பதட்டம் வேண்டாம்!
*————————-*
*கொரோனாவினால் தினசரி புதிய நோயாளிகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டுள்ளன. சமூக தனிமைப்படுத்தல் மூலம் மட்டுமே பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று அனைவரும் வலியுறுத்துகின்றனர்.*
*ஒரு சாமானியனின் சந்தேகம். நாம்தான் ஒருநாள் சுய ஊரடங்கு கடைப்பிடித்தோமே, நேற்றிலிருந்து 144 தடை உள்ளதே. பின்பு ஏன் ஒருநாளில் இவ்வளவு புதிய கேஸ்கள்? 144 எல்லாம் வேஸ்ட்டா?*
*இல்லை.*
*கொரோனா வைரஸ் ஒருவர் உடம்பில் நுழைந்த உடனேயே வியாதி தோன்றுவதில்லை. சுமார் 4 முதல் 14 நாள்கள் (அதிகபட்சம் 21 நாள்கள்) வரை எந்த அறிகுறியும் இல்லாமல் உடலில் பெருகிக் கொண்டிருக்கும் ( incubation period). ஆனாலும் இந்த சமயத்தில் அவர் மற்றவருக்கு கிருமிகளை பரப்புவார். பலருக்கு வியாதி அறிகுறிகள் இல்லாமலேயே கடந்து போகவும் வாய்ப்புள்ளது. வியாதி தோன்றினாலும் தோன்றாவிட்டாலும் கிருமித் தொற்று உள்ள அனைவருமே கிருமியை மற்றவர்க்குப் பரப்ப முடியும்.*
*நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் புதிய நோயாளிகள் சுமார் 4-14 நாள்கள் முன்பாகவே தம் உடலுக்குள் கிருமியைப் பெற்றவர்கள். 144 தடை ஆரம்பிக்கும் நாள் வரையில் கிருமிகளைப் பெற்றவர்கள் இன்னும் சுமார் இரண்டு வாரங்கள் வரை வியாதி அறிகுறிகளைப் பெறுவார்கள். எனவே வரும் நாள்களில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். அதுவும் 144 தடை அமலாக்கத்திற்கு முதல் நாள் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல ஆயிரம் பேர் சிக்கியதால் இன்னும் இரு வாரங்கள் வரை புதிய நோயாளிகள் எண்ணிக்கை நம் அமைச்சர் அவர்கள் சொன்னது போல் மின்னல் வேகத்தில் அதிகரிக்கலாம்*.
*தொற்றுநோயின் தாக்கம் குறைகிறது என்று எப்போது கூற முடியும்?*
*ஒரு உச்சத்துக்குப் பின் தினசரி புதிய நோயாளிகளின் எண்ணிக்கை எப்போது முந்தைய நாள்களைவிட படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் தொற்றுநோயின் தாக்கம் குறைகிறது என்று கூற முடியும். 144 ஊரடங்கை நாம் முழுமையாகக் கடைப்பிடித்தால் மூன்று வாரங்களுக்குள் அந்நிலையை எட்டிவிட முடியும்.*
*எனவே இன்றைய நாளைய நம்பர்களைப் பார்த்து மனம் தளர்ந்துவிடாமல் முழுமையான சமூக விலகல் மூலம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவோம்*. *இது மூன்று வாரங்களில் முடிகின்ற பிரச்சனை அல்ல. தொடர்ச்சியான சுகாதார கட்டுப்பாடுகள் நடவடிக்கைகள் மாதக்கணக்கில் ஏன் வருடக் கணக்கில் தேவை. இழப்புகள் மிக அதிகம் என்றாலும் இதனை ஒரு சுயபரிசோதனைக் காலமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.*_
*_இத்தாலி, ஸ்பெயினின் கசப்பான பாடங்களை நினைவில் கொள்வோம்._* *வெல்வோம்.* *நம்பிக்கையுடன் இருப்போம்*.
*————————-*
*கொரோனாவினால் தினசரி புதிய நோயாளிகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டுள்ளன. சமூக தனிமைப்படுத்தல் மூலம் மட்டுமே பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று அனைவரும் வலியுறுத்துகின்றனர்.*
*ஒரு சாமானியனின் சந்தேகம். நாம்தான் ஒருநாள் சுய ஊரடங்கு கடைப்பிடித்தோமே, நேற்றிலிருந்து 144 தடை உள்ளதே. பின்பு ஏன் ஒருநாளில் இவ்வளவு புதிய கேஸ்கள்? 144 எல்லாம் வேஸ்ட்டா?*
*இல்லை.*
*கொரோனா வைரஸ் ஒருவர் உடம்பில் நுழைந்த உடனேயே வியாதி தோன்றுவதில்லை. சுமார் 4 முதல் 14 நாள்கள் (அதிகபட்சம் 21 நாள்கள்) வரை எந்த அறிகுறியும் இல்லாமல் உடலில் பெருகிக் கொண்டிருக்கும் ( incubation period). ஆனாலும் இந்த சமயத்தில் அவர் மற்றவருக்கு கிருமிகளை பரப்புவார். பலருக்கு வியாதி அறிகுறிகள் இல்லாமலேயே கடந்து போகவும் வாய்ப்புள்ளது. வியாதி தோன்றினாலும் தோன்றாவிட்டாலும் கிருமித் தொற்று உள்ள அனைவருமே கிருமியை மற்றவர்க்குப் பரப்ப முடியும்.*
*நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் புதிய நோயாளிகள் சுமார் 4-14 நாள்கள் முன்பாகவே தம் உடலுக்குள் கிருமியைப் பெற்றவர்கள். 144 தடை ஆரம்பிக்கும் நாள் வரையில் கிருமிகளைப் பெற்றவர்கள் இன்னும் சுமார் இரண்டு வாரங்கள் வரை வியாதி அறிகுறிகளைப் பெறுவார்கள். எனவே வரும் நாள்களில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். அதுவும் 144 தடை அமலாக்கத்திற்கு முதல் நாள் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல ஆயிரம் பேர் சிக்கியதால் இன்னும் இரு வாரங்கள் வரை புதிய நோயாளிகள் எண்ணிக்கை நம் அமைச்சர் அவர்கள் சொன்னது போல் மின்னல் வேகத்தில் அதிகரிக்கலாம்*.
*தொற்றுநோயின் தாக்கம் குறைகிறது என்று எப்போது கூற முடியும்?*
*ஒரு உச்சத்துக்குப் பின் தினசரி புதிய நோயாளிகளின் எண்ணிக்கை எப்போது முந்தைய நாள்களைவிட படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் தொற்றுநோயின் தாக்கம் குறைகிறது என்று கூற முடியும். 144 ஊரடங்கை நாம் முழுமையாகக் கடைப்பிடித்தால் மூன்று வாரங்களுக்குள் அந்நிலையை எட்டிவிட முடியும்.*
*எனவே இன்றைய நாளைய நம்பர்களைப் பார்த்து மனம் தளர்ந்துவிடாமல் முழுமையான சமூக விலகல் மூலம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவோம்*. *இது மூன்று வாரங்களில் முடிகின்ற பிரச்சனை அல்ல. தொடர்ச்சியான சுகாதார கட்டுப்பாடுகள் நடவடிக்கைகள் மாதக்கணக்கில் ஏன் வருடக் கணக்கில் தேவை. இழப்புகள் மிக அதிகம் என்றாலும் இதனை ஒரு சுயபரிசோதனைக் காலமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.*_
*_இத்தாலி, ஸ்பெயினின் கசப்பான பாடங்களை நினைவில் கொள்வோம்._* *வெல்வோம்.* *நம்பிக்கையுடன் இருப்போம்*.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக