செவ்வாய், 29 மே, 2018

நம் மாநிலத்தில் உள்ள ஆறுகளும் அவற்றை சீரழிக்கும் தொழிற்சாலைகள் பற்றி :



நம் மாநிலத்தில் உள்ள ஆறுகளும் அவற்றை சீரழிக்கும் தொழிற்சாலைகள் பற்றி :

தாமிரபரணி : மதுரா கோட்ஸ், சன் காகித ஆலை , சங்கர் சிமெண்ட் , கோலா , ஸ்பிக் உரத் தொழிற்சாலை, தாரங்கதாரா , டாக் ஆலை, கன நீர் ஆலை, அனல் மின் நிலையம் ஆகியவற்ற்றுக்கு ஆதாரமாக இருக்கிறது. இதன் கழிவுகள் ஆற்றைச் சீரழிக்கிறது.

நொய்யல் : திருப்பூர் நகரின் சலவை சாயப்பட்டறை முதலாளிகள் ஆலைக் கழிவுகள் முழுவதையும் நொய்யல் ஆற்றில் திறந்து விடுகிறார். கழிவு நீரில் உள்ள சல்ஃபர், சோடியம், காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் தண்ணீர் ஆகியவை காரணமாக விவசாயத்துக்கோ குடிநீருக்கோ பயன்படுத்த முடியாத அளவுக்கு தண்ணீர் நஞ்சாக்கப்பட்டு விட்டது.

பவானி : சவுத் இண்டியா விஸ்கோஸ் ஆலை ( தற்போது மூடப்பட்டது) 400 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து பயன்படுத்திவிட்டு அதே அளவு நீரை கழிவாக விட்டது. யுனைடட் ப்ளீச்சர்ஸ், டேன் இண்டியா , டி.டி.கே அட்டைத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலைகள் தங்கள் கழிவை கொட்டின.

கொடகனாறு : திண்டுக்கல் ஒட்டியுள்ள இந்த ஆற்றின் படுகையில் 80 தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் கழிவு நீய்ர் ஆற்றில் விடப்படுகிறது.

பாலாறு : பாலாற்றுப் படுகையில் 100 சிறிய , பெரிய தோல் தொழிறசாலைகளில் வெளியேற்றப்படும் கழிவு நீராகும். அன்றாடம் 450 லட்சத்தில் இருந்து 500 லட்சம் லிட்டர் கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுகின்றன். ஒரு நாளைக்கு 110 லட்சம் கிலோ தோல் பதனிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

- தண்ணீர் தாகத்திற்கா இலாபத்திற்கா ? புத்தகத்தில்

***********************************************

காவிரி : கெம்ப்ளாஸ்ட் , மேட்டூர் அனல் மின் நிலையம் , ஈரோட்டு சாயக் கழிவு , பெல் , சேஷசாயி பேப்பர் மில் , டி.என்.பி.எல் மற்றும் கரூரில் உள்ள தொழிற்சாலைகள் காவிரி ஆற்று நீரை கெடுத்தவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக