வெள்ளி, 27 மார்ச், 2020

கொரானா நன்மைகள்

கொரானா நன்மைகள் .....
====================
 * சட்டத்தால் கூட மூட முடியாத டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான குடும்ப ஆரோக்கியம் பாதுகாக்கும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

*குடும்பத்தோடு மட்டுமே கூடி உறவாடி, இப்பொழுது நம்முடன் இருப்பவர்கள் மட்டுமே இக்கட்டான நிலையிலும்  நம்முடன் இருப்பவர்கள் என எண்ணும வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

*ஆரோக்கியமான வீட்டு உணவு மட்டுமே உண்ண வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

*தேவையற்ற  செலவுகள் செய்யும் வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்படுத்தி உள்ளது.

*அநியாயமாக தேவைக்கு அதிகமாக சேர்த்த லஞ்சம்/ கறுப்பு பணம் பொன் பொருள் பயன்தராது என எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

*வீட்டு வேலைகளை பெண்களோடு இணைந்து ஆண்களும்  செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

*புத்தகங்கள் படிக்க/எழுத வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

*இக்கட்டான நிலையிலும்  நாம் ஓடிஓடி சேர்த்த நம் கண்முன் (சுற்றும் முற்றி பாருங்கள்)உள்ள எந்த பொருளும் பயனற்றது.
காய்கறி விவசாய பொருட்களை தவிர,
என எண்ண வைத்துள்ளது.

*எந்த இக்கட்டான கடைசி நிலையிலும் விவசாயம் தவிர வேறு எந்த தொழிலும் உயர்ந்ததில்லை என எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

*எந்த கடைசி நிலையிலும் விவசாயமும் விவசாயி மட்டுமே இறையருள் படைத்த அற்புதம்.
விவசாயமே மனிதர்களை கடைசி நிலையிலும் கைவிடாது என எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

*உலகில் நட்பை மறந்து உறவுகளை விட்டு விலகி மறந்து பொருளற்ற ஆடம்பர பொருட்களை சேர்த்தும் அவைகளால் பயனில்லை என்ற எண்ணம் ஏற்படுத்தி உள்ளது.

**சிந்தனையில் நிதானம், தர்மம், மனிதநேயம்,நேர்மை  மறந்து தறிகெட்டு சுயநல வெறிபடித்து  திரிந்த மனிதர்கள் நிதானமாக சிந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.*

*ஜாதியால், மதத்தால், நிறத்தால், பணத்தால், தொழிலால் அதிகாரத்தால் உயர்ந்தவன்/தாழ்ந்தவன் யாரும் இல்லை என மனிதர்கள் எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

*அதர்மங்கள் தலைதூக்கும் போது மீண்டும்  வருவேன்*- என் இறைவான் சொன்ன அற்புத வரிகளை மனிதர்கள் எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

கொரானாவை மன்றாடி கேட்கிறோம்..

*மனிதர்களுக்கு சிந்தனையில் மறுமலர்ச்சி செய்துவிட்டு சென்றுவிடு வந்தவழி நோக்கி.*

*மனிதனின் கெட்ட எண்ணங்களை அழித்துவிடு.  மனிதர்களை அழிக்காதே*

உங்களோடு நிந்தனையில் நானும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக