வியாழன், 27 செப்டம்பர், 2018

பரியேறும் பெருமாள்


பரியேறும் பெருமாள் -  வெளியாகிறது. சில மாதங்களுக்கு முன்பே படத்தைப் பார்க்க வாய்த்துவிட்டாலும் அதிகாரபூர்வ வெளியீட்டுக்காகக் காத்திருந்தேன். எழுதத் துடித்த கரங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

இன்று மீண்டும் காண்கையில் மனம் அதிர்ந்து அதிர்ந்து அடங்கியது. என் நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது...தயவுசெய்து திரையரங்கு சென்று பரியனைப் பாருங்கள். உணர்வுபூர்வமாக உங்களை வென்றெடுப்பான் அவன். நீங்கள் எச்சாதியாய் இருந்தாலும், சாதியற்றவராய் இருந்தாலும், எம்மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும்!

 படம் நெடுகிலும் மனம் பரியனுக்காய் உருகுகிறது, நெகிழ்கிறது, கண்ணீர் விடுகிறது, ஆவேசப்படுகிறது. பொதுச்சமூகத்தை அவன் உரையாட அழைக்கிறான். அந்த அழைப்பைத் தவறவிடாதீர்கள்.

என்னைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு வெளியான படங்களில் மிகச் சிறந்த படம் இதுவே என்பேன்.

செல்வத்தின் (Mari Selvaraj) அரசியல் மீதும் கலையின் மீதும் எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு.

கலை உனக்கு அப்படி கைகூடியுள்ளது செல்வம். சட்டென்று உயரமாகிவிட்டாய் ஒரே படத்தின்மூலம்!! ஒரு சகோதரியாய் எனக்கு அதில் மிகுந்த பெருமை.  இந்த நேரத்தில் பேரன்பு பெருக்கெடுக்கிறது.

இப்படத்தை எழுதி உருவாக்கித் தந்த உனக்கும் தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்துக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்.

பரியன் பெருவெற்றி பெறட்டும். தென் தமிழ்நாட்டின் குரலாக இதுவரை ஒலித்த குரல்களுக்கிடையே, இதுவரை ஒலிக்காத, மிக வலுவான, இன்னொரு தரப்பின் குரல் பரியேறும் பெருமாளுடையது.

ஏற்கனவே victimized ஆக உணரும் தருணமொன்றில்  பார்க்க நேர்ந்துவிட்ட 'பரியேறும் பெருமாள்' அதிர்வலைகளை உண்டாக்கி வலியைக் கிளறிவிடவே செய்கிறான்.

பரியன் என்னவன். என் சகோதரன். என் நண்பன், என் காதலன். அவன் எல்லாமுமாய் நிற்கிறான். அவன் வெற்றி பெறுவதுதானே முறை?

பரியனும் செல்வமும் எங்கள் பொக்கிஷம்!! இச்சமூகத்தின் சொத்து.
-கவின் மலர்

#பரியேறும்_பெருமாள்_from_sep28
#பா_இரஞ்சித்
#நீலம்_productions
Mari Selvaraj

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக