வியாழன், 15 நவம்பர், 2018

கிறிஸ்தவர் தமிழரா?


கிறிஸ்தவர் தமிழரா?

என மதத்தால் பிளக்கும் வந்தேறி ராசாக்களுக்கு  அவர்கள் பிழைப்புக்காக பேசும் மொழியை, எம் உயிரினும் மேலாம் அமுதத்தமிழை வளர்த்தவர்களில் மூலவர் பற்றி சில உண்மைகள்...

இத்தாலி நாட்டில் பிறந்த Constantine Joseph Beschi என்பவர்

கிறிஸ்தவர்களுக்கு குருத்துவ பணியாற்றவும் ஏனையோருக்கு கிறிஸ்துவை அறிவிக்கவும் இத்தாலியில் இருந்து புறப்படுகிறார் சில நாடுகளை கடந்து 1710 ம் ஆண்டு இந்தியா வந்தடைகிறார்

இந்தியாவில் கோவாவில் வந்து இறங்கிய இவர் அப்படியே கொச்சி வந்து கால்நடையாக ஏசுவின் சீடரான புனித தோமா வழியில் பயணித்து மதுரைக்கு வருகிறார்

மதுரையிலிருந்து கோவில்பட்டி தாலுகா காமநாயகன்பட்டிக்கு வந்த இவர் இங்குள்ள மக்களின் பாஷையை நுண்ணோக்கி பார்க்கிறார் வித்யாசமான சப்தத்துடன் பேசும் அழகை கண்டு வியந்து இம்மொழி பற்றி ஆய்வு செய்கிறார்..

இவர் ஆய்வு செய்த மொழி தமிழ் ...

தமிழின் உச்சரிப்பு அழகை கண்ட இவர் தமிழை கற்றுக்கொள்கிறார்
மற்றும் தமிழில் அன்று இருந்த இலக்கியம் இலக்கணம் அகராதி போன்றவைகளையும் கற்றுக்கொள்கிறார் ....

இதன் பின்னர் தனக்கு ஆங்கிலப்பெயர் வேண்டாம் என்று தைரியநாதசாமி என்று மாற்றிக்கொண்டார்

இவர் தமிழ் எழுத்தின் சிறப்பை மற்ற நாட்டவர்கள் உணர திருக்குறள்,   நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.

தமது நாட்டவர்களான இத்தாலி மக்கள் தமிழை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று  தமிழ் - லத்தீன் அகராதியை முதன் முதலில்  உருவாக்கினார்.

அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி என்றும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது ...

பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்....

அதன் பிறகு தொண்ணூல் விளக்கம் என்ற நூலை வெளியிட்டார் அதில்

♦எழுத்ததிகாரம் , சொல்லதிகாரம் , பொருளதிகாரம் , யாப்பதிகாரம்
அணியதிகாரம்,,

என்று 5 வகை படுத்தி வழங்கியது இவரது சாதனை

மற்றும் புராண தமிழ் இலக்கிய இலக்கணங்கள் எல்லாமும்

கவிதை வடிவில் இருந்து வந்தது..

 இதற்க்கு காரணம் அன்றைய காலத்தில் அறிவு புலமை மக்களுக்கு அதிகம் ஆகவே கவிதையை புரிந்துகொள்ளும் மக்கள் வாழ்ந்தார்கள்

இன்றைய காலத்தில் திருக்குறளுக்கு விளக்கம் இருந்தால் தான் படிக்க முடியும் என்ற நிலையை உணர்ந்த இவர்

♦அவற்றை மக்கள் இலகுவாக படிப்பதற்கு தமிழ் இலக்கியங்களை  உரைநடையாக மாற்றினார் ..

இதெல்லாம் விட இவர் செய்த மிகப்பெரிய விஷயம்
என்ன தெரியுமா ?

அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம்.

புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ர" சேர்த்தேழுதுவது வழக்கம்.

♦உதாரணத்திற்கு  "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் எழுதுவார்கள் (அ:அர, எ:எர)

 உதாரணத்திற்கு  ஆடு என்று இப்படித்தான் நாம் இன்று எழுதுகிறோம் ஆனால் அக்காலத்தில் ஆடு  என்று எழுதுவதற்கு
அர,, டு என்றுதான் எழுதுவார்கள் இதை மாற்றி

ஆடு என்று நெடில் உரையை கொடுத்தவர் இவர் தான்

அதனால் தான் இன்றும் கூட நமக்கு எழுத்து சுருங்கி வருகிறது இல்லையென்றால் நெடில் உள்ள வார்த்தைக்கு இரண்டு தனி தனி வார்த்தைகளை நாம் எழுதவேண்டும் ..

♦இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.

இப்போ சொல்லுங்க இந்த கிருத்துவர் செய்த செயலை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று சொல்லிவிட முடியுமா?

இங்கிருக்கும் கிறிஸ்தவர்கள் தமிழர்கள் அல்ல என்றுதான் உரைத்திட இயலுமா?

ஆமாம் மேலே சொன்ன அந்த இத்தாலி நாட்டு காரர்  தமிழுக்கு இவ்வளவு பணிகள் செய்துள்ள பொழுது இவரை பற்றி நமக்கு சொல்லி கொடுக்காதது ஏன் என்று நமக்கு சந்தேகம் எழலாம் .

ஆனால் நமக்கு இவரை பற்றி சொல்லி கொடுத்துளார்கள்

ஆம் ...

இவர்தான் நாம் வரலாற்றில் படிக்க கூடிய
*வீரமாமுனிவர்*
இவருக்கு சென்னை கடற்கரையில் அண்ணா சிலை நிறுவிப் போற்றினார்..
♦வரலாறு தெரியாதவனால்
வரலாறு படைக்க மூடியாது..

திங்கள், 12 நவம்பர், 2018

49p பற்றி சர்கார் திரைபட கதையும் நிஜ கதையும் ஓர் அலசல்.

49p பற்றி சர்கார் திரைபட கதையும் நிஜ கதையும் ஓர் அலசல்.

49-P: கள்ள ஓட்டால் முதல்வர் வேட்பாளர் தோற்ற தேர்தல் வரலாறு- உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன ?

வேட்பாளரின் மனைவி போட்ட கள்ள ஓட்டு... ஒரு வாக்கு வித்தியாசத்தில் MLA வெற்றி...49-P வாக்குகளைச் சேர்த்தபோது நடந்தது என்ன...?

49-P: கள்ள ஓட்டால் முதல்வர் வேட்பாளர் தோற்ற தேர்தல் வரலாறு...
-செந்தில் ஆறுமுகம்,

சர்க்கார் படத்தின் காரணமாக ”கள்ள ஓட்டு” மற்றும் அது தொடர்பான “49(P)" தேர்தல் விதிமுறை குறித்து பொதுவெளியில் விவாதம் நடக்கிறது. படத்தில் “ஒரு ஓட்டின்” முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாக விவாதிக்கப்படும். உண்மையிலேயே, “ஒரு ஓட்டு” வித்தியாசம் ஒரு சட்டமன்றத் தேர்தலில் பலத்த அதிர்வை ஏற்படுத்திய  பழைய உண்மை நிகழ்வு ஒன்று உள்ளது. 

ஒருவரின் ஓட்டை மற்றொருவர் போட்டுவிட்டால், அது குறித்தான வழக்கு நீதிமன்றங்களுக்குச் செல்லும்போது தீர்ப்பு எப்படி வழங்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் இந்தப்  பதிவு,நிகழ்வு உதவியாக இருக்கும்.

ஆண்டு 2008. ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல். அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவரும், வெற்றி பெற்றால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புப் பெற்றவருமான சி.பி.ஜோஷியும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கல்யாண்சிங் சவுகானும் ”நாத்துவாரா” சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள். 04-12-2008 அன்று தேர்தல் நடந்தது. 4 நாட்கள் கடந்து தேர்தல் முடிவுகள் வெளியானது.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது “நாத்துவாரா” தொகுதியின் முடிவு காங்கிரசிற்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது..!! இந்திய தேர்தல் வரலாற்றில் இது முக்கியமானதொரு முடிவாக இருக்கப்போகிறது என்பது அப்போது போட்டியிட்ட யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்தத் தேர்தலில்,  “நாத்துவாரா” தொகுதியில்
காங்கிரசின் ஜோஷி பெற்ற ஓட்டுக்கள்: ”62215”
பி.ஜே.பி.யின் கல்யாண் சிங் பெற்ற ஓட்டுக்கள்: ”62216”

ஆம், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பி.ஜே.பி.வேட்பாளரான கல்யாண் சிங் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார். ஓட்டு எண்ணிக்கையை மீண்டும் சரிபார்க்கச் சொல்கிறார் ஜோஷி.   தபால் வாக்குகளை எண்ணிப் பார்த்தாயிற்று, ஓட்டு எந்திரங்களில் மீண்டும் ஒருமுறை வாக்குகளை சரிபார்த்தாயிற்று. ஒரு ஓட்டு வித்தியாசம்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

 மாநில காங்கிரஸ் தலைவர், முதல்வராவதற்கு வாய்ப்புள்ள வேட்பாளர் என்ற முறையில் இருக்கும் காங்கிரசின் ஜோஷி அவர்கள் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது உறுதி செய்யப்பட்டு, 08-12-2008 அன்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. ( 1980,1985,1998,2003 என ஏற்கனவே இந்த சட்டமன்றத் தொகுதியில் வென்றவர் ஜோஷி என்பது குறிப்பிடத்தக்கது.)

இந்த உண்மைச் சம்பவத்தில் 49(P) எனப்படும் பிரிவு இப்போது விவாதத்திற்கு வருகிறது.  Section 49P in The Conduct of Elections Rules, 1961 ன்படி தனது ஓட்டை யாராவது போட்டிருந்தால், தனது அடையாளத்தைக் நிரூபித்து, ஓட்டிற்குச் சொந்தக்காரரான உண்மையான நபர் வாக்களிக்கலாம். அப்படி சிலர், “நாத்துவாரா” தொகுதியில் வாக்களித்திருந்தனர். இப்படிப் போடப்பட்ட ஓட்டுக்களை “Tendered Votes" என்று அழைக்கப்படும்.

வெற்றி பெற்ற வேட்பாளருக்கும், அவருக்கு அடுத்தபடியாக வந்த
வாக்காளருக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாக உள்ள
சமயத்தில் மட்டுமே, அதுவும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்
அடிப்படையில்தான் இவ்வாக்குகள் எண்ணப்படும். ஆகவே, தோற்றவராக
அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷி, இந்த Tendered Votes(49-P)
 எண்ணப்படவேண்டும் என்று கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில்
(ஜோத்பூர்) 16-01-2009ல் வழக்கு தொடுக்கிறார். (இது எண்ணப்பட்டால் தனக்கு
சாதகமாக தீர்ப்பு மாற வாய்ப்பிருக்கும் என்று கருதி..).
இவ்வழக்கில்(Election Petition No. 1/2009)
தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு, வென்றவராக அறிவிக்கப்பட்ட
 பி.ஜே.பி.வேட்பாளர் கல்யாண் சிங்கின் மனைவி கல்பனா குன்வர்
இரண்டு ஓட்டுக்கள்(வாக்குச்சாவடி எண்39,40ல் வரிசை எண் 484,727) போட்டார்
என்ற அதிர்ச்சிக்குரிய குற்றச்சாட்டையும் வழக்கில் சேர்த்திருந்தார்.

வழக்கம்போல், ஆண்டுக்கணக்கில்  விவாதிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதி. தினேஷ் மகேஷ்வரி அவர்கள் 31-08-2012ல் தீர்ப்பு வழங்கினார்.

ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் 4 முக்கிய அம்சங்கள்:
1. “நாத்துவாரா” தொகுதியில் பி.ஜே.பி வேட்பாளர் கல்யாண் சிங்கின் வெற்றி செல்லாது, ரத்து செய்யப்படுகிறது (void)

2. கள்ள ஓட்டு போட்ட பி.ஜே.பி.வேட்பாளரின் மனைவி கல்பனா குன்வர் மற்றும் வேறு இருவர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்(கல்பனா போட்ட 2 ஓட்டுக்களும் ரத்து செய்யப்பட்டது. அதேபோல்,  வேறு இருவர் போட்ட கள்ள ஓட்டுக்களும் ரத்து செய்யப்பட்டது.)

3. கள்ள ஓட்டு போட்டு தேர்தல் முறைகேடு செய்த பி.ஜே.பி. வேட்பாளர் கல்யாண் சிங்,   காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷியின் வழக்கு செலவிற்காக ரூ.51,000/- கொடுக்க வேண்டும்
.
4. பி.ஜே.பி. வேட்பாளர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக இத்தீர்ப்பு 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது.

எதிர்பார்த்தது போல் பி.ஜே.பி. வேட்பாளர் கல்யாண் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 49(P) விதிமுறையின்படி வாக்களித்தவர்களின் (”Tendered Votes" )எண்ணப்படவேண்டும் என்று கேட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷியின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், அந்த வாக்குகளை எண்ண 04-03-2013ல் உத்தரவிட்டது. 

பி.ஜே.பி.வேட்பாளரின் மனைவி போட்ட 2 ஓட்டுக்களும் கள்ள ஓட்டாக கருதப்பட்டு, அதை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். அதேபோல் வேறு இருவர் போட்ட கள்ள ஓட்டையும் கழித்துவிட்டு - 49(P) ல் பதிவான வாக்குகளை எண்ணி முடித்தபோது ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. !

பி.ஜே.பி., காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரும் சம வாக்குகளைப் பெற்றிருந்தனர் !! மீண்டும் குழப்பம் !!

இருவரும் சமவாக்குகள் பெற்றால் குலுக்கல் முறையில்தான் வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்படவேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷி சார்பில் வாதிடப்பட்டது.

12-4-2013ல் இவ்விசித்திரமான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.(தேர்தல் நடந்தது டிசம்பர் 2008 என்பதை நினைவில் கொள்க!!). 2008ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் பதவிக்காலமே முடிவடையும் தருவாயில் உள்ளநிலை, மற்றும் ஜோஷி-கல்யாண்சிங் இருவருமே சம வாக்குகள் பெற்றுள்ள நிலை இவற்றைக் கருத்தில் கொண்டு “நாத்துவாரா” தொகுதியின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்தது. பி.ஜே.பி.வேட்பாளர் கல்யாண்சிங்கே சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வார் என்றும் அறிவித்தது.

ஆக,  2008ல் தேர்தல். 2009ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு. 2012ல் உயர்நீதிமன்ற தீர்ப்பு. 2013ல் உச்சநீதிமன்றத் தீர்ப்பு. ( இறுதித் தீர்ப்பு வெளியானது ஏப்ரல் 2013ல்தான். அதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிட்டது. ஆம், அக்டோபர் 2013ல் அடுத்த சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.)

கள்ள ஓட்டுப் போடப்பட்டால், அதுவும் “ஒரு ஓட்டு” வித்தியாசத்தில் வெற்றி,தோல்வி மாறும் என்ற இயல்புடைய வழக்கு ஒன்றில், தேசியக் கட்சி ஒன்றின் முதல்வர் வேட்பாளர் ஒருவர் தோற்ற வழக்கில் எவ்வளவு ”விரைவாக!!” தீர்ப்பு வரும் என்பதற்கு நம் கண்முன்னுள்ள உதாரணம் இது. 

பி.ஜே.பி.வேட்பாளரின் மனைவி கள்ள ஓட்டு போட்டது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னரும், அவரின் ஓட்டைக் கழித்துவிட்டு மறு எண்ணிக்கை நடத்தவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. “நாத்துவாரா” தொகுதியில் நடைபெற்ற தேர்தலை ரத்துசெய்துவிடவில்லை..!!

காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்று, முதல்வராகும் வாய்ப்பை இழந்தார் என்பதைப் பார்த்தோம்(பின்னர் அவர் மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய மந்திரியானது வேறு கதை). 

இந்த சமயத்தில் ஒருவர், ஒரே ஒருவர், தேர்தல் நாளன்று  வாக்குச் சாவடிக்கு வந்திருந்தால் காங்கிரசின் ஜோஷி வெற்றி பெற்றிருப்பார்.

அவர் யார் தெரியுமா..? அவர் வேறு யாருமில்லை, வாக்களிக்க வராத ஜோஷியின் மனைவியே !! ??

வியாழன், 1 நவம்பர், 2018

OBC/SC/ST & RELIGIOUS MINORITIES மக்களுடைய இட ஒதுக்கீட்டு முறையின் எதிரி, அகன்ற பாரதத்தின் பிரிவினைவாதி சர்தார் வல்லபாய் படேல்... .


OBC/SC/ST & RELIGIOUS MINORITIES  மக்களுடைய இட ஒதுக்கீட்டு முறையின் எதிரி, அகன்ற பாரதத்தின் பிரிவினைவாதி  சர்தார் வல்லபாய் படேல்...       .

ஒன்றுபட்ட பாரதம் என்பது இன்றைய  1. இந்தியா, 2.இலங்கை, 3.பாகிஸ்தான்,4.பங்ளாதேஷ் மற்றும் 5.ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அடங்கியவை.

வெவ்வேறு சூழலில், இவை தனிதனித்நாடுகளாக பிரிந்தன. அதற்கான காரணமும் இருக்கின்றன. இதில் மிக முக்கியமாக பாகிஸ்தானும், கிழக்குபாகிஸ்தானும்(இன்றைய பங்களாதேஷ்) இந்தியாவிலிருந்து பிரிந்ததற்கான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரணம் உள்ளது.

இங்கு மதங்களை வைத்து அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வேளையில், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சீரிய முயற்சியினால், இந்தியாவில் முதன் முதலாக 1911- ல் சாதிவாரி கணக்கெடுப்பை அன்றைய பிரிட்டிஷ் அரசு எடுத்தது. அதில் 428 சாதிகள் இந்துக்கள் அல்ல என்று சென்சஸ் கமிஷனால் அறியப்பட்டது.         அதன்  பிறகு பாபாசாகேப் அவர்களின் கோரிக்கையை ஏற்று 1918ல் செளத்பரோ கமிட்டி மற்றும் 1927-1928 களில் சைமன் கமிஷன் மூலமாக, வயதின் அடிப்படையில் அனைவருக்கும்  ஓட்டு என்ற அரசியல் உரிமையும், கல்வியின் அடிப்படையில், வேலைவாய்ப்பும்,  சம உரிமை அளித்தல் போன்ற காரணங்களுக்காக சைமன் கமிஷன்   அமைக்கப்பட்டது. இதில் நம் முன்னோர்கள் யாவருக்கும் ஓட்டுரிமையோ, வேட்பாளராகும் தகுதியோ கிடையாது. ஆனால், பாபாசாகேப் அவர்கள் அன்றைக்கு 21 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓட்டுரிமை(Adult Enfranchisement) வாங்கிக் கொடுத்தார்.

மேலும், இதன் தொடர்ச்சியாக 1930-1932 களில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் பிரிட்டிஷ் அரசு, கமிஷனில் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தது. இதில்  பட்டியலின மக்களுக்கு இரட்டை வாக்குரிமையுடன் (dual voting rights) கூடிய தனித்தொகுதி (Separate electorates) வழங்கப்பட்டது. பிறகு அது பார்ப்பனிய சூழ்ச்சியின் தூண்டுதலின்பேரில்  காந்தி அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.  பட்டியலின மக்களுக்கு எவ்வித உரிமைகளும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அதன் விளைவாக தனித்தொகுதி முறையும்,  இரட்டை வாக்குரிமையும் பறிக்கப்பட்டு இன்றைய ரிசர்வ்தொகுதிகள் முறை கொண்டுவரப்பட்டது. இதை பாபாசாகேப் மனமாற ஏற்கவில்லை. இதுவே பூனா ஒப்பந்தம் ஆகும்.

இறுதியாக ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முடிவு எடுத்தது. சுதந்திரம் கொடுப்பதற்கு முன்பு, இந்தியாவிற்கு அரசியல் அமைப்பு சட்டத்தை (constitution) உருவாக்க கமிட்டி அமைக்க பணித்தது. இதன் காரணமாக பாபாசாகேப் அவர்கள் எந்த நிலையிலும் அரசியல் சாசன சபைக்குள்(constitution assembly) வந்துவிடக் கூடாது என்று பார்ப்பணர்களும்(Brahmins) பார்ப்பனிய ஏவலாளிகளான ஜாதிஇந்துக்களும் (brahminists) மிகவும் உறுதியாக இருந்தனர். அப்பொழுது,  பங்ளாதேச பகுதியில் அமைந்துள்ள ஜெய்சூர் (jaisur) மற்றும் குல்நார் (Kulnar) தொகுதியிலிருந்து பாபாசாகேப் அவர்களும், ஜோகிந்தர் நாத் மண்டல் அவர்களும் அரசியல் சாசன சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள்- அனைவருக்கும் சம உரிமை கல்வி,வேலைவாய்ப்பு, அரசியல் பங்கீடு போன்ற உரிமைகளுக்கு ஒப்புதல் வழங்க  பாபாசகேப் அவர்கள் அரசியல் சாசன சபையில் உரிமைகோரிய கோரிக்கைகளை முழுவதுமாக ரத்து செய்தவர்தான் இந்த சர்தார் வல்லபாய் அவர்கள். அதாவது அனைவரும் இடம் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட பிரதிநிதித்துவ முறையான 'இட ஒதுக்கீட்டு' முறையை இரத்து செய்தவர் தான்  இந்த பார்ப்பனிய கரும்பு மனிதர்.

மேலும் வல்லபாய் அவர்கள் ஒருபடி மேலே சென்று எப்படியாவது பாபாசகேப் அவர்களை    அரசியல்சாசன சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று  திட்டமிட்டார். பாபாசகேப் அவர்கள் தேர்தெடுக்கப்பட்ட தொகுதி கிழக்கு பாகிஸ்தானில் இருப்பதை அறிந்த வல்லபாய் அவர்கள் அந்த இடங்களை  இந்தியாவிலிருந்து   தனியாக பிரித்து பாகிஸ்தானுக்கு உட்பட்ட பங்ளாதேசத்துடன் சேர்த்து விட்டார்.

மேலும் முகம்மது அலி ஜின்னாவை தூண்டிவிட்டு  பாகிஸ்தானை  பிரித்தார்.ஆகவே இப்படி ஒன்றுபட்ட இந்தியாவை -பாரதத்தை சீர்குலைத்த இழிவை செய்தவர்தான் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் வல்லபாய் அவர்கள்.

அதன் பிறகு பாபாசாகேப் , தான் தேர்தெடுக்ப்பட்ட தொகுதியை இழக்க நேர்ந்தது. அரசியல் சாசன சபை உறுப்பினர் பதவியை இழந்தார். மிகவருத்தம் அடைந்த அவர் உடனே கொல்கத்தாவிலிருந்து நேரடியாக லண்டன் சென்று  அங்கு இங்கிலாந்து ராணி அவர்களை சந்தித்தார்.

 இந்தியாவிலிருந்து  நேரு,காந்தி உட்பட எவர் ஒருவரும் முன் (appointment) அனுமதியில்லால் இங்கிலாந்து ராணியை சந்திக்க முடியாது. ஆனால் பாபாசாகேப் ஒருவர் மட்டுமே (appointment இல்லாமல்) நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்.

