திங்கள், 17 பிப்ரவரி, 2020

அண்ணல் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்:


அண்ணல் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்:

ரமா, நீ எப்படியிருக்கிறாய் ரமா.

இன்று முழுக்க உன்னையும், யஷ்வந்தையும் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். உன்னைப்பற்றி எண்ணுகையில் உருக்குலைந்து போகிறேன். சமீப காலங்களில் என்னுடைய உரைகள் பெரும் விவாதங்களை எழுப்பியிருக்கின்றன. வட்ட மேசை மாநாட்டில் நான் நிகழ்த்திய உரைகள் நன்றாகவும், ஊக்கமூட்டுவதாகவும் இருந்ததாகச் செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன. அதற்கு முன்னால், இந்த மாநாட்டில் என்னுடைய பங்கு என்ன எனப் பிரதிபலித்துக் கொண்டிருந்தேன். நம் நாட்டின் ஒடுக்கப்பட்ட குடிமக்களின் முகங்கள் கண்முன் நின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இவர்கள் வலியிலும், துயரத்திலும் உழன்று அல்லல்படுகிறார்கள். தங்களுடைய துயரங்களுக்கு முடிவோ, விடிவோ இல்லையென்று நம்புகிறார்கள். நான் அதிர்ந்து போனேன் என்றாலும், இந்தத் தீமைக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருக்கிறேன். பெரும் அறிவுறுதியை பெற்றவனாக உணர்கிறேன். என்னுடைய மனதில் பல சிந்தனைகள் நிழலாடுகின்றன. இதயம் பல வகையான உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது.

நான் நம் வீட்டையும், உங்கள் எல்லாரையும் காணத்துடிக்கிறேன். உன்னை எண்ணி பிரிவுழல்கிறேன். யஷ்வந்தின் நினைவு வாட்டியெடுக்கிறது. என்னை வழியனுப்ப கப்பல் வரை வந்தாய். உன்னை வரவேண்டாம் என நான் சொல்லியும், எனக்குப் பிரியாவிடை கொடுக்க ஓடோடி வந்தாய். சுற்றியிருந்த மக்கள் என்னை ஆரவாரத்தோடு வழியனுப்பி வைப்பதை கண்கூடாகப் பார்த்தாய். நீ நன்றியுணர்வால் நிறைக்கப்பட்டவளாக, உணர்ச்சிவயப்பட்டவளாகக் காட்சியளித்தாய். உன்னுடைய உணர்வுகளைச் சொற்களைக்கொண்டு வெளிப்படுத்த இயலாமல் நின்றாய். நீ பேச நினைத்ததை எல்லாம் உன் விழிகள் தெரியப்படுத்திவிட்டன. நீ உதிர்க்கும் சொற்களைவிட உன்னுடைய மௌனம் பலவற்றைப் பேசியது. உன் நாவினில் சொற்கள் பூத்தன,எனினும், உன் விழித்துளிகளே அச்சொற்களின் முழுப்பொருளாகும். அந்தக் கண்ணீர்த்துளிகள் வாய்மொழி வெளிப்படுத்த இயலாதவற்றையெல்லாம் பேசின.

லண்டனின் காலை வேளையில் இந்த எண்ணங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது, அழுதுத்தீர்த்து விட வேண்டும் என்றிருக்கிறது. நான் கிடந்து தவிக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய் ரமா? நம் யஷ்வந்த் நலமா? அவன் அப்பா எங்கே என்று கேட்கிறானா? அவனுடைய மூட்டுவலி மட்டுப்பட்டிருக்கிறதா? நம்முடைய நான்கு குழந்தைகளை இழந்து நிற்கிறோம். யஷ்வந்த் மட்டுமே நமக்காக உயிர்த்திருக்கிறான். அவனே உன் தாய்மையின் முகம். அவனை நாம் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக்கொள் ரமா. யஷ்வந்திற்கு நிறையக் கற்பி. இரவு அவனை எழுப்பிப் படிக்க வை. என் தந்தை என்னை இரவில் எழுப்பிப் படிக்க வைப்பார். என்னைத் தவறாமல் எழுப்ப வேண்டுமென்பதற்காக அவர் தூக்கந்தொலைந்து விழித்திருப்பார். அவர்தான் எனக்கு இந்த ஒழுக்கத்தைப் பயிற்றுவித்தார். நான் படிக்க எழுந்ததும் அவர் உறங்கப்போய் விடுவார். இரவு போயும் போயும் எழ வேண்டுமா என எனக்கு ஆரம்பத்தில் சோம்பேறித்தனமாக இருக்கும். படிப்பதைவிடத் தூங்குவதே சுகமானது இல்லையா. ஆனால், இப்போது திரும்பிப்பார்க்கையில், உறக்கத்தை விடவும் கல்வியே வாழ்க்கைக்கு முக்கியமானதாக மாறியிருக்கிறது. இதற்கான பெரும்பாலான பாராட்டுகள் என் தந்தையைச் சேர வேண்டும். நான் படிப்பில் ஆர்வமிக்கவனாக இருக்க வேண்டும் என்பதற்காக என் தந்தை எண்ணற்ற தியாகங்கள் புரிந்தார். என் வாழ்வில் விடியல் மலர்வதற்காக அவர் அல்லும், பகலும் ஓயாமல் உழைத்தார். அவரின் உழைப்பின் கனிகள் தற்போது காய்த்துக்குலுங்குவதைக் காண்கிறேன். இன்று அதைக்குறித்து நான் பேருவகைக் கொள்கிறேன் ரமா.

ரமா, அதற்கு இணையாக யஷ்வந்தும் கல்வியில் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும். அவன் உள்ளம் புத்தகங்கள் மீது தீராத் தாகத்தைக் கொண்டிருக்குமாறு தூண்டிவிட வேண்டும். ரமா, பணம், ஆடம்பரம் ஆகியவற்றால் பயனொன்றுமில்லை. உன்னைச்சுற்றி அவற்றைக் கட்டாயம் கண்ணுற்றுக் கொண்டே இருப்பாய். இத்தகைய சுகங்களை நாடி மக்கள் ஓயாமல் அலைகிறார்கள். இந்த ஒற்றை இலக்கில் மட்டுமே இம்மக்களின் வாழ்க்கை தேங்கி விடுகிறது. அவர்கள் வேறு எந்த முன்னேற்றம், வளர்ச்சியையும் நாடுவதில்லை. இத்தகைய வாழ்க்கையில் நாம் திருப்தியடைந்து விடக்கூடாது ரமா. நம்மைச்சுற்றி வேதனையைத் தவிர வேறொன்றுமில்லை. வறுமை மட்டுமே நம்முடைய துணைவனாக இருக்கிறது. பிரச்சினைகள் நம்மைவிட்டு விலகுவதேயில்லை. அவமானம், வஞ்சிப்பு, ஏளனம் நம் நிழலைப்போலப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நம்மை இருட்டும், துயரக்கடலும் மட்டுமே சூழ்ந்திருக்கின்றன.

நாமே நம்முடைய மீட்பர்களாக இருக்க வேண்டும். நாமே நமக்கு வழிகாட்டியாக மாற வேண்டும். நாம் தேர்ந்தெடுத்த பாதையில் தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த வெற்றி நோக்கிய பாதையில் நாமே நடை போடுவோம். சமூகத்தில் நமக்கென்று இடம் எதுவுமில்லை. நமக்கான இடத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். நம் நிலைமை இப்படியிருப்பதால், யஷ்வந்த்துக்கு உயர்ந்த கல்வியை நீ வழங்க வேண்டுமென விரும்புகிறேன். அவன் முறையாக ஆடையணிவதை உறுதிசெய்வதோடு, சமூகத்தில் பண்புநலன்களோடு பழகவும் பயிற்றுவிக்கவும். நீ அவன் மூளையில் லட்சியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

உன்னைப்பற்றியே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். யஷ்வந்த் குறித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என எண்ணிவிடாதே ரமா. உன் வேதனையை நான் உணர்கிறேன். உதிரும் இலைகளைப் போல உன் உடல்நலம் தேய்வதையும், உன் உயிர் மரம் காய்ந்து சருகாவதையும் அறிவேன். ஆனால்,நான் என்ன செய்ய இயலும் ரமா? எப்போதும் விலக மறுக்கும் வறுமை ஒருபுறம் இழுக்கிறது, மற்றொருபுறம் என்னுடைய பிடிவாதமும், உறுதிமிக்கச் சபதமும் நிற்கிறது. அறிவைத் தேடியடைய வேண்டும் எனும் என்னுடைய சபதம்.

வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் அறிவுத்தேடலில் என்னை மூழ்கடித்துக்கொண்டு விட்டேன். என்னைத்தாங்கும் வலிமைமிக்கத் தூணாக நீயே இருக்கிறாய். என்னுடைய உலகத்தைக் கவனித்துக்கொள்கிறாய். உன் கண்ணீரைக்கொண்டு என் மனவுறுதியை வளர்த்தெடுக்கிறாய். இதனால்தான் எல்லையற்ற அறிவுப்பெருங்கடலில் எந்தத் தடையுமின்றி நான் ஊறித்திளைக்க முடிகிறது. நான் சத்தியமாகக் கொடுமைக்காரன் இல்லை ரமா. என் அறிவு வேட்கையைச் சளைக்காத தேடலின் மூலம் தணித்துக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்து திசைதிருப்பும் எதுவும் என்னைக் காயப்படுத்துகிறது. என் அமைதியை சீர்குலைத்து, கோபம்கொள்ள வைக்கிறது. எனக்கும் இதயம் உள்ளது ரமா, நான் பரிதவிக்கிறேன், ஆனாலும், புரட்சிக்கு என்னை ஒப்புக்கொடுத்திருக்கிறேன். இந்த உயரிய லட்சியத்திற்காக என் உணர்ச்சிகளைத் தீயிட்டு பொசுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இதனால், நீயும், யஷ்வந்தும் கூடச் சமயங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது உண்மை. ஆனால், இந்த மடலை ஒரு கையால் எழுதிக்கொண்டே இன்னொரு கரத்தால் உன் கண்ணீரைத் துடைக்கிறேன். நம்ம செல்ல "பட்லே"வை (யஷ்வந்த்) பார்த்துக்கொள் ரமா. அவனை அடிக்காதே. நான் அவனை அடித்திருக்கிறேன். அதை ஒருக்காலும் அவனுக்கு நினைவுபடுத்தாதே. அவன் உன்னுடைய பிரிக்கமுடியாத பகுதி.

இந்தச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மத, உளரீதியான பக்கச்சார்புகள், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அறவே வேரறுக்கும் வழியைக் கண்டடைய வேண்டும். இவை அன்றாட வாழ்வில் ஆழமாக ஊறிப்போயிருக்கின்றன. இவற்றை மொத்தமாக எரித்திட வேண்டும். மீண்டுவர முடியாதவகையில் புதைத்திட வேண்டும். இவற்றைச் சமூகத்தின் ஞாபகம், கலாச்சாரத்தில் இருந்தும் கூட அறவே அகற்ற வேண்டுமென விரும்புகிறேன்.

ரமா, இந்த மடலை படித்துக்கொண்டிருக்கும் போதே உன் விழிகளில் வழியும் நீரின் ஈரத்தை உணர்கிறேன். நீ திக்குமுக்காடிப் போயிருக்கிறாய் என எண்ணுகிறேன். உன் இதயம் கனத்துப்போயிருக்கும். உன் உதடுகள் நடுங்கிக்கொண்டிருந்தாலும், உன் உணர்ச்சிகளுக்கு நீ சொல்ல முயல்பவற்றைக் கடத்தும் வார்த்தைகள் கிடைக்கவில்லை. நீ அத்தகைய உடைந்துவிடக்கூடிய உணர்ச்சிகரமான நிலையில் இருக்கிறாய்.

ரமா, நீ என் வாழ்க்கையில் இல்லையென்றால் என்னாகி இருக்கும்? நீ என் துணையாக உடன்வராமல் போயிருந்தால் என் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும்? வாழ்க்கையில் சொத்து சுகமே முக்கியம் என எண்ணுபவளாக இருந்திருந்தால், என்னைத் தனியே தவிக்கவிட்டு போயிருப்பாள். யாராவது எப்போதும் பசியால் வாடவும், பம்பாயில் பசுமாட்டின் சாணியைத் தேடியலையவும், அதை வறட்டியாக்கி அடுப்பெரிக்கவும் யாராவது விரும்புவார்களா? வீட்டில் கிழிந்து போன துணிகளை ஒட்டுப்போட்டுக் கொண்டும், வறுமைக்கொடுமையில் நான் கொட்டும், 'ஒரே ஒரு வத்திப்பெட்டி தான் மாதம் முழுவதற்கும்' அல்லது 'இருக்கிற அரிசி,பருப்பு, உப்பை வச்சு மாசக்கடைசி வரை ஓட்டித்தான் ஆகணும்' முதலிய சொற்களைத் தாங்கிக்கொள்வார்கள்?

என்னுடைய ஆணைகளை நீ கடைபிடிக்காமல் முரண்டுபிடித்திருந்தால் என்னாகி இருக்கும்? நான் உடைந்து போன உள்ளத்தோடு, என் சபதத்தைக் காப்பாற்ற முடியாதவனாகப் போயிருப்பேன். முற்றிலும் நிலைகுலைந்து, எண்ணிப்பார்க்க கூட முடியாத அளவுக்கு என் கனவுகள் சுக்குநூறாகியிருக்கும். ரமா, என் வாழ்வில் நான் தேடுவதையெல்லாம் தொலைத்திருப்பேன். எல்லாமும், என்னுடைய எல்லா உள்ளக்கிடக்கைகளும் நிறைவேறாமல், காயப்பட்டுப் போயிருப்பேன். சிறு பதரைப்போலப் பொருளற்றவனாக இருந்திருப்பேன்.

உன்னையும், என்னையும் பார்த்துக்கொள். சீக்கிரம் ஊர் திரும்பிவிடுவேன். கவலைப்படாதே.

என்னுடைய நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

உன்னுடைய,
பீமாராவ்,
லண்டன்,
30 டிசம்பர் 1930

(அண்ணல் அம்பேத்கர் தன்னுடைய மனைவி ரமாபாய்க்கு எழுதிய இக்கடிதம் மூன்று மொழிகளைக் கடந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கரியர் யஷ்வந்த் மனோகர் எழுதிய 'ரமாய்' எனும் ரமாபாய் குறித்த வரலாற்று நூலில் மராத்தி மூலம் காணக்கிடைக்கிறது.இம்மடலை பரத் யாதவ் இந்தியில் மொழியாக்கம் புரிந்தார். அதனைத் தோஷ் ஆங்கிலத்திற்கு மொழிமாற்றினார்.)

தமிழில்: பூ.கொ.சரவணன்

புதன், 12 பிப்ரவரி, 2020

நமது நாட்டின் சமீபத்திய தரவு மற்றும் நிலைமை !

நமது நாட்டின் சமீபத்திய தரவு மற்றும் நிலைமை !

இந்து-முஸ்லீம், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் இந்தியா-பாகிஸ்தான், 370-காஷ்மீர் போன்றவற்றில் அனைவரும் விவாதத்தில் மும்முரமாக இருக்கும்போது, நம் சுற்றி நாட்டில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை கவனிக்க நாம் தவறிவிட்டோம்.
!! நமது நாட்டின் சமீபத்திய தரவு மற்றும் நிலைமையை பார்ப்போம் !

1 - Vodafon 50,000 கோடி இழப்பு.

2 - Airtel 23,000 கோடி இழப்பு

3 - BSNL 14,000 கோடி இழப்பு

4 - MTNL 755 கோடி இழப்பு

5 - BPCL 750 கோடி இழப்பு

6 - SAIL 286 கோடி இழப்பு

7 - AIR INDIA 4600 கோடி இழப்பு

8 - Spice Jet 463 கோடி இழப்பு

9 - Indigo 1062 கோடி இழப்பு

10 - BHEL 219 கோடி இழப்பு

11 - India Post 15,000 கோடி இழப்பு

12 - GMR Infra 561 கோடி இழப்பு

13 - YES Bank 600 கோடி இழப்பு

14 - Union Bank 1190 கோடி இழப்பு

15 - PNB Bank 4750 கோடி இழப்பு

16 - Axis Bank 112 கோடி இழப்பு

மேலே உள்ளதைத் தவிர

17 - Jet Airways மூடப்பட்டது.

18 - BSNL 54,000 அதிக வேலைகளை குறைக்கலாம்.

19 - HAL ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை.

20 - ஆட்டோ துறையில் 1 மில்லியன் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது.

21 - 30 முக்கிய நகரங்களில் விற்கப்படாத 12.76 லட்சம் வீடுகள்.

22 - Air Cell மற்றும் DOCOMO மூடப்பட்டுவிட்டது .

23 - JP Group கதை முடிந்தது.

24 - ONGC –மிகவும் இலாபகரமான நிறுவனம், இப்போது நஷ்டத்தை ஈட்டுகிறது.

25 - நாட்டிலிருந்து 36 பெரிய கடனாளிகளைக் காணவில்லை.

26 - ரூ .2.4 லட்சம் கோடி கடன் தள்ளுபடி -ஒரு சில நிறுவனங்களுக்கு.

27 - அனைத்து வங்கிகளும் பெரும் இழப்பை சந்திக்கின்றன. –

28 - நாட்டின் வெளிநாட்டு கடன் 500+ பில்லியன் டாலர்கள்.

29 - ரயில்வே துறைகளும் விற்பனைக்கு உள்ளது.

30 - பாரம்பரியங்கள் செங்கோட்டை உள்பட வாடகைக்கு விட இருக்கிறார்கள்.

31 - மிகப்பெரிய கார் தயாரிப்பாளர் மாருதி உற்பத்தியைக் குறைக்கிறது.

32 - ரூ. 55000 கோடி கார் தொழிற்சாலைகளில் கிடக்கிறது, வாங்க ஆள் இல்லை

33 - கட்டடம் கட்டுபவர்கள் பலர் மன உளைச்சலில் இருக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள், வாங்குபவர்கள் இல்லை. கட்டுமான பொருட்கள் செலவு உயர்வு (ஜிஎஸ்டி 18% முதல் 28% வரை ) காரணமாக கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளது.

34 - OFB நிறுவனமயமாக்கலின் கீழ் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் குடும்பங்கள் பாதிப்பு.

35 - பணமதிப்பிழப்பு காரணமாக மில்லியன் கணக்கான வேலையற்றோர்.

36 - 45 ஆண்டுகளில் அதிக வேலையின்மை.

37 - அதானிக்கு 5 விமான நிலையங்கள் விற்கப்பட்டன.

38 - அதிகபட்ச உள்நாட்டு தேக்கம்.
39 - HNI நபர்கள் இந்தியாவை விட்டு அதிகமாக வெளியேறுகிறார்கள் .

40 - Videocon திவாலானது.
41 - CCD நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தா பெரும் கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

42 - பார்லே-ஜி போன்ற புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனங்கள் அதன் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் விளிம்பில் உள்ளன. ...

43 - பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன, பல கிளைகள் உண்மையில் மூடப்பட்டுள்ளன, ஏராளமான ஏடிஎம்களின் அறைகள் மூடப்பட்டன
இவைகளை தவிர இன்னும் அதிகமாக கூட இழப்புகள் இருக்கலாம் ...
குறிப்பு: ஊடகங்களில் எதுவும் காட்டப்படவில்லை. இந்தியா Vs பாகிஸ்தான் மற்றும் சமீப காலம் வரை அமைதியுடன் நிம்மதியாக வாழ்ந்து வந்த இந்து Vs முஸ்லிம்கள் பற்றி ஊடகங்கள் மும்முரமாக விவாதிக்கின்றன. உண்மையான நிலவரத்தை மற்ற அனைவருக்கும் தெரியப்படுத்துவது நமது கடமை.
எனக்கு ஆங்கிலத்தில் வந்த செய்தியை கூகிளின் உதவியால் தமிழில் மொழி மாற்றம் செய்து பதிவிட்டுள்ளேன்
இப்போது நாம் பேங்கில் போட்ட பணத்திற்கும் ஆபத்து வர இருக்கிறது ..NRI மக்கள் வரி செலுத்த வேண்டி சட்டம் பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது .. இப்படி நாட்டின் நிலைமை இவ்வளவு மோசமாக சென்று கொண்டிருக்கும் வேளையில் CAA, NRC, NPR என மக்களிடத்தில் பீதியை கிளப்பி மத்திய மோடி அரசு மிக மோசமான மக்களை பிரித்து ஆளும் மதவெறி ஆட்சியில் தாண்டவமாடுகிறது ....இன்னும் மீதமுள்ள இவர்களின் ஆட்சி வருடங்களில் இவையெல்லாம் எங்க போய் முடியும் ? இன்னும் என்னென்ன மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டிவருமோ என இந்திய சாமான்ய மக்கள் மிகுந்த கவலைப்படுகிறார்கள் !

டைகர் கணேசன்
அரசியல் விமர்சகர்

திங்கள், 3 பிப்ரவரி, 2020

போராளித்தலைவரின் போராட்ட வரலாறு .

போராளித்தலைவரின் போராட்ட வரலாறு  . 

(#share  #everywhere )           
 -----------------------------------------
  🌟ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வெடித்த மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்து முன்னின்று நடத்தியது.(1983)

  🌟  தலித் மாணவப்போராட்டங்கள் மற்றும் அம்பேத்கர் இயக்கங்களின் போராட்டங்களில்  பங்கேற்று கைது.

 🌟 சென்னை  கடலோரப்பகுதிகளை சார்ந்த தலித் மற்றும் மீனவ இளைஞர்கள் ,மாணவர்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இளைஞர் நல இயக்கத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று வழி நடத்தியபோது அப்பொழுது அவ்வியக்கத்தின் சார்பில் ஈழவிடுதலைக்கு ஆதரவாக  மிதிவண்டி பேரணி, ஆர்ப்பாட்டங்கள்  கருத்தரங்குகள் நடத்தியது.(1985)

🌟  ஈழம் சென்ற இந்திய அமைதிப் படையின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து பல்வேறு போராட்டங்களையும் , ஆர்ப்பாட்டங்களையம் தொல் திருமாவளவன் அவர்கள் நடத்தினார்.(1986)

 🌟   புதியகல்விக் கொள்கை(நவோதயா) திட்டத்தின் நகலை சட்டக்கல்லூரி முன் எரித்ததிற்காக டாக்டர் எழுச்சித்தமிழர் கைது,

🌟திராவிடர் கழகம் நடத்திய ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான இரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று சென்னை சைதாபேட்டையில் டாக்டர் தொல் திருமாவளவன் கைதானார் .

  🌟 1986 இந்தி அழிப்பு போராட்டத்தில் பங்கேற்றார்.

  🌟 1987-ஈழத்தமிழர் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தை பாரிமுனைப்பகுதியில் தலைமையேற்று நடத்தினார் டாக்டர் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன்.

🌟விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை பொறுப்பேற்றபிறகு,  அரசின்விலைவாசி உயர்வை கண்டித்து 01.03.1993 அன்று  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வெறும் உலை போராட்டம் டாக்டர் தொல் திருமாவளவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

  🌟   மதுரை k புதூரில் ராமவர்ம நகரில் மதவெறி எதிர்ப்பு கூட்டம் டாக்டர் எழுச்சித்தமிழரால்  நடத்தப்பட்டது.(13.02.1994)

     🌟 மும்பையிலிருந்து தமிழர்களை விரட்டியடித்த சிவசேனாவை கண்டித்தும்,
அம்பேத்கர் பெயரில் வைக்கப்பட்ட நூலகம் எரிக்கப்பட்டதை கண்டித்தும் மரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை வைக்க மறுதலித்ததிற்கும்
இரயில் மறியல் போராட்டம் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களால்  நடத்தப்பட்டது.

  🌟1994   ல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50% மேல் இட ஒதுக்கீடு வழங்ககூடாது என்றது உச்சநீதிமன்ற தீர்ப்பு. தமிழ்நாட்டை பொறுத்தவரை 69%.
 மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமல்ல,  தாழ்த்தப்பட்டோருக்கு 10% சிறப்பு கூடுதல் வழங்க வேண்டும் என்றும் மதுரை அவனியாபுரம் அம்பேத்கர் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஏறத்தாழ ஏழு கிலோமீட்டர் நடந்தே முழக்கமிட்டு சென்று விமான மறியல் - கைது

 🌟1994 -இலங்கை அரசின் ஈழத்தமிழருக்கு எதிரான வன்முறையை கண்டித்து, இலங்கை அதிபர் சந்திரகா கொடும்பாவி எரிப்பு போராட்டம் - கைது.

 🌟  விடுதலைச்  சிறுத்தை களின் மாநிலப்பொருளாளர் முடக்கத்தான்  பாண்டியன் படுகொலையை கண்டித்து வழக்கை சிபிஐ விசாரிக்க கோரியும் தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் ,-கைது
     வேலூர் சிறையில் அடைப்பு

🌟நெல்லை தாமிரபரணியில் நடைபெற்ற படுகொலை தொடர்பான கோமதி நாயகம் அறிக்கை , தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக வெளியானதை கண்டித்து அறிக்கை யின் நகல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றது.

🌟 தமிழக அரசின் வேலை நிறுத்த தடைச்சட்டத்தை TESMA எதிர்த்து தோழமை நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றது,

🌟 பொடா சட்டத்தை எதிர்த்து தமிழகம் தழுவிய அளவில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றது.

 🌟 பாப்பா பட்டி , கீரிப்பட்டி ,உள்ளிட்ட ஊராட்சி களில்  தேர்தல் நடத்த வலியுறுத்தி அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்தியது.

🌟காவிரி நீர்ப்பிரச்சனை தொடர்பாக இந்திய பிரதமரை பதவி விலக கோரி வலியுறுத்தி உண்ணாநிலை அறப்போராட்டம் தல்மையேற்று நடத்தியது,

 🌟கூகையூர் கோவில் நுழைவுப்போராட்டாம் .

 🌟தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை தமிழில் படிக்காமல் ,தமிழை அவமதித்த முதலமைச்சர் ஜெயலலிதா வின் தமிழ் விரோத போக்கை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கருப்பு துணியால் முக்காடுபோட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது .இந்த போராட்டம் தமிழுக்கு விரோதமாக செயல்படும் ஜெயலலிதா  அரசின் முகத்திரையை கிழித்தெறிந்தது,

🌟புதுச்சேரி சோரப்பட்டு சேரியில் தீ வைத்த சாதிவெறியர்களை கைது செய்ய வலியுறுத்தி ,புதுச்சேரி  சட்டப்பேரவை முன்பு ஆர்ப்பாட்டம்.

 🌟 தமிழக அரசின் தாறுமாறான மின்கட்டண உயர்வை விலக்கிடக்கோரி கைவிடப்பட்டுள்ள ஒற்றை விளக்க இலவச மின்சார திட்டத்தை மற்றும் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் மீண்டும் நடந்த கோரி அரசு பொது மருத்துவமனையி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்.(27.02.2003)

 🌟   பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்தேசிய பெருந்தலைவர் பழநெடுமாறன்,வைகோ உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்யக்கோரி மூவேந்தர் பகுத்தறிவு பாசறையின் சார்பில்  நடந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தை துவக்கி வைத்தது.(03.03.2003)
 
  🌟 நூறு தமிழ் அறிஞர்கள் உண்ணாநிலை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் தமிழ்தேசிய தலைவர்கள் நெடுமாறன் , வைகோ உள்ளிட்டோரை விடுவிக்க கோரி நடந்த  போராட்டத்தை துவக்கி வைத்தார்,

  🌟  பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள பழ நெடுமாறன்,வைகோ உள்ளிட்டோர்  விடுவிக்க கோரி திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி சார்பாக நடந்த கண்டன கூட்டத்தில் .(29.03.2003)

 🌟2003 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே  தென்பானை கிராமத்தில் சேரிப்பெண் மாரியம்மாள் (16) சாதிவெறியர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

  🌟  மக்கள் உரிமைக்கூட்டமைப்பு சார்பில்  பொடாவை திரும்பபெற வலியுறுத்தியும் , பொடாவில் கைது செய்யப்பட்ட பழ நெடுமாறன்,வைகோ,சுபவீ,நக்கீரன் கோபால் ,பாவாணன் ,பரந்தாமன் ,தாயப்பன் ,சாகுல் அமீது, ஆகியோரை விடுவிக்க கோரி  உண்ணாநிலை அறப்போராட்டத்தில், (06.09.2003)

 🌟   தமிழக அரசின் உயிர்பலி தடை ஆணையை எதிர்த்து அனைத்து தலைநகரங்களிலும் விசிக ஆர்ப்பாட்டம்,(16.10.2003)

🌟 சென்னை சேப்பாக்கம் த்தில் ,இந்திய அரசு - சிங்கள அரசு இராணுவ ஒப்பந்த முயற்சியை கைவிட வலியுறத்தி எழுச்சித்தமிழர் தலைமையில்  உண்ணாநிலை போராட்டம்.(28.06.2005)

  🌟   திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டிக்கு  சாமி கும்பிடச்சென்ற குருவம்பட்டி சங்கரை தீட்டுபட்டதாக சொல்லி சாதிவெறியர்கள் மரத்தில் கட்டி  வைத்து அடித்து படுகொலை.மேலும்  கோட்டாத்தூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  ஒரு லட்சம் நட்ட ஈடு,  தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் ,(9.07.2005)

 🌟 காவிரி நீர்ச்சிக்கல் தீர்க்க,  காவிரிப்படுகை மாவட்டங்களை தஞ்சையில் ஒருங்கிணைத்து தொடர் முழக்க போராட்டம் டாக்டர் எழுச்சித்தமிழர் தலைமை.,

🌟  சிங்கள பேரினவாத அரசின் தமிழின விரோத போக்கை கண்டித்து  டாக்டர் தொல் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். (03.01.2006)

🌟    அமெரிக்க அரசை கண்டித்து  சென்னை உலகதமிழர் பேரமைப்பின் தலைவர் பழ,நெடுமாறன் அவர்களின் தலைமையில்  28.01.2006 அன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் எழுச்சித்தமிழர்.

 🌟 சென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் .(12.06.2006)

   🌟 சிங்கள இராணுவ வெறியாட்டத்தில் செஞ்சோலை பள்ளிச்சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விசிக சார்பில் உண்ணாநிலை அறப்போராட்டம் (17.08.2006.)

 🌟   மக்கள் மக்கள் தொகை அடிப்படையில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரி தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம் சென்னையில் பொ . செ தலைமையில்.(06.09.2006)

 🌟  உத்திரபிரதேசம், கான்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை யை சேதபடுத்தி அவமதித்தை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  டாக்டர் எழுச்சித்தமிழர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

  🌟  பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலையை சேதபடுத்திய சமூக விரோதிகளை கண்டித்து  சென்னை அரசு பொதுமருத்துவமணை எதிரில். கண்டன ஆர்ப்பாட்டம் 09.12.2006.

 🌟  சதாம் உசேன் படுகொலையை கண்டித்தும் , அமெரிக்க  இங்கிலாந்து படையினரை வெளியேற வலியுறுத்தி  விசிக சார்பில் சென்னை அரசு பொதுமருத்துவமணை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்.

 🌟   சதாம் உசேன் படுகொலையை கண்டித்து , ஆயிரம் விளக்கு மசூதி அருகே தமுமுக மற்றும் தமிழ்நாடு தவஹிதி ஜமா அத் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில்.(30.12.2006)

  🌟 கடலூர் மாவட்டம் கள்ளிப்பாடியில் தொடரும் சாதிப்படுகொடுமைகளை கண்டித்தும்,  சேத்துக்கொல்லை சுப்பிரமணியன் படுகொலையை கண்டித்தும்  சிதம்பரம் பெரியார் சிலை அருகில்  டாக்டர் தொல் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

  🌟 காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசாணையாக அறிவிக்க கோரி சென்னை அரசு  பொது மருத்துவமணை அருகில் டாக்டர் தொல் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

🌟   தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு படுகொலை செய்து வருகின்றனர் ,இதை கண்டுக்கொள்ளாமல் இருந்த இந்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

🌟  தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் வழங்ககோரியும் , ஆயுதபயிற்சி வழங்க கோரியும் , விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்(09.04.2007)

   🌟 தொகுதி மறுசீரமைப்பு குளறுபடிகளை கண்டித்து,  சென்னை பொதுமருத்துவமணை அருகில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.(04.06.2007)

 🌟   கொழும்பு வாழ் தமிழர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் சிங்கள அரசை கண்டித்து ஈழத்தமிழர்களுக்கு மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக வழங்க கோரி ஆர்ப்பாட்டம். (13.06.2007)

   🌟   தமிழகம் முழுவதும் கிராமப்புற கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களிலும் தாழ்த்தப்பட்டோர் நுழைவவதற்கு வழிபாடு செய்வதற்கு உரிமை வழங்கி தனிச்சட்டம் இயற்ற வேண்டும்  என்பதை வலியுறுத்தி விசிக சார்பில் தமிநாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம். சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன்பு  தலைவர் தலைமையில்.(17.07.2007)

🌟  முதல்வர் கலைஞர் அவர்களின் நாக்கையும் தலையையும் அறுக்க வேண்டும் என்று பேசிய வேதாந்தியின் கொடுஞ்செயலை கண்டித்து  முதன்முதலில் விசிக சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம்(.23.09.2007)

 🌟   திண்ணியம் தீர்ப்பை கண்டித்து எழுச்சித்தமிழர் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.(09.10.2007)

  🌟  அசாம் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் படுகொலையை கண்டித்தும் ,மலேசியாவில் வாழும் தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்தியும் சென்னை பொது மருத்துவமணை எதிரில் ஆர்ப்பாட்டம்,(29.11.2007)

 🌟  சிங்கள பேரினவாத அரசின் அறுபதாம் ஆண்டு சுதந்திர தினவிழாவுக்கு இந்திய தலைமை அமைச்சர் மாண்புமிகு மன்மோகன்சிங் அழைக்கப்பட்டநிலையில் எதிர்ப்பு அதிகமானது.விசிகவும் ,திக வும்  வேண்டுகோள் ஆர்ப்பாட்டம் நடத்தி யதன் விளைவாக மன்மோகன் சிங் கலந்துகொள்ள போவதில்லை என்று அறிவித்தார் ,(31.12.2007)

 🌟தலித்துக்கள் மீது ரவுடி முத்திரை குத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

 🌟 தாழ்த்தப்பட்ட பழங்குடியின  கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற 60% மதிப்பெண்  என்கிற நிபந்தனை யை  விதிக்கும் அரசாணையை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

  🌟 பட்டதாரி தமிழாசிரியர்கள் அரசு பணி கோரி  சேப்பாக்கத்தில் நடந்த அறப்போராட்டத்தை முடித்து வைத்தார்,(21.02.2008)

 🌟  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தியதை கண்டித்து விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்பாட்டம் , சென்னை மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு எழுச்சித்தமிழர் தலைமையில்.(20.02.2008)

🌟 தமிழ்நாட்டில் தமிழனத்திற்கு எதிராக இயங்கும் சிங்கள தூதரகத்தை அப்புறபடுத்த வலியுறுத்தியும் சிங்கள இராணுவத்தினரால் சட்டவிரோதமாக தாக்குதலுக்குள்ளாகும் அப்பாவி தமிழக மீனவர்களின்  பாதுகாப்பு ஆயுதம் வழங்ககோரியும் ,தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு ஆயுதம் வழங்ககோரியும் தமிழக மீனவர்களின் வாழ்வாதர உரிமையை மீட்டெடுக்க வும் கச்சத்தீவு மீட்க கோரியும், தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் சென்னையில்

   🌟 தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தாட்கோ மற்றும் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு திருப்பி செலுத்தப்படாமல் நிலுவையில் இருக்கின்ற அனைத்து கடன் தொகையையும் மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்யக்கோரி..(07.04.2008)

   🌟 09.05.2008 பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து சென்னை அரசு பொதுமருத்துவமணை எதிரில் ஆர்ப்பாட்டம்.
 (09.05.2008)

🌟 ஈழத்தமிழர்கள் குடியுரிமை சட்டத்திருத்தம் செய்ய வேண்டி யும் , ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் நிலம் வாங்ககூடாது வாங்கினாலும் புள்ளிவிவரங்கள் காவல்துறையினரிடம் கொடுக்க வேண்டும் என்ற தமிழக மற்றும் இந்திய அரசின் இத்தகைய தமிழின விரோத போக்கை கண்டித்து முதலில் கண்டணம் தெரிவித்து சென்னை அரசு பொதுமருத்துவமணை எதிரில் ஆர்ப்பாட்டம்,07.2008

 🌟 2008 தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக்கொலை, இதை கண்டித்து நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம்,

 🌟  இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கும் இந்திய அரசை கண்டித்து ,  சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் தமிழின உணர்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்...(03.08.2008)

 🌟   சிங்கள இனவெறியர்களுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில்  விசிக சார்பாக..(16.09.2008)

 🌟 2008 ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திக நடத்திய தொடர்வண்டி மறியல்.

 🌟ஈழத்தமிழர்கள் குடியுரிமை சட்டத்திருத்தம் செய்ய வேண்டி யும் , ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் நிலம் வாங்ககூடாது வாங்கினாலும் புள்ளிவிவரங்கள் காவல்துறையினரிடம் கொடுக்க வேண்டும் என்ற தமிழக மற்றும் இந்திய அரசின் இத்தகைய தமிழின விரோத போக்கை கண்டித்து முதலில் கண்டணம் தெரிவித்து சென்னை அரசு பொதுமருத்துவமணை எதிரில் ஆர்ப்பாட்டம்,

 🌟 2008 தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக்கொலை, இதை கண்டித்து நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம்,

 🌟  இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கும் இந்திய அரசை கண்டித்து ,  சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் தமிழின உணர்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்...(03.08.2008)

 🌟   சிங்கள இனவெறியர்களுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில்  விசிக சார்பாக.(16.09.2008)

 🐆 2008 ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திக நடத்திய தொடர்வண்டி மறியல்.

 🌟2008   ஈழத்தமிழர்களுக்காக இந்திய கம்யுனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணா நிலை அறப்போரில்.

🌟  ஒரிசாவில் கிறித்துவர்கள் மீது இந்துத்துவவாதிகள் கொலைவெறி தாக்குதலை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் சென்னையில் எழுச்சித்தமிழர் தலைமையில்.(23.08.2008)

🌟2008 ஈழத்தில் போர் நிறுத்தம் விசிக சார்பில் தமிழகமெங்கும் இரயில் மறியல்

 🌟  ஈழத்தில் போர் நிறுத்த வலியுறுத்தி அனைத்துக்கட்சி சார்பாக நடந்த தமிழர் சங்கிலிப்போராட்டத்தில் எழுச்சித்தமிழருடன் அய்யா நல்லக்கண்ணு, ஆசிரியர் வீரமணி,(24.11.2008)

🌟  ஈழத்தில் போர் நிறுத்தக்கோரி திரைப்பட தென்னிந்திய நடிகர்கள் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் (01.11.2008)

🌟  திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பு
(05.11.2008)

🌟  சின்னத்திரை கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் (09.11.2008)

🌟 இ,கோட்டைப் பட்டியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும் , புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி கார் தாக்கப்பட்டதை கண்டித்தும் விசிக சார்பில் தொடர் முழக்க போராட்டம் (10.11.2008)

🌟  இந்திய அரசு போரை நிறுத்த மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக நடைபெற்ற உண்ணா விரத போராட்டம்( 06.11.2008)

🌟  தொழிலாளர் விடுதலை முன்னனி சார்பில் நடைபெற்ற உண்ணா விரத போராட்டத்தில் பங்கேற்பு(11.11.2008)

🌟  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர்கழகம் சார்பில்நடைபெற்ற பேரணியில் பங்கேற்பு,(18 .11.2008)

🌟  போரை நிறுத்த வலியுறுத்தி இளைஞர் மனிதநேய எழுச்சி அறக்கட்டளை சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி,இப்பேரணியை எழுச்சித்தமிழர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.(03.12.2008)

🌟   சென்னை சேப்பாக்கத்தில் அரவாணிகள் நடத்திய உண்ணாநிலை அறப்போரில் பங்கேற்பு,(08.12.2008)

🌟   ஈழத்தில் அழிவின் விளிம்பில் ஐந்து இலட்சம் தமிழர்கள் நலன் கருதி இந்திய அரசு இனவெறிப்போரை நிறுத்த வேண்டும் என்றும் அமைதி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று 15.01.2009 முதல், மறைமலைநகரில் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்

🌟 2009 ஈழத்தமிழர்களுக்காக முற்போக்கு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ,

🌟  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு உடனடியாக போரை நிறுத்தக்கோரி செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி  மாணவர்கள் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாநிலை அறப்போரில்  ,(23.01 .2009)

🌟 2009 ஈழத்தில் போர் நிறுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஊர் ஊராய் மக்களை உசுப்பிய சிறுத்தைகளின் நாம் தமிழர் நடைபயணம்,

🐆 2009 இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய மனிதச்சங்கிலி போராட்டத்தில் ..

🌟2009 இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய கறுப்புக்கொடியேந்தி கண்டன பேரணியில் ..

🌟  செந்தட்டி ஈசுவரன் , பரமசிவம் படுகொலை கண்டித்தும் ,குண்டர் தடுப்புச்சட்டம் , தேசிய பதுகாப்புச்சட்டங்களில் கைது செய்யப்பட்ட 26 விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் இயக்குநர் சீமான் , கொளத்தூர் மணி , நாஞ்சில் சம்பத் ஆகியோரை விடுதலை ச்செய்யக்கோரி தமிழகம் முழுவதும் விசிக சார்பாக ஆர்ப்பாட்டம், எழுச்சித்தமிழர் தலைமையில் சங்கரன்கோயிலில் ஆர்ப்பாட்டம்.(17.03.2009)

 🌟 நச்சுப்புகை வீசி தமிழனத்தையே அழித்தொழிக்கும் சிங்கள இனவெறியன் இராஜபாக்சவை கண்டித்து விசிகசார்பில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் , சென்னையில் தலைவர் தலைமையில்.(09.04.2009)

 🌟  சிங்கள கொடுபாதக செயலை கண்டித்தும் ,போரில் பலியான அப்பாவி பொதுமக்களுக்கும் ,களப்பலியான தளபதிககளுக்கும் வீரவணக்கம் செலுத்துகின்ற வகையில் மிக்ப்பெரிய அளவில் அமைதிப்பேரணி..(23.05.2009)

🌟 ஈழத்தமிழர்களை பாதுகாக்க கோரி சிங்கள இனவெறியாட்டத்தை கண்டித்தும் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டார்.(25.05.2009)

🌟   பாலாற்றின் குறக்கே அணை கட்ட ஆந்திர அரசுக்கு  அனுமதி வழங்கிய இந்திய அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் ,.(24.06.2009)

🌟   லிபரான் கமிசன் அறிக்கை யை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வலியுறுத்தியும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு (11.07.2009)

🌟 இருபது ஆண்டுகளாக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலைசெய்ய சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.(29.07.2009)

🌟   இராஜபாக்சே சகோதரர்களை போர்குற்றவாளிகளாக அறிவித்திடவும் , இலங்கை மீது பொருளாதாரத்தடை விதித்திடவும் சென்னை அரசு  பொது மருத்துவ மணை எதிரில்.
(22.10.2009)

🌟  வீட்டு மனைப்பட்டா கேட்டும் அதற்காக தமிழக அரசு ஆணையம் நியமிக்க வேண்டும் என்று சென்னை அரசு பொதுமருத்துவமணை எதிரில் ஆர்ப்பாட்டம்14.12.2009

🌟 2010 வேலூர் கோட்டைக்குள் உள்ள மசூதியில் இசுலாமியர்களுக்கு தொழுகை நடத்த உரிமை மறுக்கப்படுவதை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இசுலாமிய சனநாயகப் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் கைது

🌟   கல்லூரி விடுதிகளின் அவலநிலையை கண்டித்து  விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பாக சென்னை அரசு பொது மருத்துவமணையில் ஆர்ப்பாட்டம்.(20.02 .2010)

🌟   பெட்ரோல் டீசல்ஷாவிலை உயர்வை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் (05.03.2010)

🌟  மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாளை தமிழகத்தில் சிகிச்சை அளிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய இந்திய அரசின் போக்கை கண்டித்து விசிக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்,(21.04.2010)

🌟    சிங்கள இனவெறியர் இராஜபாக்சே வருகையை  கண்டித்து தடையை மீறி எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம் -கைது (08.06.2010)

🌟 2010  சத்துணவு அமைப்பாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள் , பணியிடங்கள் இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்

🌟  டாஸ்மாக்  ஊழியர்கள்  பணி நிரந்தர செய்யக்கோரி தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத் தொழிலாளர் விடுதலை முன்னனி சார்பாக  நடைபெற்ற உண்ணாநிலை அறப்போராட்டம் சென்னை காயிதேமில்லத் நினைவிடம் பின்புறம் நடைப்பெற்ற அறப்போராத்தை முடித்துவைத்தார்,(26.08.2010)

 🌟   நெய்வேலியில் நிலக்கரி  நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர் ஊதிய உயர்வை வலியுறத்தியும் , ஒரு மாதத்திற்கு மேல் நடத்தி வந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,(18.10.2010)

🌟  2010தலித் மக்கள்  மீது தொடரும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்து ஆர்பாட்டம்

 🌟   தமிழகத்தால்  மழை வெள்ளத்தாதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட நிதியாக 2000 கோடி வழங்க கோரி இந்திய அரசை வலியுறுத்தி சென்னை அரசு பொது மருத்துவமணை எதிரில் ஆர்ப்பாட்டம் (07.12.2010)

🌟  சிங்கள தூதரகத்தை அப்புறப்படுத்தக்கோரி சிறுத்தைகள் முற்றுகை போராட்டம்( 25.01.2011)

🌟  பொதுத்துறை ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்த அரசு ஊழியர் அய்க்கிய பேரவையின் சார்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் (28.01.2011)

🌟   தொழிலாளர்களை பழிவாங்கும் இம்காப்ஸ் நிறுவனத்தை கண்டித்தும், தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் இராமதாசை கண்டித்தும் , பாதிக்கப்பட்ட தொழிளாளர்களுக்கு மீண்டும் பணி நியமனம் கிடைத்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்(03.03.2011)

🌟 2011 கம்பளி மேடு சுப்ரமணியன் படுகொலையை கண்டித்தும் , பரளிபுதூர் சாதி வெறியாட்டத்தை கண்டித்தும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்

🌟 2011 தமிழக மீனவர்களை கடத்தி வருகின்ற சிங்கள அரசை கண்டித்து  ஆர்ப்பாட்டம்

🌟 இராஜபாக்சே செய்தது போர்க்குற்றம் மட்டுமல்ல இனப்படுகொலை இதை கண்டித்து ஆர்ப்பாட்டம்  (01.05.2011)

🌟 இன்ப்படுகொலை குற்றவாளி இராஜபாக்சே கும்பலுக்கு அனைத்துலக நீதிமண்றத்தில் தண்டனை வழங்க வலியுறுத்தி விசிக சார்பாக மாபெரும் கையொப்ப இயக்கம் என்று அறிவித்து கல்லூரி வாசல் , இரயில் நிலையங்கள் , பேருத்து நிறுத்த நீதிமன்ற வளாகங்களில் எழுச்சித்தமிழர் கையொப்பம் பெற்றார் .(12.07.2011)
 
🌟  நெல்லை மாவட்டம் தாழையூத்து ஊராட்சி  மன்றத்தலைவராக கிருஷ்ணவேணி பொறுப்பேற்றது முதல் சாதிவெறியர்கள் தொடர்ந்துகொடுமைபடுத்தியது மட்டுமல்ல கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளதை கண்டித்து விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் உடன் ஜான் பாண்டியன் அவர்களும் அவருடைய கட்சி தொண்டர்களும் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்(23.07.2011)

🌟 பேரறிவாளன் , சாந்தன் , முருகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதுவிசிக சார்பில் ஆர்ப்பாட்டம்  19.08.2011 சென்னை  தலைவர் தலைமையிலும் , 22.08.2011 தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது,

🌟  இந்தியா முழுவதும் முள்ள அணு உலைகளை மூட வேண்டும் என்று இடிதாங்கி கிராமத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.(21.09.2011)

🌟 பரமக்குடி படுகொலை தொடர்பாக   மையப்புலணாய்வு விசாரணை கோரி சென்னை மற்றும் மதுரையில்(20.09.2011) யில் சிறுத்தைகள் சார்பாக ஆர்ப்பாட்டம்

🌟  சாந்தன் முருகன் , பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரின் தூக்குத்தண்டணையை இரத்துசெய்யக்கோரி ஊடகவியாலாளர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தை முடித்து வைத்தார்,(19.10 .2011)

🌟  பால்விலை , பேருந்து கட்டணம் மற்றும் மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து விசிக சார்பில்ஆர்ப்பாட்டம் (21.11.2011)

🌟  முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த வற்புறுத்தியும் தமிழகத்தை சார்ந்த நாடாளுமன்ற உறப்பினர் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காந்திசிலை அருகே ஆர்ப்பட்டம் நடைபெற்றது,(29.11.2011)

🌟  முல்லைப்பெரியாறு அணை உரிமையை காக்க மூனாறு தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை மீட்க தேனியிலிருந்து குமுளியை நோக்கி விசிக சார்பாக நடைபயணம்,(16.12.2011)

🌟  திண்ணியத்தை தொடர்ந்து திருவக்கரையிலும் மனிதன் வாயில் மனித கழிவை திணித்த காட்டுமிராண்டித்தணத்தை கண்டித்து வானூரில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்-2012

🌟  தானே புயல் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு நிதி பூற்றுத்தர முயற்சிக்காக காங்கிரஸ் நடுவன் அமைச்சர்கள் பதவிவிலக வேண்டும் என்று வலியுறுத்தி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம், (16.02.2012)

🌟  சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை இந்தியாஆதரிக்க வலியுறுத்தி  சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரில்  விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்,(05.03.2012)

🌟 2012  மொஞ்சனூரில் அருந்ததியர்க்கு சுடுகாட்டுப்பாதை தடை, வடுகம் , பொட்டிப்ரெட்டிப்பட்டி , துத்திக்குளம் , ஜேடர் பாளையம் கிராமங்களில்  சாதிய வன்கொடுமைகள்  நிறைந்த நாமக்கல் மாவட்டத்தை அறிவிக்க கோரி  சிறுத்தைகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம்

🌟  தமிழக அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெற கோரி விசிக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் , அரியலூர் மாவத்தில் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்றது.05.04.2012

🌟  2012 இலங்கை தம்புள்ள நகரில் மசூதி இடிப்பு சிங்கள இன வெறி அரசை கண்டித்து சென்னையில் விசிக சார்பாக இலங்கை தூதரம் முற்றுகை , எழுச்சித்தமிழர் தலையில் 500 க்கு மேற்பட்டோர் கைது

🌟  ஆந்திராவில் ஐவர் படுகொலை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்.(20.07.2012)

🌟    மதுரையில் புரட்சியாளர் சிலை உடைத்தை கண்டித்தும்,  அதே இடத்தில் புரட்சியாளர் சிலைக்கு வெண்கல சிலை நிறுவவேண்டும் என்று கோரியும் , மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் .(10.08.12)

🌟  கூடங்குளம் மக்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து  சென்னை யில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்.(11.09.2012)

🌟   சிங்கள இனவெறியன் இராஜபாக்சே வாரொகையை கண்டித்து இலங்கை தூதரகம்ஜாமுற்றுகை எழுச்சித்தமிழர் தலைமையில் 1000 பேர் கைது.
(21.09.2012)

🌟  காவிரி நீர் உரிமை தமிழினத்தின் வாழ்வுரிமை அதனை களமிறங்கி போராடா காப்பது நம் உரிமை என்ற அறைகூவலை முன் வைத்து  ஊர்தி பயணம்.(4.10.2012)

🌟  நாமக்கல் மாவட்டம் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு தலித் மாணவி படுகொலையை கண்டித்து சென்னை நினைவரங்கம் முன்பு தலித் மாணவ- மாணவியர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டனக்குரல் எழுப்பினார்.18.10.2012

🌟  தர்மபுரியில் நடைபெற்ற சாதிவெறியாட்டத்தை கண்டித்து இதனை சிபிஐ விசாரிக்க கோரியும் ,சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்.19.11.2012

🌟  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர்கள் , ஊழியர்கள் பாதிக்கும் வகையில் ஆள்குறைப்பு , ஊதியகுறைப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சிதம்பரத்தில் நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்துக்கொண்டார்.25.11.2012

🌟  பெண்களுக்கு எதிராக நாடெங்கும் தொடரும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் , மகளிர் பாதுகாப்புச்சட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ,தற்காப்ப பயிற்சி கட்டாயமாக்க வேண்டும் ,என்று இந்திய அரசுக்கு வலியுறுத்தி  மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்,(  27.12  .2012 )

🌟  வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும் , டெல்டா பாசனப்பகுதியிலிருந்து நீக்கப்பட்ட 32 கிராமங்களை மீண்டும் அதே பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் சிதம்பரத்தில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்,(31.12.2012)

🌟  சிங்கள இன வெறியன் இராஜபாக்சே வருகையை கண்டித்து டெசோ அமைப்பின் சார்பில் திமுக தலைமையில் கருப்புடை அணிந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ..(04.02.2013)

🌟 2013 சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான ஐ. நா தீர்மானத்தை  நிறைவேற்ற வலியுறுத்தி டெசோ அமைப்பில் மாநிலம் தழுலவிய பொது வேலை நிறுத்தம் , சாலை மறியலில் ஈடுபட்ட எழுச்சித்தமிழர் உள்ளிட்ட டெசோ தலைவர்கள் கைது.

🌟  இலங்கையில் தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றத்தை தடுக்க வேண்டும் என்றும் , காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று  வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் டெசோ அமைப்பில் ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்றது .(08.08.2013)

🌟   இலங்கையில் நடைபெறும்  காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று ,கச்சத்தீவை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் ,பெட்ரோல் டீசல் விலையை திரும்பபெற வலியுறுத்தியும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் . (7.09.2013)

🌟 .காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் ,(5.11.2013)

🌟  காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்றதை கண்டித்து தமிழகம் முழுவதும் விசிக சார்பில் இரயில் மறியல் 25000 பேர் கைது.15.11. 13

🌟2014 அரசியல் ஆதாயத்திற்காக புரட்சியாளர் சிலையை உடைத்தும் அவமதித்தும், சேரிகளை தாக்கியும் ,சாதிவெறியாட்டம் நடத்தி வரும் கும்பலுக்கு எதிராக புதுவையில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

🌟2014 உத்திரபிரதேசத்தில் தலித் சிறுமிகள் இருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

🌟 இனப்படுகொலை குற்றவாளி சிங்கள அதிபர் இராஜபாக்ஸே ஐ.நா வில் பங்கேற்று உரையாற்றுவதை கண்டித்தும் அதனை தடுக்க இந்திய அரசு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம்.(23.09.2014)

🌟 பால்விலை உயர்வை தமிழக அஇசு திரும்ப பெற வலியுறுத்தி விசிக  சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் ,
(31.10.2014)

🌟 மும்பையில் தலித் குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் சாதிவெறியற்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யபட்டார்கள். சிபிஐ விசாரணைக்கு  வலியுறுத்தி மும்பையில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.(24.11.2014)

🌟  கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை சிங்கள அரசு கைது செய்து தூக்குதண்டனை அறிவித்தது.இந்திய அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்.(05.11.14)

🌟  பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க இருக்கிறோம் என்று சொன்ன வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதை கண்டிக்கும் வகையில் தி,க சார்பில் நடைப்பெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில்,(12.12.2014)

🌟  பாசிச பா.ச.க வின் இந்துத்துவ மதவெறி ஃபாசிச போக்குகளை கண்டித்தும் சென்னையில் விசிக தலைமையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்.(23.12.2014)

🌟  தமிழகம் பாலைவனமாவதை தடுத்திட மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும் , மோடி அரசை எதிர்த்தும்   சீர்காழியில் எழுச்சித்தமிழர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
(09.01.2015)

🌟 . நூறுநாள் வேலைத்திட்டத்தை இருநூறு நாளாக விரிவுபடுத்த வேண்டும் என்றும் நிலம் கையகப்படுத்து அவசர சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்,(16.03.2015)

🌟  காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் இராசி மணல் ஆகிய இடங்களில் மூன்று அணைகள் கட்டுவதற்கு கர்நாடகா முயற்சித்து வருகிறது ,இதில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று அனைத்து கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு,(28.03.15)

🌟  மது ஒழிப்பு பரப்பியக்கம் சார்பில் துண்டறிக்கைகளை மெரினா கடற்கரையில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களே பொது மக்களுக்கு விநியோகம் செய்தார்.
(17.09.2015)

🌟  மது ஒழிப்பு பிரச்சாரத்தை நிறைவு செய்யும் வகையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் தலைவர் தலைமையில் நடைபெற்ற சைக்கிள் பேரணி நடைபெற்றது.(02.15.2015)

🌟  திருவெற்றியூரில் மெட்ரோ இயில் நிர்வாகத்தை கண்டித்து  மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் அந்த மக்கள் ஈடுபட்டு இருந்தார்கள் , அவர்களுக்கு அதரவு தெரிவித்து எழுச்சித்தமிழர் உரையாற்றினார்.(09.03.2016)

🌟  சாதி ஆணவ படுகொலையைத் தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி மக்கள் நலக்கூட்டணி சார்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம்,(21.03.2016)

🌟 சுவாதி படுகொலையை கண்டித்தும் , கூலிப்படை  கலாச்சாரத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க தனிச்சட்டம் இயற்றக்கோரியும் சென்னையில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.(02.07.2016)

🌟  காவிரி நதிநீர் உரிமையை பாதுகாக்க தமிழக முழுவதும் விசிக சார்பில் இரயில் மறியல் எழுச்சித்தமிழர் தலைமையில் 10000 பேர் கைது. (16.06 .2016)

🌟   காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மக்கள் நலக்கூட்டனி சார்பாக இரயில் மறியலில் பங்கேற்பு
(17.10.2016)
🌟  யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்  சிங்கள காவல்துறையினரால் சுட்டுப்படுகொலை  செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்தேசிய அமைப்பினர் மற்றும் பெரியாரிய அமைப்பினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டனர் ,
(25.10.16)

🌟   - 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு அறிவிப்பு செய்ததை கண்டிக்கும் வகையில் இடதுசாரி கட்சிகள் நடத்திய  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு.
(28.11.16)

🌟    500, 1000 ரூபாய்  செல்லாது என்று அறிவித்த  மோடி அரசை கண்டித்து சென்னையில்
 எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்,(18.11.2016)

🌟 மோடி அரசை கண்டித்து மதுரையில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்,23.11 .2016

🌟  ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் கோவையில் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்றது,(28.01.2017)

🌟  சிறுகடம்பூர் தலித் சிறமி நந்தினி படுகொலையை கண்டித்து  தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் சென்னையில் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்றது.(2.02.17)

🌟 நந்தினி படுகொடுயை கண்டித்து அரியலூரில் எழுச்சித்தமிழர்தலைமையில் நடைபெற்றது,(05.02.2017)

🌟 ஏழு வயது சிறுமி ஹாசினியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிப் படுகொலை செய்ததை கண்டித்து வள்ளுவர்கோட்டாத்தில் ஆர்ப்பாட்டம்.
(17.02.17)

🌟 ஐ நா சபையின் தீர்மானத்தை மதிக்காத இலங்கை யை சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்  என்னும் கோரிக்கை யை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் (08.03.17)

🌟  சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அனைத்துக்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு  போராட்டத்தில் எழுச்சித்தமிழர் கைது.(25.04.2017)

🌟  காஞ்சி மாவட்டம் திருக்கழுக்குன்றம் சோகண்டி தேவாலயத்தில் தலித்துகளின் வழிபாட்டு உரிமை மறுப்பை கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்,(26.04.2017)

🌟  மாடு வாங்குவதற்கும், விற்பதற்கும்  தடை என்று மோடி அறிவித்த மோடி அரசை கண்டித்து  சென்னையில் எழுச்சித்தமிழர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்,(02.06.2017)

 🌟 கடலூர் மாவட்டத்தில் தொடரும் சாதிய ஆணவப்படுகொலைகளை கண்டித்து எழுச்சித்தமிழர் தலைமையில் பண்ருட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்,(20.05.2017)

🌟 -சாதி ஆணவப்படுகொலையை தடுத்திட தனிச்சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனியின் நடைபயணத்தை துவக்கி வைத்தார்.09.06.17

🌟 சென்னை அம்பேத்கர் திடலில் நடைபெற்ற தமிழ்தேசிய உணர்வாளர்கள் மீது குண்டர் சட்டம் குறித்து கண்டனஉரையாற்றினார்,(10.06.17)

🌟  மதுக்கடைக்கு எதிராக போராடிய மதுரை வடபழஞ்சி முத்தமிழன் சாதிவெறியர்களால் படுகொலைச்செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்(08.07.17)

🌟 சென்னை மாஆட்சியர் அலுவலகம் முன்பு நீட்டை இரத்து செய்ய கோரி திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு(12.07.17)

🌟 மக்கள் நலக்கூட்டணி சார்பாக ஜி,எஸ்.டி வரி விதிப்பை கண்டித்து சென்னை யில் ஆர்ப்பாட்டம்(14.07.17)

🌟 திருக்கழுக்குன்றம் அருகே நல்லூர் சேரித்தாக்குதல் மற்றும் அனிதா மரணத்திற்கு காரணாமானவர்களையும்கண்டித்து ஆர்ப்பாட்டம்.(04.09.17)

 🌟 செய்யார் புளியரம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற  சாதிகலவரத்தில் வெங்கடேசன் படுகொலையை கண்டித்து செய்யாறில் ஆர்ப்பாட்டம்,(05.08.17)

  🌟 கரூர் மயிலாடுதுறையில் மதவாத சக்திகளின் வன்முறை வெறியாட்டத்தை  கண்டித்து கரூரில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம் ,(03.11.17)

🌟 மதவாத சக்தியை கண்டித்து  மயிலாடுதுறை யில் ஆர்ப்பாட்டம்.09.11.17

🌟 ஓக்கி புயலில் பாதித்த மீனவர்களுக்காக வும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 50 இலட்சம் நிதி வழங்க வலியுறுத்தியும் நாகர்கோயிலில் எழுச்சித்தமிழர் தலைமையில் நடந்த கண்டன  ஆர்ப்பாட்டம்13.12.2017

🌟10.04.2018 -13.04.2018 காவிரி நடை பயணம்

🌟  மும்பையில் தலித்துக்கள் மீது  வன்முறை ஏவும்
பாஜக வை கண்டித்து
சென்னையில் இன்று எழுச்சித்தமிழர் தலைமையில் நடந்த  ஆர்ப்பாட்டம்.8.01.2018

   🌟  நடுத்தர வர்க்க மக்களுக்காக   பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும்  மாநில அரசு கட்டண உயர்வை  திரும்ப பெற   வலியுறுத்தியும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக களத்தில் முதல்வர்  எழுச்சித்தமிழர் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்23.01.18

🌟   பேருந்து   கட்டண   உயர்வை திரும்பப் பெற  வலியுறுத்தி
நடைபெற்ற போராட்டத்தில் எழுச்சித்தமிழர் ,புரட்சிப் புயல்,அண்ணன்ன் சுபவீ பங்கேற்பு
(29.01.2018)

🌟    சென்னையில் வன்கொடுமை எதிர்ப்பு உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து தலித் தலைவர்களும் எழுச்சித்தமிழர் தலைமையில் ஒன்று திரண்டு ஆளுநர் மாளிகை நோக்கி  ஆர்ப்பாட்டம் ! 24.04.2018


    🌟ஸ்டெர்லைட்  அரசு படுகொலையை கண்டித்து
 சென்னையில் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டத்தில்தலைவர் எழுச்சித்தமிழர்,மமக தலைவர் ஜவாஹிருல்லா ,திமுக மகளிரணிச் செயலாளர் சகோதரி கனிமொழி,  கைது.
(25.05.2018)
🌟  தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து  எழுச்சித்தமிழர் தலைமையில் சென்னை சோழிங்க நல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.(30.05.18)

🌟  சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் ஏற்பட்ட சாதிய படுகொலையை கண்டித்து  தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் இரண்டாம் புரட்சியாளர் எழுச்சித்தமிழர் அவர்கள் கலந்துகொண்டு கண்டனஉரை நிகழ்த்தினார் .(04.06.2018)


      🌟தூத்துக்குடி  துப்பாக்கி சூட்டை கண்டித்து எழுச்சித்தமிழரின் ஆணைக்கிணங்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகமெங்கும் 90 இடங்களில்  மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

எழுச்சித்தமிழர் தலைமையில்  சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது(22.06.2018)

🌟  நீட் தேர்வை இரத்துச்செய்யக்கோரி
எழுச்சித்தமிழர் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.(04.07.2018)

🌟    எட்டுவழி சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் விசிக சார்பாக எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.(17.07.18)

🌟  எட்டுவழிச் சாலையை எதிர்த்து சேலத்தில் ஆர்ப்பாட்டம்,(27.07.18)

🌟 எழுத்தாளர்கள் இந்து பயங்கரவாத சனாதன அமைப்புகளால் கொலை செய்யப்படுவதை கண்டித்தும் ,எழுத்தாளர் விசிக பொதுச்செயலாளர் சகோதரர்  இரவிக்குமார் அவர்களுக்கு வந்த அச்சுறுத்தலை கண்டித்தும் சென்னையில் டாக்டர் எழுச்சித்தமிழர் தலைமையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.(11.09.2018)

🌟  ஆத்தூர் ராஜலெட்சுமி படுகொலையை கண்டித்து சேலத்தில்  எழுச்சித்தமிழர் தலைமை யில் ஆர்ப்பாட்டம், (05.11.18)

🌟  கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட நந்தீஸ்  -சுவாதி ஆனவப்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ,தமிழக அரசின் மெத்தனப்போக்கை எதிர்த்தும் டாக்டர் எழுச்சித்தமிழர் தலைமையில் ஓசூரில்  பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.(20.11.18)

🌟  காந்தி உருவ படத்தை துப்பாக்கியால் சுட்ட இந்து மகா சபை தலைவரை கண்டித்து சென்னையில் டாக்டர் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.(05.02.2019)

🌟  ஏழு பேர் விடுதலைக்கான மனித சங்கிலிப் போராட்டம் .சென்னையில் டாக்டர் எழுச்சித்தமிழர் பங்கேற்பு 09.03.2019

🌟  பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட் டம்(15.05.2019)

🌟   சாதி வெறி பாமக வின் பொன் பரப்பி அராஜகத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம் (24.08.2019)

🌟  சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு  திருவாரூர் கொல்லி மலையின் வாயில் மலத்தை திணித்த  கொடுமை மற்றும் கடலூர் திலகவதியின் ஆனவப் படுகொலையை கண்டித்து  டாக்டர் எழுச்சித்தமிழரின் தலைமையில்   ஆர்ப்பாட்டம்  நடந்தது .(14.05.2019)

🌟  புரட்சியாளர் சிலையை வேதாரண்யத்தில் தொட்ட சமூக விரோதிகளுக்கு எதிராக,  சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு  டாக்டர் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்,(03.09.2019)

🌟   ஜம்மு காஷ்மீர் சரத்து 370 க்கு எதிராக நடக்கும் அராஜகத்தை கண்டித்து டாக்டர் எழுச்சித்தமிழரின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில்.(12.09.19)

🌟  பாபர்மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது தீர்ப்பை மறுஆய்வு செய்ய 
வலியுறுத்தி பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
(22.11.2019)

🌟   போர் குற்றவாளி
கோத்தபயா ராஜபக்சேவை இரத்தின கம்பளம் விரித்து வரவேற்கும் பா.ஜ.க.அரசின் தமிழின விரோதபோக்கை கண்டித்து  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக அண்ணன் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டது (23.11.19)

🌟   பாசிஸ பாஜக  கொண்டு வந்த மத , இன அடிப்படையிலான இந்திய குடியரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது(14.12.2019)

🌟 கோவைமாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் கிராமத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானதை கண்டித்து,  தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்  தலைமையில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்,(16.12.19)

🌟  இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சென்னையை குலுங்கச். செய்த திமுக கூட்டணிப் பேரணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக.(23.12.2019)

🌟   குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெறும் தொடர் இசை முழக்கம்  கண்டன போராட்டத்தில்  தலைவர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்   கண்டன உரையாற்றினார். (26.12.19)

🌟 புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி குண்டர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ள மாணவர்களுடன் போராட்ட களத்தில் போராளித்தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் .... (6 .01.2020)

🌟  மோடி அரசின் பொருளாதார கொள்கைகளையும், பொதுத் துறைகளை தனியார்மயமாக்கும் திட்டங்களையும், ஜனநாயக விரோத சட்டங்களையும் கண்டித்து அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் நடத்தும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கைது...
(08.01.20)