தூத்துக்குடி கலவரம்: விடை தெரியாத கேள்விகள் ???
துாத்துக்குடி: துாத்துக்குடி போராட்டம், கலவரமாக மாறியதும், தொடர்ந்து நடந்த வன்முறைகளும், போலீஸ் துப்பாக்கி சூடும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளன.
*கேள்விகள்:*
⬛ ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் 100வது நாள் என்று கூறிக்கொண்டு, நேற்று துாத்துக்குடியில் இவ்வளவு பெரிய கூட்டம் எப்படி கூடியது என்பது மர்மமாக இருக்கிறது.
⬛ ஆங்கிலத்தில் ‛மாப் பிகேவியர்' என்று கூறுவார்கள். அதாவது, கூட்டமாக சிலர் சேர்ந்து கொண்டால், அவர்களுக்கு திடீர் தைரியம் வந்துவிடும். வன்முறையில் ஈடுபட அஞ்ச மாட்டார்கள். இது தான் துாத்துக்குடியிலும் நடந்துள்ளது. சாதாரணமாக ஆரம்பித்த பேரணியில் இருந்த சிலர், போலீஸ் மீது கற்களை வீசி வன்முறையை துவக்கி வைத்தனர். இவர்கள் யார்?
⬛ கற்கள் வீசப்பட்டதும், போலீசார் தடியடி நடத்தத் துவங்கினர். இதைத் தான் வன்முறையாளர்கள் எதிர்பார்த்தனர். அதுபோலவே, கூட்டத்தில் பலர் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், வன்முறையில் ஈடுபட்டனர். கூட்டத்தில் சிலர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு போலீசாரை தாக்கி உள்ளனர். இவர்கள் யார்?
⬛ அப்பாவி மக்களின் 100 வாகனங்கள் நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டன. போராட்டத்திற்கு எந்த தொடர்பும் இல்லாமல், கடன்பட்டு, கஷ்டப்பட்டு வாங்கிய வாகனங்களை அநியாயத்திற்கு இவர்கள் இழந்துள்ளனர். இவர்கள் பொதுமக்கள் இல்லையா?
⬛ ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் சேவைக்காகத் தானே இவை அமைக்கப்பட்டுள்ளன. இவை மூடப்பட்டால், முடிவில் பாதிக்கப்படுவதும் இதே பொதுமக்கள் தானே?
⬛ வன்முறையின்போது வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது எப்படி?. போராட்டத்திற்கு வரும் போதே பெட்ரோல், தீப்பெட்டி கொண்டு வந்தார்களா? அப்படி என்றால் இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா?
⬛ ஆலை திறக்கப்பட்டது 1998ல். அப்போது திமுக ஆட்சி. இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டவை த.மா.கா. மற்றும் இந்திய கம்யூனிஸ்ட். அந்த தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்டது காங்., அதாவது, முந்தைய தேர்தலுக்கும் அடுத்த தேர்தலுக்கும் இடையே கூட்டணி மாறிவிட்டது காங்.,
⬛ இடைப்பட்ட காலத்தில் புரட்சித்தலைவி அம்மா, கருணாநிதி, ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதல்வராக இருந்து விட்டார்கள். மத்தியில் காங்., பாஜ ஆட்சியில் இருந்தன. இப்படி இருக்கும்போது, போராட்டக்காரர்கள் குறி வைக்க வேண்டியது அக்கட்சிகளைத் தான்.
⬛ போராட்டத்திற்கு எதிராக பலமாக பேசி வரும் வைகோ, இதே அதிமுகவுடனும், திமுகவுடனும் மாறி மாறி கூட்டணி வைத்தார். அப்போது அவருக்கு தெரியாதா ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தது இந்தக் கட்சிகள் தான் என்று. இதுவே திருமாவளவன், அன்புமணி ஆகியோருக்கும் பொருந்தும்.
⬛ ஸ்டெர்லைட் பிரச்னை 25 ஆண்டுகளாக இருக்கிறது. என்னவோ நேற்று முளைத்த பிரச்னை போல பலர் பேசுகின்றனர். இத்தனை ஆண்டுகள் இவர்கள் என்ன செய்தார்கள்.
⬛ அமைதியாக நடந்துவந்த மக்கள் போராட்டத்தை வன்முறையை நோக்கி திருப்பி விட்டது யார் என்று கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்கள் தான் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு உண்மையில் மக்கள் மீது அக்கறை கிடையாது. ஏதாவது பிரச்னையை கிளப்பி அதில் குளிர்காய நினைப்பவர்கள்.
⬛ இன்னும் சிலர், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் என கேட்கிறார்கள். துப்பாக்கி சூட்டுக்கு டிஐஜியோ, எஸ்பியோ, கலெக்டரோ உத்தரவிட்டு இருக்கலாம். அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்பத் தான் இவர்கள் செயல்படுவார்கள். *சூழ்நிலை உத்தரவிட வைத்திருக்கலாமே?*
⬛ ஸ்டரெ்லைட் ஆலை மூடப்படுவது இது முதல்முறை அல்ல. 2013ல், பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவால், பல வாரங்களுக்கு ஆலை மூடப்பட்டு இருந்தது. அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவி அம்மா. மீண்டும் ஆலை திறக்கப்பட்டபோது, பரட்சித்தலைவி அம்மாவிடம் இன்றைய அரசியல் கட்சிகள் ஏன் கேள்வி எழுப்பவில்லை?
⬛ இன்று வெளியான பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை எதிர்பார்த்திருந்த ஒரு மாணவி துப்பாக்கி சூட்டில் பலியானது பரிதாபத்திற்குரியது. இவ்வளவு சின்ன பெண்ணை போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தது யார். இப்போது உயிரே போய்விட்டது. இதற்கு நிதி உதவி அளித்தால் மட்டும் சரியாகிவிடுமா. உயிருக்கு விலை மதிப்பு இருக்கிறதா?
⬛ ஆலை அமைக்கப்பட காரணமான கட்சிகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். அப்படி செய்தால் தான், மக்கள் பிரச்னைகளை வைத்து அரசியல் செய்யும் தலைவர்கள் திருந்துவார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக