வியாழன், 26 டிசம்பர், 2019

நிர்வாகத்தில் தமிழகம் முதலிடமாம்: மத்திய அரசு தகவல்ஈ

நிர்வாகத்தில் தமிழகம் முதலிடமாம்: மத்திய அரசு தகவல்

டிசம்பர் 26,2019 13:21

புதுடில்லி ; பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் அடிப்படையில், நிர்வாக திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு நிர்வாகத்திறன் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில், நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. 2வது இடத்தில் மஹாராஷ்டிரா, 3வது இடத்தில் கர்நாடகா, 4வது இடத்தில் சத்தீஸ்கர், 5வது இடத்தில் ஆந்திரா, 6வது இடத்தில் குஜராத், 7 வது இடத்தில் ஹரியானா, 8 வது இடத்தில் கேரளா 9வது இடத்தில் மத்திய பிரதேச, 10வது இடத்தில் மே.வங்கம், 11வது இடத்தில் தெலுங்கானா, 12வது இடத்தில் ராஜஸ்தான், 13வது இடத்தில் பஞ்சாப், 14வது இடத்தில் ஒடிசாவும், 15வது இடத்தில் பீஹார், 16வது இடத்தில் கோவா, 17 வது இடத்தில் உ.பி., 18 வது இடத்தில் ஜார்க்கண்ட் உள்ளன.



மேலும், பொது மக்கள் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம், முதலிடத்தையும், பொது சுகாதாரத்துறையில் 2வது இடத்தையும், சுற்றுச்சூழலில் 3வது இடத்தையும், வேளாண்மையில் 9வது இடத்தையும், வணிகத்தில் 14வது இடத்தையும், மனித வள மேம்பாட்டில் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. பெரிய மாநிலங்கள் பட்டியலில், பொருளாதார துறையில் 5வது இடத்தையும், நீதி, சட்டம் ஒழுங்கு, பொது மக்கள் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும், நல்லாட்சி நடக்கும் மாநிலங்களிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரித்தாளும் சூழ்ச்சி என்பது, காலங்காலமாக புளித்துப்போன விசயம்...


பிரித்தாளும் சூழ்ச்சி என்பது,
காலங்காலமாக
புளித்துப்போன விசயம்...

இஸ்லாமியர்கள்,
அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், அல்லது பாகிஸ்தான் தான்
அவர்களது நாடு என்பது போலவும்,
பாமர மக்களின் மனங்களில்
பிரிவினையை உண்டாக்குவதற்கான,
நச்சுக்கருத்துக்களை, காலங்காலமாக
விதைத்து வந்தனர், வருகின்றனர்...

இந்த பொய்ப்பிரச்சாரங்கள்
ஒரு காலத்திலும் செல்லுபடியாகாது...
சத்தியத்தை யாராலும் புதைத்து விட
முடியாது...

இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும்
இந்துக்களின் இரத்த சொந்தங்கள்...

இந்து மதத்திலுள்ள தீண்டாமை போன்ற,
இன்ன பிற கொடுமைகளால்,
அந்த வாழ்க்கை முறையிலிருந்து தப்பித்து,
சுய மரியாதையைப்பேணவும்,
சமத்துவத்தை அனுபவிக்கவும்,
அதற்கு வழி வகுத்துத்தந்த
இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு
மாறியவர்கள்...

ஒவ்வொரு மனிதனும்,
தனக்குப்பிடித்த வாழ்க்கை முறையை
தேர்ந்தெடுத்துக்கொள்வது,
அவனவனுடைய அடிப்படை சுதந்திரம்.
இதை "இந்திய அரசியல் சாசன சட்டம்"
உறுதி செய்திருக்கிறது...

ஒரே தாய், தந்தையருக்கு பிறந்த
பிள்ளைகள், அவரவருக்கு பிடித்தமான
வாழ்க்கை முறையை
தேர்ந்தெடுத்துக்கொள்வதில்லையா,
அதே போலத்தான் இதுவும்...

எல்லா மதத்தினரும்
இந்திய தேசத்தின் பிள்ளைகளே...

என் தகப்பனாரின் மூதாதையர்கள்,
சேதுபதிச்சீமையின் மறவர் குலம்.

என் தாயாரின் மூதாதையர்கள்,
சேதுபதிச்சீமையின் மீனவர் குலம்.

எனது மூதாதையர் காலத்தில்,
சேதுபதிச்சீமையில்,
பள்ளு, பறை என்று 18 சாதிகள்
இருந்தனவென்றும்,
அவர்களில் பெரும்பாலானோர்
இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறி,
சாதிகளற்று, சம்பந்தம் பண்ணிக்
கொண்டார்கள் என்றும், என் தாயார்
எனக்கு சொல்லியிருக்கிறார்கள்...

அதனால், எல்லா சாதியிலும்
எனக்கு சொந்த பந்தங்கள் உண்டு...

*பேதங்கள் அற்றதே பெரு வாழ்வு.*
*அதில் மனித நேயமே மாண்பு..*

நடிகர் ராஜ்கிரண்

புதன், 25 டிசம்பர், 2019

தஞ்சை கீழ்வெண்மணி படுகொலை நடைபெற்ற நாள்,டிசம்பர் 25. (25-12-1968)


தஞ்சை கீழ்வெண்மணி படுகொலை நடைபெற்ற நாள்,டிசம்பர் 25. (25-12-1968)

   *தஞ்சை மண்ணில் "பண்ணையாள் முறை" ஆழமாக வேரூன்றியிருந்த காலம். சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன. விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள்.*

   *உழைப்புக்கு‍ ஏற்ற கூலியைக் கேட்டார்கள் விவசாயிகள். இதனை ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரம் மூண்டது.*

   *கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நில உடமையாளர்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் படுகொலையை அரங்கேற்றினார்கள்.*

   *1968 டிசம்பர் 25 அன்று நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகளைத் தாக்கினார்கள், நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் ராமையன் என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள்.*

   *எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில், அக்குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர்.*

*மாண்டவர்கள்:-*👇

*1]சுந்தரம்-வயது/45*
*2]சரோஜா/12*
*3]மாதம்பாள்/25*
*4]தங்கையன்/5*
*5]பாப்பா/35*
*6]சந்திரா/12*
*7]ஆசைத்தம்பி/10*
*8]வாசுகி/3*
*9]சின்னப்பிள்ளை/28*
*10]கருணாநிதி/12*
*11]வாசுகி/5*
*12]குஞ்சம்மாள்/30*
*13]பூமயில்/18*
*14]கருப்பாயி/35*
*15]இராஞ்சியம்மாள்/16*
*16]தாமோதரன்/1*
*17]ஜெயம்/10*
*18]கனகம்மாள்/25*
*19]இராஜேந்திரன்/7*
*20]சுப்பன்/50*
*21]குப்பம்மாள்/35*
*22]பாக்கியம்/35*
*23]ஜோதி/10*
*24]இரத்தினம்/35*
*25]குருசாமி/15*
*26]நடராசன்/5*
*27]வீரம்மாள்/25*
*28]பட்டு/46*
*29]சண்முகம்/13*
*30]முருகன்/40*
*31]ஆச்சியம்மாள்/30*
*32]நடராசன்/6*
*33]ஜெயம்/6*
*34]செல்வி/3*
*35]கருப்பாயி/50*
*36]சேது/26*
*37]நடராசன்/10*
*38]அஞ்சலை/45*
*39]ஆண்டாள்/20*
*40]சீனிவாசன்/40*
*41]காவோி/50*
*42]வேதவள்ளி/10*
*43]குணசேகரன்/1*
*44]இராணி/4*

*குற்றவாளிகள்:-*👇

*1]கோபாலகிருஷ்ண'நாயுடு'.*
*2]பாலு'நாயுடு'.*
*3]கோவிந்தராஜ்'நாயுடு'.*
*4]இராமு'பிள்ளை'.*
*5]ராஜ்'நாயுடு'.*
*6]மூா்த்தி'நாயுடு'.*
*7]இராமதாசு.*
*8]சீனிவாச'நாயுடு'.*
*9]மூா்த்தி.*
*10]இராமனுஜம்.*
*11]இராமையா'நாடாா்'.*
*12]பாலு.*
*13]தாமோதரன்.*
*14]கோவிந்தராஜிலு'நாயுடு'.*
*15]கிருஷ்ணமூா்த்தி.*
*16]பொருமாள்சுவாமி.*
*17]காியய்யா'நாயுடு'.*
*18]முத்து'நாயுடு'.*
*19]கிருஷ்ணசுவாமி.*
*20]கோதண்டவம்'பிள்ளை'.*
*21]முருகைய்யாத்'தேவா்'.*

   *தஞ்சை கீழ்வெண்மனியில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து இந்நாளில் உயிர்நீத்த தியாகிகளுக்கு...*

*வீரவணக்கம்!*                   *வீரவணக்கம்!*

திங்கள், 23 டிசம்பர், 2019

மக்களே_நாடு



#மக்களே_நாடு

உலகின் மிகவும் அசுத்தமான நதி ஒரே வருடத்தில் அரசின் நேர்மையான உழைப்பால் மாற்றம் அடைந்துள்ளது. மக்களின் ஆரோக்கியத்தையும், இயற்கை சூழலையும் பாதுகாப்பதும் ராணுவத்தினரின் கடமை என்பதால் அரசு 7,000 ராணுவத்தினரை களமிறக்கியுள்ளது.

2000 மேலான ஆலைகளின் கழிவுகள் கொட்டப்பட்டதால் ஈயம், மெர்குரி, ஆர்சனிக் மற்றும் பிற நச்சுப் பொருட்கள் நீரில் கலந்து மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஆனது. நதியை சுற்றி வாழும் மக்கள் கழிவுகள் நிரம்பிய நீரை பயன்படுத்தியதால் உடல்நல பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர். பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டதால் நதியின் மேற்பரப்பு கூட தெரியாமல் பிளாஸ்டிக்கால் நிரம்பியது. Adidas, H&M போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கூட நதியில் கழிவுகளை மறுசுழற்சி செய்யாமல் கொட்டுகின்றன. இவ்வாறு நதியை சீரழித்த பல நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

500மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டு அசுர வேகத்தில் தற்போது சுத்தம்‌ செய்யும் வேலை நடந்து வருகிறது. மக்களுக்கு சேவை செய்ய 7,000 இந்தோனேசிய‌ ராணுவத்தினரும் முழுநேரப் பணியாக நதியை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். 40% பிளாஸ்டிக் கழிவுகள் நீக்கப்பட்டு அதிவேகமாக சுத்தமாகி வருகிறது. 120 மில்லியன் மரங்கள் நதியை சுற்றி நடப்பட்டுள்ளன. சுற்றி இருக்கும் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தியுள்ளார்கள்

"சிட்டிரம்" என்னும் 270 கிலோ மீட்டர் நீளமுள்ள நதி மேற்கு ஜாவாவில் இந்த நதியின் மாற்றம் நாம் நாசம் செய்ததை நாமே சரி செய்ய முடியும் என்பதற்கு எடுத்துங்காட்டாக உள்ளது. இந்தோனேசிய அதிபர் உலகின் சுத்தமான நதியாக மாற்றுவேன் என சபதம் எடுத்திருக்கிறார். இந்தோனேசிய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் அடுத்த 5 வருடங்களுக்கு நாங்கள் எந்த சண்டையிலும் ஈடுபாடு காட்டப்போவதில்லை. மக்களின் நன்மைக்காக நீர்நிலைகளை சீரமைப்பதில் பிஸியாக இருக்கிறோம் என கூறியிருக்கிறார்.

நாடு என்பது மக்களே. மக்களின் நல்வாழ்வும் ஆரோக்கியமுமே வளர்ச்சிக்கான அடிப்படை என்பதிலும், நாடு பெருமை கொள்ள வேண்டியதும் அதைக் குறித்துத்தான் என்பதிலும் இந்தோனேசிய அரசு தெளிவாக உள்ளது.

புதன், 18 டிசம்பர், 2019

வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட, இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு 75 தியாகிகளின் பெயர்கள்.

வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட, இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு 75 தியாகிகளின் பெயர்கள்.

யாருப்பா சுதந்திரம் வாங்கித் தந்தாங்க என்றால் காந்தியும் நேருவும் என்று சாதாரணமாகச் சொல்லும் நிலைமையை ஒரு வரலாற்றுப் புரட்டை நம்மிடம் புகுத்திவிட்டுப் போய்விட்டார்கள். ஆனால் வெள்ளையனை எதிர்த்து அவனுக்கு எதிராகப் போராடி தூக்கில் தொங்கியும் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியும் சித்ரவதைகளாலும் உயிர்துறந்த வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட, இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு 75 தியாகிகளின் பெயர்களை மட்டும் இங்கே பிரசுரித்துள்ளோம். இவர்கள் எந்த சதிவழக்கில் கொல்லப்பட்டனர் என்பதையெல்லாம் படித்துத் தெரிந்துகொள்ளும் பொறுமை இன்று யாருக்கும் இல்லை.

குறைந்தபட்சம் அவர்களின் பெயர்களையாவது ஒருமுறை ஒரேஒரு முறை உச்சரித்து அவர்களுக்கு நன்றி செலுத்தலாமே.

1) ஷேர் அலி 8.2.1872
2) வாசுதேவ் சாபேக்கர் 8.5.1899
3) பாலகிருஷ்ண சாபேக்கர் 8.5.1899
4) விநாயக் ரானடே 8.5.1899
5) பிரபுல்ல சக்ரவர்த்தி (சக்கி) 30.4.1908
6) குதிராம் போஸ் 11.8.1908
7) சத்யேந்திரநாத் போஸ் 10.11.1908
8. கனையாலால் 10.11.1908
9) சாருசந்திர ராய் 10.11.1908
10) திருநெல்வேலி கலவரத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வர் 13.3.1908
11) மதன்லால் திங்ரா 9.8.1909
12) கோபால் சென் 3.6.1908
13) ஆனந்த் லட்சுமணன் கான்காரே 19.4.1910
14) தேஷ் பாண்டே 19.4.1910
15) கார்வே 19.4.1910
16) வாஞ்சிநாதன் 17.6.1911
17) அமீர்சந்த் 8.5.1915
18) பாய் பாலமுகுந்த் 8.5.1915
19) அவத்பிகாரி 8.5.1915
20) வசந்த்குமார் பிஸ்வாஸ் 10.5.1915
21) கர்த்தார்சிங் 16.11.1915
22) விஷ்ணு கணேஷ் பிங்களே 16.11.1915
23) பாய் பக்ஷீஸ் சிங் கில்வாலி 16.11.1915
24) பாய் பி. சுரேய்ன்சிங் 16.11.1915
25) பாய் ஐ. சுரேய்ன்சிங் 16.11.1915
26) பாய் ஜகத்சிங் 16.11.1915
27) ஹர்ணாம்சிங் பட்டிகொராயா 16.11.1915
28) மேவாசிங் 16.11.1915
29) பண்டிட் சோகன்லால் பதக் ........... 1916
30) பாய் ஹர்ணாம்சிங் ........... 1916
31) சாலியாராம் ஷானேவால் ........... 1916
32) பசாவாசிங் பாரா ........... 1916
33) நாராயண்சிங் பல்லோ ........... 1916
34) நரஞ்சன்சிங் சங்கட்புரா ........... 1916
35) சச்சீந்திரநாத் சன்யால் ........... 1916
36) சாரு சந்திரபாசு 16.3.1909
37) சித்தப்பிரியாரே 16.3.1909
38) ஜதீந்திரநாத் முகர்ஜி 16.3.1909
39) கோபிநாத் சாகா 1.3.1924
40) ராம்பிரசாத் பிஸ்மில் 17.12.1927
41) ராஜேந்திரநாத் லஹரி 17.12.1927
42) அஷ்பகுல்லா 19.12.1927
43) ரோஷன் சிங் 19.12.1927
44) லாலா லஜபதிராய் 17.11.1928
45) சந்திரசேகர் ஆசாத் 27.2.1931
46) பகத்சிங் 23.3.1931
47) சுகதேவ் 23.3.1931
48) ராஜகுரு 23.3.1931
49) சூர்யாசென் 11.1.1934
50) தாரகேஸ்வர் 11.1.1934
51) தஸ்தகீர் 11.1.1934
52) சட்டார்சிங் 29.7.1944
53) நசீர் சிங் 29.7.1944
54) துர்க்காமால் 25.8.1944
55) ஹசாரா சிங் 25.10.1944
56) சர்தாரா சிங் 23.3.1945
57) நாகேந்திர சிங் 28.8.1943
58) கேசரிசந்த் சர்மா 3.5.1945
59) சரண்சிங் 28.8.1943
60) தல்பஹதூர் தாப்பா 3.5.1945
61) தல்பாரா சிங் 3.5.1945
62) சமன்சிங் 3.5.1945
63) எஸ்.இ. பரதன் 10.9.1943
64) ப்ரீதம் சிங் 10.9.1943
65) குருசரண் சிங் 10.9.1943
66) டி.பி. குமாரன் 10.9.1943
67) போடார்க் 10.9.1943
68) கர்த்தார்சிங் 4.12.1945
69) முகம்மது அப்துல் காதர் 10.9.1945
70) ராமுத்தேவர் 7.7.1944
71) ராமசாமி ஒன்றிரியார் 7.7.1944
72) அஜாய் சிங் 1945
73) சாகூர் அகமது 23.8.1943

இந்த பதிவில் தூக்கிலிடப்பட்ட கொல்லப்பட்ட தியாகிகளின் பெயர்கள் மட்டுமே உள்ளன. ஆயுள் தண்டனை பெற்றவர்கள் (அப்போது 25 ஆண்டுகள்) கடுங்காவல் தண்டனை பெற்றவர்கள் ( 7 ஆண்டுகள்) சித்ரவதைக்கு உள்ளானவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர் உதாரணத்திற்கு படத்தை பார்க்கவும்.


முஸ்லீம் மக்கள் தொகை

முஸ்லீம் மக்கள் தொகை

 1⃣ இந்தியா 30%
 2⃣ அல்பேனியா 75%
 3⃣ அல்ஜீரியா 99%
 4⃣ அங்கோலா 25%
 5⃣ அர்ஜென்டினா 2%
 6⃣ ஆஸ்திரேலியா 2.09%
 7⃣ அஜர்பைஜான் 93%
 8⃣ பஹ்ரின் 100%
 9⃣ பங்களாதேஷ் 85%
 1⃣0⃣ பூட்டான் 5%
 1⃣1⃣ பிரேசில் 0.6%
 1⃣2⃣ பர்மா 10%
 1⃣3⃣ கனடா 1.48%
 1⃣4⃣Cntral africn rpblc 55%
 1⃣5⃣ சீனா 11%
 1⃣6⃣ எகிப்து 94%
 1⃣7⃣ எதோபியா 65%
 1⃣8⃣ ஃபிஜி 11%
 1⃣9⃣France 7%
 2⃣0⃣ ஜார்ஜியா 11%
 2⃣1⃣ ஜெர்மனி 3.4%
 2⃣2⃣ கிரீஸ் 1.5%
 2⃣3⃣ குயினியா 95%
 2⃣4⃣ குயானா 15%
 2⃣5⃣ ஹாங்காங் 1%
 2⃣6⃣AFGHANISTAN'S%
 2⃣7⃣ இந்தோனேசியா 95%
 2⃣8⃣Iran 99%
 2⃣9⃣Iraq 97%
 3⃣0⃣ இஸ்ரியல் 14%
 3⃣1⃣ இத்தாலி 1%
 3⃣2⃣ ஜப்பான் 1%
 3⃣3⃣ ஜோர்டான் 95%
 3⃣4⃣ கென்யா 30%
 3⃣5⃣ குவைத் 89%
 3⃣6⃣ லெபனான் 70%
 3⃣7⃣ லிபியா 100%
 3⃣8⃣ மாலத்தீவுகள் 100%
 3⃣9⃣ மலேசியா 60%
 4⃣0⃣ மொரிஷியஸ் 19.5%
 4⃣1⃣ மயோட்டே 99%
 4⃣2⃣ நைஜீரியா 75%
 4⃣3⃣ ஓமன் 100%
 4⃣4⃣ பாக்கிஸ்தான் 97%
 4⃣5⃣ பிலிபைன்ஸ் 14%
 4⃣6⃣ கத்தார் 100%
 4⃣7⃣ ருமேனியா 20%
 4⃣8⃣ ரஷியா 18%
 4⃣9⃣ சவுதி அரபு 100%
 5⃣0⃣ சிங்கப்பூர் 17%
 5⃣1⃣ சோமாலியா 100%
 5⃣2⃣ ஸ்ரீ லங்கா 9%
 5⃣3⃣ சூடான் 85%
 5⃣4⃣ சிரியா 90%
 5⃣5⃣ தாசாகிஸ்தான் 85%
 5⃣6⃣ தான்சானியா 65%
 5⃣7⃣Thiland 14%
 5⃣8⃣ துனிசியா 98%
 5⃣9⃣ துர்கி 99.8%
 6⃣0⃣UAE 96%
 6⃣1⃣UK 2.5%
 6⃣2⃣USA 3.75%
 6⃣3⃣ உஸ்பெகிஸ்தான் 88%

 நபிமார்கள் தோன்றிய இடம்

 D ஆடம் (ஏ.எஸ்) - இலங்கை
 Oo நூஹ் (ஏ.எஸ்) - ஜோர்டான்
 Ho ஷோயிப் (ஏ.எஸ்) - சிரியா
 Ale சலே (ஏ.எஸ்) - லெபனான்
 B இப்ராஹிம் (ஏ.எஸ்) - பாலஸ்தீனம் மற்றும் ஈராக்கில் இறந்தார்
 S இஸ்மாயில் (ஏ.எஸ்) - சவுதி அரேபியா
 Ak யாகூப் (ஏ.எஸ்) - பாலஸ்தீனம்
 Ah யஹ்யா (ஏ.எஸ்) பாலஸ்தீனம்
 ஜகாரியா (ஏ.எஸ்) பாலஸ்தீனம்
 S இஷாக் (ஏ.எஸ்) - பாலஸ்தீனம்
 Us யூசுப் (ஏ.எஸ்) - பாலஸ்தீனம்
 Oo லூத் (A.S) - ஈராக்
 Y அயுப் (ஏ.எஸ்) - ஜோர்டான்
 Ood ஹூட் (ஏ.எஸ்) - யமென்
 Ab நாபி-முஹம்மது S.A.W) - சவுதி அரேபியா

 Prophet தீர்க்கதரிசிகளின் வயது

 D ஆடம் (ஏ.எஸ்) - 1000 வருடம்
 OoNooh (A.S) - 950 Yrs
 HoShoaib (A.S) - 882 Yrs
 Ale சலேஹ் (ஏ.எஸ்) - 586 வருடம்
 ஜகாரியா (ஏ.எஸ்) - 207 வருடம்
 B இப்ராஹிம் (A.S) - 195 Yrs
 Ula சுலைமான் (ஏ.எஸ்) - 150 வருடம்
 ✅ இஸ்மாயில் (A.S) - 137 Yrs
 Ak யாகூப் (ஏ.எஸ்) - 129 வருடம்
 Us மூசா (ஏ.எஸ்) - 125 வருடம்
 S இஷாக் (ஏ.எஸ்) - 120 வருடம்
 Ar ஹாரூன் (ஏ.எஸ்) - 119 வருடம்
 Us யூசுப் (A.S) - 110 Yrs
 ✅NABI முஹம்மது (S.A.W) - 63 ஆண்டுகள்


செவ்வாய், 17 டிசம்பர், 2019

#பணம்

#பணம்

1. சாவு வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம்.

ஆனால் நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்?
 

அப்படியாக  பரவும் அத்தகைய நாணயங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன.

2. அடுத்தபடியாக மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் , நாணயங்கள்.

 "காய்ச்சல் சளி தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1,  TB, இதர பால்வினை நோய்கள் ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் மருத்துவமனை மூலம் பரவுகின்றன.
   

இதனாலேயே சில மருத்துவர்கள் இன்று அந்தந்த சிகிச்சைக்கான  கட்டணத்தை தாங்கள் வாங்காமல் அவற்றை கம்பவுன்டர்களிடம் தர சொல்கிறார்கள்.

பின்னர் அவற்றை வங்கி சேமிப்புக்கணக்கில் கம்பவுண்டர்களையே deposit செய்யவும் சொல்கிறார்கள்.

3. சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் பரவும் ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள்.

அதிக அளவில் பாக்டிரியாக்கள் வாழக்கூடிய அந்த நோட்டுக்கள் இன்று நம் சட்டைப்பையில்.
 

இயற்கையாகவே இந்த துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள்.

ஆனால் அவர்கள் மூலம் பரவும் நோட்டுக்களை பயன்படுத்தும் நாம்..........?

4. இறைச்சி கடையில் பரிமாறப்படும் பணம். இறைச்சியின் ரத்தத்தில் வாழும் பாக்டிரிய்க்கள் மற்றும் தொற்று கிருமிகள் அப்படியே அந்த கடைக்காரர் மூலம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் பரவி இன்று நம் வீட்டு பீரோக்களில் பத்திரப்படுத்த படுகின்றன.

5. பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்தில் வாங்கப்படும் அத்தனை நாணயங்களும் நேரடியாக பேருந்து நடத்துனரிடம்
( bus conductors) தினந்தோறும் நேரடியாக தரப்படுகின்றன.


அவர் தரும் நாணயங்கள் , நம் வீட்டில் புழங்கவில்லை என்று உறுதி அளிக்க எவராலும் முடியுமா?

6. பாக்டிரியாக்களை பையில் வைத்து கொண்டு திரிகிறோம்.
பரவும் அபாயத்தை மறக்கிறோம்.

மற்ற வளர்ந்த நாடுகளில் கரன்சியின் வாழ்நாள் 5 வருடம் தான்.

அதற்கு பிறகு அவற்றை எரித்து விடுவார்கள்.

ஆனால் நாம்.....................?

இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் போகும்.

இதிலிருந்து தப்புவதற்கு நடுத்தர வர்க்கத்தினரால் இயலாத காரியம்.

ஆனால் நாம் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்படலாம்.
   

நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாயில் வைப்பதை தவிர்க்கவும்.
 

எச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கத்தை அறவே விடவும்.
 

அன்றாடம் கைகளை நன்கு dettol மூலம் கழுவவும்
   

கரன்சி மூலம் பரவும் பாக்டிரியாக்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்வோம். பாடுபடுவோம்.
 

இந்த குறுந்தகவலை
குறைந்த பட்சம்  நம் நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்வோம்.
 

சற்றே சிந்திப்போம் நம் சந்ததியினரை காப்போம்........!
       
நன்றி.
               
இப்படிக்கு:-       
*வங்கி காசாளர்..*

குடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றிய உலக நாடுகள் ஓர் அலசல்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றிய உலக நாடுகள் ஓர் அலசல்

1. நீங்கள் வட கொரியா எல்லையை சட்டவிரோதமாகக் கடந்தால், மூடிய சிறையில் உங்களுக்கு 12 ஆண்டுகள் கடின உழைப்பு விதிக்கப்படும்.

 2. நீங்கள் சட்டவிரோதமாக ஆப்கானிஸ்தான் எல்லையைத் தாண்டினால், நீங்கள் அங்கு சுடப்படுவீர்கள்.

 3. நீங்கள் சட்டவிரோதமாக சவுதி அரேபியா எல்லையை கடந்தால், நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.

 4. நீங்கள் சட்டவிரோதமாக சீன எல்லையைத் தாண்டினால், நீங்கள் கடத்தப்படுவீர்கள், மீண்டும் உங்களிடம் இல்லாததை நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள்.

 5. நீங்கள் கியூபா எல்லையை சட்டவிரோதமாகக் கடந்தால், நீங்கள் சரிந்து போகும் வரை நீங்கள் ஒரு அரசியல் சிறையில் அடைவீர்கள்.

 6. நீங்கள் சட்டவிரோதமாக பிரிட்டிஷ் எல்லையைத் தாண்டினால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், விசாரிக்கப்படுவீர்கள், சிறைக்கு அனுப்பப்படுவீர்கள், உங்கள் தண்டனைக்குப் பிறகு உங்கள் நாட்டுக்கு அனுப்பப்படுவீர்கள்.

இது போல் இன்னும் பல நாடுகளில் பல கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவில்


 7. நீங்கள் சட்டவிரோதமாக இந்திய எல்லையைத் தாண்டினால், நீங்கள் பெறுவீர்கள்:

 1. ரேஷன் கார்டு
 2. பாஸ்போர்ட்
 3. ஓட்டுநர் உரிமம்
4. வாக்காளர் அடையாள அட்டை
 5. கடன் அட்டை
 6. மானியத்தில் அரசு வீட்டுவசதி.
 7. வீடு வாங்க கடன்
 8. இலவச கல்வி 9. இலவச சுகாதார பராமரிப்பு
 10. ஊழல் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குரிமை !!!

 இந்தியா எங்கே செல்கிறது எதிர்கால இந்திய நாட்டு மக்கள் நிலை என்ன... ??

யாருக்கும் பாதிப்பைத் தராத , நேர்மையான குடியுரிமை சட்ட திருத்த மசோதா அவசியம் வேண்டும் என்று உணருங்கள்...

வெள்ளி, 13 டிசம்பர், 2019

ஜப்பானில் ஜாதி ஒழிக்கப்பட்டது எப்படி?

*ஜப்பானில் ஜாதி ஒழிக்கப்பட்டது எப்படி?*

100 ஆண்டுகளுக்கு முன்பும் ஜப்பான் நாட்டிலும் தீண்டாமை தலைவிரித்தாடியது...

கீழ் சாதியினர் என்ற வார்த்தைக்கு ஈடாக ஜப்பானிய மொழியில் 'புராக்குமீன்' (Burakumin) என்று கூறி சில மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

இந்தியாவில் இருப்பது போல அவர்களையும் "சேரி"களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே வைத்திருந்தனர். அவர்களை தொட்டால் தீட்டு, வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்ற அனைத்து சாதிய அடக்குமுறைகளுமே இருந்தது.. அவர்களுக்கு செருப்பு, தோல், சாக்கடை கழுவுதல் சார்ந்த தொழில்கள் மட்டுமே தரப்பட்டது...

1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பான் இரண்டு அணு குண்டுகளால் படுதோல்வியடைந்த பிறகு குறைவான மக்கள் தொகையில், பொருளாதாரமற்ற சூழ்நிலையில் திக்கு முக்காடியது... இனி ஜப்பான் அவ்வளவுதான், சரித்திரத்தின் பக்கங்களில் காணாமல் போய்விடும் என்று உலகம் உச்சுக்கொட்டியது..

காலங்காலமாக ஆண்ட பரம்பரையாக சொல்லிக்கொண்டு, நாட்டை உலகப்போரில் சீர்குலைத்ததற்கு மன்னர் "ஹிரோஹிட்டோ' (Hirohito) பொதுமன்னிப்பு கேட்டு ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகிக் கொண்டார்... அவருக்குப் பதில் போர்களில் பெரும் பங்கு வகித்த அவரது மந்திரி 'டோஜோ' (Tojo) போர் வெறியை தூண்டியதற்காக தூக்கிலிடப்பட்டார். (அப்போதும் மன்னர்களே தப்பினர், அவரின் எடுபுடிகளான மந்திரிகள் மாட்டிக்கொண்டனர்)

பின்னர் வந்த மக்களாட்சி முறை ஜப்பானிய மக்கள் மத்தியிலுள்ள சாதி பிரிவினைகளை முதலில் ஒழித்தது. ஜப்பான் வளர வேண்டுமென்றால் அனைவருமே 'ஜப்பானியர்' என்ற சொல்லைத் தவிர 'நான் சாமுராய் இனம், என்‌ பரம்பரை வீரப்பரம்பரை, நான் அவன் நான் இவன்' போன்ற வீண் பெருமைக்கு இனி இடமில்லை என்று திட்டவட்டமாக நின்றது...

பொது மக்களின் வேலை நேரத்தை அதிகரித்தது.. விடுமுறைகளை குறைத்தது... புராக்குமீன்களை ஊருக்குள் அழைத்தது... ஊரார் அனைவருக்கும் ஒரே கல்வியை தந்தது... சாதிய புனைப்பெயர்களை அழித்தது... உலக நாடுகளின் பண உதவியுடன் ஜப்பானியர் அனைவருமே தம் தம் திறமையை வைத்து ஏற்றுமதி தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் தந்தது... அமெரிக்காவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் தொழில் ரீதியாக கைகோர்த்து நின்றது... முதலாளித்துவமாக வெளியே தெரிந்தாலும் உள்ளே சிறந்த சோசலிச கொள்கை கொண்ட நாடாக பரிணமித்தது...

"ஜப்பானிய நாட்டில் தயாரிக்கப்பட்டது"(Made in Japan) என்றால் அதன் தரமே உலக நாடுகளின் தரத்தை விட உயர்ந்த தரமாக இருக்க வேண்டும் என்பதில் எள்ளவும் விட்டு கொடுக்கவில்லை... நாடு மெல்ல மெல்ல முன்னேறியது... இத்துபோன பழைய பெருமைகள் பேசி, எங்கள் சாதி, எங்கள் பரம்பரை, எங்கள் இனம் என்று முட்டுகட்டையாக கூவிய சில பழமைவாதிகளை ஈவிரக்கமின்றி கைது செய்து கடுமையாகக் தண்டித்தது... ஆன்மீகத்தைவிட அறிவியல்சார் நாத்திகத்தையே முதல் கொள்கையாக பாவித்தது...

கலப்பு சாதி திருமணங்களை வலுக்கட்டாயமாக்கியது.. சம்பந்தி வீட்டார் என்ன சாதி? நம் மேனேஜர் என்ன சாதி? சக பணியாளர் என்ன சாதி? எதிர் வீட்டுக்காரன் என்ன சாதி ? என்று மோப்பம் பிடிப்பதை அரசாங்கம் தண்டனை குற்றமாகவே மாற்றியது... சாதியை பற்றி பேசினாலே கடும் தண்டனை என்பதால் வெறும் 30 ஆண்டுகளில் கடை சாதியான புராக்குமீன் இரத்தமும் சாமுராய்களின் இரத்தமும் அனைத்து ஜப்பானியர் உடலிலும் ஓடியது..

விளைவு...??

இந்தியா இன்னமும் 100 ஆண்டுகளில் வளரமுடியாத சமூக வளர்ச்சியை பெற்று இன்று ஜப்பான் நாம் எட்ட முடியாத தூரத்தில் உயர்ந்து நிற்கிறது‌..

"புராக்குமீன்" என்ற வெறுப்பை ஒரு கடந்தகால கனவாக ஜப்பான் மக்களிடம் மறக்கடித்து சாதி பிரிவினைகளை வென்று உலக நாடுகளில் சிறந்த மக்கள் மேம்பாடான முதல் 10 நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது‌...

இந்தியா..??

வெள்ளி, 6 டிசம்பர், 2019

இனி IBPS/RRB/SSC தேர்வுகள் கிடையாது? ஒரே தேசம் ஒரே ஆட்தேர்வு திட்டத்தை அமலாக்கும் முனைப்பில் மத்திய அரசு


இனி IBPS/RRB/SSC தேர்வுகள் கிடையாது? ஒரே தேசம் ஒரே ஆட்தேர்வு திட்டத்தை அமலாக்கும் முனைப்பில் மத்திய அரசு

மத்திய அரசுப் பணிகளுக்கான ஆட்தேர்வில் மிகப் பெரும் அதிரடியாக தற்போது உள்ள ரயில்வே/வங்கி/மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளை இரத்து செய்து விட்டு “பொது தகுதித் தேர்வு” எனும் பெயரில் ஒரே தேர்வை நடத்த மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

தற்போது யுபிஎஸ்சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்திய குடிமைப் பணிகளான இந்திய ஆட்சியர் பணி, இந்திய அயலக பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி உள்ளிட்ட குரூப் ஏ மற்றும் குரூப் பி கெஜட்டட் அதிகாரிகள் பணிகளுக்கான தேர்வுகளை நடதரதுகிறது.

இதே போல எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம், மற்ற அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.

ரயில்வே தனியாகவும், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகள் தனியாகவும் தேர்வுகளை நடத்தி ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொள்கின்றன.

இந்நிலையில் தொழில்நுட்ப அறிவு சாராத இந்த பணிகளுக்கான பல்வேறு தேர்வு முறைகளை கலைத்து விட்டு ஒருங்கிணைந்த பொதுத் தகுதித் தேர்வு ஒன்றை பட்டப்படிப்பு, 12’ம் வகுப்பு மற்றும் 10’ம் வகுப்பு என பல்வேறு தகுதிகளில் நடத்த உள்ளது.

மேலும் இந்த பொது தகுதித் தேர்வில் நிலை 1, நிலை 2, நிலை 3, நிலை 4 என பல்வேறு படிநிலைகளும் இருக்கும். முதல் நிலையில் கணினியில் நடக்கும் பொது அறிவு, திறன் சார்ந்ததாக இருக்கும். அடுத்தடுத்த படிநிலைகளில் ஸ்கில் டெஸ்ட் உள்ளிட்டவை இருக்கும்.

இத்தேர்வுகளில் தேர்வர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் தேர்வருக்கும் மற்றும் ஆட்சேர்ப்பு நடத்தும் அமைப்புக்கும் பகிரப்படும். குறிப்பிட்ட சில பதவிகளுக்கு அதற்கான சிறப்புத் தகுதிகளை சோதிக்க வேண்டிய அவசியம் இருப்பின் அதற்கான தேர்வுகளை ஆட்சேர்ப்பு அமைப்புகளே மேற்கொண்டு இடத்தை நிரப்பிக் கொள்ளும்.

இத்தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெறும் நிலையில் அந்த தேர்ச்சியானது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும். அதற்குள் எந்தவொரு அரசுப் பணியையும் பெறவில்லையெனில் மீண்டும் பொது தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

ஒருவர் குறைவான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தால் தங்கள் மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ள அதிகபட்சம் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இது தொடர்பாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கையில், “இதன் மூலம் தேர்வர்கள் ஒரே தகுதிக்கு பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக தேர்வு நடத்தும்போது அதற்கான விண்ணப்பச் செலவுகள், கால விரயம் போன்றவை தவிர்க்கப்படும். அதே போல தேர்வு முகமைகளுக்கும் தேர்வை நடத்தி ஆட்சேரப்பை மேற்கொள்வதற்கான செலவுகள் குறையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைகளைப் வழங்க மத்திய பணியாளர் அமைச்சகம் தற்போது மத்திய அரசின் அனைத்து துறைகளையும்/ மாநில அரசுகள்/ யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய அரசு பணிகளுக்காக மட்டுமே தற்போது இது கொண்டுவரப்பட்டாலும், இந்த பொது தகுதித் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு மாநில அரசுகளும் ஆட்சேர்க்கையை மேற்கொள்ள விரும்பும்பட்சத்தில் உரிய வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தகுதித் தேர்வு எனும் ஒன்றை கொண்டு வந்தாலும், ஆட்சேர்ப்பை எஸ்எஸ்சி/ஆர்ஆர்பி/ஐபீபிஎஸ் போன்றவை தான் மேற்கொள்ளும். பொது தகுதித் தேர்வு என்பது அடிப்படைத் தகுதியாகக் கொண்டு குறிப்பிட்ட பணிகளுக்கு சிறப்புத் தேர்வுகள் தேவைப்படுமாயின் அதை அந்தந்த தேர்வு முகமைகளே நடத்திக் கொள்ளலாம் என்பது தான் இந்த புதிய அறிவிப்பின் சாராம்சம்.

இந்த பொது தகுதித் தேர்வைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கீழே கருத்துக்களாக தெரிவிக்கவும்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

“தனி பாஸ்போர்ட்.. தனிக்கொடி.. தனித் தீவு” - நித்யானந்தாவின் ராஜ வாழ்க்கை #நித்யானந்தா_கைலாசம்


“தனி பாஸ்போர்ட்.. தனிக்கொடி.. தனித் தீவு” - நித்யானந்தாவின் ராஜ வாழ்க்கை
#நித்யானந்தா_கைலாசம்

ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை நித்யானந்தா விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதற்கு ‘கைலாசம்’ என பெயரிட்டு தனிநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு விடுதியில் ஆசிரமம் அமைத்து இந்தியாவிலும், உலக நாடுகளிலும் உள்ள ஆன்மிக பக்தர்களை கவர்ந்தவர் நித்யானந்தா. ஆனால் பாலியல் வன்கொடுமை, பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் கட்டியது, சிறுமிகளை வசியப்படுத்தி வைத்திருந்தது என தொடர்ச்சியாக எழுந்த புகார்கள் காரணமாக நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.


தற்போது அவர் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வடார் நாட்டுக்கு சொந்தமான ஒரு தீவை விலைக்கு வாங்கி தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக தங்கமும், பணமும் பக்தர்களிடம் இருந்து வசூல் செய்து, பல கோடி ரூபாய் கொடுத்து தீவை வாங்கியுள்ளார் நித்தியானந்தா.

பெங்களூரு பிடதி ஆசிரமத்திலிருந்து உத்தரப்பிரதேசம் சென்று அங்கிருந்து காரில் நேபாளம் சென்றுள்ளார் நித்யானந்தா. அங்கிருந்து தனி விமானத்தில் தான் வாங்கிய தீவுக்கு, 2 பெண் சீடர்கள் மற்றும் தற்போது குஜராத்தில் புகார் கூறிய ஜனார்த்தனன் சர்மாவின் மூத்த மகளுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு படிப்படியாக ஆதரவாளர்கள் சுமார் 30 பேர் அந்த தீவுக்கு சென்றுள்ளனர். இதில் பெரும்பாலோனர் பெண்கள் என்று தெரிகிறது.


நித்யானந்தா வாங்கியிருக்கும் இந்தத் தீவுக்கு ‘கைலாசம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தீவை தனிநாடுபோல் நடத்த திட்டமிட்டு, அதற்கான முயற்சிகளை அமெரிக்காவைச் சேர்ந்த சட்டமைப்பு உதவியுடன் நித்யானந்தா பக்தர்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது. தனக்கு என தனிக்கொடி, தனி பாஸ்போர்ட், தனி இலட்சினை போன்றவற்றையும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் தகவல் கிடைத்த பிறகுதான் நித்யானந்தா மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக, மத்திய அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.


‘கைலாசம்’ தீவில் இலவச மருத்துவம், இலவசக் கல்வி வழங்கப்படும், யோகா, தியானம், ஆன்மிக மருத்துவம் வழங்கப்படும் என அதன் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு என்ற முறையில் ‘கைலாசம்’ அமைதியான இறையாண்மை உள்ள சேவை அடிப்படையில் செயல்படும் என்றும், தூதரக நெட்வொர்க் ஏற்படுத்தப்பட்டு உலக நாடுகளுடன் இணக்கமாக செயல்படுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்..!



தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்..!

காலையில்  எழுப்பிட அப்பா
வேண்டாம் - *Alarm app* -இருக்கு!

நடைபயிற்சிக்கு நண்பன்
வேண்டாம் - *step counter* இருக்கு!

சமைத்து தந்திட அம்மா
வேண்டாம்  - *zomato, swiggy app* இருக்கு!

பயணம் செய்ய பேருந்து
வேண்டாம் - *Uber,OLA app* இருக்கு!

விலாசம் அறிய டீ - கடைக்காரரும்,
ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம்
*Google Map* இருக்கு!

மளிகை வாங்க
செட்டியார் தாத்தா கடைக்கும்,
அண்ணாச்சி கடைக்கும்
போக வேண்டாம் - *Big Basket* இருக்கு!

துணி, மணிகள் வாங்க
கடைத்தெரு போக வேண்டாம் -
*Amazon , Flipkart app* இருக்கு!

நேரில் சிரித்து பேசிட
நண்பன் வேண்டாம் -
*What's up, facebook* இருக்கு!

கைமாறாக பணம் வாங்க
பங்காளியும்,அங்காளியும்
தேவையில்லை - *Paytm app* இருக்கு!

மற்றும் பல தகவலுக்கு நம்ம
*Google* டமாரம் இருக்கு!

இப்படி தனித்து வாழ்ந்திட
அனைத்தும் இருக்கு..
*App* என்னும் *ஆப்பு*.!!

_உள்ளங்கை நெல்லிக்கனியென நீ நினைக்க !_

_விரித்திருப்பதோ மீள முடியாத வலைதளம்.!_

_சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்!_

_விழித்தெழுந்து விடை கொடு..!_

*செல்லின அடிமைகளாய் இல்லாமல் உறவுகளோடும் சேர்ந்து நல்ல வலை பின்னுவோம்..!*

வருங்காலத்தை உணர்த்தும் / எச்சரிக்கும் / அறிவுறுத்தும் அருமையான பதிவு.

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொள்வர்.
_📖படித்ததில் பிடித்தது ..