வெள்ளி, 29 நவம்பர், 2019

உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் இசைஞானி இளையராஜா 9 வது இடத்தில் இருக்கிறார்.


உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் இசைஞானி  இளையராஜா 9 வது இடத்தில் இருக்கிறார்.

இது கடந்த ஆண்டுக்கு முன் வந்த தகவல்தான். இந்த தகவலின்படி இருக்கிற உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்களின் பட்டியலை உற்று நோக்குங்கள். இந்த வரிசையில் இசைஞானி  இளையராஜா 9 வது இடத்தில் இருக்கிறார்..

உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் (Music Composers) ஒருவராக, திரைப்படங்களுக்கான உலகளாவிய  இணையதளமான Taste of cinema என்ற இணையம் இளையராஜாவை தேர்வு செய்துள்ளது என்பது ஒரு சிறப்பம்சம்.
அடுத்ததாக இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே என்பது இரண்டாவது சிறப்பம்சம்.

//டேஸ்ட்ஆப் சினிமா என்ற அந்த பிரபல இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த 25 கம்போஸர்கள் பட்டியலால் விருதுகள் மீதான மதிப்பீடு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்பதை கவனியுங்கள்..
இந்த வரிசை பட்டியலை வெளியிட்ட இணையதளத்தில் உள்ளவர்களை ஒத்த மனிதர்கள்தான் ஆஸ்கர் போன்ற விருதுகளுக்கான தேர்வுக்குழுவில் இருப்பவர்களும்..
ஆனால் இது ஏதோ நாமினியில் இருக்கிற ஐந்தாறு படங்களில் ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்து அதுசார்ந்த  கலைஞர்களுக்கு விருது அளிக்கிற கதையே அல்ல. உலகம் முழுதுமுள்ள தற்கால இசையமைப்பாளர்களின் இசைபற்றிய ஆராய்ச்சிகளுக்கு பின்னால் எடுக்கப்பட்ட முடிவு. ஒவ்வொரு இசைக்கலைஞர்கள் பற்றிய சாதனைகள், சுயவிவரங்கள் இங்கே இருக்கின்றன. ஏலியன், பிளானட் ஆப் தி ஏப்ஸ், கிளாடியேட்டர், டைட்டானிக், பிரேவ் ஹார்ட் உள்ளிட்ட பல பிரமாண்ட கம்போசிங்களை அளித்த கம்போசர்களும், மூன்று முறைக்கு மேல் ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை வாங்கிய லார்ட் ஆப்த ரிங் பட கம்போசரும், இசைக்கான உயரிய சீஸர் விருதை மூன்று முறை வென்ற கம்போசரும் இளையராஜாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் இருப்பதை காணும்போது வியப்பு மேலிடுகிறதை. இந்த பட்டியலில் உள்ள 25 பேரை கவனியுங்கள். இளையராஜாவின் மீதான மஞ்சள் ஒளிக்கான காரணம் புரியும்//

25. ஆலன் சில்வெஸ்ட்ரி (ஃபாரஸ்ட் கம்ப், பேக் டு த ஃப்யூச்சர், தி அவெஞ்சர்ஸ் படங்களின் இசையமைப்பாளர்)

24. வாஞ்சலிஸ் (ப்ளேட் ரன்னர், சேரியட்ஸ் ஆப் பையர் போன்ற பிரிட்டிஷ் படங்களின் இசையமைப்பாளர்)

23. ஜேம்ஸ் நியூட்டன் – ஹோவர்ட் (எட்டு முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். தி ப்யூஜிடிவ், மை பெஸ்ட் ப்ரண்ட்ஸ் வெட்டிங், வெர்டிகல் லிமிட், தி சிக்ஸ்த் சென்ஸ் போன்றவை இவர் இசையில் வந்தவை)

22. பிலிப் க்ளாஸ் (இவர் இசையமைத்த மிஷிமா : எ லைப் இன் போர் சேப்டர்ஸ் இன்றும் சிறந்த இசையாகப் போற்றப்படுகிறது. க்வாட்ஸி பட வரிசைகளுக்கு இசையமைத்தவர்)

21.டேனி எல்ப்மேன் (பிரபல ஹாலிவுட் இயக்குநர் டிம் பர்ட்டனுடன் இணைந்து பல வெற்றிப் படங்கள் தந்தவர். குறிப்பாக பேட்மேன் வரிசைப் படங்கள்)

20.தாமஸ் நியூமேன் (ரோட் டு பெர்டிஷன், பைன்டிங் நெமோ போன்ற படங்களுக்கு இசை அமைத்தவர். இவர் தந்தை ஆல்ப்ரெட் நியூமேன், சகோதரர் டேவிட் நியூமேன், உறவினர் ராண்டி நியூமேன் அனைவருமே புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள்)

19.ஹோவர்ட் ஷோர் (லார்ட் ஆப் தி ரிங்க்ஸின் மூன்று பாகங்களுக்கும் இசை தந்தவர். மூன்று ஆஸ்கர்கள் பெற்றவர்)

18.எல்மர் பெர்ன்ஸ்டீன் (தி மேக்னிபிஷியன்ட் செவன், டென் கமான்ட்மெண்ட்ஸ், தி கிரேட் எஸ்கேப் போன்ற படங்கள் இவர் இசையமைத்தவைதான்)

17.டிமிட்ரி டியோம்கின் (ரெட் ரிவர், ஹை நூன், மிஸ்டர் ஸ்மித் கோஸ் டு வாஷிங்டன் போன்ற படங்களின் இசையமைப்பாளர்)

16.ஜார்ஜஸ் டெலெரெ (தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சீஸர் விருது பெற்ற முதல் இசையமைப்பாளர். ஜீன் லாக் கோடர்ட்டின் கண்டெம்ப் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.)

15.ஜேம்ஸ் ஹார்னர் (இவரது டைட்டானிக் பட இசையை யார்தான் மறக்க முடியும். பிரேவ் ஹார்ட்டும் இவர் படம்தான்)

14.ஜோ ஹிசைசி (பிரபல இயக்குநர் தகாஷி கிடனோவின் பெரும்பாலான படங்களுக்கு இசை இவர்தான். வேல்லி ஆப் தி விண்ட் படத்தின் இசையமைப்பாளர்)

13.ஹான்ஸ் ஜிம்மர் (க்ளாடியேட்டர், பைரேட்ஸ் ஆப் தி கர்ரீபியன் போன்ற மெகா படங்களின் இசையமைப்பாளர் ஜிம்மர். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்குக்குப் பிடித்த இசையமைப்பாளர். )

12.ஜான் பேர்ரி (பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜான் பேர்ரி. அவுட் ஆப் ஆப்ரிக்கா படத்துக்காக ஆஸ்கர் பெற்றவர்)

11.மௌரிஸ் ஜார் (லாரன்ஸ் ஆப் அரேபியா, கோஸ்ட், விட்னஸ் போன்ற படங்களுக்கு மறக்க முடியாத இசை தந்தவர்)

10.ஜெர்ரி கோல்ட்ஸ்மித் (ஏலியன்ஸ், ப்ளானட் ஆப் தி ஏப்ஸ், டோட்டல் ரீகால் போன்ற மெகா ஹிட் படங்களின் இசையமைப்பாளர்.)

9.இளையராஜா (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 970 படங்கள், 4500க்கும் மேற்பட்ட பாடல்கள், 28 தனி இசை ஆல்பங்கள், ஏராளமான சர்வதேச மேடை நிகழ்ச்சிகள் நடத்தியவர்… ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய இசைக்குச் சொந்தக்காரர்.. பின்னணி இசையால் படங்களை பேச வைத்தவர். Music Composer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்த இசையமைப்பாளர்!)

8.ஆலன் மென்கின் (6 ஆண்டுகளில் 8 ஆஸ்கர்களை வாங்கியவர். டிஸ்னி நிறுவனப் படங்களில் பணியாற்றியவர். தி லயன் கிங் இவர் இசையமைத்த படம்தான்)

7.மைக்கேல் ரெக்ரான்ட் (க்ளின்ட் ஈஸ்ட்வுட், ராபர்ட் ஆல்ட்மேன் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்களுடன் பணிபுந்தவர். தி தாமஸ் க்ரோனின் அஃபையர்ஸ் படத்தின் இசையமைப்பாளர்.)

6.டோரு டகேமிட்சு (ஜப்பானின் முக்கிய இசையமைப்பாளர். பிரபல இயக்குநர்கள் ஹிரோஷி தெஷிகாரா, நகிஷா ஒஷிமா போன்றவர்களின் படங்களுக்கு இசை தந்தவர்)

5.நினோ ரோட்டா (தி காட்பாதர் படங்களுக்கு இசை தந்தவர்)

4.பெர்னார்ட் ஹர்மான் (சைக்கோ, வெர்டிகோ உள்ளிட்ட ஹிட்ச்காக் படங்களின் இசையமைப்பாளர்)

3.ஜான் வில்லியம்ஸ் (சூப்பர் மேன், ஸ்டார் வார்ஸ், ஈடி, ஜூராஸிக் பார்க் படங்களின் இசையமைப்பாளர்)

2.மேக்ஸ் ஸ்டெய்னர் (காஸாப்ளாங்கா, கான் வித் த விண்ட் படங்களின் இசையமைப்பாளர்)

1.என்னியோ மொர்ரிக்கோன் (கில் பில், இங்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படங்களுக்கு இசையமைத்தவர்)
                          --ராசாங்கம்.

சனி, 23 நவம்பர், 2019

#தென்காசி_மாவட்டமாக_உதயமானது :


#தென்காசி_மாவட்டமாக_உதயமானது :
-------------------------------------
நெல்லையிலிருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உதயமானது தென்காசி.

(வரைபடம்-திருநெல்வேலி மாவட்டம் 1940களில் .Then Tirunelveli district-1940s.)

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் 33வது புதிய  மாவட்டமாக அமைகிறது தென்காசி.

புதிய மாவட்டம் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 2 கோட்டங்கள் மற்றும் 8 தாலுகாக்களை உள்ளடக்கியது.

தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது தென்காசி மாவட்டம்.

தூத்துக்குடி,தென்காசி,நெல்லை என்று மாவட்டங்கள் பிரிந்தாலும் எல்லாமே நெல்லை சீமைதான்!

என் தகப்பா.....
நெல்லையப்பா....
நானுனக்கு
பிள்ளையப்பா....

சரிக்குச்சரி
ஊரினைப்
பிரித்து
தென்காசி
எனும்
பேரினைக்
கொடுத்தாய்...

தற்கால
பெருமை
சொல்லும்
மேம்பாலம்
உனக்கு

கற்கால
பெருமை
சொல்லும்
குற்றாலம்
எனக்கு...

சேட்டைகள்
செய்யும்
நெல்லை
உனக்கு

சேட்டன்கள்
வாழும்
கேரளத்தின்
எல்லை
எனக்கு...

பாரம்பரியமிக்க
பாளையங்கோட்டை
உன்னிடம்

தன்மானமிக்க
தலைவன்கோட்டை
என்னிடம்...

வம்பை
தவிர்க்கும்
அம்பாசமுத்திரமும்
வம்பை
வளர்க்கும்
கோபாலசமுத்திரமும்
உங்களுக்கு...

பண்பை
வளர்க்கும்
பாவூர்சத்திரமும்

அன்பை
பெருக்கும்
பனவடலிசத்திரமும்
எங்களுக்கு...

கைதியை
அடைக்கும்
சென்ட்ரல்
உங்களுக்கு

மனதினை
மயக்கும்
தென்றல்
எங்களுக்கு...

ஆற்றங்கரை
குளியல் உங்களுக்கு
அருவி குளியல்
எங்களுக்கு.

உங்களுக்கு
ராதாபுரம்

எங்களுக்கும்
செங்கலுக்கும்
மாதாபுரம்...

ஆலங்குளத்து
ஆலையின்
அரிசியை
பதிலளிப்பேன்...

மானூரிலிருந்து
லேட்டா
வந்தாலும்
பிரானூர்
புரோட்டாவை
பரிசளிப்பேன்...

பழவூரின்
பசுமோரை
பாவூரின்
பசுங்கீரைக்கு
பகிர்ந்தளிப்பேன்...

மணிமுத்தாரை
வைத்துக்கொண்டு
அடவிநயினாரை
எனக்களித்தாய்...

கட்ட
பொம்மனையும்
பாரதியையும்
பங்காளிக்கு
வழங்கிவிட்டு

வாஞ்சி
நாதனையும்
பூலித்தேவனையும்
தென்காசிக்கென
முழங்கிவிட்டாய்...

கடல்
இல்லையென
கவலை
கொண்டோம்

பாதி
உடலையும்
காசி
விஸ்வநாதன்
திடலையும்
தந்து
திகைக்க
வைத்தாய்...

ஒன்றின்மேல்
ஒன்றமர்ந்தாலும்
குன்றின்மேல்
குடியிருக்கும்
எங்கள்
திருமலைக்
குமரனுக்கு
ஈடில்லையென
குதூகலித்தோம்...

மங்கையான
சங்கை
அதிவிரைவில்
தங்கையாக
உதயமாக
எங்கள்
பங்கை
செலுத்திடுவோம்

திருவேங்கடத்து
மக்களின்
தாங்கொணாத்
துயரைத்தை
துடைத்திடுவோம்...

நெல்லையின்
கெத்து
இல்லையெனும்
சொல்லை
உடைத்திடுவோம்...

அப்பனே
நெல்லையப்பா
அல்வாவாலும்

நீ பேர்பெற்றாய்.....
பிரிவு வருத்தான்....

திருநெல்வேலியிலிருந்து பிரிந்ததென்காசி மாவட்ட வரைபடம்.
தென்காசியை தலைநகராகக்கொண்டு ஆண்ட பாண்டியர்களின் நினைவுக்கு வருகிறது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-11-2019


புதன், 20 நவம்பர், 2019

மாவட்ட பிரிவினைக்குப்பிறகு ஒரு திருநெல்வேலிக்காரனின் மனநிலை...

மாவட்ட பிரிவினைக்குப்பிறகு ஒரு திருநெல்வேலிக்காரனின் மனநிலை...

வீட்ல துருதுருனு வயசுக்கு வந்த ஒரு பொண்ணு இருந்து, அத கட்டிக்கொடுத்து புகுந்த வீட்டுக்கு அனுப்பி வச்ச பிறகு ஒரு வெறுமை, சோகம், மகிழ்ச்சி, அயர்ச்சி எல்லாம் கலந்த ஒரு உணர்வு வருமே! அப்படியொரு உணர்வில்தான் திருநெல்வேலி மாவட்ட மக்கள் அனைவருமே இருக்கிறோம்.

ஆம்! தென்காசி எங்கள் நெல்லை மண்ணின் மகள்! மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் பல பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ளதால் அவள் பெண்! அவளை தமிழ்நாட்டுக்கு இன்னொரு மாவட்டமாக கட்டிக்கொடுத்து தனியாக வாழ வழியனுப்பி வைத்துவிட்டோம்.

சும்மா அனுப்பல... நாடே வியக்குமளவு சீதனம் கொடுத்து அனுப்பியிருக்கிறோம். குற்றால அருவிகள், தாமிரபரணியின் கிளை ஆறுகளான சிற்றாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி ஆகிய நான்கு கிளை ஆறுகள், அதன்மேல் கடனா, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு ஆகிய ஐந்து அழகான அணைகள் என்று இயற்கை எழில்கொஞ்சும் பல பகுதிகள் அவள் பெற்ற சீதனம்! இது தவிர, எங்கள் வற்றாத ஜீவநதி தாமிரபரணியின் பாபநாசம் அணையிலிருந்து ஒரு பங்கு குடிநீர் வழக்கம்போல தினமும் அவளுக்கு செல்லும்.

இவளல்லாது எங்கள் நெல்லை மண்ணிற்கு ஒரு மூத்த மகனும் இருக்கிறான். அவன் பெயர் தூத்துக்குடி! தொழில் வளம் மிக்க மாவட்டமென்பதால் அவன் ஆண்மகன்! தொழில் வளத்தில் நெல்லையை பின்னுக்குத்தள்ளி தோளுக்கு மேல வளர்ந்துட்டு வர்றான்.

பொறுப்பாக சம்பாதிக்கும் ஒரு மகன், ஒரு அழகான மகள்! இதுதான் எங்கள் நெல்லை குடும்பம். மகளை நல்லபடியாக கட்டிக்கொடுத்த பின் பெற்றோர் என்னமாதிரியான மனநிலையில் இருப்பார்களோ அதே உணர்வுதான் இப்போது இரண்டு மாவட்ட பிரிவினை கண்ட திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கும்.

நெல்லையின் மகள் தென்காசி தமிழகத்தின் புதிய மாவட்டமாக உதயமாகியிருக்கிறாள். எங்கள் திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் இதுவரை மற்ற மாவட்ட மக்கள் எப்படி ஆதரவு அளித்து வந்தீர்களோ அதுபோலவே நெல்லையின் மகள் தென்காசிக்கும் ஆதரவளியுங்கள். அவள் மென்மேலும் வளர தாய் திருநெல்வேலி மக்களின் வாழ்த்துகள்!

பதிவை எழுதும்போதே கண்கள் குளமாகிறது! 

திங்கள், 18 நவம்பர், 2019

சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19.


 சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19.

ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவுபடுத்தும் நாளாகவும் அமைகிறது. சரி ஆண்களுக்கென்ன.. பேண்ட், சார்ட் போட்ட ராஜாக்கள். அவர்களால் தான் அடுத்தவங்களுக்கு பாதிப்பு... அவங்களுக்கெல்லாம் ஒரு தினமா..? அப்படி என்ன சாதனை பண்ணாங்க என கேட்பவரா நீங்கள்.. ஒரு நிமிடம் கீழே உள்ளதை படியுங்கள்.


ஒரு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் போதும். ‘அட சிங்கக்குட்டி பொறந்துட்டானா..? இனி குடும்பத்தை காப்பாத்திடுவான்’ என வர்றவங்க.. போறவங்க சொல்விட்டு போவாங்க. குழந்தை பால்குடியை கூட மறந்திருக்காது. அட இவன் வளர்ந்ததும் நமக்கு சம்பாதிச்சு போட்டுருவான்ல என பெற்றோர்கள் கனவு காண்பார்கள். வளரும் ஆண் குழந்தையிடம், எப்போது சம்பாதிச்சு அம்மாவுக்கு வளையல் வாங்கித் தருவான் என விளையாட்டாக கேட்க ஆரம்பித்துவிடுவோம். அந்த நேரத்தில் குழந்தைக்கு 7 வயதை தாண்டியிருக்காது. இப்படி ஆண் குழந்தைகள் வளரும்போது, அவர்கள் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டிய குழந்தை பருவத்திலேயே அவர்களுக்குள் ஒரு நெருக்கடியை உண்டாக்கி விடுகிறோம்.

பையன் தானே..? அவனுக்கு என்ன பிரச்னை வரப்போகுது.. எங்கேயாவது சுத்திட்டு வீட்டுக்கு வந்துருவான் என 10 வயது சிறுவனை அசால்டாக கையாள்கிறோம். அவன் மனக் குமுறல்களை காது கொடுத்து கேட்பதில்லை. சிறுமிகளுக்கு எப்படி பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்படுகிறதோ..? அதேபோன்று ஆண் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுக்கும் கயவர்கள் இருக்கிறார்கள். சிறுவர்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகளை அவ்வளவு எளிதில் வெளியில் சொல்லிவிட மாட்டார்கள். அவர்களை கனிவுடன் பெற்றோர்கள் அணுகினால் உண்மை வெளிவரும்.


படிச்சாச்சு.. வேலைக்கும் போயாச்சு.. ஒரு காதல் தோல்வி வருகிறது என்றால் நிச்சயம் ஆணின் கண்கள் கலங்கும். அப்போது அருகில் இருப்பவர்கள் சொல்வார்கள். ‘என்னடா இவ்வளவு பெரிய மீசை வச்சிருக்கே. கண் கலங்கிட்டு’ அப்படின்னு சொல்வார்கள் அந்த இளைஞரும் அழுகையை மறைத்து சந்தோஷமாக இருப்பது போன்று காட்டிக் கொள்வான். உண்மையில் ஒரு இறுக்கமான மனநிலைக்கு தள்ளப்படுவான். மனதில் நினைப்பதை வெளியில் சொல்ல முடியாமல் தினம் தினம் புழுங்குது எல்லாம் மரண வலி.


திருமணம் ஆன ஆண்களுக்கோ ஒருமாதம் சம்பளம் வரவில்லையென்றால், பிரசர் தலைக்கு ஏறிவிடும். கையும் ஓடாது. காலும் ஓடாது. அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையேயான சின்ன சின்ன சச்சரவுகளில், அம்மா பக்கம் சேர்ந்துக் கொண்டால் ‘அப்படியே நீ போய்டு’ என மனைவி சொல்வாள். அதே மனைவி பக்கம் சென்றால், இவ்வளவு நாள் வளர்த்தது எல்லாம் வீணாப் போச்சே என அம்மா அழுவாள். என்னதான் சொல்வது என தினம் தினம் தவிக்கும் கணவர்கள் ஏராளம். இப்படி தங்களுக்கு நிகழும் பிரச்னைகளிலிருந்து இந்த வாழ்க்கையே வேண்டாம் என முடித்துக் கொள்ளும் இளைஞர்கள் பலரும் இருக்கிறார்கள்.

பெண்கள் தீபங்களாக ஜொலிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணமாக இருக்கும் எண்ணெய்யும், திரியும் ஆண்கள்தான். ஒட்டுமொத்த ஆண்கள் சமூதாயத்தை குற்றவாளி போன்று சிலர் எண்ணுகிறார்கள். அது தவறானது. பெற்றோருக்கு நல்ல மகனாகவும், தன் மனைவிக்கு நம்பிக்கையானவனாகவும், குழந்தைக்கு நல்ல அப்பாவாகவும், சொந்த பிரச்னைகளை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் ஒவ்வொரு ஆணும் இங்கு போற்றப்பட வேண்டியவர்கள். ஒவ்வொரு குடும்பத்தையும் தனது விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் தூக்கி நிறுத்த நினைக்கும், அதனை நடத்திக் கொண்டிருக்கும் அத்தனை ஆண்களுக்கும் ஆண்கள் தின நல்வாழ்த்துகள்..!
நன்றி புதியதலைமுறை.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

சனி, 16 நவம்பர், 2019

பண்டைய காலத்தில் கோயில் கட்ட அரண்மனை வீடுகட்ட நிலம் தேர்ந்தெடுக்கும் முறை


#கட்டிக்கலை

பண்டைய காலத்தில் கோயில் கட்ட அரண்மனை வீடுகட்ட நிலம் தேர்ந்தெடுக்கும் முறை

#மனைஆய்வு
#மண்ஆய்வு

வாழ்வதற்கும் வழிபாட்டிற்கும் என தேர்ந்தெடுக்கப்படும் இடங்கள் அதாவது மனைகள் நீண்டகாலம் நிலைத் திருக்கவேண்டியவையாகும்

எனவே நல்ல மனையைத் தேர்ந்
தெடுப்பது மிகவும் முக்கியமானதாகும் மனையிடத்தின் அமைப்பு, நிலத்தின் உறுதி சூழ்நிலை, மனைநோக்கு இவைகளை ஆராய்ந்த பின்னரே நல்லதொரு மனையைத் தேர்ந்தெடுத்தனர் அன்றைய கால சிற்ப வல்லுனர்கள்

மண்ணின் ஓசையால், மணத்தால், உணர்ச்சியால், வளத் தால், சுவையால், அமைப்பால்
மற்றும் நிறத்தால் சிறந்த மனையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்

மண்ணின் மணம், சுவை
மற்றும் நிறம் இவைகள் கட்டடத்திற்கேற்ற நல்ல மண், தீயமண்ணைக்  கண்டு கணிக்
இயலும் என்பதனை இலக்கியங்களும் உணர்த்துகின்றன

நாற்றமும் சுவையு மதுரமுமாய்'

என்று கூறுவதை சிலம்பில் காண்கிறோம்.

நீங்காத மதுரமும் பரிமளமும் பொருந்திய
பூமியில் சகல சாதிகளும் வீடு கட்ட உத்தமம் என்ற அடிகளும்

தயிரொடு நெய் தேன்
எண்ணெய் தாக்கிய உதிரத்தோடு, மயிர் பல சிறுமீன் பட்சி மற்றும் மோர் பொல்ல
நாற்றம் பயிரொடு பலமும் காணார் பாழ்படும் மனை எடுக்கில்
என்ற அடிகளும்

இன்னின்ன இயல்புடைய பூமி ஏற்புடையது, இன்ன நாற்றமுடைய நிலம் ஏற்புடையதல்ல
என த் தெளிவாக்குகின் றன

மேலும் நிலத்தை வன் பால், மென்பால், இடைப்பால் என. மண்ணின் இயல்பால்
மூன்று வகைப்படுத்தலாம்.

 வன்பாலாவது ஒரு சதுர அடியில் ஒரு குழி தோண்டி அதனை த்
தோண்டப்பெற்ற மண்ணினால் நிரப்பும் போது குழியின் மண் மிகுவது, மென்பாலாவது

குறைவது; இடைப்பாலாவது சரிசமமாக இருப்பது என்று கூறலாம்
கட்டட அடிப்படைக்குச் சிறந்த நிலமாகக் கொள்ளப்பட்டது
வன்பால்' நிலமே

அளந் ததோர் குழியின் மண்ணை அகழ்ந்து அதன் மேலேயிட்டால்
வளர்ந்திடிற் செல்வ முண்டாம் ஒத்திடில் மிகுதி யில்லை
குளந்தனில் குறையு மாகிற் குறைந்திடும் சம்பத்து அன்றே
உளந்தனில் கருதி நல்லோர் உரைத்தனர் புவியின் மாதே.

மேலும் அங்கு இவ்வாறு எடுக்கும் குழியில் அந்திப்பொழுதில் நீர் நிறைந்து விடியலில் நீரின் அளவு கண்டு பயன்களும் கூறப்படுகின்றது தண்ணீர் இருந்தாலும் சேராய் இருந்தாலும்  சுபம்
என்பதனை

நிறைய நீர் இட்டு வைத்து நீள்கதிர் எழுந்த போது

மூறைமையாய் வந்து பார்த் தால் முப்பிடி நீரே நன்றாம்

தரையினில் வற்றியக்கால் தாழ்வு ற பிக்கும் ஆகில்

சிறையொடு நோயாம் என்று தரித்தவர் உரைத்த வாறே

என் ற பாடல் விளக்குகின்றது  இதனையும் நல்ல நிலத்தேர்ச்சிக்கு இலக்கணமாகக்கொள்ளலாம் இங்ஙனம் பல்வேறு ஆய்வுகளைச் செய்து தல்லதொரு மனையை த் தேர்த்
தெடுத்தனர் என்பதுத் தெளிவாகின்றது.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

நீங்கா வலி தரும் நெல்லைப் பிரிவினை


நீங்கா வலி தரும் நெல்லைப் பிரிவினை
November 15, 2019

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமான நம் நெல்லை பிரிக்கப்பட்டுவிட்டது.

 இதுநாள் வரை நெல்லையின் பெருமிதங்களாக நாம் கொண்டாடி வந்த பல அம்சங்கள் நம்மைவிட்டு போயிருக்கின்றன.

கேரள எல்லை இனி நெல்லையிடம் இல்லை:

கேரள மாநிலத்தோடு சாலை வழி எல்லையை பகிர்ந்து கொள்ளும் வெகு சில மாவட்டங்களுள் ஒன்றாக நம் நெல்லை இருந்துவந்தது.

தென்காசியின் பிரிவால் இனி எல்லை நம்மிடம் இருக்கப்போவதில்லை.

பார்டர் புரோட்டா கடையும் தென்காசி மாவட்டத்துக்காரரின் கடையாகி விட்டது!

வீரபூமியின் பெயர் மாறிவிட்டது:

கட்டபொம்மனையும் பாரதியையும் தூத்துக்குடி எடுத்துக் கொண்டது போல வாஞ்சிநாதனையும்,பூலித்தேவனையும் தென்காசி எடுத்துக் கொண்டுவிட்டது.

குற்றாலம் இனி அண்டை மாவட்ட சுற்றுலாத் தலம்:

"நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டுகிறது" என்று இனி எந்தப் பத்திரிகையும், செய்திச் சொல்லப்போவதில்லை

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கும் தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கும் இயக்கப்படும் ரெயிலாக மாறிவிட்டது.

திருமங்கலம் - செங்கோட்டை நான்கு வழிச்சாலை பிரச்னை இனிமேல் தென்காசி மாவட்டத்தின் பிரச்னை.

நகரங்களை இழந்த நெல்லை:

பழைய நெல்லை மாவட்டத்தில் நம் நெல்லைக்கு அடுத்து பெரிய நகரங்களாக இருந்த சங்கரன்கோவிலும், கடையநல்லூரும் தென்காசியோடு இணைந்துள்ளது இழப்பு தான் நமக்கு.

பிற நகரங்களான புளியங்குடியும் செங்கோட்டையும் அங்கு தான் போயிருக்கிறது.

தமிழ்நாட்டிலேயே அதிகமாக மேற்கு தொடர்ச்சி மலை படர்ந்திருக்கும் மாவட்டம் என்ற பெயரும் நம்மிடமிருந்து போயிருக்கிறது.

நெல்லைக்கே அல்வா:

சொக்கம்பட்டி அங்கு இணைந்துவிட்டதால் திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த மாவட்டமாக தென்காசி மாறியிருக்கிறது.

வரமாட்டேன் என அழுது அடம்பிடித்த ஆலங்குளத்தையும் சங்கரன்கோவிலையும் தனது அதிகாரத்தால் தென்காசியோடு சேர்த்து வைத்துள்ளது அரசாங்கம்.

நிகழ்கால அரசியல் ஆளுமை வைகோ இனி தென்காசி மாவட்டத்துக்காரர் என்று அழைக்கப்படுவார். அமைச்சர் தொகுதியான சங்கரன்கோவிலை நாம் இழந்துவிட்டதால் அமைச்சர்களில்லாத மாவட்டமாக மாறி நிற்கிறோம்.!

இருந்தாலும் பரவாயில்லை..

பிரிவின் வலி தான் கொடியது.
இது பிரிவல்ல பிரசவம்..!

நம் நெல்லைக்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்கிறது.

ஆம்,
அதன் பெயர் தென்காசி.!

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வெள்ளி, 15 நவம்பர், 2019

உலக பொறுமை தினம் நவம்பர் 16.



உலக பொறுமை தினம் நவம்பர் 16.

பொறுமை தரும் வெற்றி

பொறுமை என்பது வெற்றியைப் பெற்றுத்தரும் முக்கியமான குணம் ஆகும். ஒருவருக்கு எல்லாத் திறமைகளும் இருந்து பொறுமை இல்லாவிட்டால் அவர் வெற்றி பெறுவது கடினம்.

நம்முடைய எல்லா முயற்சிகளுக்கும் உடனே பலன் கிடைத்து விடுவதில்லை. பலன் கிடைக்கும் வரைக் காத்திருப்பதே பொறுமை ஆகும்.

நாம் விதையை விதைத்த உடனே நமக்குப் பழங்கள் கிடைத்து விடுவதில்லை. விதை முளைத்து மரமாகிப் பூத்துக் குலுங்கிப் பின்தான் பழங்கள் தருகின்றன.

ஒரு விதை மரமாகிப் பயன் கொடுக்கப் பல மாதங்கள் ஆகலாம். ஏன் பல வருடங்கள் கூட ஆகலாம். அதற்கு காத்திருப்பவனுக்குத்தான் கனிகள் கிடைக்கும்.

நம்முடைய இலக்கு நோக்கிய பயணத்தில் முதல் அடியை எடுத்து வைத்தும் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகக் கூடாது. பொறுமையுடன் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்க்கைப் பயணம் என்பது 100 கி.மீ வேகத்தில் செல்லும் நெடுஞ்சாலைப் பயணமாக மட்டும் இருக்காது.
சில சமயங்களில் மேடுபள்ளங்கள் நிறைந்த 10 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்லக் கூடிய பாதையாகவும் இருக்கலாம்.

நமது வாகனம் 100 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியதாக இருக்கலாம். நாமும் திறமையான வாகன ஓட்டியாக இருக்கலாம். ஆனாலும் பாதை நம்மை 10 கி.மீ வேகத்தைவிடக் கூட்டமுடியாமல் செய்து விடும். அப்போது நமக்குத் தேவை பொறுமை.

இந்தப் பாதையை நாம் மெதுவாகதான் கடந்தாக வேண்டும் என்ற பொறுமையும், சற்றுத் தூரத்தில் இந்தப் பாதை நெடுஞ்சாலையுடன் சேர்ந்துவிடும் என்ற புரிதலும்தான் நம்மை வெற்றியாளராக மாற்றும்.

பாதை கடினமானதாக இருக்கின்றது என்று பயணத்தில் இருந்து விலகுபவர்கள் இலக்கை அடைய முடியாது.

நிறையப் பேருக்குத் தம்முடைய முயற்சியைக் கைவிடும்போது வெற்றி இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பது தெரியாமல் போய்விடுகின்றது.

பொறுமை இல்லாத காரணத்தால் நிறையப்பேர் இலக்கிற்கு மிக அருகில் வந்ததும் இலக்கை அடையாமல் போகிறோம்.

ஓட்டப்பந்தயத்தில் இலக்கிற்கு அருகில் இருக்கும்போதுதான் நமக்கு மிகவும் களைப்பாகவும், வலிப்பதுமாகவும் நமது ஓட்டம் இருக்கும். நம் மனதை இலக்கின்மீது வைக்க வேண்டும். வலியின் மீதுஅல்ல.

வாழ்க்கைப் பயணம் என்பது நேர்கோட்டுப் பாதையில் செல்லும் பயணம் அல்ல. அது நிறைய திருப்பங்கள் நிறைந்த பயணம்.

நாம் நீண்ட தூரம் பயணம் செய்து களைப்படைந்து இருக்கலாம். கூடவே நமது வெற்றி மிகஅருகில் அடுத்த திருப்பத்தில் காத்திருக்கலாம்.

எனவே பொறுமையுடன் பயணம் செய்வோம் வெற்றியை அடைந்தே தீருவோம்.

நம்முடைய முயற்சியில் மட்டுமல்ல பிறருடன் பழகும்போதும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

நமது குடும்பம், நண்பர்கள் மற்றும் உடன் வேலை பார்ப்போர் என அனைவரிடமும் அவர்களது சிறுசிறு குறைகளைப் பொருட்படுத்தாமல் அவைகளைப் பொறுத்துக் கொண்டால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

ஐந்து விரல்களில் ஒன்றுகூட மற்றொன்றைப் போல் இருப்பதில்லை. மனிதர்களும் அப்படித்தான் ஒவ்வொருவரும் ஒருவிதம். இதைப்புரிந்து கொண்டு பொறுமையுடன் ஒவ்வொருவரையும் அணுகினால் அனைவரும் நம் வெற்றிக்குத் துணை புரிவார்கள்.

நம் மனதில் அமைதி, நம் செயல்களின் விளைவுகளைப் பொறுமையுடன் கண்காணித்தல், மற்றவர்களுடன் நிதானமாகப் பழகுதல் ஆகியவை நம்மிடமிருந்தால் வெற்றி நிச்சயம் நம்மைத் தேடி ஓடிவரும்.
நன்றி இனிது.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை நடுங்கவைத்த `பூமியின் தந்தை!’ - பிர்சா முண்டா பிறந்த தினப் பகிர்வு



பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை நடுங்கவைத்த `பூமியின் தந்தை!’ - பிர்சா முண்டா பிறந்த தினப் பகிர்வு

November 15, 2019 at 9:09 PM

பிர்சா முண்டா, தற்போது அதிகமானோரால் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பெயர். காரணம், அவரைப் பற்றி இயக்குநர் பா.இரஞ்சித் திரைப்படம் இயக்கவுள்ளதாக அறிவித்ததுதான். தன் இன மக்களின் சமூக/பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் சுதந்திரப் போராட்டத்துக்காகவும் மிகத் தீவிரமாகப் போராடிய பிர்சா முண்டாவைப் பற்றித் திரைப்படம் வரப்போகிறது என்பதற்காக மட்டுமல்ல, இன்று அவரது பிறந்த நாள் என்பதற்காகவும் அவர் யார் என்று தெரிந்துகொள்வோம்...

`சுதந்திரப் போராட்டம்' என்றவுடன், பிரிட்டிஷாருக்கு எதிரான பெரிய, நீண்ட போராட்டத்தைத்தான் நினைத்துக்கொள்கிறோம். பல்வேறு கலாசாரப் பின்னணிகளைச் சேர்ந்த இந்தியர்கள் அனைவரையும் ஒரே தளத்தில் இணைத்தது இந்தப் போராட்டம்தான் என்பதால்கூட இருக்கலாம். சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக, தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமும் இதுதான். 

சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் அது சென்ற திசை பற்றியும் விமர்சனம் வைத்தவர்கள்கூட, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம் என்பதை மிகப்பெரிய வெற்றியாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், `சமூக/பொருளாதாரச் சுரண்டலிலிருந்து எப்போது விடுதலை?' என, சுதந்திரப் போராட்ட காலத்திலேயே உறக்கக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் முக்கியமானவர்கள் பெரியார், அம்பேத்கர் போன்றோர்.

சுதந்திரப் போராட்டத்தின் மூலம் பகத்சிங்கும் காந்தியும் பிரபலமாவதற்கு முன்னரே பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை நடுங்கவைத்தவர் பிர்சா முண்டா. சோட்டா நாக்பூர் பீடபூமியில் உள்ள காடுகளிலிருந்து (இப்போது ஜார்க்கண்ட் மாநிலம்) வந்த பழங்குடிப் போராளி பிர்சா முண்டா. பார்லிமென்ட்டில் இருக்கும் ஒரே ஒரு பழங்குடி ஆளுமையின் ஓவியம் இவருடையதுதான்.

நவம்பர் 15, 1875 குந்தி மாவட்டம் உல்லிஹட்டூவில் பிறந்தவர். கொஞ்சகாலம் மிஷனரிப் பள்ளியில் படித்தார். தனது ஆசிரியர் ஜெய்பால் நாகின் வார்த்தைகளைக் கேட்டு கிறிஸ்துவ மதத்துக்கு மாறினார். அதனால், ஜெர்மன் மிஷன் பள்ளியில் படித்தார். அந்தப் படிப்புதான், பின்னாளில் அவர் வாழ்வில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தது.

மதம் என்பதன் மீதான அவரது புரிதலை கிறிஸ்துவ மதமாற்றம் வடிவமைத்தது. பிரிட்டிஷ் காலனியாதிக்கம் பற்றிய விழிப்புஉணர்வும், பழங்குடியினரைக் கிறிஸ்துவர்களாக மாற்றும் முயற்சிகள் பற்றிய அறிவும் கைகொடுக்க, `பிர்ஸைத்' என்கிற நம்பிக்கையைத் தோற்றுவித்தார். முண்டா மற்றும் ஒரோன் பழங்குடியினரும் அந்த நம்பிக்கையில் இணைந்துகொண்டனர். இது பிரிட்டிஷாரின் மதமாற்ற முயற்சிகளுக்குப் பெரிய சவாலாக அமைந்தது.

மேற்கு சிங்க்பம் மாவட்டத்தின் சைபாஸா நகரில் (ஜார்க்கண்ட்) ஐந்தாண்டுகள் இருந்தார். அப்போது சர்தார்களின் கலவரத்தின் மூலம் பிரிட்டிஷார்கள் எப்படியெல்லாம் பழங்குடியினரை அடக்கியாள்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டார். அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்படும் மிஷனரிகளும் இதற்குக் கருவிகளாக இருக்கின்றன என்பதையும் உணர்ந்தார். அது அவரது மனதில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இதனால் 1890-ல் ஜெர்மன் மிஷன் பள்ளியைவிட்டு வெளியேறினார் பிர்சா. கிறிஸ்தவ மதத்தையும் கைவிட்டுவிட்டு தனது பழங்குடியின மத நம்பிக்கைக்கு மாறினார். இதே நேரத்தில் சைபாஸாவைவிட்டும் வெளியேறிய அவர், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக முழு நேரமாகப் போராடினார். விளைபொருள்களுக்கும் நிலத்துக்கும் தீவிர வரிகளை வசூலிப்பதன்மூலம் சந்தாள் மற்றும் முண்டா பழங்குடியினரையும் பிரிட்டிஷ் அரசு சுரண்டுகிறது என்பதைக் கண்டு கொதிப்படைந்தார்.

இதற்கெல்லாம் உள்ளூர் ஜமீன்தார்களே உடந்தையாக இருந்தார்கள் என்பதும், அதற்குக் கூலியாக அதிக அளவில் பழங்குடி நிலங்களையும் வளைத்துக்கொண்டார்கள் என்பதும், ஒருசிலருக்கெல்லாம் 150 கிராமங்கள் வரை சொந்தமாகின என்பதும், நிலத்தை முதலில் வைத்திருந்த பழங்குடியினரையே கூலிக்கு வேலைக்கும் வைத்துக்கொண்டார்கள் என்பதும் அவரது கோபத்தை மேலும் மேலும் அதிகமாக்கியது. 

இந்த எல்லாச் சுரண்டல்களையும் எதிர்க்கவும் பழங்குடியினரைக் காக்கவும் `உல்குலான்’ என்ற ஒரு போராட்டத்தைத் தொடங்கினார். ஆதிவாசிகளின் நில உரிமைகளை அழுத்திச் சொல்வதாக இந்தப் போராட்டம் அமைந்தது. அவர்களே நிலத்தின் முழு உரிமையாளர்கள் என்பதை இது வலியுறுத்தியது. பிரிட்டிஷார்கள், ஜமீன்தார்கள் ஆகியவர்களை வெளியேற்றுவதும் இதன் நோக்கமாக அமைந்திருந்தது. கொரில்லா முறையில் போரிட்டு பல பிரிட்டிஷ் அரசாங்கப் போலீஸார்களைக் கொன்றனர். 1894 அக்டோபரில் ஜமீன்தார்கள் வசூலித்த காட்டுவரியை ரத்துசெய்ய பிர்சா போராட்டம் நடத்தினார். காடுகளின் பொருள்கள் ஆதிவாசிகளுக்கே சொந்தமானது என்று வலியுறுத்தினார்.

போராட்டத்தின் அவசியத்தை உணர்ந்துகொண்ட ஒரான், முண்டா, கரியா போன்ற பழங்குடியினர் அனைவரும் இவருடன் இணைந்துகொண்டனர். அவர்களிடம் ஜமீன்தார்கள், பிரிட்டிஷ் அரசாங்கம் ஆகியோரின் சுரண்டலை எதிர்க்குமாறு பிர்சா வலியுறுத்தினார். இதற்காக ஹசாரிபாக் சென்ட்ரல் ஜெயிலில் இரண்டு வருடம் சிறைவைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியில் வந்து இன்னும் தீவிரமாகப் போராடினார்.

ஆகஸ்ட் 1897-ம் ஆண்டில் குந்திக் காவல்நிலையைத்தை, வில்-அம்புகளால் தாக்கினார் பிர்சா. அவரோடு 400 பேர் இணைந்து தாக்குதல் நடத்தினர். 1898-ம் ஆண்டில் தனகா நதியின் கரையில் முண்டாக்களுக்கும் பிரிட்டிஷார்களுக்கும் நடந்த தாக்குதலில் பிரிட்டிஷாரைத் தோற்கடித்தார். இதனால், பிரிட்டிஷ் அரசு பல பழங்குடி ஆண்களையும் பெண்களையும் கைதுசெய்தது.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மட்டுமல்லாமல், தன் இனக் குழுவிலேயே இருந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடினார் பிர்சா. மூடநம்பிக்கை, பலி, குடிப்பழக்கம் என, தன் பழங்குடி மக்களிடையே இருந்த பழக்கங்களை எதிர்த்தார். அதேநேரத்தில் தங்களின் மதநம்பிக்கைகளையும் கலாசாரங்களையும் மறக்கக் கூடாது என வலியுறுத்தினார். நிலம் மீதான உரிமையையும் அதை அழுத்திக் கேட்கவேண்டிய அவசியத்தையும் உணர்த்தினார். இவரை, `பூமியின் தந்தை' என்று பழங்குடியின மக்கள் அழைத்தனர்.

இவரது போராட்டங்களை, பிரிட்டிஷார் மிகவும் கொடூரமாக எதிர்கொண்டனர். சுரண்டலையும் பிரிவினைவாதத்தையும் மேலும் மேலும் அதிகரித்தனர். 1900-ம் ஆண்டில் தும்பாரி மலைகளில் தங்கியிருந்த பிர்சா ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி நூற்றுக்கணக்கானோரைக் கொலைசெய்தனர். அந்த நிகழ்வு நடைபெற்ற சில மாதத்துக்குள்ளேயே சக்ரதர்பூர் அருகே இருக்கும் ஜம்கோபாய் காட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது பிரிட்டிஷார் இவரை வளைத்துப் பிடித்து கைதுசெய்தனர்.

கேட்கவே முடியாத பல சித்ரவதைகளை அனுபவித்த பிறகு, ஜூன் 9, 1900-ம் ஆண்டில் பிர்சா உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 25! இவரது மரணத்துக்கு, காலரா நோயே காரணம் எனச் சொல்லப்பட்டது. இவர் இறந்து எட்டு வருடத்துக்குப் பிறகு, ஆதிவாசி நிலங்களை பிறர் வாங்குவதைக் குறைக்க, சோட்டா நாக்பூர் சட்டம் இயற்றப்பட்டது.

இவர் விட்டுச்சென்ற வரலாற்றைச் சொல்லி முடிப்பது கடினம். ஜார்க்கண்டில் கிட்டத்தட்ட எல்லாக் கல்வி நிறுவனங்களுக்கும் இவர் பெயர்தான் சூட்டப்பட்டிருக்கும். அதுமட்டுமல்ல, ஏர்போர்ட், ஸ்டேடியம், ஏன் மத்திய சிறைக்குக்கூட இவர் பெயர்தான்!

இவர் பிறந்த உலிகட்டூ கிராமம் ஒரு புனிதத்தலமாக மாறியிருக்கிறது. பீகாரிலிருந்து ஜார்க்கண்ட் பிரி(ற)ந்த தினமும் நவம்பர் 15-தான்.

பிரிட்டிஷாரை மட்டுமல்ல, தன் மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், அவர்கள் சமூக/பொருளாதார நிலையில் சமத்துவம் பெற வேண்டும் என்பதற்காகவும் போராடியவர் பிர்சா. ஆனால், இன்றும் சுரண்டலுக்கும் அடிப்படை வாழ்வாதாரத்துக்கும் பழங்குடி மக்கள் போராடவேண்டிய சூழலே இருக்கிறது. பிர்சாவை மட்டுமல்ல, அவர் எதற்கு எதிராகப் போராடினாரோ அதையும் நாம் தெரிந்துகொண்டு செயல்படவேண்டியது அவசியம்.
நன்றி விகடன்.
Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .
*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வியாழன், 14 நவம்பர், 2019

தமிழ்நாடு மெட்ராஸ் IIT-இல் தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவி பாத்திமா - "என் தற்கொலைக்கு சென்னை IIT இணை பேராசிரியர் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் காரணம்"


தமிழ்நாடு மெட்ராஸ் IIT-இல் தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவி பாத்திமா -
"என் தற்கொலைக்கு சென்னை IIT இணை பேராசிரியர் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் காரணம்"

*Justice for Fathima*

ஐஐடி மெட்ராஸில் இஸ்லாமிய வெறுப்பினால் நிறுவன படுகொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீஃப் தாயார் ஊடகங்களிடம் பேசிய மலையாள பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு.

"எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு (சால்) அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.

முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதரணமாக கும்பல் படுகொலை (Mob Lynching) நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.

ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண்ணை குறித்து பேராசிரியரிடத்தில் எனது மகள் விவாவதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. நவீன கால பிள்ளைகளைப் போன்று நண்பர்களோடு ஊர் சுற்றுவது போன்ற எந்த செயலிலும் எனது மகள் பங்கெடுத்தது இல்லை. படிப்பில் நல்ல ஆர்வத்தோடு இருந்தவள்.  வேண்டுமெனில் ஐஐடி வளாகத்தில் விசாரித்து கொள்ளலாம். எனது மகளுக்கு தெரிந்த விடயமெல்லாம் வகுப்பறை, விடுதி, நூலகம், மற்றும் உணவகம் மட்டும்தான். இதைத்தவிர வேறெங்கும் அவள் சென்றதில்லை.

பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி யில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடெனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.
சுதர்சன் பத்மனாபன்தான் எனது மகளை இல்லாமல் ஆக்கியது. முதலமைச்சரை சந்தித்தோம். இனியொரு ஃபாத்திமா சாகமாட்டாள் அதற்கான எல்லா நடவடிக்கைகளும் தாங்கள் எடுப்பதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.

அடுத்த செமஸ்டருக்கு படிப்பதற்கான புத்தகங்களை இப்பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்து எனக்கு தகவல் தந்தாள். மூன்றாவது செமஸ்டரில் இருக்கும் இருக்கும் பொருளாதார கணிதம் கொஞ்சம் கடினமானது எனவே நான் இப்பொழுதிருந்தே டியூசன் செல்ல வேண்டுமென திட்டமிடும் ஒரு பெண் பிள்ளை இப்படி சாவதற்கு விருப்பபடுமா..?

சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18 வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெங்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள்  தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என்று தெரியவில்லையே.?  அவளா இப்படி செய்து கொண்டாள்..?

ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு தொல்லைகள் தரப்படுகின்றன. கடந்து வருடம் 5 நபர்கள் தொல்லை தாங்காமல் விலகி சென்றுவிட்டனர். நாங்கள் உயர் நீதிமன்றமானாலும், உச்சநீதிமன்றமானாலும் சென்று என் மகளுக்கு நீதியை பெற்றே தீருவோம். இல்லையேல் நாங்கள் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை.

இனியொரு ஃபாத்திமாவை நாங்கள் இழக்க தயாரில்லை..

Need Justice for Fathima.

#நேருஜி_அவர்களின்_பிறந்த_தினம் #குழந்தைகள்_தினம்_நவம்பர் 14,


#நேருஜி_அவர்களின்_பிறந்த_தினம்
#குழந்தைகள்_தினம்_நவம்பர் 14,

கல்வியை மீட்டெடுத்த நேரு

இந்தியாவைச் செதுக்கிய சிற்பிகளில் நேரு முதன்மையானவர். தன்னலமற்ற தலைவர். கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஆளுமை. எத்தனையோ முக்கியத் தலைவர்கள் விடுதலைக்காகப் போராடியபோதும், நேரு என்ற ஒருவர் இல்லையென்றால் இந்தியாவின் சுதந்திரம் சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்திருக்கும்.

ஏனென்றால், காந்தி என்ற குழந்தைத்தனம் மிகுந்த முரட்டுக் கொள்கைவாதியைச் சமாளித்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற பெரும் தலைவர் நேரு. காந்தியின் உண்மையான சீடர். காந்தியின் நம்பிக்கைக்கு நூறு சதவீதம் பாத்திரமானவர். சொல்லப்போனால், ஈருடல் ஓர் உயிராக வாழ்ந்தவர்கள் அவர்கள்.

தேசத்தின் விருப்பத் தேர்வு
குழந்தைகளின் மாமா என்பதாலோ ரோஜாப்பூவின் காதலர் என்பதாலோ மென்மையானவர் என்று நேருவை நினைக்க வேண்டாம். இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலால் வியந்து போற்றப்பட்ட உறுதிக்குச் சொந்தக்காரர் நேரு. இந்தியாவின் முதல் பிரதமராக சர்தார் படேலை காங்கிரஸ் கட்சியிலிருந்த சிலர் முன்மொழிந்தபோது, “நீங்கள் வேண்டுமானால் என்னைப் பிரதமராக்க விரும்பலாம். ஆனால், நான் உட்பட இந்தத் தேசத்து மக்களின் ஒரே விருப்பத்தேர்வு நேரு மட்டுமே” என்று படேல் மறுத்தது அதற்குச் சான்று.

நேரு எப்போதும் ஒரு ஜனநாயகவாதியாகவே இருந்தார். இன்றைய முற்போக்குவாதிகளால் கனவிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு முற்போக்குச் சிந்தனைகளை நேரு கொண்டிருந்தார்.
சிந்தனைக் களமான சிறைச்சாலை
அளப்பரிய அறிவும் தெளிவான சிந்தனையும் மரபின் வழி அவருக்கு வந்த கொடைகள். தொலைநோக்குப் பார்வையும் நவீனமும் நாகரிகமும் இறுதிவரை அவரை விட்டு அகலாமல் பயணித்தன. பலமுறை சிறை சென்றுள்ளார். ஆனால், ஒருமுறை கூட அவர் மன்னிப்புக் கடிதம் கொடுக்கவில்லை.

சிறையைக் கண்டு நேரு அஞ்சவில்லை. தன்னையும் தனது நாட்டையும் வடிவமைக்கும் களமாகச் சிறையை அவர் மாற்றினார். சிறையில் இருந்த காலத்தில் அதிகம் படித்தார். தனது சிந்தனைகளைத் தொகுத்து எழுத்தாக்கினார். சுதந்திரப் போராட்டத்துக்கான தேவைக்கும் நாட்டின் வளர்ச்சிக்கான தேவைக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவை வார்த்தெடுத்து வழிநடத்துவதே தனக்கு முன்னிருக்கும் சவால் என்பதை நேரு தெளிவாக உணர்ந்திருந்தார். கல்லாமையும் அறியாமையும் நாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகள் என அவர் உணர்ந்திருந்தார். அவற்றைத் தரமான கல்வியால் மட்டுமே களைய முடியுமென நம்பினார்.

காந்திய, மார்க்ஸியச் சிந்தனைகள்
கல்வியைக் குறித்த நேருவின் பார்வையில் பாயும் ஒளியாக காந்தியச் சிந்தனைகளும் கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களும் இணைந்திருந்தன. நேருவைப் பொறுத்தவரை கல்வியறிவு என்பது பகுத்தறிவாலும் அனுபவ அறிவாலும் நேர்மறை எண்ணங்களாலும் வரையறுக்கப்பட்ட ஒன்று. மதங்களிலிருந்து கல்வியைப் பிரித்தெடுத்து, குருகுலங்களிலிருந்து கல்வியை விடுவித்து, கல்வியை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றியதில் நேருவுக்குக் கணிசமான பங்குண்டு.

பகுத்தறிவாளரான நேருவுக்கு மதத்தைவிட விஞ்ஞானத்தில்தான் அதிக நம்பிக்கை இருந்தது. தனது அறிவாலும் அனுபவத்தாலும் தர்க்கத்தாலும் அறிந்தவற்றை மட்டுமே உண்மையென எடுத்துவைத்தார். காந்தியைப் போன்று கொள்கையை வலிந்து திணிக்காமல், தனது கொள்கையை மக்களின் கொள்கையாக வெகு இயல்பாக நேருவால் மாற்ற முடிந்ததற்கு, நேருவின் இந்தப் பண்பே காரணம்.

மதங்களால் பரப்பப்படும் மூடநம்பிக்கைகளையும் அந்த மதங்களின் மீதான மக்களின் கண்மூடித்தனமான விசுவாசத்தையும் தீவிரமாக எதிர்த்தார். பகுத்தறிவை அடிப்படையாகக்கொண்ட ஒரு விஞ்ஞானப் பார்வையை, உயர்ந்த தரத்திலான கல்வியை அளிப்பதன் மூலம் நேரு மக்களிடம் ஏற்படுத்தினார்.
அதனால்தான் ‘மதச்சார்பின்மையை வலியுறுத்திய நேரு ஒரு மதத்தலைவராக இருக்கவில்லை, ஆன்மிகத்தில் ஆழமான நம்பிக்கையுள்ள ஒரு மனிதராக இருந்தார்’ என டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறினார்.

உயர்கல்விக்குச் செறிவூட்டிய நேரு
ஐந்தாண்டுத் திட்டங்களைப் போன்று, நம் நாட்டின் வளர்ச்சிக்கு, மாணவர்களின் உயர்கல்விக்கு அவர் முன்னெடுத்த திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி), இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்), ஆல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்) ஆகியவை நேருவால் உருவாக்கப்பட்டவையே. 1950-ல் மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூரில் முதல் ஐ.ஐ.டியைத் தோற்றுவித்தார்.

அதன் பிறகு, 1958-ல் சோவியத் யூனியனின் உதவியுடன் மும்பையில் ஐ.ஐ.டியை நிறுவினார். கான்பூர் ஐ.ஐ.டியை 1959-ல் அமெரிக்காவின் உதவியுடன் நிறுவினார். இன்று உலகின் பல உன்னதப் பல்கலைக்கழகங்களுக்குத் தரத்திலும் கல்விச் செறிவிலும் இவை சவால்விடுகின்றன.

இதன் மாணவர்கள் இன்று உலகெங்கும் இருக்கும் பல பெரு நிறுவனங்களிலும் நாஸா போன்ற சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களிலும் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக நிரம்பியிருக்கிறார்கள்.

இந்தியாவின் அடையாளம்
செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் நேரு, பிறக்கும்போதே வளங்களால் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தார். உலகின் உன்னதக் கல்வி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

காந்திகூட படித்துப் பட்டம் பெற்ற பிறகு, வேலைக்காகத் தென்னாப்பிரிக்கா சென்றார். ஒருவேளை தென்னாப்பிரிக்க ரயில் பயணத்தில் காந்திக்கு அந்த அவமானம் நேர்ந்திராவிட்டால், காந்தி தென்னாப்பிரிக்காவிலேயே நிம்மதியாக இருந்திருக்கக்கூடும். ஆனால், நேரு அப்படியில்லை. கேம்பிரிட்ஜில் படித்துப் பட்டம் பெற்ற பின்னும், லண்டனில் இருக்க இயலாமல், நாட்டுக்குச் சேவையாற்ற ஓடிவந்தார்.

தன் சொத்துகளை விற்றும் இழந்தும் இங்கே போராடினார். நம் நாட்டின் மனிதவளம் கல்வியில் தேர்ச்சி பெற்றால், உலகின் முன்னணி நாடாக இந்தியா மாறிவிடும் எனத் தீர்க்கமாக நம்பினார். அவரது தொலைநோக்குப் பார்வையால் விளைந்த பயன்களின் மேல் ஏறி நின்றுகொண்டுதான் சிலர் நேருவை இகழ்கின்றனர். நேருவை இகழ்வது இந்தியாவையே இகழ்வது போன்றது. ஏனென்றால், சுதந்திர இந்தியாவின் முதன்மை அடையாளம் நேருதான்..

செவ்வாய், 12 நவம்பர், 2019

தலித் அரசியல் தலைமை நாட்டுவோம் நாட்டைத் தலைகீழாய்ப் புரட்டத் தோழமைப் போற்றுவோம்


ஈனப்பயலே உனக்கு எதுக்குடா
தலைவர் பதவி என்று சொல்லி,

#மேலவளவு முருகேசனின் வலது தோளில் முதல் வெட்டு வெட்டினான். தலையைத் துண்டித்தான். துண்டித்த தலையைக் கையில் எடுத்துக் கொண்டு நடுரோட்டில் ஓடினான் அழகர்சாமி.

மார்க்கண்டன் முருகேசனின் வயிற்றில் குத்தினார். அய்யாவு முருகேசனின் வலது உள்ளங்கையை வெட்டினார். சக்கரமூர்த்தி முருகேசனின் கைகளை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனின் இடது கன்னத்தை வெட்டினான். பாரதிதாசன் முருகேசனின் இடது கையை வெட்டினார். நாகேஷ் முருகேசனின் இடது மணிக்கட்டை வெட்டினார். கதிர்வேல், தங்கமணி, கணேசன், மணி ஆகியோரும் முருகேசனின் வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் வெட்டினார்கள்.

முருகேசனின் தலையில்லா உடல் பேருந்திலிருந்து வெளியே வீசி எறியப்பட்டது. தலை அரை கிலோமீட்டர் கடந்து ஒரு கிணற்றில் வீசப்பட்டது.

#இதுவெல்லாம் மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சொல்லப்பட்ட சாட்சிகள். வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று முதல் குற்றவாளியான ராமர் உள்ளிட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

தமிழக அரசு தற்போது அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்திருக்கின்றது.

இந்த நாட்டில் தலித் மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பு இல்லையென்று நீதிமன்றங்களும் ஆட்சியாளர்களும் உணர்த்திக் கொண்டேயிருக்கின்றார்கள். நாம் தான் அமைப்பாகாமல் சிதறிக் கொண்டிருக்கின்றோம்.

தலித் அரசியல் தலைமை நாட்டுவோம் நாட்டைத் தலைகீழாய்ப் புரட்டத் தோழமைப் போற்றுவோம்.

தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில்
அமைப்பாய்த் திரள்வோம்.. ✊

ஞாயிறு, 10 நவம்பர், 2019

இந்தக் கேள்விகளை திடீர் தமிழ் வேடம் போட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் கேட்க வேண்டும்.



*    வாழும் மொழியான தமிழை கருவறைக்கு வெளியே நிறுத்தி விட்டு செத்த மொழி சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வது ஏன்? கருவறைக்குள் தமிழை எப்போது அனுமதிப்பீர்கள்?
 *   திருக்குறளை சொந்தம் கொண்டாடும் பாசிஸ்டுகளே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவரின் வாக்கிற்கு எதிராக சாதியை தூக்கிப் பிடிக்கும் மனுசாஸ்திரத்தையும் பகவத் கீதையையும் கொளுத்துவோம் வருகிறீர்களா?
 *   கீழடியில் இல்லாத, திருக்குறளில் இல்லாத மதமான இந்து மதத்தை கைவிடத் தயாரா ஆர்.எஸ்.எஸ் அம்பிகளே?
  *  சங்க இலக்கியங்களிலும் பண்டைய தமிழகத்திலும் இல்லாத சாதியை கைவிடத் தயாரா? நாமெல்லாம் தமிழர்கள் தானே, சேரித் தமிழனிடம் திருமண சம்பந்தம் செய்து கொள்ள அக்கிரகாரம் தயாரா?
  *  தமிழ் உலகின் மூத்த மொழி என தேனொழுக பேசுகிறார் உங்கள் பிரதமர், அந்த தமிழை அலுவல் மொழியாக அறிவிக்குமா மத்திய அரசு?
   * உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தமிழை வழக்காடு மொழியாக அறிவிப்பீர்களா பாஜகவின் திடீர் தமிழ் ஆர்வலர்களே?
   * சமஸ்கிருதத்தை விட தமிழ் தான் மூத்த மொழி என்பதை ஏற்றுக் கொண்டு அறிவிப்பீர்களா?
   * தமிழில் எழுத்துருவான தமிழியில் இருந்து தான் சமஸ்கிருதம் பெற்றுப் போட்ட குட்டிகள் எல்லாம் எழுத்துருக்களைப் பெற்றன என ஒப்புக் கொள்வீர்களா?
   * இனிமேல் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் “நமஸ்தே சதா வத்சலே…” எனத் துவங்கும் பிரார்த்தனைப் பாடலுக்கு பதிலாக தமிழ்தாய் வாழ்த்து பாடத் தயாரா?
   * தமிழ் வாழும் தமிழ்நாட்டில் இருக்கும் சங்கர மடம் உள்ளிட்ட மடங்களில் சமஸ்கிருதத்தை தடை செய்ய போராடுவோம் வருகிறீர்களா?

இந்தக் கேள்விகளை திடீர் தமிழ் வேடம் போட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் கேட்க வேண்டும்.                                             

சனி, 9 நவம்பர், 2019

இன்று பிறந்த நாள் யாருக்கு தெரியுமா?..

இன்று பிறந்த நாள் யாருக்கு தெரியுமா?..

அவசியம் இந்த வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும்.

மக்கள் நலனுக்காக சொந்த பணத்திலேயே பாலம் கட்ட உதவிய மனிதர் வாழ்ந்த நாட்டில் இன்று எத்தகைய அரசியல் வாதிகள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது.....
1836-ஆம் ஆண்டு நெல்லை கலெக்டர் ஆர்.ஈடன் எழுதியிருந்த குறிப்பிலிருந்து..

திருநெல்வேலி-பளையங்கோட்டை இரட்டை நகரங்கள். 2 க்கும் இடையில் 800 அடி அகலம் உள்ள தாமிரபரணிஆறு

ஏப்ரல்-மே மாதங்கள் தவிர, ஆண்டுமுழுவதும் வெள்ளம் கரைபுரண்டோடும்.ஆற்றைக் கடந்திடப் படகில்தான் பயணித்திடல் வேண்டும்
படகிற்காகப் பலமணி நேரம் காத்திருத்தல் வேண்டும்

குழுவாகச் செல்வோர் எல்லோரும் ஒன்றாக ஒரே நேரத்தில் சென்றுவிட முடியாது

படகில் இடம் பிடித்திட முதலில் பயணிக்க லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் வாடிக்கையாகிவிட்ட சமாச்சாரங்கள்

சமூகவிரோதிகளின் திருவிளையாடல்களுக்குப் பஞ்சமிருக்காது
களவும்,கலகமும் குழப்பமும் பழகிவிட்ட நடைமுறை

1840-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 10-ஆம் நாள் இரவு: E.P.தாம்சன் ஜில்லா கலெக்டராகப் பொறுப்பேற்று 5 நாட்கள் ஆன நிலை

தாமிரபரணிப் படகுத் துறையில் குழப்பம் கலகம் நாலைந்து கொலைகள் எனவே, கலெக்டர் தூங்காமல் தவித்துக் கொண்டிருந்தார்...
நெல்லை-பாளை நகரங்களுக்கிடையே பாலம் ஒன்றிருந்தால் சிந்தித்துக் கொண்டெ உறங்கியும் போனார்

ஆலோசனைக் கூட்டமும் அரை லட்ச மதிப்பீட்டில் பாலங் கட்டத் தீர்மானமும

கேப்டன் பேபர் W.H. ஹார்ஸ்லி நமது சுலோசன முதலியார் (தாசில்தார்) பதவிக்குச் சமமான சிராஸ்தார் பதவி வகித்ததால் அழைக்கப் பட்டவர்
கலெக்டர் தாம்சன் தலைமையில் கூடினர்.

உடனடியாகப் பாலங்க்கட்டத் தீர்மானிக்கப்பட்டது

கேப்டன் பேபரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது

வரைபடம் தயாரானது.

760 அடி நீளம்,21.5 அடி அகலம், 60 அடி விட்டம் கொண்ட 11 ஆர்ச்சுக்கள் அவற்றைத் தாங்கிட இரட்டைத் தூண்கள்-என அமர்க்களமான வரைபடம் தயாரானது
தூண்கள் ரோமானிய அரண்மனயை நினைவூட்டியது

லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வாட்டர்லூ பாலத்தைப் போன்ற தோற்றப் பொலிவுடன் திகழ்ந்தது...

திட்ட மதிப்பீடு அரை லட்சம் கலெக்டர் உட்பட அனைவரும் மலைத்துப் போயினர்

இன்றைய மதிப்பில் அது பல கோடியைத் தாண்டி விடும்...
ஆனா மகிழ்ச்சியுடன் கலெக்டர் ஒப்புதல் அளிக்கின்றார்...

பணத்திற்கு என்ன செய்வது எங்கே போவது..??

மக்களிடம் வசூல் செய்வது என்று தீர்மானிக்கின்றார்..

அதே சமயம் கலெக்டர் அவரிடம் சிரஸ்தாராக வேலை பார்க்கும் சுலோசன முதலியார் பக்கம் கலெக்டரின் பார்வை செல்கின்றது...
அது சரி யார் இந்த சுலோசன முதலியார்..??

திருமணம் தொண்டை மண்டலத்தில் உள்ள ஓர் சிற்றூர் இங்கிருந்து நெல்லைக்குக் குடியேறியவர்கள் தான் முதலியாரின் மூதாதையர்கள்...

கோடீ்ஸ்வரக் குடும்பம்...

வீட்டில் தங்கக் கட்டிகள் பாளம் பாளமாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்குமாம்...
தங்கம், வெள்ளி நாணயங்க்கள் சாக்கு மூட்டைகளில் கட்டிப் போட்டிருப்பார்களாம்... கௌரவத்திற்காகவே க்லெக்டர் ஆபீஸ் உத்தியோகம்.( இப்பவும் திருட்டு அரசியல்வாதி வீட்டில் இருக்கு ஆனால் அவை அயல்நாட்டு போய்டும்)

குதிரை பூட்டிய கோச் வண்டியில் கலெக்டருக்குச் சமமாக அலுவலகத்திற்கு வருபவர்...
நீளமான அல்பேகா' கருப்புக் கோட்டு ஜரிகைத் தலைப்பா அங்கவஸ்திரம் வைரக் கடுக்கன் ஆகியவ்ற்றோடு அலுவலகத்திற்கு வருவதே கம்பீரமாக இருக்குமாம்...

மக்களிடம் வசூல் வேட்டை அவருக்குத் தர்ம சங்கடமான நிலை...

நடந்தனவற்றை வீட்டில் மனைவியிடம் சொல்கின்றார்...
மனைவி வடிவாம்பாள் கவலைப்படாதீர்கள் தூங்குங்கள் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என ஆறுதல் அளிக்கின்றார்...

தூங்கிய சுலோசன மு்தலியாரின் நினைவலைகளின் சுழற்சி

அப்பாவைப் பற்றிய எண்ணங்களில் மூழ்குகிறார்...
வீர பாண்டிய கட்ட பொம்மன் புகழ் மேஜர் பானர்மெனிடம் மொழி பெயர்ப்பாளராகத் தனது தந்தை வேலை பார்த்தது நினைவுக்கு வருகின்றது...

1799-ஆம் ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்படுவதற்கு முன் கயத்தாறு மாளிகை விசாரணயில் முதல் சாட்சியே இவர் தந்தை இராமலிங்க முதலியார் தான்...
பின்னர், கர்னல் மெக்காலே தனது ஏஜெண்டாக்கித் திருவனந்தபுரத்திற்கு் அப்பாவை அழைத்துக் கொண்டது...

மனைவி வடிவாம்பாள் குடும்பம் வசதி. ஒரே மகன் வேதாத்திரிதாச முதலியார் திருவாங்கூர் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவது.... என்றெல்லாம் நெஞ்ச்சத்திரையில் நிழலாட பல்வேறு நினைவுகளுடன்..
இரவுப் பொழுதைக் கழிக்கின்றார் ஒரு முடிவெடுத்தும் விடுகின்றார்...

அவரது தந்தை மொழிப்பாலமாக (மொழி பெயர்ப்பாளர்) இருந்து சம்பாத்தியம் செய்ததை ஆற்றுப் பாலத்தில் போட முடிவு செய்கின்றார்

கணவனே கண்கண்ட தெய்வமென வாழும் வடிவாம்பாள் மறுக்கவில்லை..
மறுநாள் காலையில் கலெக்டரிடம், பாலங்கட்ட ஆகும் மொத்தச் செலவையும் தாமே ஏறுக் கொள்வதாக வாக்குக் கொடுக்கின்றார்...

சொன்னதுடன் வெள்ளித் தாம்பாளத்தில் தன் மனைவி தந்த தங்க நகைகளையும் கொஞ்சம் பணத்தையும் அச்சாரக் காணிக்கை என்று சொல்லிக் கலெக்டரிடம் கொடுக்கின்றார்...
கலெக்டருக்கோ இன்ப அதிர்ச்சி திக்கு முக்காடிப் போகின்றார்

வெள்ளையன்-கருப்பன் பேதங்கள் காணமற் போகின்றன மரபுகள் உடைகின்றன கலெக்டர், முதலியாரை, அப்படியே ஆவி சேர்த்து ஆலிங்கனம் செய்து பேச வார்த்தையின்றித் தவிக்கின்றார்...
பாலத் திருப்பணிக்குக் தனி மனிதர் தந்த நன்கொடை திருநெல்வேலி மாவட்டத்தையே திகைக்கச் செய்தது வரலாற்று உண்மை...

கலெக்டர் புது உத்வேகத்துடன் செயல்படுகின்றார் பாலமும் கட்டிமுடிக்கப் படுகின்றது...

இன்றும் அது சுலோச்சனா முதலியார் பாலம் என்று தான் அழைக்கப்படுகிறது....
அப்பேர்பட்ட பாலத்துக்குத்தான் இன்றைக்கு பர்த் டே...

திறப்பு விழாவில் சுலோச்சன முதலியார் முன் நடக்க கலெக்டர் உட்பட மற்றவர்கள் பின் நடந்த செய்தியும் உண்டு...

எப்படிப்பட்ட வள்ளல் பெருமக்கள் வாழ்ந்த நாடு இது.

வியாழன், 7 நவம்பர், 2019

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைய விதை போட்டவர் ஏ.கே.செல்லையா Ex M.L.A.


குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைய விதை போட்டவர் ஏ.கே.செல்லையா Ex M.L.A.

ஐயா 
ஏ.கே.#செல்லையா
கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளாவில் இருந்து தமிழகத்தோடு இணைக்க வேண்டி குரல் எழுப்பியதோடு  தனது குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்  பதவியையும் ராஜினமா செய்து

குமரி மாவட்டம் தமிழகத்தோடு
இணைய விதை போட்ட

ஐயா
ஏ.கே.#செல்லையா_சாம்பான் Ex M.L.A
அவர்களின் தமிழ் தேசிய/இன/மொழி உணர்வோடு கூடிய அர்ப்பணிப்பை மறவாதீர்!!

#நவம்பர்_1
#தமிழ்நாடுதினம்