வெள்ளி, 18 ஜனவரி, 2019

உயர் சாதி பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு என்பது மிகபெரிய ஏமாற்று மோசடி


உயர் சாதி பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு என்பது மிகபெரிய ஏமாற்று மோசடி

FC என்றாலே பிராமணர்கள் மட்டும் கிடையாது.உண்மைதான், அதே நேரத்தில், மத்திய அரசின் உயர் பதவிகள் & வேலைகளை 80% ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள், அனைத்து மாநில பிராமணர்கள் மட்டும் தான்... பிராமணர் அல்லாத பிற உயர் சாதிகள் கிடையாது.. அங்கு ஆதிக்கம் செலுத்துபவர்களின் பெயர்களை பார்த்தாலே தெரியும்.. ராய், ராவ், பட், ஐயர், ஐயங்கார், மேனன், முகர்ஜி, பேனர்ஜி, சேட்டர்ஜி, திரிபாதி, கோயல், தேஷ்முக், குல்கர்னி, தேஷ்பாண்டே, ஜோஷி, பரத்வாஜ், சின்ஹா, புரோஹித், சர்மா, உபாத்தியாயா, சுக்லா, ஆப்தே, பதக், தீட்சித், ஓஜா, மிஸ்ரா, திவாரி, கவுல், ஆச்சாரியா, பாண்டே, கோஸ்வாமி, சாஸ்திரி, பந்த், சாரி, காமத், மகாபாத்ரா, ஆப்தே, கோக்லே, வைத்யா, தியாகி, அன்கிஹோதரி... இது நீண்டுகொண்டே செல்லும்.. இவையெல்லாம், பல மாநிலங்கள் & மொழிகளை சேர்ந்த பிராமண சாதிகளின் பட்ட பெயர்கள்... இவர்கள் தான் மத்திய அரசின் உயர் பதவிகள் & வேலைகளை 80% ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள்.. அங்கே நாட்டுகோட்டை செட்டியாரோ, சைவ பிள்ளையோ கிடையாது..   

பிற முற்பட்ட சாதிகளான நாட்டுகோட்டை செட்டியார், சைவ வேளாளர், சைவ முதலியார், ரெட்டி, கம்மா, ஜாட், படேல், மராத்தா, குஜ்ஜர் போன்றவர்கள் இருகிறர்கள்.. ஆனால், முற்பட்ட பிரிவிலுள்ள எல்லா வகுப்புகளும் ஒரே சமூக & கல்வி நிலையில் கிடையாது.. உதாரணமாக, உயர் & உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய உயர் பதவிகளில் உயர் சாதியினர் 80% இருகிறார்கள் என்றால், இவற்றில் எத்தனைபேர் பிராமணர் அல்லாத பிற உயர் சாதியினர்??? மிக மிக குறைவு..

எனவே, பிராமணர்களுடன், பிற முற்பட்ட சாதிகளை ஒரே பிரிவாக சேர்த்து எத்தனை ஒதுக்கீடு கொடுத்தாலும், அத்தனையும் பிராமணர்களுக்கே செல்லும்.. முற்பட்ட பிரிவிலுள்ள மற்றவர்கள் நாக்கை தான் வழிக்க வேண்டும்.. ஏற்கனவே, அனைத்து மத்திய அரசு வேலை மற்றும் கல்விகளில் ஏறக்குறைய 65% சதவீதத்தை, மக்கள் தொகையில் வெறும் 5% கொண்டிருக்கும் வெகு சில உயர் சாதிகள் தானே ஆக்கிரமித்து இருக்காங்க.. அவர்களின் எண்ணிக்கையை விட பல பல மடங்கு அதிகமாக எல்லா வேலை & படிப்புகளில் இருந்துகிட்டு, இன்னும் இட ஒதுக்கீடு கேட்பது அநியாயமா இல்லையா??

எனவே மத்திய அரசு அறிவித்துள்ள, இதுவரை எந்த இடஒதுக்கீட்டு பட்டியலிலும் (SC/ST/MBC/BC/OBC) இடம் பெறாத உயர் சாதி பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு என்பது மிகபெரிய ஏமாற்று மோசடியாகும்.. அதேபோல, ஏழைன்னா எப்படி? மாச வருமானம் 66 ஆயிரதுக்குள்ள இருந்தா ஏழை.. இந்த கணக்குப்படி பாத்தா இந்தியாவில் இருக்கிற மக்கள் மக்கள் தொகையில் 90% சதவிகிதம் ஏழைகள் தான்.. அப்போ எப்படி 10% சதவீதத்தை எல்லோருக்கும் கொடுக்க முடியும்? அரசுகள் கையிலயும் வெறும் 5% சதவீத மக்களின் வருமான விவரங்கள்தான் அதிகாரபூர்வமாக இருக்கு.. நிலவரம் இப்படி இருக்கிறப்போ யாரை ஏமாற்ற இந்த நாடகம்.

1 கருத்து:

  1. மதிப்புக்குரியவருக்கு வணக்கம். தங்கள் கருத்து தவறு. 10% ல் எல்லாம் பிராமணர்களுக்கு போய் சேரும் என்பது கற்பனை. முற்பட்ட பிற ஜாதி நிச்சயம் பயன் பெறும். ஒன்றுமே இல்லாததற்கு ஒன்று கிடைத்துள்ளது என்பது உண்மை. இந்த ஒதுக்கீடு பிராமணர் அல்லாத ஏழைகளுக்கு கிடைத்த வாய்ப்பு .

    பதிலளிநீக்கு