வெள்ளி, 27 மார்ச், 2020

ஒரு புதுமையான, நம்பிக்கையூட்டும் உலகை நம் குழந்தைகளுக்கு அமைத்து கொடுப்போம்

#அரிய_வாய்ப்பு

வேலை, தொழில் என ஓய்வின்றி உழைத்த நம்மை இன்று வீட்டில் முடங்கியுள்ளது கொரோனா. நம் குழைந்தைகளிடம் நேரம் செலவிட காலம் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சாமாளிக்க முடிவதில்லை என்று புலம்புவதை பார்க்க முடிகிறது. உண்மையில் அவர்களை நாம் சமாளிக்கிறோமா அல்லது புறக்கணிக்கிறோமா? உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்கள் கைப்பேசிகளை சற்று ஒதுக்கிவிட்டு, குழந்தைகளிடம் உரையாடுங்கள், விளையாடுங்கள், நேரம் செலவிடுங்கள். உங்கள் புறக்கணிப்பு அவர்களை தனிமை மனப்பான்மைக்கு இட்டுச்செல்லும்.

உங்கள் குழந்தைக்கு நம்பிக்கை கொடுங்கள். அவர்களின் வயதுக்கு ஏற்றார் போல் விளையாட்டுகளை சொல்லிக் கொடுங்கள். நீங்களும் ஒரு குழந்தையாக மாறிவிடுங்கள்.

ஓவியமோ, சிறு சிறு கட்டுரைகளோ எழுத ஊக்கப்படுத்துங்கள். உங்கள் குடும்ப வரலாறோ அல்லது சமூக வரலாறோ சொல்லிக் கொடுங்கள்.

உங்களை பற்றியோ அல்லது அவர்கள் படிக்கும் பள்ளியை பற்றியோ அல்லது அவர்கள் நண்பர்களை பற்றியோ என்ன நினைக்கிறார்கள் என்று எழுதி கொடுக்கச் சொல்லுங்கள்.

இதனால் அவர்களுக்கு புது நம்பிக்கையை உங்கள் மீது ஏற்படுத்தும். இது அவர்களின் எண்ணங்களை அறிய ஒரு வாய்ப்பாக அமையும். உங்களுக்கும் ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும். இது போன்ற ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்காமல் போகும்.

ஒரு புதுமையான, நம்பிக்கையூட்டும் உலகை நம் குழந்தைகளுக்கு அமைத்து கொடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக