நாய்கள் குரைப்பதால் பயணங்கள் நின்றுவிடாது..- பி.ஆர்.அம்பேத்கர்
**********************************************
நிலம் பற்றிப் பேசியவுடனே எல்லாருக்கும் இவ்வளவு வலிக்கிறது. நிலமில்லாதவர்களின் வலியை எப்போது உணரப்போகிறீர்கள்?
சென்னையின் #பூர்வகுடி மக்களை அப்புறப்படுத்தி அவர்களை 40 கி. மீ தூரத்தில் அடைத்துவைத்து அவர்களின் இடத்தில் மால்களும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ஸும் இப்போது வந்துள்ளது தெரியும் தானே உங்களுக்கு?
#மெட்ரோரயில் திட்டத்தில் பணிபுரிந்த வட இந்தியத் தொழிலாளிகள் காயங்களாலும், விபத்தாலும் உள்ளேயே இறந்துவிட்டால் அவர்களை பூமிக்குள்ளேயே புதைத்துவிட்டு காணாமல் போனதாகக் கணக்கெழுதுவது தெரியும்தானே உங்களுக்கு?
இந்த நகரத்தைக் கட்டியமைத்தவர்களுக்கு இந்த நகரத்தில் இடமில்லை என்பது தானே இங்கு நிலை..
அதே போலத்தான்..
பாறைகளே இல்லாத ஆற்றுப்படுகை பூமியான தஞ்சாவூரிலும் ராஜராஜ சோழன் கோவில் கட்டுவதற்காக ஒன்றரை லட்சம் டன் கற்பாரைகளைக் கொண்டு வந்து பிரம்மாண்டமான அக் கோவிலைக் கட்டிமுடிக்க எத்தனைத் தொழிலாளிகள் நசுங்கிச் செத்திருப்பார்கள்??
நவீன காலத்து இயந்திரகளில்லை,
பாதுகாப்புக் கருவிகளில்லை, குறைந்தபட்ச ஊதியம் கூட இல்லை, ஆதிகாலத்து சாதி எனும் இழிவைத் திணித்து மக்களைப் பிரித்து, அடிமையாப் பிறந்து அடிமையாகவே இறப்பது, சேவகம் செய்வதுதான் உனக்கு விதிக்கப்பட்டது என நம்பவைத்துத்தான் இந்த உழைப்புச் சுரண்டல்கள் நடந்திருக்கும்.
உண்மையைச் சொன்னால், #பா_இரஞ்சித் ஐத் திட்டுவதன் மூலம் நிலம் குறித்த மிகமுக்கிய கேள்வியில் இருந்து நழுவுகிறார்கள், ஏனென்றால் சொல்வதற்குப் பதில் இல்லை!! மாமன்னனின் கொடுமைகள் ஒவ்வொன்றாய் விவாதத்திற்கு வருகின்றன. 40000 ஏக்கர் நிலத்தை பா. இரஞ்சித் என்ற ஜமீன் கொடுத்தாரா என்ற தற்குறிகளின் மீம்ஸ் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியது. இடைநிலை சாதிகளிலுள்ள நிலமற்றவர்களே.. சாதி எனும் மனநோய் உங்களை எதார்த்தத்தைக் காணவிடாமல், கோபத்தோடு மட்டும் அணுகச் சொல்கிறது. இந்தியா முழுக்க சேரிகள் இருக்கின்றன, எல்லாச் சேரிகளும் ஊருக்கு வெளியே இருக்கின்றன, ஊருக்குள் கோவில் இருக்கிறது, கோவிலின் கட்டுப்பாட்டில் ஏராளம் நிலங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களும் இந்துக்கள் என்றால், நிலமற்ற இந்துக்களுக்கு அந்த நிலங்களை பகிர்ந்தளிக்கலாமே? அவர்கள் இடைநிலைச் சாதி நிலமற்றவர்களாக இருந்தாலும் சரி. பகிர்ந்து கொடுங்களேன்.
இந்துக்கள் நலன் காக்கும் நாடு தானே இது??
உங்கள் ஆதிக்க மூளை இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கெட்டவார்த்தையில் தான் பதில் தரும்.
உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள்..
அதுதான் சாதிக் கட்டமைப்பின் குரூரம்.
ஒருவன் பிறக்கும் போதே 1000 ஏக்கர் நிலமுள்ளவனாகப் பிறக்கிறான்,ஒருவன் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு சென்ட் நிலமில்லாமல் உழைத்தே மடிகிறான். இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாயத் தொடர்வது, நாம் 21ம் நூற்றாண்டில் முகநூல் தலைமுறை, திடீரென கண்விழித்து "சாதி ஏற்றத் தாழ்வுதான் பொருளாதார பின்னடைவுக்குக் காரணம் என்பவர்களை, சாதிவெறியன் என்கிறோம்!!,
பா.இரஞ்சித் பேசுவதால் இங்கு சாதி வளரவில்லை, அவர் பேசுவதால் எங்கே சாதி அமைப்பு ஒழிந்துவிடுமோ, கையிலிருக்கிற நிலமும் அதிகாரமும் பறிபோய்விடுமோ என்ற அச்சம்தான் இப்படி கீழ்த்தரமான எதிர்வினைகளை ஆற்றுகிறது.
மக்களாட்சி காலத்திலேயே கருத்து சுதந்திரத்தின் நிலையைப் பாருங்கள்..
மன்னராட்சியில் எப்படி இருந்திருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
வழக்குகள் இவரை ஒன்றும் செய்யாது.
சமத்துவம் எனும் மனித மாண்பு மீட்கப்படும் காலம் வரும், அப்போது பா.இரஞ்சித் எனும் மகத்தான போராளியைச் சமூகம் உணர்ந்து கொண்டாடும்.
#StandWithPaRanjith
#நிலம்எங்கள்உரிமை.
**********************************************
நிலம் பற்றிப் பேசியவுடனே எல்லாருக்கும் இவ்வளவு வலிக்கிறது. நிலமில்லாதவர்களின் வலியை எப்போது உணரப்போகிறீர்கள்?
சென்னையின் #பூர்வகுடி மக்களை அப்புறப்படுத்தி அவர்களை 40 கி. மீ தூரத்தில் அடைத்துவைத்து அவர்களின் இடத்தில் மால்களும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ஸும் இப்போது வந்துள்ளது தெரியும் தானே உங்களுக்கு?
#மெட்ரோரயில் திட்டத்தில் பணிபுரிந்த வட இந்தியத் தொழிலாளிகள் காயங்களாலும், விபத்தாலும் உள்ளேயே இறந்துவிட்டால் அவர்களை பூமிக்குள்ளேயே புதைத்துவிட்டு காணாமல் போனதாகக் கணக்கெழுதுவது தெரியும்தானே உங்களுக்கு?
இந்த நகரத்தைக் கட்டியமைத்தவர்களுக்கு இந்த நகரத்தில் இடமில்லை என்பது தானே இங்கு நிலை..
அதே போலத்தான்..
பாறைகளே இல்லாத ஆற்றுப்படுகை பூமியான தஞ்சாவூரிலும் ராஜராஜ சோழன் கோவில் கட்டுவதற்காக ஒன்றரை லட்சம் டன் கற்பாரைகளைக் கொண்டு வந்து பிரம்மாண்டமான அக் கோவிலைக் கட்டிமுடிக்க எத்தனைத் தொழிலாளிகள் நசுங்கிச் செத்திருப்பார்கள்??
நவீன காலத்து இயந்திரகளில்லை,
பாதுகாப்புக் கருவிகளில்லை, குறைந்தபட்ச ஊதியம் கூட இல்லை, ஆதிகாலத்து சாதி எனும் இழிவைத் திணித்து மக்களைப் பிரித்து, அடிமையாப் பிறந்து அடிமையாகவே இறப்பது, சேவகம் செய்வதுதான் உனக்கு விதிக்கப்பட்டது என நம்பவைத்துத்தான் இந்த உழைப்புச் சுரண்டல்கள் நடந்திருக்கும்.
உண்மையைச் சொன்னால், #பா_இரஞ்சித் ஐத் திட்டுவதன் மூலம் நிலம் குறித்த மிகமுக்கிய கேள்வியில் இருந்து நழுவுகிறார்கள், ஏனென்றால் சொல்வதற்குப் பதில் இல்லை!! மாமன்னனின் கொடுமைகள் ஒவ்வொன்றாய் விவாதத்திற்கு வருகின்றன. 40000 ஏக்கர் நிலத்தை பா. இரஞ்சித் என்ற ஜமீன் கொடுத்தாரா என்ற தற்குறிகளின் மீம்ஸ் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியது. இடைநிலை சாதிகளிலுள்ள நிலமற்றவர்களே.. சாதி எனும் மனநோய் உங்களை எதார்த்தத்தைக் காணவிடாமல், கோபத்தோடு மட்டும் அணுகச் சொல்கிறது. இந்தியா முழுக்க சேரிகள் இருக்கின்றன, எல்லாச் சேரிகளும் ஊருக்கு வெளியே இருக்கின்றன, ஊருக்குள் கோவில் இருக்கிறது, கோவிலின் கட்டுப்பாட்டில் ஏராளம் நிலங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களும் இந்துக்கள் என்றால், நிலமற்ற இந்துக்களுக்கு அந்த நிலங்களை பகிர்ந்தளிக்கலாமே? அவர்கள் இடைநிலைச் சாதி நிலமற்றவர்களாக இருந்தாலும் சரி. பகிர்ந்து கொடுங்களேன்.
இந்துக்கள் நலன் காக்கும் நாடு தானே இது??
உங்கள் ஆதிக்க மூளை இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கெட்டவார்த்தையில் தான் பதில் தரும்.
உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள்..
அதுதான் சாதிக் கட்டமைப்பின் குரூரம்.
ஒருவன் பிறக்கும் போதே 1000 ஏக்கர் நிலமுள்ளவனாகப் பிறக்கிறான்,ஒருவன் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு சென்ட் நிலமில்லாமல் உழைத்தே மடிகிறான். இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாயத் தொடர்வது, நாம் 21ம் நூற்றாண்டில் முகநூல் தலைமுறை, திடீரென கண்விழித்து "சாதி ஏற்றத் தாழ்வுதான் பொருளாதார பின்னடைவுக்குக் காரணம் என்பவர்களை, சாதிவெறியன் என்கிறோம்!!,
பா.இரஞ்சித் பேசுவதால் இங்கு சாதி வளரவில்லை, அவர் பேசுவதால் எங்கே சாதி அமைப்பு ஒழிந்துவிடுமோ, கையிலிருக்கிற நிலமும் அதிகாரமும் பறிபோய்விடுமோ என்ற அச்சம்தான் இப்படி கீழ்த்தரமான எதிர்வினைகளை ஆற்றுகிறது.
மக்களாட்சி காலத்திலேயே கருத்து சுதந்திரத்தின் நிலையைப் பாருங்கள்..
மன்னராட்சியில் எப்படி இருந்திருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
வழக்குகள் இவரை ஒன்றும் செய்யாது.
சமத்துவம் எனும் மனித மாண்பு மீட்கப்படும் காலம் வரும், அப்போது பா.இரஞ்சித் எனும் மகத்தான போராளியைச் சமூகம் உணர்ந்து கொண்டாடும்.
#StandWithPaRanjith
#நிலம்எங்கள்உரிமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக