மோடி ஆட்சியில் அம்பானிகளுக்கு கொண்டாட்டம்…!
புதுதில்லி;
மோடி அரசு வந்தபிறகு அம்பானி சகோதரர்களுக்கு தாராளமாக வழங்கிய வெகுமதி
களின் பட்டியலில் கடைசியாக வந்திருப்பது ஜியோ இன்ஸ்டிட் யூட் துவங்குவதற்கு முன்பே வழங்கப்பட்டுள்ள சிறப்புத்தகுதி. அடிப்படை விதிகளை மீறி வங்கி கடன்களை திருப்பி செலு
த்துவதில் சலுகை, ரபேல் விமான ஒப்பந்தத்தில் பங்குதாரர், ஜியோ பேமென்ட்ஸ் வங்கிக்கு வழங்கிய ஒத்துழைப்பு போன்ற வை ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு பாஜக அரசிடமிருந்து கிடைத்த சலுகைகளில் சில. பண மதிப்பு நீக்கத்துக்கு முன்னதாக நடந்த இலவச ஜியோ சிம் வினியோகத் திட்டத்தின் மூலம் ஆதாயமடைந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயுடன் இணைந்து ஜியோ பேமென்ட்ஸ் வங்கி நடைமுறைக்கு வந்தது நவம்பர் 10ஆம் தேதி. இதற்கு மூன்று நாட்கள் முன்னதாகத் தான் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ரிலையன்ஸ் ஜியோவின் பிரீபெய்டு வாலட் அமைப்பான ஜியோ மணியும் இதே காலத்தில் வெளிவந்தது. ஜியோ வாடிக்
கையாளர்களுக்கு எஸ்பிஐயின் நவீன வடிவிலான பணபரிமாற்றத்துக்கு உதவும் ஏற்பாடே ஜியோ மேமென்ட் வங்கி. சிறிது காலமாக திரைமறைவில் நடந்த வற்றின் பலனாக ரிலையன்ஸ் பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தி வர்த்தக உடன்பாடுகளை செய்துகொள்ள பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் வாய்ப்பு ஏற்பட்டது.
இந்தியாவும் பிரான்சும் செய்துகொண்ட ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் பகுதியாக ரிலையன்ஸுக்கு கிடைத்தது 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம். மொத்தம் 36 போர் விமானங்கள் வாங்க 60ஆயிரம் கோடி ரூபாய் இந்தியா செலவு செய்ய உள்ளது. அதில் பாதி தொகையை அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெற்றுள்ளது. இந்திய பாதுகாப்பு வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தத்தை பெற்றுள்ள தனி
யார் நிறுவனமாக ரிலையன்ஸ் உள்ளது.
மூடப்படும் நிலையில் உள்ள பிரான்சின் தாசூத் நிறுவனத்துடன் இந்தியா இந்த ஒப்பந்
தத்தை மேற்கொண்டுள்ளது. இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட 10 நாட்க
ளில் தாசூத்தும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும் இணைந்து தாசூத் -ரிலையன்ஸ் ஏரோஸ்
பேஸ் என்கிற கூட்டு நிறுவனத்தை தொடங்க முடிவு செய்தன.ஒப்பந்தத்தின் பாதி தொகைக்கு
ரிய கட்டுமானங்கள் தாசூத்தின் இந்தியப் பங்காளி என்கிற முறையில் ரிலையன்ஸ் விட்டுக்கொடுக்கும். நாக்பூரில் ரிலையன்ஸுக்கு சொந்தமான இடத்தில் இந்த கட்டுமானப்பணி
கள் துவங்கி உள்ளன. ரபேல் ஒப்பந்தத்தின் துவக்கத்தில் பொதுத்துறை நிறுவனமான
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்குதாரராக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த நிறு
வனத்தை கைகழுவிவிட்டு ரிலையன்ஸை பங்காளியாக்கி உள்ளது மோடி அரசு.
முகேஷ் அம்பானியின் நிறுவனம் 16 ஆயிரத்து 10 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்து
வதற்கு 2015இல் பொதுத்துறை வங்கிகள் 16 வருட கால அவகாசம் வழங்கியுள்ளன. கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை அதிகரித்த தால் பொதுத்துறை வங்கிகள் திணறி வருவதாக கூறி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆந்திர கடற்கரையை
யும் குஜராத்தையும் இணைக்கும் 1386 கிலேமீட்டர் எரிவாயு குழாய் பதிக்கும் ரிலையன்ஸ் கேஸ் இன் பிராஸ்ட்ரக்சர் (ஆர்ஜிடிஐஎன்) நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்கிகள் இந்த சலுகையை வழங்கியுள்ளன.
மோடி ஆட்சியில் அம்பானிகளுக்கு கொண்டாட்டம்...!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக