ஈனப்பயலே உனக்கு எதுக்குடா
தலைவர் பதவி என்று சொல்லி,
#மேலவளவு முருகேசனின் வலது தோளில் முதல் வெட்டு வெட்டினான். தலையைத் துண்டித்தான். துண்டித்த தலையைக் கையில் எடுத்துக் கொண்டு நடுரோட்டில் ஓடினான் அழகர்சாமி.
மார்க்கண்டன் முருகேசனின் வயிற்றில் குத்தினார். அய்யாவு முருகேசனின் வலது உள்ளங்கையை வெட்டினார். சக்கரமூர்த்தி முருகேசனின் கைகளை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனின் இடது கன்னத்தை வெட்டினான். பாரதிதாசன் முருகேசனின் இடது கையை வெட்டினார். நாகேஷ் முருகேசனின் இடது மணிக்கட்டை வெட்டினார். கதிர்வேல், தங்கமணி, கணேசன், மணி ஆகியோரும் முருகேசனின் வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் வெட்டினார்கள்.
முருகேசனின் தலையில்லா உடல் பேருந்திலிருந்து வெளியே வீசி எறியப்பட்டது. தலை அரை கிலோமீட்டர் கடந்து ஒரு கிணற்றில் வீசப்பட்டது.
#இதுவெல்லாம் மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சொல்லப்பட்ட சாட்சிகள். வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று முதல் குற்றவாளியான ராமர் உள்ளிட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.
தமிழக அரசு தற்போது அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்திருக்கின்றது.
இந்த நாட்டில் தலித் மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பு இல்லையென்று நீதிமன்றங்களும் ஆட்சியாளர்களும் உணர்த்திக் கொண்டேயிருக்கின்றார்கள். நாம் தான் அமைப்பாகாமல் சிதறிக் கொண்டிருக்கின்றோம்.
தலித் அரசியல் தலைமை நாட்டுவோம் நாட்டைத் தலைகீழாய்ப் புரட்டத் தோழமைப் போற்றுவோம்.
தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில்
அமைப்பாய்த் திரள்வோம்.. ✊
