வெள்ளி, 28 செப்டம்பர், 2018

டாக்டர்அம்பேத்கர் நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்? ஏனெனில்


#டாக்டர்அம்பேத்கர்
நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்?
ஏனெனில்

1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது
2) அதுதான் என்னை சூத்திரன் என்றது
3) அதுதான் என்னை வேசிமகன் என்றது
4) அதுதான் என் தாயை வேசி என்றது
5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது
6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது
7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது
8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது
9) அதுதான் என் நிழல் பட்டால் தோஷம் என்றது
10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது
11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது
12) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது
13) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது
14) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது
15) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது
16) அதுதான் என்னை நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது
17) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது
18) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது
19) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது
20) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது
21) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது
22) அதுதான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது
23) அதுதான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது
24) அதுதான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது
25) அதுதான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது
26) அதுதான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது
27) அதுதான் என் பாட்டன் முடி வளர்க்காதே என்றது
28) அதுதான் என் பாட்டன் அணிந்த முடிக்கும் வரி போட்டது
29) அதுதான் என் பாட்டியை நகை அணியாதே என்றது
30) அதுதான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது
31) அதுதான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது
32) அதுதான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது
33) அதுதான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது
34) அதுதான்; அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப் போக்கியது
35) அதுதான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது
36) அதுதான் என் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது
37) அதுதான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது
38) அதுதான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது
39) அதுதான் என்னைப் படிக்காதே என்றது
40) அதுதான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது
41) அதுதான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது
42) அதுதான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது
43) அதுதான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது
44) அதுதான் என்னை தகுதி திறமை இல்லை என்றது
45) அதுதான் என்னை ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது
46) அதுதான் என்னை ஓட்டலில் பெஞ்சில் அமராதே என்றது
47) அதுதான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது
48) அதுதான் என்னை சாக்கடை அள்ளு என்றது
49) அதுதான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது
50) அதுதான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது
51) அதுதான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது
52) அதுதான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது
53) அதுதான்  விவசாயம் பாவத் தொழில் என்றது

இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்தது. அந்த இந்து மதத்தை நான் எதிர்க்க எத்தனையோ காரணங்கள் இருக்க நான் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன்.

வியாழன், 27 செப்டம்பர், 2018

பரியேறும் பெருமாள்


பரியேறும் பெருமாள் -  வெளியாகிறது. சில மாதங்களுக்கு முன்பே படத்தைப் பார்க்க வாய்த்துவிட்டாலும் அதிகாரபூர்வ வெளியீட்டுக்காகக் காத்திருந்தேன். எழுதத் துடித்த கரங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

இன்று மீண்டும் காண்கையில் மனம் அதிர்ந்து அதிர்ந்து அடங்கியது. என் நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது...தயவுசெய்து திரையரங்கு சென்று பரியனைப் பாருங்கள். உணர்வுபூர்வமாக உங்களை வென்றெடுப்பான் அவன். நீங்கள் எச்சாதியாய் இருந்தாலும், சாதியற்றவராய் இருந்தாலும், எம்மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும்!

 படம் நெடுகிலும் மனம் பரியனுக்காய் உருகுகிறது, நெகிழ்கிறது, கண்ணீர் விடுகிறது, ஆவேசப்படுகிறது. பொதுச்சமூகத்தை அவன் உரையாட அழைக்கிறான். அந்த அழைப்பைத் தவறவிடாதீர்கள்.

என்னைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு வெளியான படங்களில் மிகச் சிறந்த படம் இதுவே என்பேன்.

செல்வத்தின் (Mari Selvaraj) அரசியல் மீதும் கலையின் மீதும் எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு.

கலை உனக்கு அப்படி கைகூடியுள்ளது செல்வம். சட்டென்று உயரமாகிவிட்டாய் ஒரே படத்தின்மூலம்!! ஒரு சகோதரியாய் எனக்கு அதில் மிகுந்த பெருமை.  இந்த நேரத்தில் பேரன்பு பெருக்கெடுக்கிறது.

இப்படத்தை எழுதி உருவாக்கித் தந்த உனக்கும் தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்துக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்.

பரியன் பெருவெற்றி பெறட்டும். தென் தமிழ்நாட்டின் குரலாக இதுவரை ஒலித்த குரல்களுக்கிடையே, இதுவரை ஒலிக்காத, மிக வலுவான, இன்னொரு தரப்பின் குரல் பரியேறும் பெருமாளுடையது.

ஏற்கனவே victimized ஆக உணரும் தருணமொன்றில்  பார்க்க நேர்ந்துவிட்ட 'பரியேறும் பெருமாள்' அதிர்வலைகளை உண்டாக்கி வலியைக் கிளறிவிடவே செய்கிறான்.

பரியன் என்னவன். என் சகோதரன். என் நண்பன், என் காதலன். அவன் எல்லாமுமாய் நிற்கிறான். அவன் வெற்றி பெறுவதுதானே முறை?

பரியனும் செல்வமும் எங்கள் பொக்கிஷம்!! இச்சமூகத்தின் சொத்து.
-கவின் மலர்

#பரியேறும்_பெருமாள்_from_sep28
#பா_இரஞ்சித்
#நீலம்_productions
Mari Selvaraj