செவ்வாய், 14 ஏப்ரல், 2020

உலகை ஆளும் வைரஸ் மாவீரன் அலெக்சாண்டரையே ஆட்கொண்ட வைரஸ்


உலகை ஆளும் வைரஸ்  மாவீரன் அலெக்சாண்டரையே ஆட்கொண்ட வைரஸ்

மனிதனின் கண்ணுக்கு புலப்படாத, உயிரில்லாத ஒரு விடயம் இந்த உலகையே தன்  கைக்குள் வைத்து ஆட்டிப்படைக்கிறது. வரலாறுகளில் வருகின்ற மாவீரன் அலக்ஸ்சாண்டார் இந்த உலகையே தன் ஆக்கிரமிம்ப்புக்குள் வைத்துக்கொண்டு, தன்னை வெற்றிகொள்ள யாரும் இல்லை என்ற மமதையில் சுற்றிக்கொண்டிருந்த போது. அந்த பல பொருந்திய வீரனை அழித்த பெருமை இந்த வைரஸையே சாரும், அவன் அழியாமல் இருந்திருந்தால் இன்றைய உலக வரைப்படத்தில் இருக்கும் நாடுகளின் பல பெயர்கள் இருந்திருக்க வாய்ப்பே கிடையாது.

மனிதர்களுக்கும் இந்த கிருமிகளுக்கும் இடையிலான முடியாப்போர் ஆதிகாலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது, உலகில் இருக்கும் எல்லா உயிர்களையும் தாக்கும் திறமை இதற்குள்ளது என்றாலும் இது இந்த உலகில் தாக்கிய உயிரினங்களில் மனித உயிர்களே அதிகம். இயற்கை அனர்த்தம், யுத்தம், அரசியல் சதிகளால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் பல கோடிகளை தாண்டினாலும், இந்த கிருமிகளால் ஏற்பட்ட மனித இழப்புகள் அவற்றை விட பல மடங்கு அதிகம்.

எகிப்துவில் இருக்கும் மம்மிகளை ஆராய்ச்சு செய்த நிறுவனங்கள் அந்த உடல்களில் (Variola) வெரியோல என்று சொல்லக்கூடிய ஒரு கிருமி தாக்கி இருப்பதன் ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளார்கள், இது 18 ஆம் நூற்றாண்டில் சுமார் 50 லட்சம் மக்களை வருடத்திற்கு கொன்றொழித்த "பெரிய அம்மை" என்று நாம் அழைக்கும் கிருமித் தாக்குதல் தான். 10 வருடங்களுக்கு பின்பு தான் இந்த பெரிய அம்மைக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதோடு, தடுப்பூசிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. சுமார் பல லட்சம் உயிரிகளை 1970 முதல் 1990 வரை பாதுகாத்த இந்த தடுப்பூசிகள் ஒரு சில மக்கள் இயக்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கான போராட்டங்கள் மூலம் நிறுத்தப்பட்டதால் இன்று வரை அது உலகின் எதோ ஒரு மூலையில் மனிதர்களை கொலை செய்துகொண்டுதான் இருக்கிறது.

வைரஸ் என்று பேசும் போது "HIV" தவிர்க்க முடியாத ஒன்று, என்னதான் இந்த உலகம் தொழில்நுற்ப உலகில் வேகமாக வளர்ச்சியடைந்தாலும் இந்த வைரஸுக்கு எதிரான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு நாளைக்கு 273 நபர்களை கொலை செய்து கொண்டிருப்பதும் ஒரு வைரஸ் தான் என்பதை நாம் அடிக்கடி மறப்பதுண்டு.

பொதுவாக வைரஸ் தாக்குதல்கள் எல்லாமே ஆபிரிக்க நாடுகளில் இருந்து தான் ஆரம்பமாகிறது, இதற்குப்பின்னால் அமெரிக்காவின் சதி இருக்கலாம் என்ற ஒரு பாரிய சந்தேகம் கூட உலகில் இன்று வரை இருந்துகொண்டிருக்கிறது. வர்த்தகத்தில் வளர்ந்து வரும் மருத்துவ துறையில் அதிக இலாபத்தை ஈட்டுவதற்காக புதிய நோய்களை உருவாக்கி, அதன் பின் மருந்துகளை சந்தைக்கு கொண்டுவந்து அதனை விற்று இலாபகமாக்குவதற்கே இந்த நோய்கள் உருவாக்கப்ப்டுத்துவதாக பொதுவான சந்தேகம் ஒன்றும் இருக்கிறது. இவற்றையெல்லாம் தென் ஆபிரிக்கவை சேர்ந்த பிரதி ஜனாதிபதி தபோ எம்பாக்கி வெளிப்படையாக தெரிவித்ததும் வரலாற்றில் அப்படியே எழுதப்பட்டு இருக்கிறது. "

HIV வைரஸ் அமெரிக்காவின் CIA பிரிவினரால் உலகத்தின் ஜனத்தொகையை கட்டுப்படுத்த நடத்தப்படும் உயிரியல் யுத்தம்" என்று சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்ற கென்யாவை சேர்ந்த வென்கேரி மதாய் உலக அரங்கில் சொல்லியதும் அப்படியே காலப்போக்கில் காணாமல் போய்விட்டது.

இப்படி மனிதர்களை அழித்த வைரஸ்களின் வரிசையில் வருவது தான் இபோலா, விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் தான் உலகிலேயே மிகப்பெரிய ஆட்கொல்லி என்று உலக சுகாதார நிறுவனம் சொல்லுகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் நபர் வெறும் சில மாதங்களே வாழ்வர் என்றும், இதுவும் ஆப்பிரிக்காவில் கொங்கோ என்ற பிரதேசத்தில் தான் முதலில் பரவி இருக்கிறது. 1976 ஆம் ஆண்டில் இவர்ந்து சுமார் 20 முறை இந்த வைரஸ் ஆப்பிரிக்காவை தாக்கி இருக்கிறது. இதனால் கானா, கென்யா, எத்தியோப்பியா, கொங்கோ, உகாண்டா போன்ற நாடுகளில் இருந்த அரசுகள் ஆட்டம் கண்டம் இருக்கின்றன ஆனால் நைஜீரியா மட்டும் இந்த வைரஸ்சினை கட்டுப்பாட்டில் வைத்து சாதித்து காட்டியது.

அதன் பின் வெளியான இன்னொரு வைரஸ் தான் கிகா காடுகளில் இருந்து வெளியாகிய "கிகா வைரஸ்". குரங்குகளில் இருந்து கொசுக்களுக்கும், கொசுக்களில் இருந்து மனிதர்களுக்கும் பரவிய இந்த நோய் 1950 ஆன் ஆண்டில் இருந்து 10 வருடத்திற்கொரு முறை உலகை தாக்கிக்கொண்டே இருக்கிறது. 2007 மற்றும் 2013 ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் மனிதர்களை பிரேசில் மற்றும் தென் அமெரிக்காவைவில் தாக்கியது. இதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை ஆனால் ADS எனப்படும் கொசுக்களின் இருந்து பரவுவதால், அந்த கொசுக்களை அழித்து மனிதர்களை இந்த வைரஸில் இருந்து பாதுகாத்தது விஞ்ஞான உலகம்.

அடுத்து Influenza Virus, 1918 முதலாம் உலகப் போர் நடைப்பெற்ற காலத்தில் முழு ஐரோப்பாவையும் ஆட்டிப்படைத்தது. 50 கோடி மக்கள் பாதிக்கப்பட்டதோடு, அதில் 5 கோடி மக்களை காவு கொண்டது. உலக மொத்த சனத்தொகையில் சுமார் 3%தை இந்த வைரஸ் தாக்கியது.

2013ல் ஆப்பிரிக்கா, அமெரிக்க, என 47 நாடுகளை தாக்கியது Yellow Fever. 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதோடு 60,000 மனிதர்கள் தன உயிரை இந்த வைரஸினால் இழந்தார்கள். தற்போது உகண்டாவில் மிக வேகமாக இந்த வைரஸ் இன்றும் பரவி வருகிறது.

இந்த பட்டியலில் தான் நம் ஊர் மக்களை தாக்கும் டெங்கு வைரஸும் வருகிறது, 800 ஆண்டுகளுக்கு முன்பு குரங்கில் இருந்து நுளம்புகளுக்கு பரவிய இந்த வைரஸ், காலப்போக்கில் நுளம்புகளில் இருந்து மனிதர்களுக்கு பரவ ஆரம்பித்தது. இப்படி பல வைரஸ் தாக்குதல்கள் இந்த உலகில் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தன் யுத்தத்தை மக்களோடு தொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது. அதிக உயிரிழப்புக்கள் வரும் போது அது பேசும் பொருளாக மாறி மறைந்துவிடுகிறது.

இப்படியான ஒரு வைரஸ் தான் இந்த கொரோனா வைரஸ், "யார் வல்லரசு?" என்ற சண்டையில் அமெரிக்காவோடு எப்போதும் முட்டிக்கொண்டிருக்கும் ஒரு நாடுதான் சீனா. அமெரிக்காவைப் போன்று உயிரியல் ஆயுதம் ஒன்றை சீனாவும் செய்ய முயற்சிப்பதாக பல செய்திகள் காலம் நெடுகிலும் கசிந்துவந்ததை நாம் அறிவோம். அப்படியான ஒரு உயிரியல் யுத்தம் செய்வதற்கான ஆயுதத்தை வுஹான் என்ற பிரதேசத்தில் தயாரித்து வந்ததாகவும், அதில் ஏற்பட்ட கோளாறு ஒன்றினால் இந்த வைரஸ் அவர்களது நாட்டையே தாக்கிவிட்டதாகவும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த டேனி ஸோஹம் விஞ்ஞானி தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தினாலும் "இந்த இஸ்ரேல் விஞ்ஞானியின் கருத்துக்குப் பின்னால் அமெரிக்கா இருக்கிறது" என்று சீனா கூறி இருக்கிறது.

எது எவ்வாறு இருந்தாலும் அமெரிக்காவோடு போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்துவந்த சீனா தேசத்துக்கு இது மிகப்பெரிய இழப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 6 நாட்களில் 1000 கட்டிகளை கொண்ட 25000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் மிகப்பெரிய ஒரு வைத்தியசாலையை சீனா கட்டியது மட்டுமல்லாமல், மிக வேகமாக வைரஸ் தாக்குதலில் இருந்து வெளியாகி வருவது சந்தோசமான விடயமும் கூட. எப்படியானாலும் இந்த கொரோனா வைரஸுக்கான மருந்தினை கண்டுபிடிக்க 6 மாதம் எடுக்கலாம் என்று ரஷ்யா நாடு  சொல்லி இருப்பது வேதனையளிக்கிறது.

சுமார் 2 வருடங்களுக்கு முன்னால் பில் கேட்ஸ் ஒரு மருத்துவ கருத்தரங்களில் இவ்வாறான வைரஸ் ஒன்று உலகை தாக்கும் என்றும், அது முதல் 6 மாதத்தில் சுமார் 3 கோடி மக்களை காவு கொள்ளும் என்றும், அது 3ஆம் உலக யுத்தத்திற்கு ஒரு காரணமாய் அமையும் என்றும் கூறியது உலக அரங்கில் ஞாபகப்படுத்தப்படும் ஒரு உரையாக இருக்கிறது.

இந்த வைரஸ் தாக்கும் அத்தனை உயிர்களுக்கும் வாழ்க்கை என்ற ஒன்று உள்ளது, அவற்றுக்காக கவலைப்படுவோம். குறிப்பாக பாதிக்கப்படும் மனிதர்களுக்காக்க பிரார்த்தனை செய்வோம்.

பாதிக்கப்பட்ட மக்கள் அத்தனை போரையும், மற்றும் எங்களையும் இறைவன் இவ்வாறான வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பானாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக