சனி, 18 ஆகஸ்ட், 2018

சுதந்திரதின செங்கோல் சிறப்பு


தேசியமும் தெய்வீகமும்

சுதந்திரதின செங்கோல் சிறப்பு

*1947 ஆகஸ்டு 15 முறைப்படி நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம் தெரியுமா ?*

மௌன்பேட்டன் நேருவை அழைத்து உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கபோகிறோம் அதை எப்படி கொடுப்பது என்று கேட்க நேருவுக்கு குழப்பமாக இருந்தது

 எதை அடையாளமாக வைத்து பெறுவது உடனே மூதறிஞர் ராஜாஜியை அனுகி எனக்கு இந்த நடைமுறைகள் தெறியாது அதனால் தாங்கள் தான் தீர்வுகூற வேண்டும் என்றார்.

 உடனே ராஜாஜி கவலை வேண்டாம் எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது *ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை புதியமன்னருக்கு குடுத்து ஆட்சிமாற்றம் செய்வர்.*

நாமும் அந்நியனின் கையால் சுதந்திரம் பெறுவதை விட குருமகானின் கையால் செங்கோலை பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம் என்றார்.

 நேருவும் நேரம் குறைவாக உள்ளது உடனே ஏற்பாட்டை செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்.

ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு  விசயத்தை சொல்ல அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம்அவர்கள்

உடனே முறையாக செங்கோல் தயாரித்து தங்க முழாம் பூசி
*இளையஆதீனம் தம்பிரான்பண்டார சுவாமிகளிடம்* பொறுப்பை ஒப்டைத்து கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் (தேவாரத்தில் இருந்து கோளறுபதிகம் பதினோரு பாடல்களை குறித்து கொடுத்து இந்த பாடல்களை பாடவேண்டும்.)உடன் அனுப்பிவைத்தார்.

 ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் டில்லி போய் சேர்ந்தனர். அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைதலையில் இருந்து  பாரதத்தின் விடுதலை பெரும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர்

அந்த சுதந்திர வைபவ தினத்தில் *மௌன்பேட்டனிடம் இருந்து செங்கோலை குருமகாசண்ணிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்று*

 செங்கோலுக்கு புனிதநீர் தெளித்து ஓதுவார்மூர்திகள் வேயிறுதோளிபங்கன் என்று துவங்குகிற தேவாரதிருப்பதிகத்தை பாட பதினோராவது பாடலின் கடைசி வரி. " அடியார்கள் வானில் அரசால்வர் ஆணை நமதே."  இந்தவரி பாடி முடிக்கும் போதுதான்

*சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத்தார்.*

அந்த நிகழ்வை தான் நாம் சுதந்திர தினமாக கொணடாடுகிறோம்.

*அது மட்டுமல்ல செங்கோல் வழங்கும் போது ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் இசைத்தார்.*

இந்த நிகழ்வு தமிழுக்கும் தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை

   திருவாவடு துறை ஆதீனமடத்தில் செங்கோல் வைபவ கருப்பு வெள்ளை புகைப்படமாக உள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக