அச்சத்தை உடைத்த சிறுத்தைகள்..
...........................
நேற்று இரவு 11மணிக்கு மேல் இருக்கும்.ஊடகவியலாளர் நண்பர் ஒருவர் என்னோடு தொலைபேசி ஊடாக பேசினார்.
“ அண்ணே திருவண்ணாமலையில்
இந்த 8 வழிச்சாலைக்கு எதிரான சிறுத்தைகளின் போராட்டம் பெரிய வெற்றி.
கூட்டம் மிக பிரமாண்டமாக இருக்குதுண்ணே.
எடப்பாடிய மிரட்டிடீங்க.
நல்ல மக்கள் கூட்டம்.
பாமக கருத்து கேட்க போறேன்னு ஏமாத்துறாங்க.
திமுக 8 வழிச்சாலையை
எதிர்க்கவில்லைன்னு சொல்லிட்டாங்க.
தமிழகத்தில் வேறு எந்த கட்சியும் இவ்வளவு துணிச்சலா மக்களை திரட்டி போராடுனது இல்ல.
இந்த கூட்டத்த பார்த்தாவது எடப்பாடி,” மக்களே நிலங்கள தாமாக முன்வந்து தாராங்கன்னு”
பொய் சொல்றத நிறுத்தனும்.
இதுல எனக்கு வருத்தம் இவ்வளவு பெருங்ககூட்டத்த மீடியாக்கள் சரியா லைவ்வோ, செய்தியோ பண்ணல. வெட்கமா இருக்குண்ணே”
என்றார்.
அந்த நண்பர் தலைவரின் தனிப்பேட்டி வேறு கேட்டார்.
இது தான் இன்றைய தமிழக அரசியலின் கள நடைமுறை.
8 வழிச்சாலை கூடாது என்பது மக்கள் கருத்து.
ஏனென்னறால், திருவண்ணாமலையில் கூடிய கூட்டம் வெறும் சிறுத்தைகள் மட்டுமல்ல.
வெகு மக்களும் கூடிய கூட்டம்.
துண்டறிக்கை கொடுத்தாலே கைது என்கிற அச்சத்தை சிறுத்தைகளின் இந்த போராட்டம் உடைத்திருக்கிறது.
போராட்டம் என்றாலே கைது என்கிற பேரச்சத்தை எழுச்சித்தமிழரின் நெருப்பு உரைவீச்சு தீக்கிரையாக்கியிருக்கிறது.
தமிழகத்தில்
நிலவி வந்த
‘அச்ச அமைதியை’ஒவ்வொரு முறையும் சிறுத்தைகளே உடைத்திருக்கிறோம்.
உதாரணத்திற்கு,
ஜெயலலிதா ஆட்சியின் போது
புலிகளை ஆதரித்து பேசியதற்காக,
‘தடா’’பொடா’என்று தலைவர்கள் வைகோ, நெடுமாறன், சுபவீ என்று கைது செய்யப்பட்ட சூழலில் அடுத்த கைது திருமாவளவன் தான் என்று ஊடகங்கள் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த சூழலில்,
புலியின் குகையான கிளிநொச்சிக்கே போய்,
புலித்தலைவனையும் சந்தித்து
தாயகம் திரும்பியவர் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே.
அப்போது ஜெயலலிதா,
விமான நிலையத்திலேயே எழுச்சித்தமிழரை கைது செய்யப்போகிறார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெறியிட்டன.
அத்தனை அச்சத்தையும் தவிடு பொடியாக்கினார் எழுச்சித்தமிழர்.
“விடுதலைப்புலிகளை தொடர்ந்து ஆதரிப்பேன்.முடிந்தால் கைது செய்து பார்” என்று முழங்கினார்.
அதே போல, கலைஞரின் ஆட்சியின் போது,விடுதலைப்புலிகள் படமோ, மேதகு பிரபாகரன் அவர்களது படம் போட்ட பேனர் சுவரொட்டிகள் போட்டால் போலீசார் அந்த சுவரொட்டிகளை கிழித்து வழக்கு போட ஆரம்பித்தார்கள்.
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக என்( வன்னி அரசு)
மீது கூட பொய் வழக்கு போட்டார்கள்.
இந்த சூழலில் தான், சென்னையில்
கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டை நடத்தி அப்போது நிலவி வந்த பெரும் அச்சத்தை உடைத்தெரிந்தார்.
“யார் அமைதி காத்தாலும் சிறுத்தைகள் அமைதி காக்க மாட்டோம்” என்று அரசுகளுக்கு எச்சரித்தார் எழுச்சித்தமிழர்.
அதே எச்சரிக்கையை தான்
இன்று எடப்பாடி அரசுக்கு
சிறுத்தைகள் விடுக்கிறோம்.
அதே அச்சத்தைத்தான்
சிறுத்தைகள் உடைக்கிறோம்.
அது அரளிக்காய் தான்
அது நஞ்சுக்காய் தான்
என்று தெரிந்த பிறகும்
நஞ்சா இல்லையான்னு
மக்களிடம் கருத்து கேட்கிற
‘ஏமாற்றுதாஸ்’களுக்கு மத்தியில்
களத்தில் நிற்கும் போராளியாய்
எழுச்சித்தமிழர்
தமிழக மக்கள் முன்
நிமிர்ந்து நிற்கிறார்.
சேலத்தில் 20 ம் தேதி வெள்ளிக்கிழமை
இந்த 8 வழிச்சாலைக்கு
எதிராக கூடி
அச்சத்தை
இன்னும் உடைப்போம்....
- வன்னி அரசு


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக