வியாழன், 12 மார்ச், 2020

இரவில் தூங்கும் போது உங்கள் தலைக்கு அருகில் மொபைல் போனை வைத்துக்கொண்டு தூங்குகிறீர்களா?

இரவில் தூங்கும் போது உங்கள் தலைக்கு அருகில் மொபைல் போனை வைத்துக்கொண்டு தூங்குகிறீர்களா?



இப்பொழுது இருக்கும் கம்ப்யூட்டர் காலத்தில் மொபைல் போன் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொருள், மேலும் யாராலும் தவிர்க்க முடியாத ஒரு பொருளாகவும் மொபைல் போன் இருக்கிறது, மனித வாழ்வில் அது இல்லையேல் வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு கூட சொல்லலாம் அந்த அளவிற்கு மொபைல் போனில் தேவை இருக்கிறது. ஒரு மனிதன் உணவு இல்லாமல் கூட வாழ்வான் ஆனால் மொபைல்போன் இல்லாமல் இப்போதைய காலகட்டத்தில் வாழ மாட்டான் என்று சொல்லும் அளவிற்கு அதன் தேவை அதிகமாக உள்ளது காலையில் எழுந்தவுடன் நம் உறவுகளை தேடுகிறோமோ இல்லையோ ஆனால் மொபைல் போனை நிச்சயம் தேடுவோம்.
அந்த அளவிற்கு மொபைல் போன் நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்டது, எப்பொழுதுமே அதை நாம் அருகிலேயே வைத்து பார்த்துக் கொள்கிறோம் மற்றும் உபயோகப் படுத்திக் கொள்கிறோம் இரவில் தூங்கும் போது கூட கடைசி நேரத்தில் பார்க்கும் பொருள் மொபைல் போன் தான், காலையில் எழுந்தவுடன் முதலில் பார்க்கும் பொருள் மொபைல். ஆகவே பெரும்பாலானோர் தன் தலைக்கு அருகிலேயே மொபைல் போனை வைத்து தூங்கி விடுகிறார்கள், இது மிகவும் தவறு இவ்வாறு செய்யாதீர்கள்
மொபைல் போனை தலைக்கு அருகில் வைத்து தூங்கும் போது அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு மூளை வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் மூளை நரம்பு பாதிக்கிறது, மேலும் கண்களின் பார்க்கும் திறனை குறைக்கிறது, தலைவலி கண்களில் நீர் வடிதல் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது, ஆகவே நாள் முழுவதும் மொபைல் போனை யூஸ் பண்ணினாலும் தூங்கும்போது அதை உங்களிடம் இருந்து தூரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் எந்த ஒரு எலக்ட்ரானிக் டிவைஸ் அருகிலும் மொபைல் போனை வைத்து விடாதீர்கள் அது அந்த எலக்ட்ரானிக் டிவைஸ்ஐயும் சேர்த்து பாதிப்புகுள்ளாக்கி விடும்.
எலக்ட்ரானிக் டிவைஸ்கே அந்த நிலைமை என்றால் உங்கள் நிலைமையை சற்று யோசித்து பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக