#நாடகக்_காதல்....
நான் தீண்டத் தகாதவன் என்றேன்.
நான் தீண்டத் தகுந்தவள்தான்
தீண்டு என்றாள்...
நான் தொட்டால் தீட்டு என்றேன்.
மாதம் மூன்று நாட்கள் 'தீ்ட்டின்' எரிச்சலில் இருந்து முந்நூறுநாள்
விடுபடவேண்டும் என்றாள்.
என் வர்ணம் வேற என்றேன்.
புதுவர்ணத்தில் குழந்தை
பிறக்கும் வா என்றாள்.
நான் தேங்கா சிரட்டையில்
நீர் அருந்துபவன் என்றேன் :
அட 'ஆர்கானிக்' வழிமுறை என
கண்சிமிட்டினாள்.
நான் பறை வாசிப்பவன் என்றேன்:
ஹம் .. எப்போதும் உற்சாகமாய்
இருப்பவன்னு சொல்லு, என்னால் பத்து பிள்ளைக்குமேல் பெறமுடியாது என்றாள்.
நான் சேரியில் வசிப்பவன் என்றேன்:
உலகமே புறந்தள்ளினாலும்
தனித்து வாழ பழகியவன் என்று
சொல் என்றாள்.
நான் அடிமை என்றேன்:
நானே உனது திறவுகோல்
ஆடை களைந்து கொல் என்றாள்.
இதுபாவம் என்றார்களே என்றேன் :
ஓரினச் சேர்க்கையாளர்களை துதிப்பவர்களின் பேச்சை
புறந்தள்ளி எனை புணர்ந்து'கொல்' என்றாள்.
தீண்டத் தகுந்தவனும்
தீண்டத் தகுந்தவளும்.
........🖤💙❤️......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக