சீனாவால் இந்தியாவை ஆக்கிரமிக்க முடியுமா ??முடியாதா ?? வாருங்கள் பார்ப்போம்.
சீனா தனது முப்படைகளை கொண்டு இந்தியாவின் மேல் தாக்குதல் நடத்த முடியுமா ? அவ்வாறு தாக்குதல் நடத்தினால் யாருக்கு வெற்றி கிடைக்கும்.
#சீன_இராணுவம்_தாக்குதல்_நடத்தினால் :
சீனா 2.3 மில்லியன் இராணுவ வீரர்களை கொண்டுள்ளது.இந்தியா 1.3 மில்லியன் இராணுவ வீரர்களை கொண்டுள்ளது.போர்கள் என்று வந்தால் எதிர்த்து தாக்குதல் நடத்தும் வீரர்களே முன்னிலையில் இருப்பர்.அதாவது ஒரு இந்திய வீரர் தன்னை எதிர்த்து தாக்க வரும் மூன்று சீன வீரர்களை சாமாளிக்கும் வல்லமை பெற்றிருக்கிறார் சாதாரண நிலப்பகுதில் சண்டை நடைபெறும்போது இந்த ratio 1:3..போர் மலைப்பகுதியில் நடைபெறும்போது இந்தியாவிற்க்கு கூடுதல் பலம்.நம்முடைய ஒரு வீரர் சீனாவின் 5 வீரர்களை சமாளிக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார் 1:5. இந்திய சீன எல்லைகள் பெரும்பாலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது.மலைப்பகுதிகளில் சண்டையிட சீனாவை விட இந்திய வீரர்களுக்கே அதிகம் பலம் உள்ளது.ஆகையால் தரைப்படையிலும் வெற்றி நமதே.
#சீனா_கடல்_வழியாக_தாக்கினால் :
இந்தியாவிடம் ஏழு முக்கிய மிகப்பெரிய கடற்ப்படை தளங்கள் உள்ளன.மற்றும் பல சிறு கடற்ப்படை தளங்கள் உள்ளன.இவற்றை தாக்க வேண்டுமானால் குறைந்தது 5 கேரியர் போர் குழுக்கள் தேவை.ஆனால் தற்போது சீனாவிடம் ஒரே ஒரு கேரியர் போர் குழுக்கள் தான் செயல்பாட்டில் உள்ளது.சீனா அதிக அளவு நீர்மூழ்கி கப்பல்களை படையில் வைத்திருந்தாலும் இந்தியாவின் ஒவ்வொரு துறைமுகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது இயலாத காரியம்...சீனாவின் வர்த்தகம் 80–90% பெரும்பாலும் இந்திய பெருங்கடல் வழியாகத்தான் நடை பெறுகிறது. சீனாவின் கடற்ப்படை தளத்தை தாக்க வேண்டிய அவசியமில்லை.சீனாவின் வர்த்தக கப்பல்களை நாம் நம் கடற்ப்பகுதியில் தடுத்து நிறுத்தினாலே போதும் சீனாவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடும்.இந்திய பெருங்கடலில் இந்திய கடற்ப்படை போல் வலிமையான கடற்ப்படை இல்லை என்பதே உண்மை.கடற் பரப்பிலும் நமக்கு வெற்றியே.
#சீனா_வான்_வழியாகத்_தாக்கினால் :
இந்த 21-ம் நூற்றாண்டில் விமானங்களின் எண்ணிக்கை என்பது முக்கியமல்ல.அதை இயக்கும் விமானிகளின் அனுபவம் மற்றும் அவர்கள் கையாளும் அதிநவீன தொழில்நுட்பங்களை பொறுத்தே போரின் வெற்றி தோல்வி அமையும். நாம் ஏற்க்கனவே இரண்டு முக்கிய போர்களில் (1965,1971) நாம் நம் விமானப்படையை பயன்படுத்தி வென்றுள்ளோம் மற்றும் நம் விமானப்படை விமானிகள் வருடந்தோறும் உலகிலேயே தலைசிறந்த விமானிகளுடன் போட்டி போட்டு கூட்டுப்பயிற்ச்சியில் ஈடுபட்டு மிகத் திறமைசாலிகளாக உள்ளனர்.ஆனால் சீனாவின் விமானிகளோ அப்படி இல்லை.அவர்கள் வெளி நாட்டு போர் விமானிகளுடன் அவ்வளவாக பயிற்ச்சியில் ஈடுபட்டது இல்லை.நம்மிடம் சுகோய் -30 போர் விமானங்கள் உள்ளன.இவை F-22 போர் விமானத்தை கூட இந்திய எல்லையில் தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றது. (நான் நம் வான் பரப்பை சீனாவிடம் இருந்து பாதுகாப்பது பற்றித்தான் இங்கே கூறியுள்ளேன்,எதிரி நாட்டு எல்லைக்குள் சென்று விமானங்களை தாக்கும் விமானங்களில் su-30 விட அதிநவீன விமானங்கள் உலகில் உள்ளன.இருந்தாலும் நாம் சளைத்தவர்கள் அல்ல). சீனா விமானப்படையின் முதுகெலும்பு J10. ஒற்றை என்ஜின் கொண்டது.பெரும்பான்மை போர் விமானங்கள் 3rd Generation மட்டுமே. காட்சிக்கு மட்டுமே உகந்தது.மேலும் ஒரு நாட்டு எல்லைக்குள் வந்து தாக்கும் அளவுக்கு சீன விமானப்படை வலிமை வாய்ந்தது அல்ல.சீனாவின் கடற்ப்படை விமானமான J-15 ஐ விட இந்தியா வைத்திருக்கும் மிக்-29k மிக வலிமை வாய்ந்தது,சீனாவின் 80 % போர் விமானம் போர் புரிய தகுதி அற்றவை. போர் களத்தில் தாக்கு பிடிக்காது என ஜப்பான் கூறியுள்ளது
இப்படி பார்த்தால் மீண்டும் வான் பரப்பிலும் நமக்கு வெற்றியே.
ஆக சீன பாதுகாப்பு படையோடு இந்திய பாதுகாப்புப்படையை குறைத்து ஒப்பிட்டு பார்காதீர்கள். வெறும் எண்ணிக்கை அல்ல, எண்ணம் தான் பலம்.போரில் வெறும் எண்ணிக்கையை மட்டுமே வைத்து வெற்றி பெற முடியாது. போரை வழிநடத்தும் இந்திய கமாண்டர்கள் எடுக்கும் ராஜ தந்திர முடிவுகளும்,போரில் ஈடுபடும் இந்திய இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வும்,இந்திய மக்கள் நம் இராணுவத்திற்கு பக்கபலமாக நின்று ஆதரவளிக்கும் அளவையும் பொறுத்தே வெற்றி தோல்வி அமையும்.
உலகில் எண்ணிக்கை பொறுத்து போரில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுவதில்லை என்பதற்கு பல வரலாற்று போர்கள் சான்றாக உள்ளன. உதாரணமாக இஸ்ரேல் எதிர்கொண்ட ஆறு நாள்
போரைக் கூட சொல்லலாம்.
1962 ஆம் ஆண்டு நடந்த போரில் சீனா வெற்றி பெற்று இருக்கலாம்.அதற்க்கு காரணம் பல கூறப்பட்டாலும், நம்மிடம் படையை வழிநடத்தும் கம்மண்டர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்ற காரணமும் சொல்லப்படுவதுண்டு.ஆனால் தற்போது அப்படி இல்லை. 1962 நடந்த போரில் சீன-இந்திய படை வீரர்களின் எண்ணிக்கை 8:1 ஆக இருந்தது.அப்படி இருந்தும் நம் வீரர்கள் சீனாவிடம் சரணடை மறுத்து தன் தாய் நாட்டிற்க்காக தனது இறுதி மூச்சு உள்ளவரை போரிட்டு வீரமரணம் அடைந்தனர்.
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் போன்று சரணடைந்ததில்லை. சீனாவுடன் சரணடைந்து மண்டியிடுவதை விட நேருக்கு நேர் போரிட்டு வீரமரணம் அடைந்த அந்த தியாக உள்ளங்களின் தியாகத்தை கொச்சை படுத்துபவர்கள் இந்தியர்களே இல்லை.
1967 இல் மீண்டும் இந்திய சீன இராணுவ வீரர்கள் போரில் எதிரெதிரே சந்தித்த போது கூட நம் வீரர்கள் 300 சீன வீரர்களை கொன்று குவித்தனர்,நம் பக்கம் நாம், பாரதத்தாயின் 75 மகன்களை இழந்தோம். சீன மீடியாவும்,சீன இராணுவமும் இந்தியாவிற்க்கு 1962 ஐ நியாபகப்படுத்தி சுட்டிக்காட்டுகின்றனர்.ஆனால் இங்குள்ள சில மீடியாக்கள் ஏன் 1967 ஐ சீனாவிற்க்கு சுட்டிக்காட்ட மறந்தனர்.ஆனால் இந்திய அரசு இந்தியாவின் தற்போதைய பலத்தை பாருங்கள் என்று சீனாவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்தது.இந்திய பெருங்கடல் வழியாக நம்மை நோட்டமிட வந்த சீனாவின் 13 நீர்மூழ்கி கப்பல்களை நாம் நம்முடைய உளவு செயற்கை கோள்களால் கண்டுபிடித்துள்ளோம்.கண்டுபிடித்து மட்டுமல்லாமல் அவைகளை நம்முடைய உளவு விமானமான P-8i Poseidon மற்றும் சில போர்க்கப்பல்கள் உதவியுடன், சீன நீர் மூழ்கி கப்பல்கள் இந்திய எல்லையில் நுழைகிறதா என்று தொடர்ந்து நோட்டமிட்டன.இவ்வளவு வளர்ந்திருக்கிறோம் நாம் இப்போது.
1967 இல் எங்கள் நாட்டு பிரதமர் இந்திரா காந்தியால் நீங்கள் வாங்கியதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறோம்.வெற்றி நமதே.
மேலே நம் பலத்தை பற்றி சிறிதளவே குறிப்பிட்டுள்ளேன்.இதற்கே சீனா தாங்காது.
இப்படி இந்திய தனி ஒரு ஆளாகவே சீனாவை சமாளிக்கும் வல்லமை பொருந்திய நிலையில், நம் நட்பு நாடுகள் நம் உதவிக்கு வந்தால் சீனாவின் நிலை என்னவாகும் ???
#ஜெய்ஹிந்த்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக