளைச் சுமந்த மனம்!


தூத்துக்குடியில் காவல் துறையினரால் 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழகமே கொதி நிலையில் இருக்கிறது. தமிழகம் முழுவதிலும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்துக்கு வெளியிலும் இதன் அதிர்வுகள் உணரப்படுகின்றன. பக்கத்திலிருக்கும் பெங்களூருவிலிருந்து லண்டன்வரை இந்தப் படுகொலைகளுக்கான எதிர்ப்புக் குரல்கள் கேட்கின்றன. ஸ்டெர்லைட் ஆலையை நடத்திவரும் வேதாந்தா குழுமத்தின் பங்குகள் சரிந்திருக்கின்றன.

இந்தப் போராட்டம், காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு, மரணங்கள், இவற்றின் எதிரொலியாக எழும் போராட்டங்கள் ஆகிய அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. துப்பாக்கிச் சூட்டுக்கும் உயிரிழப்புக்கும் பதில் சொல்ல வேண்டியது மாநில அரசின் கடமை. முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்துச் சில பதில்களைச் சொல்லிவருகிறார். முதல்வரைக் கேட்காமலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்ற செய்திகள் வருகின்றன. போராட்டம், போராட்டக்காரர்களின் செயல்பாடுகள், காவல் துறையினரின் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பழனிசாமி தன்னால் முடிந்தவரை பேசிப்பார்க்கிறார். ஆனால், சிறு குழந்தைகள்கூட அவர் பேச்சைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஆளுங்கட்சியினர் பெருமளவில் பிரச்சாரத்தை முன்னெடுப்பார்கள். தங்களை நியாயப்படுத்திக்கொள்வதற்கான வாதங்களை முன்வைப்பார்கள். ஆனால், இப்போது அப்படி எதுவும் நடக்கவில்லை. முதல்வரையும் ஒரு சில அமைச்சர்களையும் தவிரக் கட்சியோ, கட்சியின் ஆதரவாளர்களோ பொது வெளியில் இது குறித்துப் பேசுவதில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுகவினரைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது.

ஆனால், தமிழக ஆளுங்கட்சிக்கு எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு வருகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மக்கள் கட்சி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அவற்றின் ஆதரவாளர்களும் ‘நடுநிலை’ அறிவுஜீவிகளும் காவல் துறையின் நடவடிக்கைகளை ஆவேசமாக ஆதரித்துப் பேசுகிறார்கள். முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையின் செயல்பாடுகளை அவரே வெட்கப்படக்கூடிய அளவுக்கு இவர்கள் ஆதரிக்கிறார்கள்.

தமிழக ஆளுங்கட்சிக்குப் பின்னால் இருந்து இயக்கும் சக்தி எது என்பதற்கான இன்னுமொரு சான்று என்று இதைக் கடந்துவிட முடியாது. தமிழக அரசோடு நேரடியாகச் சம்பந்தப்படாத ஆளுநர் விவகாரத்தின்போதும் இவர்கள் இப்படித்தான் களமிறங்கினார்கள். ஆளுநரே மன்னிப்புக் கேட்டுவிட்ட ஒரு விவகாரத்திலும் இவர்கள் ஆளுநருக்கு ஆதரவாகப் பேசியதுடன், ஆளுநரைக் கேள்வி எழுப்பியவர்களைத் தரங்கெட்ட முறையில் விமர்சித்தார்கள்.

தமிழகத்திலிருந்து 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிமாநிலங்களில் நீட் தேர்வை எழுத வேண்டிய நிலை வந்தபோதும் இவர்கள் சிபிஎஸ்இ அமைப்புக்கு வக்காலத்து வாங்கினார்கள். வைரமுத்து - ஆண்டாள் சர்ச்சையில் அறிவார்த்தமான முறையில் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இவர்கள் இடையில் புகுந்து தங்கள் இழிமொழியால் குட்டையைக் குழப்பி விவாதத்தைக் கொன்று புதைத்தார்கள். மாட்டிறைச்சி உண்டதாகக் கூறிச் சிலர் கொல்லப்பட்டபோதும் இவர்கள் கொல்லப்பட்ட உயிர்களுக்காக அனுதாபம் தெரிவிக்கவில்லை. பசுப் பாதுகாப்பின் மேன்மை பற்றி மட்டுமே பேசினார்கள்.

இவர்களுக்கு ஏன் இந்த வேலை?

இந்துத்துவ ஆதரவாளர்களும் ‘நடுநிலை’ அறிவுஜீவிகளும் ஏன் இப்படி எல்லாவற்றுக்கும் அழைக்காமலேயே வந்து நிற்கிறார்கள்? பத்மாவதி பட சர்ச்சை, உத்தரப் பிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் பலர் இறந்தது, கத்துவா பாலியல் வன்முறை, உனா பாலியல் வன்முறை ஆகிய விவகாரங்களில் அவர்கள் ஆஜரானதன் காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அனைத்திலுமே இந்துத்துவ அமைப்புகள் அல்லது ஆட்சிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழக ஆளுநரையும் தமிழகக் காவல் துறையையும் வலிந்து வந்து நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இவர்களுக்கு என்ன வந்தது?

அரசு அதிகாரம், காவல் துறை, ராணுவம், இந்து மதம் ஆகியவற்றின் பிரதிநிதிகளாக இவர்கள் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அரசு, காவல் துறை முதலானவை மக்களுக்காகவே இருக்கின்றன என்னும் அடிப்படையான அம்சத்தை இவர்கள் தலைகீழாக மாற்றுகிறார்கள். இந்த அமைப்புகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்களுக்கோ, அவர்களுடைய பிரச்சினைகள், உணர்வுகள் ஆகியவற்றுக்கோ இவர்கள் கொடுப்பதில்லை. மையம், மைய நீரோட்டம், அரசு, அதிகாரம், அந்த அதிகாரத்தைச் செலுத்தும் அமைப்புகள் ஆகியவையே இவர்களுக்கு முக்கியம். இவர்களைப் பொறுத்தவரை அமைப்புகளுக்காகத்தான் மக்கள்; மக்களுக்காக அமைப்புகள் அல்ல. அமைப்புகளே, அதிலும் அதிகாரம் சார்ந்த அமைப்புகளே பாதுகாக்கப்பட வேண்டியவை. மக்கள் அந்த அமைப்புகளால் கையாளப்பட வேண்டிய இரண்டாம் நிலையிலான இருப்பு.

தூத்துக்குடியில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறக்கிறார்கள். காஷ்மீரில் சுடப்பட்ட குண்டுகளால் மக்களுக்குக் கண் பார்வை பறிபோகிறது. காஷ்மீரில் ஒரு சிறுமி பலரால் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டாள். மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கருதப்படும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதையெல்லாம் கேட்கும்போது யாருக்கும் இயல்பாக உடனடியாகப் பதைப்பும் கவலையும் ஏற்படும். ஆனால், இந்துத்துவ இயக்க ஆதரவாளர்களும் ‘நடுநிலை’ அறிவுஜீவிகளும் உடனடியாக அமைப்புக்கான நியாயங்களைப் பேசத் தொடங்குவார்கள். “தூத்துக்குடியில் பல உயிர்கள் பலியானது துரதிருஷ்டவசமானதுதான், ஆனால்…” என்று நீட்டி முழக்குவார்கள். கிறிஸ்தவ அமைப்புகள் கலவரத்தைத் தூண்டிவிட்டன என்பார்கள். இடதுசாரி இயக்கங்கள், பிரிவினைவாத அமைப்புகள் கலவரத்தைத் தூண்டிவிட்டார்கள் என்பார்கள். போராட்டக் குழுவினருக்குள் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்பார்கள்.

சமூக விரோதிகளாகவே இருந்தாலும் அவர்களை மார்பைப் பார்த்துக் குறிவைத்துச் சுடும் உரிமையை இவர்கள் போற்றிக் கொண்டாடும் சட்டம் கொடுக்கவில்லை என்பதை வசதியாக மறந்துவிடுவார்கள். சீருடை அணியாத காவலர்கள் சிறிதும் பதற்றமின்றிப் பொறுமையாகக் குறிபார்த்துச் சுடுவதைப் பார்க்கும்போது காவல் துறையினரின் நோக்கமும் போக்கும் தெளிவாகப் புரிகின்றன. ஆனால், இந்தக் காட்சியைப் பார்த்த பிறகும் சமூக விரோதிகள், விஷமிகள் ஊடுருவிட்டார்கள் என்ற பல்லவியையே இவர்கள் பாடிக்கொண்டிருப்பார்கள். 17 வயதுப் பெண்ணை வாயில் சுட்டதற்கும் “கூட்டத்தில் கலந்துவிட்ட விஷமி”களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று யோசிக்க மாட்டார்கள். சுற்றுச்சூழல் சார்ந்த கவலைகளை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள். முழுக்க முழுக்க அரசாங்கமாகவே மாறி அரசாங்கமாகவே சிந்திக்கும் இவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களைவிடவும் அபாயகரமானவர்கள்.

நிலைப்பாடுகளும் நிஜங்களும்



இவர்கள் உண்மைகளைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. நிலைப்பாடுகள்தான் முக்கியம். நிஜங்கள் அல்ல என்பதே இவர்கள் அணுகுமுறை. வேதாந்தா நிறுவனத்திடமிருந்து அதிக நன்கொடை பெற்றது பாஜக என்னும் தகவலை ஒருவர் வெளியிட்டால் இவர்கள் உடனடியாக, “பா.சிதம்பரம்” உள்ளிட்ட பலர் ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றார்கள் என்பதற்கான “தகவலை” போட்டோ ஷாப் உபயத்தில் வெளியிடுவார்கள். அற்பத்தனமான இந்த வேலைகள் இன்றைய தகவல் பெருக்க யுகத்தில் சட்டென்று பல்லிளித்துவிடுவதையும் இவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில், தகவல்களைப் பரிசோதிக்காமல் பலர் இதை நம்புவார்கள், பரப்புவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அப்படி நம்ப விரும்புபவர்கள் அத்தகைய செய்திகளை மூன்று வேளையும் உணவுக்குப் பதிலாக விழுங்கித் திருப்தி அடைவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஜிஎஸ்டிக்கு எதிராக யாரோ எழுதிய வசனத்தை ஒரு நடிகர் பேசியதும் அவர் கிறிஸ்தவர் என்னும் தகவலைப் பேருண்மையாக முன்னிறுத்துவார்கள். வரி கட்டுபவர்கள் அனைவருக்கும் ஜிஎஸ்டிக்கு எதிராகப் பேச உரிமை உண்டு என்னும் எளிய உண்மைகூடத் தங்கள் மூளையை அண்டவிட மாட்டார்கள்.

அறநிலையத் துறை தொடர்பான தகவல்கள், அணைக்கட்டுகள் தொடர்பான தகவல்கள், தூத்துக்குடி துறைமுகம் தொடர்பான தகவல்கள் ஆகிய பல விஷயங்களிலும் ஆர்எஸ்எஸ் - பாஜகவைச் சேர்ந்த எஸ்.குருமூர்த்தி உள்ளிட்டோர் பதிவிடும் “தகவல்”களில் உள்ள பிழைகள் சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்தப்பட்டன. ஆனாலும் அவர்கள் அசருவதில்லை. தொடர்ந்து பொய்ச் செய்திகளையும் பாதி உண்மைகளையும் பரப்பிவருகிறார்கள். அவர்களுடைய ஆதரவாளர்கள் அவற்றை அப்படியே பலருக்கும் அனுப்பி ஜென்ம சாபல்யம் அடைகிறார்கள்.



சுற்றுச்சூழல் பற்றியெல்லாம் இவர்கள் கவலைப்படுவதே இல்லை. வேதாந்தா போன்ற நிறுவனங்கள் உலகின் பல பகுதிகளிலும் எதிர்ப்பைச் சந்தித்துவருகின்றன என்பதும், இவற்றை எதிர்ப்பதை ஒரு குறிப்பிட்ட கட்சியை எதிர்ப்பதாகப் பொருள்கொள்ள முடியாது என்பதையும் இவர்கள் யோசிப்பதே இல்லை. நாளைக்கு அரச அமைப்பு இந்த நிறுவனத்தை மூட முடிவுசெய்தால் அப்போது இவர்கள் சூழலுக்காகப் பரிந்து பேசுவார்கள். அல்லது அந்நிய சதி வென்றுவிட்டது என்பார்கள்.

இவர்களுடைய நிலைப்பாடுகளைத் தீர்மானிப்பவை பிரச்சினைகளோ, அவற்றின் நிஜமாக காரணங்களோ அல்ல. அரசின், அதிகாரத்தின் குரல்தான் முக்கியம். அதிலும் அது பாஜகவால் பிரதிநிதித்துவம் செய்யப்படும்போது அந்த அமைப்பு கடவுளுக்கு நிகரானதாக மாறிவிடுகிறது. இதை எதிர்ப்பது தெய்வ நிந்தனையாகிவிடுகிறது.

காங்கிரஸ் அல்லது வேறு கட்சியின் ஆட்சியில் காவல் துறை வன்முறை நடந்தால் இவர்கள் இப்படியே எதிர்வினை ஆற்ற மாட்டார்கள் என்பது உண்மைதான். அதிலும் அந்த வன்முறை இந்துத்துவ இயக்கங்களுக்கு எதிராக நிகழ்ந்தால் கேட்கவே வேண்டாம். ஆனால், தேசம், அதிகாரம், சட்டத்தின் ஆட்சி, இந்துக்களின் “நலன்”, இந்துக் குறியீடுகள், “அந்நியச் சதி”க்கு எதிரான நடவடிக்கை ஆகிய விஷயங்களை இவர்கள் முழுக்க முழுக்கச் சொந்தம் கொண்டாடுகிறார்கள். தேசிய உணர்வையும் தேசியக் குறியீடுகளையும் ஏகபோக உரிமை கொண்டாடும் வேட்கை இதில் பிரதிபலிக்கிறது.



கரிசனம் அல்ல, பதிலடியே முக்கியம்

முஸ்லிம் சிறுமி ஒருத்தி வன்புணர்வு செய்யப்பட்டார் என்றதும், மூன்று மாதங்களுக்கு முன்பு அல்லது இரு ஆண்டுகளுக்கு முன்பு வன்புணர்வு செய்யப்பட்ட இந்துச் சிறுமியின் நினைவு இவர்களுக்கு வந்துவிடும். அந்தச் சிறுமிக்காக இவர்கள் அப்போது குரல் கொடுத்ததில்லை. இப்போது பாதிக்கப்பட்டது முஸ்லில் சிறுமி என்றதும், உடனடியாக, இந்துச் சிறுமியின் துயரத்தைக் கேடயமாகப் பயன்படுத்துவார்கள். ஸ்வாதி கொலையின்போது அவருடைய சாதியைக் குறிப்பிட்டு நீதி கோரிய இவர்கள், ஆணவக் கொலைகள் நடந்தபோது அதற்குப் பின்னால் இருக்கும் சாதி உணர்வைப் பற்றிப் பேசியதில்லை. காதல் விவகாரங்களால் அன்றாடம் சிதைக்கப்படும் பெண் முகங்களும் உயிர்களும் எந்தச் சாதியைச் சேர்ந்தவை என்று பார்த்ததில்லை.

எத்தகைய வன்முறையையும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நின்று பார்க்கும் பழக்கம் இவர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. அரசு அதிகார அமைப்புகளின் தரப்பிலிருந்து மட்டுமே அனைத்தையும் பார்க்கும் அதிகார மனம் இப்படித்தான் செயல்படும். இந்த மனம்தான் சர்வாதிகாரிகளை உருவாக்குகிறது. இந்த மனம்தான் சர்வாதிகாரத்துக்கான மனநிலையை வளர்க்கிறது. இந்த மனம்தான் சர்வாதிகார அட்டூழியங்களை நியாயப்படுத்துகிறது. நேரடி சர்வாதிகாரத்தைக் காட்டிலும் அபாயகரமானது மக்களிடையே பரவிவரும் இந்த அரச மனம்தான். இத்தகைய மனம் மிகத் தெளிவான மொழியில் பேசுகிறது. நியாயத்தைப் பேசும் பாவனையில் சகல ஊடகங்களிலும் ஊடுருவி இருக்கிறது. பல பொய்த் தகவல்களை நிஜம்போன்ற ஆதாரமாக முன்வைக்கிறது.

இந்த மனம்தான் நமது காலத்தின் மிகத் தீவிரமான அபாயம். ஏனென்றால், இந்த மனம்தான் அதிகாரத்தையும் காவல் துறை முதலான அமைப்புகளையும் கேள்விக்கு அப்பாற்பட்ட சக்திகளாகக் கட்டமைத்து வருகிறது. ‘கேள்விக்கு அப்பாற்பட்ட’ என்னும் பார்வையில்தான் சர்வாதிகாரத்துக்கான சகல வித்துக்களும் சத்துக்களும் புதைந்திருக்கின்றன.
 நன்றி மின்னம்பலம் .


சுட உத்தரவிட்டது ராஜ்நாத் சிங்?

 சுட உத்தரவிட்டது ராஜ்நாத் சிங்?

 டிஜிட்டல் திண்ணை: சுட உத்தரவிட்டது ராஜ்நாத் சிங்?

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பெரும் தலைவலியாக இருக்கிறது தூத்துக்குடி விவகாரம். நேற்று பத்திரிகையாளர்களிடம் முதல்வர் விளக்கம் கொடுத்தாலுமேகூட, அதற்கும் பல விமர்சனங்கள் வந்திருக்கின்றன. அதுவும் குறிப்பாக 10க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு இன்னமும் உரியவர்கள் விடையளிக்கவில்லை.
தூத்துக்குடித் துப்பாக்கிச் சூடு என்பது தமிழகத்தில் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடுகளை எல்லாம்விட வேறுபட்டது. அதாவது மக்கள் போராட்டங்களைக் கலைக்க நடத்தப்படும் துப்பாக்கிச் சூடாக இல்லாமல், செலக்ட் செய்து எலிமினேட் செய்யும் அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரைக் கொலை செய்யும் ராணுவ உத்தியாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு அமைந்திருக்கிறது. அதனால்தான் இதற்கு யார் உத்தரவிட்டார் என்ற கேள்வி அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது.
நேற்று தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துப்பாக்கிச் சூட்டுக்குத் தான் உத்தரவளிக்கவில்லை என்று இலைமறைகாயாகத் தெளிவுபடுத்திவிட்டார். தமிழகத்தின் போலீஸ் துறையை நிர்வகிக்கும் முதலமைச்சருக்கே தெரியாமல் துப்பாக்கிச் சூடு நடத்தித் தமிழக மக்களைக் கொல்ல உத்தரவிட்டது யார் என்று தலைமைச் செயலகத்தில் விசாரித்தபோதுதான், அந்த அதிர்ச்சிகரமான பதில் தெரியவருகிறது.
முதல்வர் அலுவலகத்தில் இப்போது மிகவும் பதற்றமாக இருக்கிறார்கள். தேவையில்லாமல் முதல்வர் மீது பழி போடப்படுகிறது என்று அவர்கள் புலம்புகிறார்கள். அன்று காலை 11 மணியளவில் நிலைமை பதற்றமானதை ஒட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் காவல் துறை மேலிடத்தை அணுக, காவல் துறை மேலிடமோ தலைமைச் செயலாளரை அணுகியிருக்கிறது. அதன் பின் தலைமைச் செயலாளர் டெல்லியைத் தொடர்புகொண்டு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியதாகவும் அதன் பின்னர் உள்துறை அமைச்சக உத்தரவின் பேரிலேயே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடப்பட்டதாகவும் முதல்வர் அலுவலகத்திலுள்ளவர்கள் வருத்தத்தோடு பேசிவருகிறார்கள். ராஜ்நாத் சிங் உத்தரவின் பேரில்தான் துப்பாக்கிச் சூடு நடந்ததென்றும் ஆனால், அதற்குத் தமிழக முதல்வர் பலிகடா ஆக்கப்படுகிறார் என்பதும் அவர்களது வருத்தம்.
தமிழகக் காவல் துறை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர் வழியாக உத்தரவு வருவது ஒன்றும் புதிதல்ல என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். தமிழகத்தில் உள்ள மசூதிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த நிலையில் கடந்த வருடம் ஒவ்வொரு மசூதிக்கும் முஸ்லிம் விவகாரங்களைக் கையாளும் அந்தந்த லோக்கல் உளவுத் துறை அதிகாரிகள் சென்றிருக்கிறார்கள். கூம்பு வடிவ ஒலிபெருக்கியை மாற்றிவிடுமாறும், இது அரசு உத்தரவு என்றும் சொல்லியிருக்கிறார்கள். மசூதிகளில் இருந்து இது தொடர்பாக ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவரிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அந்த தலைவர் உடனடியாக டிஜிபி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, ‘மாநில அரசு இதுபோல ஏதும் உத்தரவு போட்டிருக்கிறதா?’ என்று கேட்டுள்ளார். அப்போது அந்தத் தலைவரிடம் ஆஃப் த ரெக்கார்டாக டிஜிபி அலுவலகத்தில் சொன்ன தகவல், ‘இது மாநில அரசு உத்தரவில்லை. மத்திய அரசின் வாய்மொழியான உத்தரவு’ என்று நட்பு ரீதியில் சொல்லியிருக்கிறார்கள்.
ஆக தமிழக அரசு நிர்வாகத்தைத் தள்ளிவைத்துவிட்டு மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகம், காவல் துறை அதிகாரிகள் என்றுதான் டெல்லியின் உத்தரவுகள் செல்கின்றன. முதல்வர், அமைச்சர் என்ற பதவிகளுக்கெல்லாம் டெல்லி மதிப்பளிப்பதே இல்லை. அதிகாரிகள் மூலமாகதான் அன்றைக்கும் உத்தரவிட்டப்பட்டது. இன்றைக்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கும் அதிகாரிகள் வழியாகவே உத்தரவிடப் பட்டிருக்கிறது என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில்’’ என்ற தகவலுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
இந்தத் தகவலுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை பதில் சிம்பளாக போட்ட ஃபேஸ்புக் தனது ஸ்டேட்டஸை பதிவேற்றியது.
“மிகவும் கவலையில் இருக்கும் எடப்பாடியை நேற்று இரவு அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் வருத்தத்துடன் பேசியிருக்கிறார் எடப்பாடி. 'ஊருக்குள் என்ன பிரச்சினை வந்தாலும் இப்போ என்னைத் திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. மறுபடியும் சசிகலா குடும்பமே வரணும்னு நினைக்கிறாங்களா தெரியல. எந்த இடத்திலாவது யாருகிட்டயாவது நான் முதல்வர் என்று திமிராக நடந்துகிட்டேனா? கவுன்சிலரை பார்க்கிற மாதிரி யாரு வேணும்னாலும் நினைச்ச நேரத்துல பார்த்துட்டுதானே இருக்காங்க. போன வாரத்துல நெல்லையில் இருந்து கட்சிக்காரர் ஒருத்தர் ராத்திரி 11 மணிக்கு வர்றாரு. பார்க்க முடியாதுன்னா சொல்ல முடியும்? பார்த்துதான் அனுப்பினேன். நம்ம அமைச்சர்களும் சரி... எம்.எல்.ஏ.க்களும் சரி வந்து பார்த்துட்டுதான் இருக்காங்க. நான் என்ன தினகரன் மாதிரி திடீர்னு வந்தவனா? கட்சிக்காக உழைச்சுதானே இந்த இடத்துக்கு வந்திருக்கேன். ராஜபக்‌ஷே மாதிரியும், எமன் மாதிரியும் எல்லாம் சிலர் என் படம் போட்டு நோகடிக்கிறாங்க. இந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வரணும். என்ன செய்யலாம் சொல்லுங்க' என்று கேட்டாராம்.
அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், ' எது நடந்தாலும் அரசாங்கத்தை குறை சொல்றவங்க இருக்கத்தான் செய்வாங்க. நம்ம வேலையை நாம பார்த்துட்டே இருப்போம். இன்னும் ஒரு வாரம் அதிகபட்சமாக இதை பேசுவாங்க. அடுத்து வேறு ஒரு பிரச்சினை வந்தால் இதை மறந்துடுவாங்க. நான் உங்ககிட்ட முன்பே சொன்னேன் இல்லையா... ஒரு திட்டம் பற்றி. அதாவது 6ம் வகுப்பில் இருந்து 10 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு டேப் (tab) கொடுப்பது சம்பந்தமாக... அந்த லிஸ்ட் எடுத்துட்டோம். மொத்தமாக 60 லட்சம் பேரு இருக்காங்க. அந்த குழந்தைகளுக்கு இலவசமாக டேப் கொடுக்க போறதாக அறிவிச்சுடலாம். அது மக்கள் மத்தியில் உடனடியாக நமக்கு நல்ல பெயரை உண்டாக்கிடும். தூத்துக்குடியை மறந்துட்டு டேப் பற்றி பேச ஆரம்பிச்சிருவாங்க' என்று செங்கோட்டையன் சொன்னாராம்.
அதற்கு முதல்வர், ' தூத்துக்குடி பிரச்னையை மறக்கிறாங்களோ இல்லையோ டேப் கொடுப்பது நல்ல திட்டம்தான் அதை உடனே யோசிப்போம்...' என்று சொல்லியிருக்கிறார். அதற்கான ஆயத்த வேலைகளில் கல்வித் துறை இறங்கியிருக்கிறது. எந்த நேரத்திலும் அறிவிப்பு வரலாம்! " என்று போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.
நன்றி மின்னபலம் .