ஆக நடந்தவற்றையும் தன் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் இங்கிலாந்து அரசிடம் பாபாசகேப் முறையிட, உடனடியாக நேருவை அழைத்த இங்கிலாந்து அரசு, இந்தியாவிற்கு சுதந்திரம் என்பது மறுபரிசீலனை செய்யப்படும்......... டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் சாசன சபையில் உறுப்பினர் மற்றும் அரசியல் வரைவு கமிட்டி உறுப்பினர் (drafting committee member) ஆகும் வரை என்று எச்சரித்து கட்டளையிட்டது பிரிட்டிஷ் அரசு.

 மீ்ண்டும் அடிபணிந்த நேருவின் தலைமையிலான இடைக்கால மந்திரி சபை, பாபாசாகேப் அவர்களை அரசியல் சாசன சபை மற்றும் அரசியல் அமைப்பு வரைவு கமிட்டி உறுப்பினர் ஆக்கியது.

 அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுத எவரும் முன்வராமல் தயங்கிய நிலையில், அந்த பொறுப்பை தானே சுமந்து தனது எழும்புகளை பேனாவாக்கி, தன் இரத்தத்தை மையாக்கி அரசியல் அமைப்பு சட்டத்தை தனி ஒருவராக எழுதி  மக்களுக்கான உரிமைகளை சட்டமாக்கினார்.   அதில் ARTICLE -340 பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு உறுதிபடுத்தப்பட்டது. அதேபோல் SC/ST  மக்களின் உரிமைகளும் உறுதிபடுத்தப்பட்டது.               இதற்கு முன்பு எந்த சர்தார்வல்லபாய் அவர்களால்  மக்களுக்கு உரிய உரிமைகள் ரத்து செய்யப்பட்டதோ அந்த உரிமைகளை யாரும் அசைத்து பார்க்கா வண்ணம் அரசியல் அமைப்பு சட்டம் அமைப்பில் நிலையான பாதுகாப்பை உருவாக்கித்தந்தார் பாபாசாகிப் அவர்கள்.

இந்திய மக்களின் சம உரிமையான  பிரதிநிதித்துவ இடம் ஒதுக்கீட்டு முறையை காக்கும் சட்டத்தை ரத்து செய்த சர்தார் அவர்கள் எப்படி இரும்பு மனிதரானார். அவர் சார்ந்த பட்டேல் சமூகம் இன்று குஜராத்தில் ஹார்த்திக்பட்டேல் தலைமையில் பட்டேல்  மக்களின் உரிமைகளுக்காக ரோட்டில் வந்து ஆண்டுகணக்கில் போராட்டம் நடத்திகொண்டிருக்கிறார்கள். இங்கே தமிழ் நாட்டிலும் ஒரு சிலர் நாங்கள் OBC/MBC க்கு போகிறோம், நாங்கள் குர்மி-பட்டேல் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் விரும்பும் OBC  இடஒதுக்கீட்டைத்தான் வல்லபாய் பட்டேல் வீறுகொண்டு எதிர்த்தார்,அதை இரத்தும் செய்தார்.இவ்வாறு அவர் obc/SC/ST/religious minority மக்களின் உரிமையான இடஒதுக்கீட்டின் எதிரியாக செயல் பட்டதால் தான் அவர் இட ஒதுக்கீடு முறையை எதிர்க்கும் பார்ப்பனியத்திற்கு இரும்பு மனிதராக தென்பட்டார்.

பங்ளாதேஷ்- பாகிஸ்தான்  நாடுகளின் பிரிவினைகளுக்கு காரணமாக இருந்த சர்தார் அவர்கள் ஒன்று பட்ட அகன்ற பாரதத்தை உருவாக்கினாரா?  பிளவு படுத்தினாரா?

 முழுக்க முழுக்க பிராமணர்களின் பிரதிநிதியாக செயல்பட்டு நம் போன்றவர்களின் உரிமைகளை எதிர்த்த சர்தார் வல்லபாய்  அவர்களை பற்றிய பெருமையை நம் வாயால் பேச வைப்பதே பிராமணிசத்தின் வெற்றியாகும்.

 இது போன்ற உண்மையான வரலாறுகளை கண்டறிந்து மக்களுக்கு உரக்கச் சொல்வது நமது வரலாற்றுக்கடமை ஆகும். ஜெய் பீம். Thanks WhatsApp news